Tuesday, December 7, 2010

வீரத்தில் இறையாண்மையில் சிறந்தது எது புலியா? சிங்கமா?

சமீபத்தில் யூ குழாயில் (you tube) புலிகள் கொஞ்சம் பதுங்கும் போது என்ற பாடலை கேட்க நேர்ந்தது அதை கேட்ட பிறகு புலியை பற்றிய நிறைய கேள்விகள் எழுந்தது. நான் இதற்கு முன்பு புலிகளை பற்றி படித்த அறிவோடு சமீபத்தில் புலிகள் மற்றும் சிங்கங்களை பற்றிய என்னுடைய இணைய தேடலில் நான் தெரிந்து கொண்ட ஒரு சில விசயங்களை நான் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஏன் பொதுவாக பலம் பொருந்தியவர்களாக அதிகாரமிக்கவர்களாக தங்களை கருதி கொள்ளுபவர்கள் எப்போதும் அவர்களை சிங்கத்தோடு ஒப்புமை படுத்தி கொள்ளுகிறார்கள் ஏன் புலிகளோடு ஒப்புமை படுத்தி கொள்ளவில்லை.
மேற்கண்ட விடயத்தை பற்றி தெரிந்து கொள்ளுவதற்குள் பூனை கூட்டத்தை சேர்ந்த புலியையும் சிங்கத்தையும் பற்றிய உடல், இன, மற்றும் அவைகளின் சமூக ரீதியான தகவல்களை தெரிந்து கொள்ளுவது மிக அவசியம் என்று எண்ணுகிறேன். பூனை குழுமத்தில் உடலமைப்பில் உலகத்திலேயே மிகப்பெரியது புலி தான். ஆனால் பல பேர் சிங்கம் தான் உடலமைப்பில் பெரியது என்று தான் தவறாக நினைத்து கொள்ளுவார்கள். அப்படி தோன்ற காரணம் ஆண் சிங்கங்களின் பிடரி தான். ஆண் சிங்கங்களின் பிடரியை மழித்து எடுத்துவிட்டால் அது ஒரு எலி குஞ்சை போல தான் தோன்றும். ஆனால் உண்மையில் எடையிலும், உருவத்திலும், வலிமையிலும் புலி தான் பெரியது. அதனால் தான் என்னவோ புலி எப்போதும் தனியாக தான் வேட்டையாடும், அவை பெரும்பாலும் சிங்கங்களை போல் கூட்டமாக கும்மி அடிப்பதில்லை.


சிங்கங்களின் கூட்டத்தில் பெண் சிங்கங்கள் தான் வேட்டையாடும். ஆண் சிங்கங்கள் ஒரு நாளைக்கு பதினெட்டு மணி நேரம் தூங்கும் வழக்கமுடையது. பெண் சிங்கங்கள் வேட்டையாடிய இறைச்சியை முதல் ஆளாக வந்து விழுங்குவதற்கு மட்டுமே ஆண் சிங்கம் அதன் தூக்கத்தை விட்டு எழும்பும். கூட்டத்தின் தலைவனான ஆண் சிங்கம் எப்போதுமே ஒரு சாப்பாட்டு ராமன் , தனி திண்ணி ஆக தான் இருக்கும். கூட்ட தலைவன் பசியில் உணவாறி கொண்டு இருக்கும் போது தப்பி தவறியும் பெண் சிங்கங்களோ இல்லை அந்த கூட்டத்தில் உள்ள ஆண் சிங்கங்களோ அல்லது குட்டிகளோ அதன் பக்கத்தில் பங்கு கேட்டு நெருங்கும் பழக்கத்தை வைத்து கொள்ளுவது கிடையாது. கூட்ட தலைவன் குட்டி என்று கூட பார்ப்பது கிடையாது அவை பசியில் முழுங்கி கொண்டிருக்குபோது சிங்க குட்டிகள் நெருங்கினால் தூக்கி வீசி எறிந்து விடும். அதனுடைய சாப்பாட்டு வெறி அடங்குவது போல் தோன்றும் போது தான் ஏனைய சிங்கங்களோ அல்லது குட்டிகளோ அந்த இறைச்சியை நெருங்கும்.

ஒரு கூட்டத்திற்கு ஒரு ஆண் சிங்கம் தான் தலைவனாக இருக்க முடியும். அந்த கூட்டத்தில் உள்ள எல்லா பெண் சிங்கங்களும் அதனோடு மட்டுமே உடலுறவு கொள்ள முடியும். மற்ற ஆண் சிங்கங்கள் இருந்தாலும் அவைகள் கூட்டத்தின் தலைவன் அருகில் இருக்கும்போது பெண் சிங்கங்களின் பக்கத்தில் நெருங்குவது இல்லை . கிட்ட தட்ட கூட்டத்தின் தலைவன் மண்டையை போடுவது வரை மற்ற ஆண் சிங்கங்களும் அதனுடைய அடிமையாக பெட்டையாக அலைய வேண்டியது தான். அந்த பெட்டையாக அலையும் சிங்கங்களில் சில ஆண் தலைவன் வயதாகும் காலத்தை நோக்கியோ அல்லது அந்த தலைவன் தனது உடல் பலத்தை இழக்கும் சமயம் வரை காத்திருக்கும். ஆண் தலைவன் தனது கடைசி காலத்தை நெருங்கும் தருணத்தில் அதுவரை பொட்டையாக இருந்த ஆண் சிங்கம் கூட்டத்தின் தலைவனை போட்டு தள்ளி விட்டு அந்த கூட்டத்தில் உள்ள பெண் சிங்கங்களை தனக்கு சொந்தமாக்கி கொள்ளும் கிட்ட தட்ட அப்பனை கொன்று விட்டு அம்மாவையும் சித்தியையும் தனக்கு வைப்பாட்டியாக்கி கொள்ளுகிற கதை தான்.

