Saturday, November 24, 2012

ஒரு அடிமாட்டின் கதை




பள்ளி இனத்தில் பிறந்த திருமாவளவன்களும் உண்டு .... வள்ளுவ இனத்தில் பிறந்த காடு வெட்டி குருக்களும் உண்டு ...

அதற்கு எடுத்துகாட்டாக என் வாழ்வில் சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்றை சொல்வேன் ... கொஞ்ச நாளைக்கு முன்பு  சூழ்நிலை நிமித்தமாக பல்லாவரத்திற்கு அருகில் உள்ள அனகாபுத்தூரில் ஒரு அரை எடுத்து தங்கி இருந்தேன் .... அப்போது அந்த அறையை வாடைக்கு விட்ட அதன் சொந்தகாரர் எனக்கும் பக்கத்துக்கு வீட்டில் குடியிருப்பவரும் பயன்படுத்தும் விதத்தில் ஒரு கழிவறையை காண்பித்தார் அது எங்கள் இரு வீட்டிற்கும் மட்டுமே பயன்படுத்தி கொள்ளலாம் என்று கூறி விட்டார் .... பக்கத்து வீட்டு காரரும் அக்கழிவறையை மற்ற வீடுகளை சேர்ந்தவர்கள் பயன்படுத்தா வண்ணம் ஒரு பூட்டை போட்டு சாவிகளுள் ஒன்றை என்னிடம் தந்தார் .... நானும் ஆரம்பத்தில் அவர் நல்ல மனிதர் என்று நினைத்து கொண்டு அவருடன் அவ்வப்போது அளவளாவுவேன் (சில நேரங்களில் அவர் போதையிலும் இருப்பது உண்டு அப்படிப்பட்ட நேரங்களில் மனிதன் ஏதோ சோகத்தில் தண்ணி அடித்து இருக்கிறார் என்று பெரிதாக எடுத்து கொள்வதில்லை. கொஞ்ச நாட்கள் கழித்து தான் தெரியும் இது அவருடைய சின்ன வீட்டிற்கு என்று எடுத்து கொடுத்த வாடகை வீடு என்று)... ... அப்படி பேசும் போது அவர் தன்னை இந்திய கம்முநிட்டை சேர்ந்தவர் என்றும் தங்கள் இயக்கம் தான்  தான் உண்மையான சமூக அக்கறை கொண்ட இயக்கம் என்றும் மார்க்சிஸ்ட் கம்முனிட்டுகள் முதலாளிகளை மிரட்டி பணம் பறிக்கும் கூட்டம் என்று சந்திலே அவருடைய கட்சியின் சோக சிந்தை பாடினார்  ... அப்போது நான் அவரிடம் போட்டு வாங்கும் விதமாக தா.பாண்டியனை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டேன் ... அதற்கு அவர் பாண்டியனை போன்று ஒரு சிறந்த கம்முனிட்டை வேறு எங்கும் பார்க்க முடியாது.... அதற்கு நான் அவரிடம் பாண்டியன் சுய சாதி பிடித்தவர் என்று பேசி கொள்கிறார்களே அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் ஏற்று வின எழுப்பினேன் ... நான் கேட்டது தான் தாமதம் மனிதர் கஞ்சா அடிக்காமலேயே ... இதை பாருங்க தம்பி நானும் இந்த திருமாவளவன் மற்றும் புரட்சி பாரதம் போன்ற சாதி கட்சியில் பெரும்பான்மையாக  இருக்கும்  வள்ளுவ இனத்தை சேர்ந்தவன் தான் ... அவனுங்க எல்லாம் சாதி கட்சி நடத்தி அரசியல் பண்ணுகிறவனுங்க ஆனா எங்க தா. பாண்டியன் அப்படி கிடையாது என்று சொனார் பார்க்கலாம் எனக்கு