Wednesday, November 30, 2011

2G – ராசாவின் கையில் மாட்டி தவிக்கும் கும்பல் பற்றிய கிசு கிசு

இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஊழலில் குற்றம் சாற்றப்பட்டு திகாரில் இருக்கும் ராசாவின் கையில் அப்படி என்ன இருக்கும் .கட்சி தலைமையே அவரை கைவிட்டு விட்டதே என்ற எண்ணம் பலருக்கும் இருக்கலாம். ஆனால் உண்மை என்னன்னா ராசா ரொம்ப ரிலாக்சாக இருக்கிறார் என்பதே. தல ராசா பார்ப்பதற்கு தான் பட்டிக்காட்டான் மாதிரி இருந்தாலும் ஆள் ரொம்ப விவகாரமான புத்திசாலியாம். தலைநகரில் உள்ளா பிரபலமான வழக்கறிஞர்களே ராசாவின் புத்தி கூர்மையை பற்றி மூக்கில் விரலை வைக்கிறார்களாம். நல்ல வேளை வக்கீல் தொழிலுக்கு வராமல் இருந்தார், இல்லையெனில் நம்மை எல்லாம் ஓரங்கட்டி இருப்பார் என்ற மாதிரியான குரல்கள் ஒலிக்கின்றனவாம். அப்படி ராசாவிடம் என்ன தான் இருக்கிறதாம். அதை பற்றி தான் விளக்க போகிறேன்.

பொதுவாக எல்லா அமைச்சர்களும் தான் பதவி ஏற்கும் துறையில் எப்படி கொள்ளையடிக்கலாம், அதற்கான வழி வகைகள் என்ன இருக்கின்றன என்பதை தான் தேடுவார்கள் .ஆனால் தல ராசா கொஞ்சம் வித்தியாசமானவராம். அவரு தேடியது என்னன்னா கடந்த காலங்களில் ஆட்டைய போட்ட அமைச்சர்கள் விட்டு சென்ற தடயங்களை தானாம். அண்ணன் அவை எல்லாவற்றையும் துளி கூட மிச்சம் வைக்காமால் உறிஞ்சு எடுத்து விட்டாராம். அவை தான் அண்ணனின் தற்போதைய துருப்பு சீட்டுகள். ஆரம்பத்தில் தன்னிடம் அப்படியான எதுவும் இல்லாமல் காட்டி கொண்ட ராசா இப்போது தான் ஒவ்வொரு ஆயுதமாக வெளியில் எடுத்து வீசுகிறாராம். அது தான் பெரும் தலைகளை மண்டையில் கையை வைத்து கொண்டு உட்கார வைத்து விட்டதாம்.

எப்ப யாரை நோக்கி ஆயுதங்களை வீச வேண்டும் என்பதிலும் தல ரொம்ப நேர்த்தியாக செயல்படுகிறாராம். அவரு முதலில் குறி வைத்து இருப்பது சி.பி.ஐ கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் உள்துறையை நோக்கி தான். அடுத்து அண்ணன் வீசியது கேடி சகோதர்களை நோக்கி, அந்த வழக்கில் தங்களது ஊடங்கள் மெல்லாம் ஓவராக பேசி கொண்டிருந்த கேடி சகோதர்களை தனது தொடர்புகள் மூலம் தன்னிடம் உள்ள அவர்களை பற்றிய விடயங்களை வெளியிடுவேன் என்று எச்சரிக்கையே விட்டார் என்றால் பார்த்து கொள்ளுங்கள். ஆரம்பத்தில் அதை பற்றி ரொம்ப அலட்டி கொள்ளாமல் இருந்த கேடி சகோதர்கள் கொஞ்ச நாளில் ராசா யார் என்பதை புரிந்து கொண்டார்கள். சகோதர்கள் ரெண்டும் பேரும் குடும்பத்தொடு மூட்டை முடிச்சுகளை தூக்கி கொண்டு பின்லாந்திற்கு ஓட அதுவும் காரணமாம். முரசொலி மாறன் மீது உள்ள மரியாதையால் சகோதர்கள் ரொம்ப பிரச்சினைகளை எதிர்கொள்ளாதவாறு இருக்க சில விடயங்களில் அவர்களை முன்னமே தனது தொடர்ப்புகள் மூலம் எச்சரித்தாராம்.