புலிகள் கூட்டம் அப்படி கிடையாது. புலிகள் இனத்தில் ஆண் பெண் புலிகள் எல்லாம் ஒன்றுக்கு ஓன்று சரி சமமாக வேட்டையாடும். புலிகள் நிறைய கூச்ச பண்பு உடையவை . தேவை இல்லாமல் சிங்கங்களை போல் ஊளையிட்டோ அல்லது வேறு எந்த விதத்திலும் தனது பலத்தை மற்றவர்களிடம் காட்ட மெனக்கெடுவதில்லை. சிங்கங்களின் வீரத்திற்கு டிச்கவரி சேனலில் சிங்க கூட்டமானது ஒரு எருமை கூட்டத்தால் அதுவும் ஒரு ஒற்றை எருமையால் ஓட ஓட விரட்டப்பட்ட காட்சியே சிறந்த சான்று. கூட்டத்தில் உள்ள ஏனைய புலிகளின் உதவி இல்லாமல் தனியாக வேட்டையாடுவதில் புலிகளுக்கு இணை புலிகள் தான். தனது பாதுகாப்பை துச்சமென மதித்து தனியாகவே வேட்டையாடுவதினால் வரும் பாதிப்பினால் தான் என்னவோ புலிகளின் எண்ணிக்கை இந்தியாவில் கூட கணிசமான அளவில் குறைந்து விட்டன.

புலிகளுடைய கூட்டத்தில் எல்லா புலிகளுக்கும் கிட்டத்தட்ட ஒரே விதமான மரியாதை தான். புலிகள் கூட்டத்தின் ஆண் புலிகள்சக பூனை இனத்தை சேர்ந்த ஆண் சிங்கங்களை போல் பல பெண் சிங்கங்களோடு சுற்றி கொண்டு பலவெட்டறை போல் திரியாமல், பெரும்பாலும் ஒரு துணையோடு தான் வாழ்க்கையை அமைத்து கொள்ளும். புலிகள் இரவில் வேட்டையாடுவதிலும் சூரப்புலிகள் தான். சமீபத்தில் டிச்கவரியில் புலிகளை பற்றிய ஒரு ஒளிபரப்பில் புலிகள் கும்மிருட்டில் கூட ஐம்பது மீட்டர் தூரத்தில் உள்ள இரையை மனிதர்கள் பகலில் பொருட்களை பார்ப்பது போல பார்க்க கூடிய பார்வை திறனுடையது என்று விளம்பினார்கள். புலி குட்டிகளும் மிக குறுகிய காலத்திலேயே தாயின் துணையின்றி வளர ஆரம்பித்து விடுகின்றன. அனால் சிங்க குட்டிகளின் நிலைமையோ தலை கீழ். சிங்க குட்டிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவு. பெண் சிங்கங்கள் இரவும் பகலாக மாறி மாறி சிங்க குட்டிகளை குறைந்தது ஒரு வருடம் வரை பராமரித்தால் மட்டுமே அவை பிழைப்பதற்கான சாத்திய கூறுகள் அதிகம். ஆண் புலிகள் ஆண் சிங்கங்களை போல் அல்லாமல் இரையை தனது துணையோடும் குட்டியோடும் பகிர்ந்து உண்ணும் பண்பு உடையவை. ஆண் சிங்கங்களை போல் அல்லாமல் ஆண் புலிகள் கூட்டத்தில் உள்ள புலி குட்டிகளிடம் பாசம் காட்டுவதில் ஒரு உண்மையான தகப்பனை போலவே செயல்படும்.

இப்படி பட்ட பண்புடைய மிருகமானதால் தான் என்னவோ உலக தமிழர்களின் நவீன கால அடையாளமான அம்மை பிரபாகரன் பண்டைய தமிழனின் கொடியில் இடம் பெற்ற புலிகளை தனது இயக்கத்தின் அடையாளமாக, பெயராக ஆக்கி கொண்டார். வேசித்தனம் செய்வதையும் உடலால் உழைப்பு இல்லாமல் அடுத்தவன் உழைப்பில் அடுத்தவனை வருத்தி தின்பதை தொழிலாக ஆக்கி கொண்டதால் தான் என்னவோ சிங்களனும், இந்தியாவில் உள்ள வேசி கூட்டங்களும் தங்களை சிங்கத்தோடு ஒப்புமை படுத்தி கொள்ளுகிறார்கள். என்னவொரு பொருத்தம். சிங்கத்தை தன்னோடு ஒப்புமை படுத்தி கொண்டு இந்தியாவை ஆண்ட 100 விழுக்காடு இந்திய அரசர்கள் தாங்கள் கூத்தடிப்பததற்காக வேசிகள் குடியமர்த்தப்பட்ட அந்தபுரங்களில் தூங்கி பொழுதை கழித்து கால போக்கில் தங்களது அரசையும் தனது வாரிசுகளையும் இழந்து விட்டார்கள்.

இப்படி தான் புலி கொடி பிடித்து கிழக்காசியா வரை தங்களது ஆளுமையை பரப்பி தமிழகத்தை ஆண்ட சோழ குடியின் கடைசி மன்னர்கள் சிங்கத்தை போல வாழ விரும்பியதால் தான் என்னவோ கண்டவரோடெல்லாம் கூத்தடித்து தமிழர்களின் மரபு வழி சின்னங்களான கோவில்களில் கூத்தாடிகளும் அதிகாரத்தில் இருப்பவர்களின் காம பசியை போக்குவதற்காக வடக்கில் இருந்து கூட்டி வரப்பட்ட பெண்களும் வாழும் இடமாக்கி அங்கு செழிப்புற்று வாழ்ந்து கொண்டிருந்த தாய் தமிழை அங்கிருந்து அகற்றி தான் போகிற இடமெல்லாம் கண்டவரோடு உறவாடி மகிழ்ந்து தன்னை செழுமைபடுத்தி கொண்ட சமச்கிருதம் என்ற பார்பனிய நச்சு செடிகளின் மொழியை கோவில் மொழியாக்கினர். தமிழர்களின் கோவில்களில் இருந்து தமிழை என்று அகற்ற ஆரம்பித்தார்களோ அன்றோடு அவர்களது அழிவும் தொடங்கியது.

