Thursday, January 19, 2012

இந்திய உழல் பெருச்சாளிகள் - சாதிவாரி கணகெடுப்பு



சமீபகாலமாக உழல் பெருச்சாளிகள் தங்களை காப்பாற்றி கொள்வதற்காக
தங்களுடைய சாதி அடையாளத்தின் பின்னால் போய் தங்களை ஒளித்து கொள்ளுகிறார்கள். அது சமீபத்தில் அலைவரிசை ஊழல் குற்றம் சாட்டப்பட்ட ராசாவாக இருந்தாலும் சரி. இல்லை அதுக்கு முன்னால் தன்னுடைய உடன் பிறவா சகோதரியோடு சேர்ந்து தமிழ்நாட்டை ஆட்டையை போட்ட சசிகலாவாக இருந்தாலும் சரி. இப்படி எல்லாருமே தப்பிப்பதற்கு தங்களுடைய சாதியை முன்னிலைபடுத்தி கொள்கிறார்கள். இது ஒரு நடைமுறையாகவே மாறி போய் விட்டது.

அது என்ன இப்ப ஊழல் செய்த இவர்கள் மட்டும்
தங்கள் சாதியை சொல்லி தப்பித்து விடுகிறார்கள். அப்படி என்றால் இதுக்கு முன்னாடி இந்திய சொத்தை கொள்ளை போட்டவர்கள் சாதி மட்டும் ஏன் தெரியாமல் இருந்து விட்டது. அவர்கள் என்ன பாவம் செய்தது விட்டார்கள் அவர்களுக்கு மட்டும் இன்று உள்ளவர்களுக்கு கிடைப்பது போல் ஊடக வெளிச்சம் கிடைக்கவில்லை. அதுக்கு பிராயசித்தமாக இது போன்ற ஒருதலைபட்சமான முடிவுகளால் பாதிக்கப்பட்ட அவர்கள் பெயரையும் வெளிக்கொணர்ந்து அவர்களை மரியாதை செய்யவே இந்த பதிவு .
அருணாச்சலம் செட்டியார் - செட்டியார் பிரிவை சேர்ந்த வாணியர்
சுதந்திர இநதியாவின் முதல் நிதி அமைச்சரான இவர் சமீபத்தில் திருநெல்வேலியில் நடந்த வாணியர் குல மாநாட்டில் எங்கள் குல வேந்தல் , நாயகன் என்று புகழாரம் சூட்டப்பட்டார். கோயம்புத்தூரில் பெரும் மில் தொழிலதிபராக இருந்தவர் . இவரது முதல் போணியே சுதந்திர இந்தியாவில் அன்று பணக்காரர்கள் வரி கட்டாமல் தப்பிக்க உதவியவர் . வரி வசூலிப்பில் மிகப்பெரிய ஏய்ப்பு நடத்தியவர் . அன்று அவரால் இந்திய அரசாங்கத்திற்கு ஏற்பட்ட இழப்பை இன்று உள்ள மார்கெட் நிலவரத்தொடு ஒப்பிட்டால் இன்று ராசா செய்த ஊழல் எல்லாம் சின்ன கொசுறு தான்.
பிர்லா குழுமம் - பனியா சாதியை சேர்ந்தவர்கள்
காந்தியோடு தங்களுக்கு உள்ள நெருக்கத்தை பயன்படுத்தி அரசு எந்திரத்தை தவறாக பயன்படுத்தி அன்றைய கால கட்டத்தில் தங்களுக்கு தொழில் போட்டியாளராக இருந்த டாட்டா குழுமம் நடத்தி வந்த விமான சேவையை நாட்டு ஊடமையாக்க நிர்பந்த்தித்தவர்கள் . இன்றைய இந்தியன் ஏர்லைன்சு , ஏர் இந்தியா விமான சேவைகள் JRD டாட்டாவின் சொந்த உழைப்பால் உருவாக்கப்பட்டது .