அவர் தண்ணியடிக்காமல் என்னிடம் பேசி கொண்டு இருந்தாலும் அவருடைய வார்த்தையில் இருந்த வீச்சம் என்னை அத்துடன் அவருடன் நடந்த உரையாடலை முடிக்குமாறு கொண்டு விட்டது ... அதற்கப்புறம் நான் அவர் வாயில் இருந்துவரும் சாக்கடைக்கு பயந்து ஒரு சிறு புன்முர்வளுன் நகர்ந்து சென்று விடுவேன் ... நாட்கள் நகர்ந்தது  .... அப்புறம் நானுண்டு என்னுடைய வேலையுண்டு என்று கடந்து சென்று விடுவேன் ... அப்புறம் கழிவறையை அவருடைய குடும்பம் உபயோகப்படுத்தும் விதத்தில் எமக்கு சில மனக்குறைகள் உண்டு .. பிறிதோர் அறையை சேர்ந்தவரும் அந்த கழிவறையை உபயோகப்படுத்துகிறாரே என்ற உணர்வி கிசித்து இல்லாதவர்களை போன்று அந்த குடும்பம் கழிவறையை பயன்படுத்தி விட்டு அதில் தண்ணி ஊற்றாமல் சென்று விடுவார்கள் நானும் விதியே என்று பல நேரங்களில் தண்ணி ஊற்றி கழுவி விட்டு கழிவறையை பயன்படுத்துவேன் ...அப்படி ஒரு நாள் அதிகாலையில் நான் கழிவறையை பயன்படுத்த சென்ற பொழுது அந்த போதை பார்டி உள்ளே இருந்தார் ... சரி நானும் வெளியே பொறுமையாக காத்திருந்தேன் .. கழிவறையை விட்டு வெளியே வந்தவர் அப்படியே வீட்டுக்குள் சென்று கதவை தாழ்பாழ் இட்டு கொண்டார் நான் கழிவறைக்கு சென்ற பொழுது அவர் வெளியேற்றிய மலம் கழிவறையில் மிதந்து கொண்டிருந்தது .... எனக்கு வந்த கோவத்திற்கு அவர் வீட்டுக்கு வெளியே பிடித்து வைக்கபட்டு இருந்த தண்ணியை எடுத்து கழிவறையில் கொட்டி கழுவி விட்டேன் .... நானும் பின்பு சென்று விட்டேன்.. அந்த நிகழ்விற்கு பின்பு அந்த குடும்பம் என்னை பார்த்தால் கொஞ்சம் விறைப்பாக நடந்து கொல்வதும் தொடர் கதையாகி போனது ... அப்படி நாட்கள் கடந்து கொண்டிருந்த போது ஒருநாள் அங்கிருந்த குழாயில் தண்ணீர் பிடிப்பதற்காக நான் வாளியை வைத்து இருந்தேன் அந்த போதை பார்ட்டியின் மனைவி என்னுடைய வாளியை எட்டி  உதைத்தாள். அதற்கு நான் அவளிடம் எதற்கு என்னுடைய வாளியை அப்படி உதைத்து தள்ளி விடுகிறாய் என்று கேட்டது தான் தாமதம் அந்த பெண்மணி "எங்கிருந்தோ எங்க பகுதிக்கு தஞ்சம் பொழைக்க வந்த நாய் நீ எங்க வீட்டு தண்ணியையே எடுத்து கழிவறையில் ஊற்றுகிறாயா என்று கேட்டாள் நானும் பதிலுக்கு நீங்க எல்லாரும் மலம் கழித்து விட்டு மற்றவர்கள் பயன்படுத்துவர்களே என்ற எண்ணம் துளியும் இல்லாதவர்களாக கழிவறையில் தண்ணீர் உற்றாமல் போனால் நான் என்ன செய்வேன்.. அதை தான் செய்வேன் என்றேன் ... உடனே அவள் இன்றிலிருந்து நீயும் கழிவறையை வாரா வாரம் கழுவி விட வேண்டும் ... அதற்கு அவளிடம் .. நான் தன் தினமும் நீங்க அசிங்கம் பண்ணி விட்டு தண்ணி ஊற்றாமல் போகும் போது நான் தானே கழுவி விடுகிறேன்... வேண்டும் என்றால் நீ கழு விடு என்றேன்... அவ்வளவு தான் அந்த பெண்மணி ... டேய் என்னை என்ன தோட்டி என்று நினைத்து விட்டாயா (ஒடுக்கப்பட்ட சமூகத்தின் நவீன பார்ப்பனிய குளியல் )...