அந்த சமைஞ்ச கிருதத்தை தெய்வ மொழியாக கருதும் பார்பனிய நச்சு கொடிகளின் மூதாதையர்கள் நம்முடைய தாய் தமிழகத்தில் எப்படி தமிழர்களின் மதத்தை திரித்து காமத்தையே மூலாதாரமாக கொண்ட வடவ்ர்களின் வேத மதத்தை தமிழர்களிடையே பரப்பி வேசி பாசையான சமைஞ்ச கிருதத்தை கொண்டு தமிழ்நாட்டில் தமிழை அழிக்க முற்பட்டார்களோ... அதே போல் திராவிட வேந்தன் ஆண்ட இலங்கையில் மகான் புத்தரின் மார்க்கத்தை வேசி மைந்தர்கள் கைப்பற்றி அதன் மூலமாக சமைஞ்ச கிருதத்தின் துணையுமான மற்றுமொரு வேசி பாசையான சிங்களத்தை வளரவிட்டு அங்கு வாழ்ந்த புத்த மதத்தை பின்பற்றி கொண்டிருந்த புரதாண தமிழர்களை சிங்களமயமாக்கி விட்டார்கள். அப்படி சிங்களமயமாக்கப்பட்ட புத்த மதத்தை பின்பற்றிய தமிழர்களின் வழி தோன்றல்களில் ஒருவன் தான் இன்றைக்கு சக கொடூரனாலே சிறை கொட்டகைக்குள் அடைபட்டு இருக்கும் ரத்த வெறியன் சரத் பொன்சேகாவும்.

ஒரு காலத்தில் தன்னை பலசாலியாக கட்டி கொண்டு அலைந்த சிங்கம் எப்படி அதன் வலிமை குன்றும் போது கூடவே இருக்கும் சக ஆண் சிங்கத்தால் வேட்டையாடப்படுகிறதோ அதே போன்று தான் பொன்சேகாவும் இன்று மகிந்தாவால் வேட்டையாடப்படுகிறான். தற்போது கூட்ட தலைவனாக தன்னை காட்டி கொள்ளும் மகிந்தாவை வேட்டையாட இன்னொருவன் நிச்சயமாக காத்து இருக்கிறான். அவனுடைய நேரம் நெருங்கும் வரை இன்று பொட்டையாக வாழ்ந்து கொண்டிருக்கும் அவனை எவரும் இனம் காண முடியாது. மகிந்தாவின் எழுச்சி எவ்வளவு வேகமாக இருந்ததோ அவனது வீழ்ச்சியும் சடிதியில் விழும்.




சொரணையற்ற மனிதர்களை பார்த்து பார்த்து வெறுத்து போய் தன்னை மறைத்து கொண்டு வாழும் புலி தமிழன் சமயம் நெருங்கும் போது தனது மறைவிடத்தில் இருந்து வெளி வந்து தனது தாக்குதலை நடத்துவான். அப்போது அவன் வைக்கும் குறி தப்பாது. புலிகளின் காடான ஈழத்தில் புலிகள் இருக்கும் தைரியத்தில் மரம் செடி கொடிகள் புல் பூண்டுகள் மறுபடியும் பூத்து குலுங்கும்.

தோலோடு வாழும் தமிழர்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள். சிங்கத்தின் குணாதிசயத்தை பற்றி தெரிந்து கொண்ட இதன் பிறகாவது நாங்கெல்லாம் சிங்கம்லா என்று தப்பி தவறியும் கூறி விடாதீர்கள். அப்படி கூறி பின்பு விடயம் தெரிந்தவன் உங்களை பார்த்து நமட்டு சிரிப்பு சிரிக்கும் அவலத்திற்கு ஆளாகாதீர்கள். நெஞ்சை நிமிர்த்தி உரக்க நாங்கெல்லாம் புலிகள்டா என்று கூறுங்கள். நம்பி வந்தால் தலை வாழை இலைபோட்டு உபசரிக்கும், சதியோடு வந்தால் கூறு போட்டு அனுப்பும் புலிகள்டா நாங்கள் என்று உறுமுங்கள். சக தமிழனின் குடிநீர் கிணற்றிலும், வாயிலும் மலத்தை திணிக்கும் வேசி மகன்கள் வேண்டுமென்றால் தங்களை சிங்கம் என்று ஊளையிட்டு கொண்டு அலையட்டும். உணர்ச்சிகள் உள்ள தோலோடு தெரியும் தமிழன் அப்படி செய்ய வேண்டாம்

ஒரு காலத்தில் இந்தியாவின் காடுகளில் திரிந்து தற்போது எண்ணிக்கையில் குறைந்த புலிகளின் எண்ணிக்கையை மறுபடியும் கூட்ட இந்திய அரசு மிகுந்த அக்கறையோடு பிரச்சாரம் செய்து அதற்கான வழிகளில் இப்போது ஈடுபடுகிறதோ, அதேபோல் புலிகளின் அருமையை அவர்கள் தங்களை மறைத்து வாழும் இக்காலத்தில் உலகம் உணரும் . அப்போது உலக நாடுகள் எல்லாம் ஓன்று திரண்டு புலிகளை ஊட்டி வளர்க்கும் காலம் வரும். அப்போது தமிழன் பிற்கால சோழ மன்னர்களின் ஆட்சியில் கிழக்காசியாவில் இழந்து விட்ட சிறப்பை மறுபடியும் அடைவான். அதற்கான காலம் நெருங்குகிறது. எந்த ஒரு சமுதாயமும் அல்லது மனிதனும் ஒரு பாரிய இழப்பை அடைந்த பிறகு மறுபடியும் வீறு கொண்டு எழும்... எழுவார்கள் . அதற்கு வாழும் சாட்சி ஐரோப்பாவில் விரட்டி விரட்டி கொல்லப்பட்ட யூதர்கள். பின்பு அவர்கள் மத்திய கிழக்கில் ஓன்று திரண்டு தங்களுக்கென ஒரு நாட்டை உருவாக்கி இன்று உலக அரசியலையே தங்களை மையமாக வைத்து விளையாடுகிறார்களோ ..அது போன்ற காலம் தமிழனுக்கும் வரும் . உணர்வுள்ள தமிழன் தலையெடுக்கும்போது சமதர்மம் தலையெடுக்கும்