ஆரம்பத்தில் இருந்தே பிணை மறுக்கப்பட்ட கனி மொழி, மற்றும் அவ்வழக்கில் சம்பந்தப்பட்ட பலருக்கும் திடீரென பிணை வழங்கப்பட்டதன் பிண்ணனியில் தல ராசாவின் வில்லத்தனமான காய் நகர்த்தல்கள் தான் காரணமாம். உள்துறையையும் அதை கட்டு படுத்துகிற தலைமையையும் பற்றி தன்னிடம் சிக்கியுள்ள மேலும் சில தகவல்களை தனது தொடர்புகள் மூலம் வெளியிடுவேன் என்று அடுத்த கட்ட ஆயுதத்தை அவர்களை நோக்கி வீசியது தான் காரணமாம். தில்லி மேலிடங்கள் ராசாவின் இந்த அதிரடி ஆட்டங்களை பார்த்து உறைந்து போய் கிடக்கிறார்களாம். அதை வெளிக்காட்டி கொள்ளாமல் இருக்க தான் கர்னாடக எட்டியப்பருக்கும் பிணை வழங்கப்பட்டதாம். மதவெறியர்களின் கட்சியை அமைதிபடுத்தினது மாதிரியும் இருக்கும் அல்லவா. இதில மற்றொரு கொடுமை என்னன்னா ராசாவை வேவு பார்க்க பைலட்டோட புள்ளையாண்டானை ராசாவிற்கு துணையாக அந்த துறைக்கு அனுப்பி வைத்தும் இப்படி கோட்டை விட்டு விட்டோமே என்ற கடுப்பும் கூடவே.

இவங்க இப்படின்னா தங்களை உத்தமர்கள் என்று காட்டி கொள்ளும் மதவெறியர்களின் கூடாரமும் இப்ப ராசாவின் காய் நகர்த்தல்களை உன்னிப்பாக கவனித்து வருகிறார்களாம் . அந்த வழக்கில் ராசாவை பற்றி அவர்கள் அடக்கி வாசிப்பதன் காரணம் ராசாவிடம் மாட்டியுள்ள அவர்களின் கடந்த கால வண்டவாளங்கள் தான். அதிலும் செத்து போன மகராசன், மற்றும் அருண் சொறி விளையாண்ட விளையாட்டுகள் பற்றிய தகவல்கள் எல்லாம் ராசாவிடம் மலை போல் குவிந்து கிடக்கிறதாம். ஆனால் ராசாவோட புத்திசாலி தனம் என்னான்னா ஒரே நேரத்தில் எல்லாவற்றையும் வீசாம நேரம் வரும் பொது ஒவ்வொன்னா வீசவது என்பது தானாம். நாளைக்கு அந்த மதவெறி கட்சி ஆட்சிக்கு வந்தால் அதை வைத்து அவர்களிடம் பேரம் பேசலாம் என்பது தான் அவரது அமைதிக்கு காரணமாம்.