சார்ச்சு பெர்னாண்டசு - பிராமண சாதியை சேர்ந்த கத்தோலிக்க கிருத்துவர்
செய பிரகாசு நாராயணன் அவர்களை தன்னுடைய குருவாக ஏற்றுக்கொண்ட மிகப்பெரும் சோசியலிஸ்ட். சொந்த மனைவி இருக்கும் போது இன்னொரு பிராமணருடைய மனைவியான ஜெயா ஜெட்லீயை அவரை விரட்டி விட்டு தோழியாக ஏற்று கொண்டவர் . வாஜ்பாய் காலத்தில் நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்ட கார்கில் போரில் இறந்து போன ராணுவ வீரர்களை அடக்கம் செய்ய அமெரிக்காவில் இருந்து சவப்பெட்டியை இறக்குமதி செய்த நற்பண்பாளர் ( இந்தியாவில் மரவேலை செய்வதற்கு என தனியே சாதி இருக்கும் போது இவர் எதுக்கு அமேரிக்கா போனார் என்பது தான் புரியாத புதிர் ). ஆர் எஸ் எஸ் மேடைகளில் இவருக்கென்று நிரந்தர இருக்கையே உண்டு . வேற என்ன சாதி பாசத்தால் தான் . தற்போது மறதி நோயால் பாதிக்கப்படுகிற இவர் அரசியலில் பாடுபட்டு சேர்த்த சொத்தை உரிமை கோரி இவரது மனைவி, தோழி, மற்றும் சகோதரர்களிடையே நடந்த சண்டை தேசிய ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.

லால் கிருட்டிண அத்வானி - பனியா சாதியை சேந்தவர்
இவருக்கென்று பல பெருமைகள் உண்டு . சும்மா கிடந்த சங்கை எடுத்து ஊதுவதில் இவருக்கு நிகர் இவர் தான் . இவருக்கு நாலு பேரை போட்டு தள்ளனும்ன்னு ஒரு வெறி வந்திச்சின்னா உடனே ஒரு ரத யாத்திரையை ஆரம்பித்து விடுவார் .

 
இவர் பெயர் அடிபட்ட கவாலா ஊழல் மிக பிரபலம் . எதுக்கெடுத்தாலும் தீவரவாதி பற்றி பேசும் இவருக்கு தீவிரவாதிகளுக்கு பைனான்சியர்களாக இருக்கும் கவாலா புரோக்கர்களிடம் உள்ள நெருக்கம் தான் கொஞ்சம் ஆச்சரியமான ராகம் . கடைசியில் ஹவாலா ப்ரோக்கரின் டைரியில் இருந்த பெயரை அத்வானியாக எடுத்து கொள்ள இயலாது எனவும் மேலும் சாட்சிகள் சரிவர நிரூபிக்கபடவில்லை என்றும் கூறி நீதி மன்றத்தால் விடுவிக்கப்பட்டார் . கவாலா வழக்கில் கட்சி வேறுபாடின்றி எல்லாரும் ஈடுபட்டு இருந்ததும் இவரது விடுதலைக்கு ஒரு திருப்பு முனையாக இருந்தது . ஐசிஐசிஐ வங்கியின் கணிசமான பங்குகள் இவருடைய குடும்பத்தின் வசம் என்று ஒரு செய்தி உண்டு .
இதை தவிர மேலும் சில சிறப்புகள் இவருக்கு உண்டு . எல்லாத்தையும் இங்கு என்னால் குறுப்பிட இயலவில்லை . தோழர்கள் இவரை பற்றி தங்களுக்கு தெரிந்த விசயங்களை இங்கு பதியவும்.