ஈழம் வெல்லும் காலம் சொல்லும்

Tuesday, August 24, 2010

இந்தியாவில் பட்டங்கள் விருதுகள் வழங்கப்படும் முறைகளும் மோசடிகளும்

சமீபகாலமாக பல்வேறு பட்டங்கள் வழங்கப்படுகிற வேகமும், அவைகளை வாங்குகிற ஆட்களின் தகுதிகளையும் பார்த்த போது நகைப்புக்குரிய விசயமாக தான் இருக்கிறது. சரி ... இதுவரை அந்த பட்டங்கள் யாருக்கெல்லாம் வழங்கப்பட்டு இருக்கின்றன என்று வரலாற்றை பின்னோக்கி பார்த்த போது மிகப்பெரிய அதிர்ச்சி தான் காத்து இருந்தது .எடுத்துக்காட்டாக பாரத ரத்னா வழங்கப்பட்ட முறைகளை குறுப்பிடலாம். தமிழ் சினிமா வரலாற்றில் ஆபாச பண்பாட்டை தனது படங்களின் மூலம் கொண்டு வந்த எம்.ஜி.ஆருக்கு பாரத ரத்னா 1988 லும், எல்லாரும் அவரவர் குலதொழிலை செய்ய வேண்டும் என்று சட்டம் இயற்ற முற்பட்ட ராசாசிக்கு 1954 லிலும், இந்திய ஜனநாயகத்தின் குறள் வளையை அவசர சட்டத்தின் மூலம் நெரித்த இந்திராவுக்கு 1971 லும், இந்திராவுக்கு அடிமையாக இருந்த வி.வி.கிரிக்கு 1975 லும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்திய அரசியலமைப்பின் சிற்பியும் ஒடுக்கப்பட்ட மற்றும் சமுதாயத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்காக போராடியவரும், பொருளாதாரத்திலும் சட்டத்திலும் நிபுணத்துவம் பெற்றவரும், சர்வதேச சமுதாயத்தால் கடந்த நூற்றாண்டின் சிறந்த அறிஞர்களில் ஒருவர் என்று போற்றப்பட்ட அண்ணல் அம்பேத்கருக்கு அவர் இறந்த பிறகு அதுவும் 1990 ல் தான் வழங்கப்பட்டது. இந்தியாவில் தான் தகுதியற்றவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்படுவதும் தகுதி உள்ளவர்களுக்கு அவர்களின் சாதனைகள் அங்கீகரிகப்படாமலிருப்பதும் காலம் காலமாய் நடந்து வருகிறது. இந்த பட்டங்கள் எதனடிப்படையில் வழங்கப்படுகிறது என்று உற்று கவனித்தால் ஆதிக்க சாதியினருக்கும் அவர்களின் எடுபிடிகளாக இருந்தவர்களுக்கும் , கவர்ச்சி ஆட்டம் ஆடிய சினிமா நடிகர்களுக்கும், இந்திய விளையாட்டு ரசிகர்களின் ஆர்வத்தை தங்களது மூலதனமாக்கி பல்வேறு வரி ஏய்ப்புகளை செய்த மற்றும் சட்டத்துக்கு புறம்பான வேலைகளில் ஈடுபட்ட விளையாட்டு வீரர்களுக்குமே கிடைக்கிறது. அதிலும் விளையாட்டு வீரர்களின் சாதி பின்னணியும் அவர்களின் பிராந்திய பின்னணியும் மிகவும் உற்று பார்க்கபடுகிறது . அதில் சில நேரங்களில் சாதி பின்னணி பிராந்திய பின்னணியை காட்டிலும் முக்கியத்துவம் பெறுகிறது. எடுத்துக்காட்டாக வட இந்தியாவில் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த ஒருவரை விட தென் இந்தியாவில் உள்ள ஆதிக்க குடுமிகளுக்கு முன்னுரிமை அழைக்கபடுகிறது . குடுமிகள் என்று வருகிற போது அவர்களின் பிராந்திய பின்னணியை பற்றி இந்திய அதிகார வர்க்கம் கவலை படுவதில்லை என்பது வேறு விடயம். அதே நேரத்தில் இந்திய அதிகார வர்க்கத்தால் வட இந்தியாவில் உள்ள ஒடுக்கப்பட்ட சமூகத்தினர்களது சாதனைகளும், தென்னிந்தியாவில் உள்ள ஏனைய சமூகத்தவர்களின் சாதனைகளும் (குடுமிகளையையும் அவர்களுடைய கைத்தடிகளையும் தவிர்த்து) காலம் காலமாக அங்கீகரிக்கபடாமலேயே உள்ளது. இந்தியாவின் ஆதிக்க சமூகம் எந்த அளவுக்கு நஞ்சு தன்மையோடு இருக்கிறது என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டாக அமெரிக்காவில் அண்ணல் அம்பேத்கர் படித்த கொலம்பியா பல்கலைகழகத்தில் அண்ணலின் பெயரால் ஏற்படுத்தப்பட இருந்த விருது அப்போது அந்த பல்கலைகழகத்தின் இந்திய ஆதிக்க சமூக வெறியர்களால் ஏற்படுத்தபடாமல் தடுக்கப்பட்ட சம்பவத்தை கூறலாம். அதே போல விளையாட்டு துறையிலும் எவ்வளவோ சாதனைகள் புரிந்த வீரர்கள் சாதிய, பிராந்திய பாகுபாட்டினாலும் கண்டுகொள்ள படாமல் விடப்படுகிற அதே நேரத்தில் குடுமிகளின் சின்ன சாதனைகள் கூட தேசிய சாதனையாக விளம்பரம் கொடுக்கப்படுகிறது. இன்று உலக அளவில் இந்திய சதுரங்க வீரர்களின் திறமை பரவ காரணமாக இருந்த மனுவேல் ஆரோனின் தியாகங்கள் அங்கீகரிக்கபடாமல் இருக்க, விஸ்வநாதனின் (சிறந்த சதுரங்க விளையாட்டு வீரர் என்பதில் எந்த ஐயமுமில்லை) சாதனைகள் விளம்பரபடுத்தப்படுகிறது. ஒரு வேளை குடுமிகளின் சமூகத்தில் பிறக்காமல் இருந்து இருந்தால் கிரிக்கெட்டில் காம்ப்ளியின் நிலைமை தான் அவருக்கு நடந்து இருக்கும். இந்தியாவில் குடுமிகளின் சமூகத்திலும் அவர்களின் கைத்தடிகளின் சமூகத்திலும் இருந்து வரும் விளையாட்டு வீரர்கள் தேசத்தின் பாதுகாவலர்களாகவும் சித்தரிக்கப்பட்டு வருவதும், ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூக விளையாட்டு வீரர்களின் அங்கீகாரம் வெகு சாதுர்யமாக பின்னுக்கு தள்ளப்படுவதும் முன்பிருந்ததை விட வேகமாக முன்னெடுக்கபடுகிறது. குடுமிகள் ஆதிக்கம் செலுத்தும் விளையாட்டுகளிலும் சரி, மற்ற துறைகளிலும் சரி ஏனைய ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தவர்கள் பார்வையாளர்கள் அளவிலேயே அனுமதிக்க படுகின்றனர். ஆதிக்க சமூகத்தவரும், அதிகார வர்க்கத்தவர்களும் விளையாடும் விளையாட்டுகளும் அவர்கள் தலைமை வகிக்கின்ற விளையாட்டு கூட்டமைப்புகளுமே இந்திய அரசின் போதிய நிதியுதவிகளையும் சலுகைகளையும் பெறுகின்றன . அந்த நிதி உதவியும் அந்த கூட்டமைப்புகளை தங்களது கைப்பிடியில் வைத்து இருக்கிற ஆதிக்க சமூக மோசடியாளர்களால் ஏப்பம் விடப்படுகிறது. அதற்க்கு மிகச்சிறந்த உதாரணம் காமன்வெல்த் போட்டிகளுக்கான ஏற்பாடுகளில் நடக்கும் பொருளாதார முறை கேடுகள் . இவனுங்க தான் யார் யாருக்கெல்லாம் பட்டங்களும் விருதுகளும் வழங்கப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கும் நிலைமையில் இருக்கிறார்கள். உலகிலேயே இந்தியாவில் மட்டும் தான் உலக அளவில் ஒரு விளையாட்டில் முதல் பரிசை வென்றாலே டாக்டர் பட்டம் குடுக்கிற நிகழ்வுகள் எல்லாம் நடக்கிறது. அவர்கள் அந்த விளையாட்டின் அல்லது துறையின் முன்னேற்றத்திற்க்காக என்ன செய்தார்கள் என்பதெல்லாம் கணக்கில் எடுத்து கொள்ள படுவதில்லை. அப்படியே அந்த விளையாட்டுக்கோ அல்லது துறையின் முன்னேற்றத்துக்காகவோ உணமையிலேயே பாடுபட்டு இருந்தாலும் ஆதிக்க சமூகத்தில் பிறக்கவில்லை என்றால் அவர்களது திறமைக்கான அங்கீகாரம் என்பது கானல் நீரை போன்றது தான். கௌரவ டாக்டர் பட்டங்களும் சரி ஏனைய விருதுகளும் சரி தற்போதெல்லாம் யாருக்கு வழங்கப்படவேண்டும் என்ற வரைமுறை இல்லாமல் கேலி கூத்தாக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சி தான் டெண்டுல்கர்கள் கௌரவ ராணுவ கேப்டன்களாக உலா வருகின்றனர். எத்தனையோ கிராண்ட் மாச்டர்களை ( Grand master) உருவாக்கிய ஆரோனின் சாதனைகள் குப்பை தொட்டியில் வீசப்பட விசுவநாதனின் சாதனைகள் குடுமிகளின் சமூகத்தில் பிறந்தமையால் இலவசமாக விளம்பர படுத்தப்படுகிறது