From 26 November 2011

சரி இவ்வளவு விடயங்களை கையில் வைத்துள்ள அவர் பேசாம பிணைக்கு விண்ணப்பித்து வெளியில் வரவேண்டியது தானே என்று பலரும் கேட்கலாம். அங்கதான் அதிர்ச்சியான விடயம் இருக்கிறது. வெளியில் வந்தால் தன்னை போட்டு தள்ள அதிகார வர்க்கம் தயராக இருக்கிறது என்பதை ராசா தனது தொடர்புகள் மூலம் அறிந்து வைத்திருப்பது தான். சி.பி.ஐ. யின் செல்ல குழந்தையாக இருக்கும், மற்றொரு தாதாவின் கும்பலுக்கு பயந்து பாங்காங்கில் இருப்பிடத்தை மாற்றி கொண்ட தேசபக்தி மும்பை தாதாவின் மூலம் ராசாவின் தலைக்கு குறி வைக்கபடுகிறதாம். அதனால் ராசா வழக்கின் சூடு தணியும் வரை திகாரில் இருப்பதே நலம் என்று நினைக்கிறாராம். இந்த வழக்கின் மூலம் எதிரிகளை சம்பாதித்தாலும் அண்ணன் நிறைய நண்பர்களை சம்பாத்தித்து விட்டாராம். அதாவது ராசா நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன் என்ற மாதிரியான பேச்சு தான் தலைநகரின் அரசியல் மட்டும் கார்பரேட் வட்டாரங்களில் எதிரொலிக்கிறதாம்.

சிறைச்சாலையில் இருப்பது இவ்வளவு பாதுகாப்பா என்று நினைப்பவர்களுக்கு ஒரு விடயம் ஆத்தா தனது வழக்கின் முடிவை அறிந்த பிறகு சிறை நிரப்பும் ஆட்டத்தை ஆரம்பிக்க தயாராக இருக்கிறாராம். அப்ப எல்லாரும் பாதுகாப்பாக இருக்கலாம் தானே ....

Saturday, November 26, 2011

கிரிக்கெட் கடவுளின் பக்த கோடிகளுக்கு ஒரு சந்தோசமான செய்தி

எல்லாரும் கிரிக்கெட் கடவுள் சதம் அடிப்பாரா மாட்டாரா என்று மண்டியிட்டு காத்து கிடக்க கடவுளோ அதை வைத்து நடக்கும் பெட்டிங்கில் கல்லா கட்டி கொண்டு இருக்கிறாராம் . வருமானம் மட்டை பிடித்தும் விளம்பரங்களில் நடித்தும் வரும் வருமானம் எல்லாம் பெட்டிங் மூலம் அவர் கல்லா கட்டும் பணத்திடம் பிச்சை தான் எடுக்கணுமாம். ஆனா நம்ம கடவுள் ரொம்ப புத்திசாலி நேரடியாக ஈடுபடுவதில்லையாம். தற்போது வானத்தில் மல்லுக்கட்டும் கிங்பிசர் மூலமாக தான் எல்லாம் நடக்குதாம். அப்படியே கருப்பு பணம் வெள்ளையாக்கப்பட வேண்டிய எல்லா வேலைகளையும் கிங்பிசரே பார்த்து கொள்ளுமாம். குருவி மூலமாக வந்த தகவலை அப்படியே நானும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.


இப்ப சொல்லுங்க நம்ம பக்த கோடிகளுக்கு
கிரிக்கெட் கடவுள், குபேரனை விட பணக்காரனானால் பெரிய பெருமை தானே. நாம கோவணம் கட்டினாலும் தேசத்தின் சொத்தை ஆட்டைய போடும் அம்பானி உலக பணக்காரனானது பற்றி பெருமை பேசும் தேசத்தின் சொந்தக்காரர்கள் அல்லவா நாம்.....

எப்படி கூப்பிடுவேன் உன்னை ?