ராசீவ் காந்தி - பிராமண சாதியை சேர்ந்த காசுமீரி

 
பிரதம மந்திரி ஆகிய குறுகிய காலத்திலேயே இவரது ஊழல் சாதனை அளப்பரியது . இவர் பனியா சாதியை சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவன உரிமையாளர்களை துணைக்கு சேர்த்து கொண்டு செய்த போபர்ஸ் ஊழல், மிகப் பிரசித்தம் . ராணுவத்தில் நடைபெறும் ஊழல்களில் முதல் முதலில் வெளி உலகுக்கு தெரிய வந்தது இவரது போபர்ஸ் ஊழல் தான் . இவர் பண்ணிய ஊழலை கிட்ட தட்ட இருபது வருடங்களுக்கும் மேலாக அதற்கு பின் வந்த பல்வேறு அரசுகளும் விசாரித்து கொண்டு தான் வருகின்றன . ஆனா கதை என்னவோ சிந்துபாத்தின் சாகச பிரயாணங்கள் மாதிரி போய் கொண்டு இருக்கிறது .ராஜீவ் அமைச்சரவையில் இருந்து கொண்டே இந்த ஊழலை வெளி கொணர்ந்த திரு வி பி சிங் அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டார் . இந்த ஊழலில் மற்றொரு நபரான அன்னை சோனியா காந்தியின் உறவினர் குத்துரோச்சி அவ்வப்போது இந்தியா வந்து அன்னையை பார்த்து விட்டு தான் செல்கிறார் . ஆனால் என்னமோ தலைமறைவாக இருப்பதாக கூறப்படும் இவர் இந்திய உளவு துரையின் கண்களிலும் சி பி ஐ கண்களிலும் படவே மாட்டேன்கிறார். ஆனா அவரு என்னமோ அடிக்கடி தாய்லாந்து போய் மசாஜ் பண்ணி கொள்வதை பற்றிய செய்திகள் அவ்வப்போது ஊடகங்களில் வருவது உண்டு . தற்போது அவருடைய மனைவி , பிள்ளைகள் மற்றும் சுற்றத்தார் பெயரில் சுவிஸ் வங்கிகளில் பதுக்கப்பட்டு இருக்கும் பணம் வெளியே வந்தால் உலக கோடீசுவரர்களில் இவர்களது குடும்பம் டாப் 20 ல் வரலாம்.
சுசுமா சுவராசு பிராமண சாதியை சேர்ந்தவர்
கொடூரமான காப் பஞ்சாயத்து கௌரவ கொலைகளுக்கு புகழ்பெற்ற அரியானா மாநிலத்தில் அம்பாலா எண்ணும் கிராமத்தில் பாரம்பரியமான பிராமண குடும்பத்தில் பிறந்தவர் . இவர் தனது அரசியல் வாழ்வை, அரியானாவை தலைமுறை தலைமுறையாக ஆட்டையை போட்ட குடும்பத்தை தோற்றுற்றுவித்தவரான தேவிலாலின் அரவணைப்பில் எம்.எல்.ஏ பதவியோடு தொடங்கினார்.. பின்பு அத்வானியின் கொள்கை மீதுள்ள பிடிப்பால் பாசகாவில் போய் சேர்ந்தார். அத்வானியின் வலதுகரம் யார் என்பதில் ஒரு காலத்தில் இவருக்கும் உமாபாரதிக்கும் மிகப்பெரிய போட்டியே நடந்தது. தற்போது அத்வானிக்கு பிறகு  பாசகா வின் பாராளுமன்ற கட்சி தலைவராக பொறுப்பேற்று கொண்டார். கட்டபஞ்சாயத்தின் மீது அவருக்கு காதலோ என்னவோ அரியானாவில் காப் பஞ்சாயத்தார் பண்ணிய படுகொலைகளை பற்றி எல்லாரும் வாய் கிழிய பேசிய போது அந்த மாநிலத்தை சேர்ந்த இவர் பஞ்சாயத்தாரின் கொடுஞ்செயல்களுக்கு எதிராக வாயே திறக்கவில்லை அதோடு காமன்வெல்த் ஊழலில் டெல்லி முதல்வர் தீட்சித் அவரது பிராமண சாதியை சேர்ந்தவர் என்பதோ என்னவோ எல்லாரையும் விளாசி தள்ளிய இவர் ஷீலா தீட்சித்தை மட்டும் கண்டுக்காமல் விட்டு விட்டார். அதே போன்று இவர் கர்நாடக சுரங்க ஊழல் புகழ் ரெட்டி சகோதர்களின் குருவாக விளங்கி வருகிறவர் . ரெட்டி சகோதரர்கள் எதை செய்தாலும் இவருடைய ஆசியுடன் செய்து வந்தனர். ரெட்டி சகோதர்களின் தொழிலில் இவரும் ஒரு கூட்டுதாரர் என்று அவ்வப்போது தகவல்கள் கசிவது உண்டு. அதோடு மிகப்பெரும் தொழிலதிபர்களுடன் நல்ல தொடர்பில் இருப்பதால் கமிசனுக்கு குறைவு கிடையாது.. சில மாதங்களுக்கு முன்பு இவர் கர்நாடகாவில் லிங்கயத்து சாதியை சேர்ந்த எடியூரப்பவை எப்படியாவது கவிழ்த்துவிட்டு அந்த இடத்தில் பிராமண சாதியை சேர்ந்த ஆனந்தகுமாரை நியமிப்பதன் முயற்சி செய்து தோல்வி கண்டவர். அவ்வாறு செய்தால் ரெட்டி சகோதரர்களுடனான தனது சுரங்க பிசினசுக்கு எந்த பாதிப்பும் வராது என்று அவர் போட்ட கணக்கு கடைசியில் தப்பு கணக்ககி விட்டது. கூடிய விரைவில் ரெட்டி சகோதர்களின் டவுசர் கிழியும் போது இவர் செய்து கொண்டிருக்கின்ற பணபரிவர்த்தனை பற்றிய விவரங்களும் வெளி வரும் என்று நம்புவோமாக.
தீரு பாய் அம்பானி பனியா சாதியை சேர்ந்த குசராத்தி