Tuesday, July 27, 2010

அராபிய மேட்டு குடியினரின் சித்து வேலைகளும் பிராமணிய நரித்தனங்களும் - -- ஒரு ஒப்பீடு

அராபிய மேட்டு குடியினரின் சித்து வேலைகளும் பிராமணிய நரித்தனங்களும்


இவனுங்க ரெண்டு பேரையும் பற்றி எழுதனும்னு ரொம்ப நாளா நினைச்சி கிட்டு இருந்தேன் .ஆனா அப்ப எல்லாம் நேரம் கிடைக்கலை. ஆனா இப்ப கிடைச்ச கொஞ்ச நேரத்தில சர சரவென எழுதி தள்ளி விட்டேன். சர்வதேச அளவில் கொழுந்து விட்டு எரியும் தீவிரவாதத்தை அராபிய வெறியனுங்க ஆரம்பித்து வைத்தானுங்கன்னா. நம்ம நாட்டுல நடக்குற சாதி வெறியையும், மத வெறியையும் காப்பாற்றி வருவதில் பிராமணியன்களுக்கு பெரும் பங்கு உண்டு .......என்னத்த பெரும் பங்கு... அதன் மொத்த உருவமே அவனுங்க தானே.

அராபிய வெறியனுங்கன்னா எல்லா அராபியர்களையும் சேர்த்து குறுப்பிடுறேன்னு நினைச்சிடாதீங்க. அராபிய தேசத்திலும் ஏகப்பட்ட பாகுபாடுகள் உண்டு அங்கேயும் அராபிய உயர்குடிகள் , கீழான குடிகள் என்று பிரிவுகள் உண்டு . எடுத்துகாட்டாக இசுலாமியர்களின் புனித மண்ணாக கருதப்படும் சவூதி அரேபியாவையே எடுத்து கொள்ளுவோம்.. அங்கு சவுத் , வகாப் என்று இரண்டு கும்பல்கள் உண்டு அவற்றில் சவுத் கும்பல் ஆட்சியையும், வகாப் கும்பல் மதத்தையும் தங்களுடைய கட்டுபாட்டில் இருக்குறபடி ஆரம்பத்திலேயே ஒப்பந்தம் போட்டு கொண்டார்கள் அந்த ஒப்பந்தத்தின் படி சவுத் கும்பல் மத விவகாரங்களிலும் வகாப் கும்பல் ஆட்சி விவகாரங்களிலும் தொந்தரவு கொடுக்க மாட்டார்கள் அவர்களுக்கு ஏதேனும் முரண்பாடுகள் ஏற்பட்டால் அதை பேச்சு வார்த்தையின் மூலம் தீர்த்து கொள்வார்கள் அவர்களுக்கிடையே திருமண உறவுகளும் உண்டு ....