தலைவனாக வேண்டி

சொந்த தாயையும் பேரம் பேசும்

காலிகளுக்கு மத்தியில்

தலைவனாக வேண்டுமென்ற

கனவுகளுடன் வந்தவனில்லை நீ

அடித்து நொறுக்கப்பட்ட சமூகத்தின்

அவல மூட்டைகளை

உன் இளம் தோள்களில் சுமந்திட

உன்னையே அர்ப்பணித்தவன் நீ


26 November 2011


கட்டுவிரியன்களின் கூட்டத்திற்கு

நஞ்சின் கொடூரத்தை உணர வைக்க

நீ தொடுத்த சோதனைகளுக்கு கூட

தீவிரவாத முத்திரை குத்தப்பட்டது

பின்னே அடக்கபடுகிற சமூகம்

கத்தி கதறுவது கூட

தேசத்துரோகம் என்று கூறும்

தேசத்தின் அருகில் பிறந்த உனக்கு

அகிம்சாவாதி பட்டமா தரப்போகிறார்கள்

போலி மகாத்மாக்களுக்கு

குத்தகைக்கு விடப்பட்ட பட்டங்களை கொண்டு

உனை நாங்கள் கொண்டாட விரும்பவில்லை

போராளியாகவே பார்க்க விரும்புகிறோம்

அகிம்சாவாதிகளின் முகத்திரைகள்

முதலாளித்ததுவ சந்தைகளில்

ஏலம் விடப்படுகின்றனவாம்

கடந்த கால தவறுகளுக்கு

வருந்தியவன் நீ

உனை சர்வதிகாரி என்கிறார்கள்

கடந்த கால ஏமாற்றங்களுக்காக

நிகழ்காலத்தின் நிமிடங்களை

வேட்டைக்களமாக மாற்றுகிறவர்கள்

தேசத்தின் அன்னையாகி விடுகிறார்கள்

உன்னோடு நின்று படமெடுத்து

தமிழ் தேசிய வியாபாரம் செய்யும்

சந்தை சரக்குகள்

போர் என்றால்

சனங்கள் சாகத்தான் செய்வார்கள் என்று

ஆரிய படமெடுத்தாடிய

அக்கிர(ம)கார பாம்பின் முன்பு

சவப்பெட்டியாய்

கொள்கைகளால் உயிரோடு வாழும்

உனக்கு சவப்பெட்டிகள் தேவையில்லை

தன் குடும்பம் தான் சாதியென்று வாழும்

இழிநிலையும் உனக்கில்லை

பெற்ற பிள்ளைகளையே

போர்களத்திற்க்கனுப்பி

பெருமிதத்தோடு அவர்கள் இழப்பை

ஏற்றுகொண்டவனல்லவா நீ

நீ மறுபடியும் வருவாய் என

கலங்கிய கண்களோடல்ல

உறுதி நிறைந்த

கூரிய பார்வையோடு

உன் ஒளியின்

வெளிச்சத்தை தேடி

எமது கண்கள் காத்திருக்கின்றன

உனை தலைவனென்று அழைப்பதை விட

அடர்ந்த இருட்டின்

அடக்குமுறைக்குள் பயணிக்கும்

எமக்கு வழிகாட்டியாய்

உனை கொள்வதே சிறப்பு

நீ வருவாய் என

வன்னியின் அடர்ந்த காடுகளின்

கொடிகள் காத்து கிடக்கின்றன

ஏமாற்றி விடாதே

Friday, November 25, 2011

பனைமரத்தின் வேர்களுக்கடியில் புதைந்து கிடக்கும் தமிழர்களின் மறைக்கப்பட்ட சரித்திரம்

சமீபத்தில் இணையத்தில் “மோசசு சோனி” (Moses Jony) என்பவர் பனைமரம் தமிழர்களின் அடையாளம் என்று பதிந்து இருந்தார். அது என்னுள் உறங்கி கொண்டிருந்த அதை பற்றி கடந்த காலங்களில் நான் படித்து தெரிந்து கொண்ட விடயங்களை ஆழ்ந்த மையலில் இருந்து தட்டி எழுப்பி விட்டது. அந்த அன்பருக்கு எனது நன்றிகள்.

பனை மரத்திற்கும் தமிழர்களின் நாகரீகத்திற்கும் இடையே உள்ள தொடர்பு தமிழ் தேசியம் பேசுகிற போலியான பல அன்னகாவடிகளுக்கு தெரியாத விடயம். பனைமரத்தையும் அதை ஒட்டிய வரலாற்று உண்மைகளையும் தோழர்களோடு பகிர்ந்து கொள்ளவே இந்த கட்டுரை.