இந்தியாவின் நம்பிக்கை நாயகன் இந்தியாவை உலக அரங்கிற்கு இட்டு சென்ற தொழிலதிபர் என்று பலராலும் முன்மொழியப்படுகின்ற ஒருவர் . ஆனால் இவரது வாழ்க்கையை கொஞ்சம் பின்னோக்கி சென்று பார்த்தால் தெரியும் . இவர் எவ்வளவு கோல்மால்களை செய்து வந்திருக்கிறார் என்று. பெட்ரோல் பங்கில் ஒரு சாதாரண கணக்காளராக இருந்த இவருடைய குடும்பம் எப்படி உலக மகா பணக்கார குடும்பம் ஆனது . அதற்கு பின்னால் ஒரு பெரும் கதையே இருக்கிறது. இவரது முதல் கோல்மால் மகராஷ்டிரா குசராத்தி அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் கடன் வாங்கி அதை ஏப்பம் விட்டதிலிருந்து ஆரம்பிக்கிறது. அவருக்கு அப்போது எல்லா விதத்திலும் உதவிகரம் நீட்டியது காங்கிரசு கட்சி. மகாராஷ்டிராவிலும் குஜராத்திலும் நன்றாக ஓடிகொண்டிருந்த நூற்பாலைகளை காங்கிரசு கட்சியின் நிர்வாக குளறுபடிகளால் நட்டத்தில் ஓடுவதாக காட்டி பின்பு அந்த நூற்பாலைகளை தனியாருக்கு கமிசனுக்கு விற்க முகாந்திரமிடப்பட்டது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் திருபாய் அம்பானி அந்த நூற்பாலைகளை இந்திராகாந்தியின் கடைகண் பார்வையால் அரசு உடமையாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற்று வாங்கினார் . பின்பு அதே நூற்பாலைகள் கடனில் ஓடுவதாக காட்டி எல்லா வங்கிகளுக்கும் பட்டை நாமம் போட்டார். அப்போது அந்த ஊழல் எல்லா மட்டத்திலும் பரபரப்பாக பேசப்பட்டது பின்பு அதே நூற்பாலைகளை வேறு பெயரில் தொடங்கி துணி வர்த்தகத்தில் சக்கை போடு போட்டார் . இவரது மோசமான வியாபார தந்திரங்களால் பாம்பே டையிங் குழுமம் அம்பானிக்கு எதிராக சட்ட ரீதியாக வழக்கை மேற்கொண்டது . அந்த கால கட்டத்தில் இந்திரா காந்தியின் காங்கிரசு கட்சியின் உதவியோடு பல தில்லு முல்லுகளும் செய்து அந்த சட்ட சிக்கல்களில் இருந்து தப்பினார். அதற்கப்புறம் வந்த பல அரசுகளின் உதவியோடு இவரது தொழில் தங்கு தடையின்றி வளர்ந்தது . அவரது தொழில் வளர்ச்சியில் மிக பெரிய திருப்புமுனை பிராமணரான வாச்சிபாயின் ஆட்சியில் ஏற்பட்டது. தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் இந்தியன் ஆயில் கார்பரேசனால் இந்தியாவின் பலபகுதிகளிலும் பெட்ரோலிய இயற்கை எரிவாயு ஊற்றுக்கள் கண்டுபிடிக்கப்பட்டது அதேகால கட்டத்தில் இந்திய நிலப்பகுதியில் இந்திய அரசுக்கு மட்டுமே இருந்த பெட்ரோலியம் எடுக்கும் உரிமையை வாஜ்பாயின் அரசு தனியாருக்கு விற்க முற்பட்டது
அதற்கு முன்பே இந்தியன் ஆயில் கார்பரேசனில் வேலை பார்த்த அதிகாரிகளை விலை கொடுத்து வாங்கிய அம்பானி அதே அதிகாரிகளிடம் இருந்து இந்தியாவில் பெட்ரோலிய இயற்கை எரிவாயு ஊற்றுக்கள் இருக்கும் இடங்களின் பட்டியலை இவர் வாங்கி அதே இடங்களில் பெட்ரோலிய இயற்கை எரிவாயு எடுக்கும் உரிமையை வாஜ்பாயின் அரசாங்கத்திற்கு ஒரு மிகப்பெரும் கமிசனை குடுத்து அந்த இடங்களில் (குறிப்பாக கோதாவரி டெல்டாக்களில் ) வாங்கினார். எல்லா கட்சிகளுக்கும் எல்லா மட்டத்திலும் பண பரிவர்த்தனை நடந்ததால் அது ஊழல் என்று பேசப்படவில்லை. அப்போது பெட்ரோலிய மந்திரியாக இருந்த வன்னி சாதியை சேர்ந்த வாழப்படியாருக்கு 100 கோடி வரை அன்பளிப்பாக வழங்கப்பட்டது . அதை பங்கு போடுவதில் ஏற்பட்ட சண்டையால் தான் வாழப்பாடி தனது சாதியை சேர்ந்த ராமதாசுக்கு பரம எதிரியானார் . பின்பு கூட்டணியை சேர்ந்த அம்மா ஜெயலலிதா பெட்ரோலிய இயற்கை எரிவாயு துறையில் பெரிய வருமானம் கிடைப்பதை மோப்பம் பிடித்ததால் அந்த துறையை பெற வாஜ்பாயிடம் நடத்திய போராட்டமும் அதற்கு பிறகு ஏற்பட்ட விளைவுகளும் எல்லாரும் அறிந்த ஓன்று தான் . இன்றைக்கு கோதாவரி ஆற்று படுகையில் இந்திய அரசு பெட்ரோலிய இயற்கை எரிவாயு நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்ட பெட்ரோலிய இயற்கை எரிவாயு ஊற்றுக்கள் அம்மப்னியின் ரிலையன்சு குழுமத்துக்கு தாரை வார்க்கப்படாமல் இருந்து இந்திய அரசுக்கு சொந்தமானதாக இருந்து இருந்தால் இன்று அது இந்திய அரசுக்கு எத்தகைய வருவாயை தந்திருக்கும் . அந்த பெட்ரோலிய இயற்கை எரிவாயு ஊற்றுக்களின் உரிமையை பெற்ற பிறகு தான் அம்பானியின் ரிலையன்சு நிறுவனம் பெட்ரோ கெமிக்கல் வர்த்தகத்தில் மிகப்பெரும் கம்பெனியாக உருவெடுத்தது .