நம்ம பிராமணிய வெறியனுங்களை மாதிரியே, எல்லா அராபிய நாடுகளிலும் இந்த அராபிய உயர் குடிகள் அந்தந்த அராபிய நாடுகளின் வளத்தை சுரண்டி கொழுத்து வாழ்பவர்கள் . நம்மவர்களில் பல பேர் அராபியர்கள் எல்லாரும் பணக்காரர்கள் எண்ணெய் விற்ற காசில் கொழுத்தவர்கள் என்று நினைப்பதுண்டு .ஆனால் உண்மையில் அராபிய தேசத்தில் உள்ள நகரங்களை தாண்டி கொஞ்சம் உள்ளே ஊடுருவி பார்த்தால் இந்தியாவில் உள்ள ஏழைகளை விட பொருளாதாரத்தில் பின்தங்கிய அராபிய மக்களை பார்க்கலாம் .அவர்கள் எல்லாரும் அராபிய மேட்டு குடிகளால் காலம் காலமாக ஒதுக்கியே வைக்கப்பட்டு இருப்பவர்கள் . அப்படி ஒதுக்கப்பட்ட அராபியர்களை தான் மூளை சலவை செய்து மதத்தின் பெயரிலான தீவிரவாதத்தில் ஈடுபட செய்கிறது இந்த அராபிய மேட்டு குடிகள்.

எப்படி இங்கு இந்து வெறி பிடித்த இயக்கங்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்து கொண்டு அடிதட்டு மக்களை மதத்தின் பெயரால் சிறுபான்மையினருக்கு எதிராக தூண்டி விட்டு அவர்களை சிறுபான்மையினருக்கு விரோதியாக காட்டிவிட்டு நல்லெண்ண தூதுவர்களாக ஊடகங்களில் பிராமணிய நரிகள் உலா வருகின்றனரோ.. அது போல தான் அராபிய மேட்டு குடிகளும் கீழ்த்தட்டு அராபியர்களை மேற்கத்தியர்களுக்கு எதிராக தூண்டிவிட்டு விட்டு தங்களுடைய பிள்ளைகளை அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் படிக்க வைக்கின்றனர் . அதோடு அவர்கள் நின்று விடுவதில்லை உலகமெங்கிலும் உள்ள முசுலீம்களையும் தங்களது ஆதிக்க வெறிக்கு மதத்தின் பெயரால் இறையாக்கி விடுவது தான் கடைந்தெடுத்த கேடித்தனம் . உண்மையை சொல்ல போனா இசுலாமிய மதத்தை அவனுங்க பயன்படுத்துறது எல்லாம் அவனுங்களுடைய அரசியல் பொருளாதார நலன்களுக்காக ..

இங்கே எப்படி பிராமணியங்கள் பல்வேறு கடவுள்களை உருவாக்கி ..அக்கடவுள்களின் பெயரால் காட்டப்படும் கோவில்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்து கொண்டு எவனுக்கும் புரியாத பாதையில் மந்திரங்களை ஓதி... கோவில்களில் இருந்து வரும் வருமானத்தை வைத்து உழைக்காமல் உண்டு கொழுத்து வாழ்கிறான்களோ அதே கதை தான் அராபிய தேசங்களிலும்.. ஆனா ஒரே வித்தியாசம் என்னன்னா அவனுங்க ஒரே கடவுளின் பெயரையும் அவரது தூதுவராக கருதப்படுபவரின் பெயரையும் வைத்து ஏனைய இசுலாமியர்களை ஏமாற்றுகிறானுங்க... அதே நேரத்தில் பிராமணிய நரிங்க அவனுங்க கற்பனையில் என்னவெல்லாம் தோனுகிறதோ அதையே கடவுளாக்கி மற்றவர்களை ஏமாற்றுவதில் கெட்டிகாரனுங்க.


இந்தியாவில் பிராமணிய நரிங்க எல்லா ஊடகங்களையும் தங்களது கைகளில் வைத்து கொண்டு தங்களுக்கு ஏற்றார் போல் செய்திகளை வெளியிடுகிரானுங்கன்னா ..அரேபியாவில் அங்குள்ள மேட்டு குடியினர் தங்களை பாதிக்கிற வகையில் செய்திகள் வெளியே வராமல் கட்டுப்பாடுகளை விதிப்பதில் வல்லவனுங்க . இந்தியாவில் எப்படி பிராமணிய வேசிகளுக்கு இந்து மதத்தை பின்பற்றும் ஏனைய ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை மக்களை பற்றி எந்த வித அக்கறையும் கிடையாதோ அதே போல தான் அராபிய ஆளும் வர்க்கத்தினருக்கும் உலகில் உள்ள ஏனைய இசுலாமை பின்பற்றும் மக்களை பற்றி எந்த வித நல்லெண்ணமும் கிடையாது .. அந்த அப்பாவி இசுலாமியர்களின் குடியை கெடுக்கனும்ன்னா உதவி என்ற பெயரில் தீவிரவாத கருத்துக்களை பரப்பி விடுவானுங்க.


சமீபத்தில் ராசச்தானை சேர்ந்த ஒரு இசுலாமிய இளைஞர் சவூதி அரேபியாவை சேர்ந்த மேட்டு குடி முதலாளி ஒருத்தனால் ஏற்பட்ட கொடுமை தாங்காமல் ஏர்-இந்தியா விமானத்தில் பயணச்சீட்டு எடுக்காமல் விமான கழிவறையில் ஒளிந்து வந்ததை எடுத்து காட்டாக கூறலாம். மொத்தத்தில் இந்த ரெண்டு குடி கெடுப்பவனுங்களுக்கும் அந்த ரெண்டு மதங்களை பின்பற்றும் அப்பாவி மக்களின் சமூக பொருளாதார நிலைகளை முன்னேற உதவும் செயல்களை செய்வதென்பது எட்டிக்காயை போன்று கசப்பான விடயமாகும் . அதே நேரத்தில் அந்த மக்களை மதத்தின் பெயரால் தங்களது வன்முறை திட்டங்களுக்கு இரையாக்குவதில் மிகுந்த விருப்பம் உடையவர்கள் .