பனை மரம் என்பது ஒரு மரம் என்ற அளவில் நின்றுவிடாது பண்டைய தமிழர்களின் கலை, இலக்கிய, விஞ்ஞான அறிவு சார்ந்த கூறுகளை தனது முதுகில் தூக்கி சுமந்த ஓடம். பனையேறும் தொழில் ஏதோ கள், பதனி இறக்குவது மட்டும் என்றல்லாமல் அதையும் தாண்டி அந்த தொழிலுக்கு ஒரு முக்கியத்துவம் உள்ளது. பனையேறும் தொழில் என்பது தமிழர்களின் இலக்கியத்தோடு தொடர்பு உடையாது. எப்படி என்று மண்டை குழம்ப வேண்டாம். பனை மரத்தில் இருந்து தான் அன்றைய காலத்தில் எழுத்தோலைகள் தயாரிக்கப்பட்டன. சங்ககாலத்தில் பனை ஓலையை தயார் செய்வது என்பது தற்காலத்தில் அச்சகத்தை, புத்தக பதிப்பகத்தை நடத்துவதற்கு சமம். ஒரு அச்சகத்தை நடத்துபவர் குறைந்த பட்ச கல்வி அறிவு உள்ளவராகவாவது இருக்க வேண்டும். அதே போன்று பனை மரத்தோடு தொடர்புடையவர்களும் சங்ககால அறிஞர்களோடு தொடர்புடையவர்களாகவே இருந்திருக்கிறார்கள். அப்படி எனில் பனையேறுதல் ஏன் இழிவான தொழிலாக கருதப்பட வேண்டும் என்று கேள்விகள் எழும்புவது இயற்கையே.


From Profile Photos

பார்ப்பனியம் தமிழ்நாட்டில் நுழைந்த போது பெரும்பான்மையான தமிழர்கள் புத்த சமண மதத்தை சேர்ந்தவர்களாகவும் கல்வியில் சிறந்தவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். பார்ப்பனியம் ஒரு சமூகத்தை அழித்தொழிப்பதற்கு செய்யும் வேலையே, அவர்கள் எந்த சமூகத்தை அடிமைபடுத்துகிறார்களோ அந்த சமூகத்தின் கல்வி அறிவை நிர்மூலப்படுத்துவதே. அப்படி தான் பார்ப்பனியத்தின் சதியில் வீழ்ந்த பண்டைய தமிழகத்தில் கல்வியில் தேர்ந்த அறிஞர்களும் அவர்களுக்கு உதவியாக இருந்தவர்களும் கல்வி பயிலுவது தடை செய்யப்பட்டு அவர்கள் இழிமக்களாக ஒடுக்கப்பட்டனர். அவர்கள் சார்ந்த தொழில்கள் இழிவானதாக பரப்புரை செய்யப்பட்டது. தமிழர்களுடைய இலக்கியங்கள் அவற்றை சுமந்து கொண்டலைந்த பனையோலைகளோடு கொழுத்தப்பட்டது. அப்படி பட்ட சூரையாடலுக்கு தப்பி பிழைத்தவை தான் தற்போது நாம் கொண்டாடும் சங்க கால தமிழ் இலக்கியங்கள்.

அது மட்டுமா பண்டைய தமிழர்களின் தொழில் நுட்பங்கள் சிதைக்கப்பட்டன. பார்ப்பனியம் அதற்கு தேவைப்பட்ட தமிழர்களின் அறிவுச்செல்வங்களை திருடி அவர்களது பெயரில் காப்புரிமை செய்து கொண்டது. செத்துப்போன மனித உடல்களை பதப்படுத்தும் பண்டைய எகிப்தியரின் தொழில்நுட்பங்களை உலகத்தின் கவனத்தை கவர்ந்தது என்றால், உயிருள்ள தமிழ் இலக்கியங்களை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சுமந்த பனையோலைகளை பதப்படுத்தும் தொழில்நுட்பமும் அவற்றை கையாண்ட சான்றோர்களின் நேர்த்தியும் உலகை ஆச்சரியப்படுத்திருக்க வேண்டும் தானே. அது ஏன் நடக்கவில்லை ?..... எகிப்தியர்களின் தொழில் நுடபத்தை பற்றிய குறிப்புகளை அறிவதற்கு தடயங்கள் இருந்தது. ஆனால் பண்டைய தமிழர்களின் அறிவு சார் தொழில் நுட்பங்கள் பார்ப்பனியத்தால் தடயமே இல்லாமல் அழிக்கப்பட்டதும் அந்த தடயங்களை பற்றிய தேடல்களின் முயற்சி பார்ப்பனிய சக்திகளால் அவ்வப்போது முடக்கப்பட்டு வருவதன் விளைவு தான் அது.