இந்திய ஆயுட்காப்பீட்டு நிறுவனம் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சமீபத்தில் நடந்த மெகா ஊழல்
எல்லாரும் அலைக்கற்றை ஊழலில் ராசாவையே குறி வைத்து தாக்கி கொண்டிருந்த போது சப்தமில்லாமல் இன்னொரு மெகா ஊழல் அரங்கேறி இருக்கிறது. ராசாவுக்கு கிடைத்த சாதி சார்ந்த விளம்பரம் வாங்கி ஊழலில் ஈடுபட்டவர்களுக்கு கிடைக்கவில்லை. ஆக அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை போக்கும் பட்சமாக இங்கு அந்த வங்கி ஊழலில் ஈடுபட்ட பிதாமகர்களுக்கு இலவசமாக விளம்பரம் குடுப்போம் . கிட்டத்தட்ட இந்த வங்கி ஊழலில் அந்தந்த வங்கிகளின் உயர் அதிகாரிகள் ரியல் எஸ்டேட் புரோமோட்டர்களோடு சேர்ந்து கிட்டத்தட்ட 40,000 கோடிக்கு ரூபாய்க்கு மேலான தொகையோடு விளையாடி இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது . பாவம் நடுத்தர மற்றும் ஏழை மக்களால் கஷ்ட்டப்பட்டு சிறுக சிறுக சேர்த்து வங்கிகளில் போட்டு வைக்கப்பட்ட பணத்தை எடுத்து வாங்கி அதிகாரிகள் பணத்தில் கொழுத்து திளைக்கும் ரியல் எஸ்டேட் புரோமோட்டர்களோடு பங்கு போட்டு இருக்கிறார்கள் அதற்காக கமிசன் வேறு வாங்கி இருக்கிறார்கள்
அவர்களில் கீழ்க்கண்டவர்கள் மத்திய புலனாய்வு துறையால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்
ராமச்சந்திரன் நாயர் நாயர் சாதியை சேர்ந்த கேரளத்துகாரர்
இவர் இந்திய ஆயுட்காப்பீட்டு நிறுவனத்திண் மும்பை கிளையில் தலைமை நிர்வாகியாக இருக்கிறார்
ராசேசு சர்மா பிராமண சாதிய சேர்ந்த வடநாட்டுகாரர்
இவர் மணி மேட்டர்ஸ் இந்தியா நிறுவனத்தின் மும்பை கிளையில் நிர்வாக இயக்குனராக வேலை பார்க்கிறார்
வேங்கோப குச்சல் (Gujjal) கத்ரி எனப்படும் பனியா சாதியை சேர்ந்த பஞ்சாபியர். இவர் பஞ்சாப் தேசிய வங்கியின் புது டில்லி கிளையின் துணை பொது மேலாளராக இருக்கிறார்