இந்த ரெண்டு ஆதிக்க சக்திகளும் மதத்தின் பெயரால் ஏனைய மக்கள் முன்னேறாமல் இருக்க அத்துணை கட்டுப்பாடுகளையும் விதித்து விட்டு தங்களுடைய பிள்ளைகளை அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் சுவிச்சர்லாந்திலும் சகல சுதந்திரத்துடன் வாழ அனுமதிப்பது ஒன்றே போதும் அவனுங்களின் ரெட்டை வேடத்தை மற்றவர்கள் காண.

ஈழத்தில் கூட இசுலாமை பின்பற்றும் தமிழ் மக்களை ஏனைய தமிழர்களிடமிருந்து தங்களுடைய அரசியல் பொருளாதார நலன்களுக்காக மதத்தின் பெயரால் பிரித்ததில் இந்த அராபிய வியாபாரிகளுக்கு பெரும் பங்கு உண்டு
சம்பந்தப்பட்ட ரெண்டு மதத்தினர்களும் உணர்வார்களா ..விமர்சனங்கள் வரவேற்க்கப்படுகின்றன

உடனே கிருத்தவனுங்களை பற்றி எழுதலையே என்று குரல் கேட்பது புரிகிறது ..அவனுங்க கொஞ்சம் வித்தியாசமானவனுங்க அவனுங்களுக்கு இன்னொருத்தரை ஏமாத்தனும்னா மேல இருக்கிற ரெண்டு மதத்துல இருக்கிற மாதிரி ஒருத்தன் மட்டும் தான் எமாற்றனும்ன்னு கட்டுப்பாடுகள் கிடையாது . அங்க எமாத்துறவன் ஒருத்தன் இருக்கிறான்னா அவனே ஏமாறுகிறதுக்கு வாய்ப்புகள் அதிகம். அதே போல அவனுங்க ஒரு இடத்தில தங்களுக்கு மரியாதை கிடைக்கலைன்னா உடனே அதை பெரிய பிரச்சினை ஆக்கி விடுவானுங்க இல்லைன்னா தங்களுக்கு மரியாதை கிடைக்கிற சபையா பார்த்து இடத்தை மாத்திடுவாங்க.
அதனால அவனுங்களை பற்றி எழுதணும்னா தனியா தான் எழுதணும்

Friday, June 18, 2010

ஆதிக்க சாதி – ஊழல் தொடர்பு

கொஞ்ச நாளாக செய்திதாள்களை பார்க்கும் போது அடுத்து அடுத்து ஊழல் பற்றிய செய்திகளாகவே இருந்து விடுகிறது. இது எதை குறிக்கிறது ..இப்போதாவது ஊடகங்களின் மூலம் வெளி வந்து விடுகிறது .ஆனால் ஊடகங்கள் அந்த அளவுக்கு வளர்ச்சி பெறாத கால கட்டத்தில் எத்தகைய ஊழல்கள் நடை பெற்று இரூக்க வேண்டும். எவ்வாறு அவை மறைக்கப்பட்டன . இந்த இழையின் தலைப்பை பார்த்தால் எதோ ஒரு குழுவினரை குறி வைத்து தாக்குவது போல் இருப்பினும் ..இந்தியாவில் நடைபெற்ற எல்லா ஊழல்களிலும் அவர்களின் பெரும்பான்மையான பங்கு இருப்பதை மறுக்க முடியாது . இன்றாவது அரசியிலில் எதோ ஓரளவுக்கு ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் பங்கு அங்கீகரிக்கபட்டு இருக்கிறது . ஆனால் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை அரசியலிலாகட்டும் அல்லது இந்திய நிர்வாகக் கட்டுப்பாடு துறை ஆகட்டும் அதில் பிராமானிய பனியா கூட்டணியின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது . இந்திய நிர்வாக துறையை பொருத்தவரை அது இன்று கூட அவர்களின் கைகளில் தான் உள்ளது . அது இந்தியாவில் உள்ள பல்வேறு நிர்வாக துறைகளின் தலைமை பீடத்தில் இருப்பவர்களின் பெயர்களை கவனித்தால் தெரியும் . இன்றைய கல்வி துறையும் , வேலை வாய்ப்பு துறைகளும் அவர்களால் சீரழிக்கப்பட்டு இருக்கிறது என்றே கூறலாம் . அதற்கு மிக நல்ல உதாரணம் சமீபத்தைய மருத்துவ கல்வி ஊழலும் , தொடர்வண்டி துறை வேலை வாய்ப்பு வாரிய ஊழலையும் சொல்லாம். இடஒதுக்கீடு இவர்களால் கேலிக்கூத்தாக்கப்பட்டு இருக்கிறது. இட ஒதுக்கீடுக்கு முந்தைய காலம் வரை கல்வி துறையில் தனியார் மயமாக்கபடாமலிருந்தது . ஏனைய ஒடுக்கப்பட்ட பிரிவினர் இட ஒதுக்கீட்டை பயன்படுத்தி வேகமாக முன்னேற ஆரம்பித்த பின் . இந்த கூட்டணி கல்வி துறையில் தனியார் மயத்தை கொண்டு வந்து இட ஒதுக்கீட்டையும் கிட்டத்தட்ட கேள்வி குறியாக்கி விட்டது . கொஞ்ச காலம் முன்பு வரை தற்போது இந்தியாவில் உள்ள மத்திய அரசின் கட்டுபாட்டில் உள்ள கல்லூரிகளின் எண்ணிக்கையை கூட்டுவதை எதிர்த்து வந்த இந்த கூட்டணி . இப்போது அங்கு இட ஒதுக்கீடு முறையை அமுல்படுத்த வேண்டும் என்று குரல்கள் எழ ஆரம்பித்தவுடன் .. அவர்களின் ஆதிக்கம் ஆட்டம் காண ஆரம்பித்தவுடன்..... இப்போது மத்திய அரசின் கட்டு பாட்டில் உள்ள கல்லூரிகளின் எண்ணிக்கையை கூட்ட வேண்டும் என்று கூப்பாடு போடுகின்றனர் ,,அதோடு மட்டுமில்லாமல் இட ஒதுக்கீடு முறையை பிசுபிசுக்க செய்ய உயர்கல்வி துறையிலும் அந்நிய முதலீடுகளை ஊக்குவிக்க முனைய ஆரம்பித்து விட்டனர் .
இவர்களது நோக்கம் தான் என்ன ... வேறொன்றுமில்லை இப்படி செய்துவிட்டால் அரசு நடத்தும் கல்லூரிகளின் தரம் அங்குள்ள பேராசிரியர்களை தனியார் கல்லூரிகள் திருடுவதன் மூலம் அரசு கல்லூரிகளின் தரத்தை குறைத்து விடலாம்...அதை நம்பியுள்ள ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் கல்வி வளர்ச்சியில் ஒரு பெரிய ஓட்டையை உருவாக்கி விடலாம் அதோடு தனியார் கல்லூரிகளின் கல்வி கட்டணத்தை உயர்த்துவதன் மூலம் ஒடுக்கப்பட்ட சமூக குழந்தைகளின் உயர் கல்வி கனவை எட்டாக் கனியாக்கி விடலாம்.