இரு என் கணவன் வரட்டும் உன்னை என்ன செய்கிறேன் பார் என்று மழை காலத்து தேரை கத்துவது போல் கத்தி கொண்டு இருந்தாள்... அன்றி சாயங்காலம் அவளுடைய கணவனை என்னிடம் சண்டை போட கூட்டி கண்டு வந்தாள் அவனும் என்னுடைய அறைக்கு முன்னால் இருந்து கத்தி கொண்டு இருந்தான் .. தே உன்னை பார்த்தாலே மாவோயிச்ட்டு தீவிரவாதி மாதிரி தெரியுது .... லவ்டே கபால் உன்னை என்ன செய்கிறேன் பார் என்று கத்தி கொண்டு இருந்தான் ... திடீரென்று உள்ளே வர எத்தனித்தவன் என்னுடைய அறையின் ஓரத்தில் கிடந்த கத்தியை பார்த்த பின்பு  என்ன நினைத்தானோ தெரியவில்லை அப்படியே வெளியே நின்று கொண்டே உன்னை இந்த இடத்தில் இருந்தே விரட்டி விடுகிறேன் பார் என்று கத்தினான் ... நானும் உன்னால் முடிந்ததை பார் என்று சொல்லி விட்டு பேசாமல் படுத்து விட்டேன்... அதற்கு கொஞ்ச நாட்கள் முன்பு தான் அந்த அறையை காலி செய்யும் எண்ணத்தில் வேறு ஒரு வீட்டை பார்த்து முன்பணமும் கொடுத்து இருந்தேன் ஆனால் அவன் அப்ப்டி பேசியதும் எனக்குள் இருந்த சுயமரியாதை  காசு போனாலும் பரவாயில்லை அந்த அறையை காலி பண்ணாமல் மேலும் சில மதங்கள் வைத்து விடலாம் எண்ணத்தில் வைத்து இருந்தேன் .... பையன் பயந்து ஓடிவிடுவான் என்ற எண்ணத்தில் கத்தியவனுக்கோ நான் அவன் முன்னாடி வேண்டும் என்றே உலவுவதை பார்க்கும் போதெல்லாம் தேள் கொட்டுபட்டவனை போல் திரு திருவென முழித்து கொண்டே செல்வான் ....

எதற்கு இந்த நிகழ்வை சொல்ல வந்தேன் என்றால் தன்னுடைய சமூகம் அடிமைத்தனத்தில் கிடந்தது கொண்டிருக்கிறது என்ற எண்ணம் கிஞ்சித்தும் கொண்டிராமல் ...அந்த சமூகத்திற்காக போராடுபவர்களை எல்லாம் சாதி வெறியன்கள் என்று சொல்லி கொண்டு பார்ப்பனிய சகதியில் புரண்டு கொண்டு பல்வேறு கட்சிகளிலும் அடிமையாக இருப்பதையே பிறவி பயனாக எண்ணும் அன்னகாவடிகள் ஒடுக்கப்பட்ட சமூகங்களிலும் உண்டு என்பதை உணர்த்துவதற்காக தான் ..


அதே வேளையில் சாதி வெறியர்கள் நிறைந்த சமூகம் என்று பார்ப்பனியத்தால் மற்றவர்களுக்கு எதிராக கொம்பு சீவி விடப்படும் அடிமாடுகளாக நடத்தப்படும் பள்ளி சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக தன்னுடைய இன்னுயிரை தந்த தமிழரசன்களும் உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும் ....