தமிழகத்தில் கடந்த காலங்களில் மிகவும் அதிகமாக ஒடுக்கப்பட்ட சமூகங்களின் பின்னணியை பார்த்தால் அவர்கள் கலை, இலக்கிய, தொழில்நுட்ப அறிவு சார்ந்த குடியினராக தான் இருப்பர். ஒரு எடுத்துகாட்டிற்கு முன்பு சாணார் என்றழைக்கப்பட்ட நாடார்களையும், பறையர்களின் உயர்ந்த வகுப்பினராக கருதி கொள்ளும் வள்ளுவ குடிகளையும் எடுத்து கொள்ளலாம். பல பேர் சாணார் என்ற வார்த்தையை இழிவான ஒன்றாக கருதலாம். நான் அவ்வாறு கருதவில்லை. அது “சமணர்” என்ற சொல்லின் திரிபாக இருக்கலாம் என்பது என்னுடைய யூகம். தமிழகத்தில் புத்த சமண மதங்கள் கோலேச்சின என்பதை நாம் இந்த இடத்தில் நினைவில் கொண்டாக வேண்டும். தென் தமிழகத்தில் சாணார் என்றழைக்கப்பட்ட மக்களும் சமணர்களாக இருந்திருக்க வேண்டும். இந்த சாணார் என்றழைக்கப்பட்ட குடிகள் தான் பனை மரத்தோடு தொடர்புடைய தொழில்நுட்பங்களில் தேர்ந்தவர்கள். அதே போல் பதப்படுத்தப்பட்ட பனையோலைகளில் சாகாவரம் பெற்ற தன்னுடைய இரண்டடி ஆயுதத்தை செதுக்கிய வள்ளுவரும் சமண மரபை சேர்ந்தவர் என்று கூறப்படுவதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். வள்ளுவர் போன்ற தமிழ் ஞானிகளோடு சாணார்கள் என்று தற்போது விழிக்கப்படும் சக சமணர்கள் நெருங்கிய தொடர்பில் இருந்திருக்க வேண்டும். அப்படி இருந்த பட்சத்தில் அவர்களும் கல்வி அறிவில் தேர்ந்தவர்களாக தான் இருந்திருப்பர். ஒரு வேளை வள்ளுவரின் குறள்களில் பல அந்த சமணர்களின் பாதிப்பில் எழுந்தவையாக கூட இருக்கலாம். பண்டைய இலக்கியங்களில் சமணர்கள் வியாபாரத்தில் கைதேர்ந்தவர்கள் என்றே குறுப்பிடப்பட்டு இருக்கிறது. வியாபார தொழிலில் சிறந்து விளங்குபவர்களான “செயின்கள்” என்று வழங்கப்படும் இன்றைய வடஇந்திய சமணர்களோடு பொருத்தி பார்க்கும்போது அந்த பண்டைய தமிழ் சமூகத்தை சேர்ந்த சமணர்களின் மரபணுக்கள் தான் இன்றைய நாடார்களின் ரத்தத்தில் இருக்கிறதோ என்னவோ. ம்ம்ம்ம் சாதிகளே இல்லாது இருந்த தமிழர்களின் அடையாளத்தை சிதைத்து அவற்றை இழிவான சாதிய பெயர்களாக கற்பித்த பார்ப்பனியத்தின் வீச்சை பார்க்கும் போது அது எந்த அளவிற்கு தமிழர்களின் பண்பாட்டை சூறையாடி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