 
மனிந்தர் சிங் சோகர் அரோரா எனப்படும் பனியா சாதியை சேர்ந்த பஞ்சாப் சீக்கியர். இவர் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவின் புது டெல்லி கிளையின் கணக்காய்வாளர் இயக்குனராக இருக்கிறார்

ஆர்.என்.தயால் அகர்வால் ( லட்சுமி மிட்டல் மற்றும் சுனில் மிட்டல் போன்றவர்கள் இந்த வகையறாவை சேர்ந்தவர்கள் ) என்றழைக்கப்படும் பனியா சாதியை சேர்ந்தவர். இவர் பாங்க் ஆப் இந்தியாவின் மும்பை கிளையில் போது மேலாளராக இருக்கிறார்

சுரேசு கட்டாணி மகேசுவரி ( பிர்லா குழுமமும் இந்த வகையறாவை சேர்ந்தவர்கள் தான் ) என்றழைக்கப்படும் பனியா சாதியை சேர்ந்தவர்
சஞ்சய் சர்மா - வடநாட்டு பிராமணர்
மேற்கண்ட இருவரும் மணி மேட்டர்ஸ் இந்தியா நிறுவனத்தின் மும்பை கிளையில் வேலை பார்க்கிறார்கள்.
ஆனா இங்க ஒரு விடயத்தை எல்லாரும் கவனிக்க வேண்டும் . ஊழல் கூட்டணியில் பிராமண - பனியா சாதியை சேர்ந்தவங்களுக்கு தான் முன்னுரிமை. இதுல ஆச்சரியபடுவதற்கு ஒன்றுமில்லை . இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து எந்த கூட்டணி ஆட்சிக்கு வந்தாலும் பெரும்பாலான கொள்ளைகள் அரங்கேற்றப்படுவது இந்த பிராமண - பனியா கூட்டணியால் தான் . அவங்களோட கூட்டணியில் பெரும்பாலும் பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை சேர்த்து கொள்வதில்லை . கொள்ளையடிப்பதிலும் ஏன் இந்த சாதிய அடக்குமுறை . இது ஏன் என்று யாராவது விளக்க முடியுமா

தோழர்கள் யாரேனும் இது தவிர்த்து மேலதிக தகவல்களை தெரிந்து இருந்தால் அதை என்னுடன் பரிமாறிக்கொள்ள அவர்களிடம் வேண்டி கொள்கிறேன். ஊழல் செய்து விட்டு சரியான சாட்சியங்கள் இல்லாததால் அல்லது நிரூபிக்கபடாதாதல் ஊழல் செய்யாதது போன்று சுத்துபவர்கள் பெயரையும் சேர்த்து கொள்ளலாம். சமூக நீதியை நிலை நாட்டனும்னா சாதிவாரி கணக்கெடுப்பு தேவைப்படுகிறது. அதேபோன்று இதிலும் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தி விட வேண்டியது காலத்தின் கட்டாயமாகி விட்டது. ஊழல் பெருச்சாளிகளை பற்றி குறுப்பிடும் போது அவர்கள் எந்த எந்த துறைகளில் ஊழல் செய்தார்கள் என்று குறுப்பிட்டால் நன்றாக இருக்கும் .

No comments:

Post a Comment