இடைப்பட்ட காலங்களில் தமிழர்களிடையே புகுத்தப்பட்ட போகி பண்டிகையின் பெயரில் பார்ப்பனிய சக்திகள் அவர்களின் சதியில் சிக்கி அறியாமையில் மூழ்கி கொண்டிருந்த தமிழர்களிடம் “பழையன கழித்தல் புதியன புகுதல்” என்று கூறி பார்ப்பனிய வெறியர்களிடம் சிக்காமல் எஞ்சி இருந்த கலை இலக்கிய அறிவியல் கருவூலங்களை தீயால் எரிக்கவும் ஆற்றில் விடவும் தூண்டினர். இப்படி தான் தனிநபர்களிடம் இருந்த அறிவு செல்வங்களும் சூறையாடப்பட்டன. நம்மாளுங்க பல பேருக்கு போகி பண்டிகையின் பின்னணி தெரியமால் இவனுங்களும் வீட்டில் இருக்கிற பழைய பொருட்களை எல்லாம் எரித்து கொண்டாடுவானுங்க. தான் சார்ந்த சமூகத்தின் கலாச்சார பண்பாட்டு அழிவுகளை கொண்டாடும் இனம் உலகத்தில் இருக்கிறது என்று சொன்னால் அது தமிழினமாக தான் இருக்கும்

தண்ணீருக்கடியில் எப்படி காற்றை மறைத்து வைக்க முடியாதோ அதே போன்று தான் பார்ப்பனியத்தால் அவர்களால் கீழ் நிலைக்கு தள்ளப்பட்ட மக்களை ரொம்ப காலத்திற்கு அவ்வாறு வைத்திருக்க முடியவில்லை. தமிழ் சமூகத்தில் அவ்வபோது கிளர்ந்தெழுந்த சமூக விடுதலை இயக்கங்களின் தோன்றல்களும், கிருத்துவ மத போதகர்களின் வருகையும் நூற்றாண்டுகளாக கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தின் அறிவு தேடல்களுக்கு வழி திறந்து விட்டது. தங்களுடைய மரபணுக்களில் அறிவு சார்ந்த காரணிகளை சுமந்து கொண்டிருந்ததால் தான் என்னவோ கல்வி கற்க உரிமை கிடைத்தவுடன் குறுகிய காலத்திலேயே பார்ப்பனிய வெறியர்களோடு கல்வியில் சரிக்கு சமமாக போட்டி போடக்கூடிய அளவிற்கு வளர்ச்சி பெற்று விட்டன அந்த சமூகங்கள்.

இவ்வளவற்றிற்கும் இடையில் இத்தனை நூற்றாண்டுகள் கல்வி கற்க தடை செய்யப்பட்ட சமூகங்கள் ஒரு நூற்றாண்டிற்குள் கல்வி அறிவில் தங்களை பெரிய அளவில் வளர்த்து கொள்ள முடிந்ததென்றால், ஒருவேளை பண்டைய தமிழ் மூததையர்கள் பார்ப்பனியத்திடம் அடிமையாகாமல் இருந்து கல்வி கற்கும் உரிமையை இழக்காமல் இருந்து இருந்தால் கலை, இலக்கிய, விஞ்ஞான அறிவியல் அறிவில் எத்தைகைய முன்னேற்றத்தை தற்போதைய தமிழ்ச்சமூகம் அடைந்து இருக்கும் என்று எண்ணி பார்த்தால் யாரோ சுத்தியால் மண்டையில் போட்டது போன்று வலிக்கிறது. எழுதுவதற்கு நிறைய இருக்கிறது. ஆனால் இப்போதைக்கு இது போதும் என்று நினைக்கிறேன்.

வலியின் காரணிகளை பற்றிய அறுவை சிகிச்சை மற்றொரு பதிவில் தொடரும் ............