அதோடு சுக்குராமும் மகாசனும் உழல் செய்தபோது அடக்கிவாசித்த இந்த கூட்டணி தற்போது ராஜாவும் , டி.ஆர்.பாலுவையும் பற்றிய செய்திகளை கொட்டை எழுத்துக்களில் செய்தி ஆக்குவது ஏன். ( அதற்காக ராஜா , டி.ஆர்.பாலு போன்றவர்கள் நல்லவர்கள் என்று சொல்லி விடவில்லை . ஆனால யூகத்தின் அடிப்படையில் உள்ள செய்திகளை வைத்து அவர்களை குற்றவாளி ஆக்கிவிடுவதேன் ? ). ஊழல் செய்வது என்பது பிரமணிய பனியா கூட்டணியினரின் ஏகபோக உரிமையா ? . சுதந்திர இந்தியாவின் முதல் ஊழலை ஆரம்பித்து வைத்த பெருமை மாமா நேருவின் அமைச்சரவையில் இருந்த கெய்ரோன் என்னும் ஊழல் பெருச்சாளியே ஆவார் . ஆனால் இப்போது ஒடுக்கப்பட்ட சமூகத்திலும் ஊழால் பெருச்சாளிகள் உருவாக ஆரம்பித்து எங்கே தனக்கு போட்டியாக இன்னொருவன் வந்துவிட்டான் என்றவுடன் இதுவரை ஊழலில் குளித்து திளைத்து மகிழ்ந்து வந்த பிராமணிய பனியா ஊழல் பெருச்சாளிகளுக்கு தாங்கெனா வேதனையாகிவிட்டது. அதினால் தான் தற்போது தேசப(க்)தர்கள் என்ற வேடத்தில் உலாவர ஆரம்பித்து விட்டனர் . அதன் எதிரொலி தான் மல்லையா போன்ற சாராய வியாபாரிகள் நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கபடுவது.

விளையாட்டு துறையை பொறுத்தவரையில் இந்தியா ஒலிம்பிக்கில் பதக்க பட்டியலில் பின்னணியில் இருப்பதற்கு காரணம். அங்கும் இவர்களது ஆதிக்கமே . 250 க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் ஒலிம்பிக்கில் பலதடவைகள் தங்க பதக்கம் வாங்கிய வளைமட்டை பந்தாட்டம் எந்தவித அரசு மற்றும் தனியார்களின் ஆதரவு கிடைக்காமல் நலிவுற்ற நிலையில் இருக்கும்போது , பத்து நாடுகள் மட்டுமே விளையாடும் கிரிக்கெட் உலககோப்பையை ஒரு முறையே வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு மட்டும் ஏன் இந்த அளவிற்கு மரியாதை . அதிலும் ஒரு சூட்சுமம் உள்ளது இந்தியாவில் கிரிக்கெட்டை தவிர ஏனைய விளையாட்டுகளில் பெரும்பான்மையாக ஒடுக்கப்பட்ட சமூகத்தினரே பங்கேற்பர் ஆனால் கிரிக்கெட்டில் மட்டும் பிராமணிய பனியாவினரின் ஆதிக்கம் அதிகம் . கிரிக்கெட் இந்த அளவுக்கு பிரபலமாவதற்கு காரணம் தூர்தர்சன் என்றே சொல்லலாம் . அன்று தூர்தர்சனை ( இன்றும் அவர்களது கட்டுபாட்டில் தான் ) தங்களது கட்டுபாட்டில் வைத்திருந்த பிராமணிய பனியா கூட்டணியினர் அந்த சாதியினரை சேர்ந்த வீரர்கள் இந்திய கிரிக்கெட் அணியில் பெரும்பான்மையாக இருந்த காரணத்தால் ( சில நேரங்களின் பதினொன்று பேரில் பத்து என்ற விகிதத்தில்) அது தூர்தர்சனில் இலவசமாக ஒளிபரப்பட்டது. முப்பதுகளில் சாமர் என்னும் ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த வீரரோடு சேர்ந்து விளையாட முடியாது என்று முரண்டு பிடித்த வீரர்கள் விளையாடிய விளையாட்டு தான் கிரிக்கெட் . ஐம்பதுகளில் உலக அளவில் இந்திய கால்பந்து அணி ஒரு கலக்கு கலக்கியது . அப்போது ஒலிம்பிக்கில் தற்போதைய கால்பந்து ஜாம்பவானான சபையின் ( Spain என வாசிக்கவும்). அணிக்கு தண்ணி காட்டிய அணி இந்திய கால்பந்து அணி . காலில் உறை அணிந்து விளையாடுவது அதன்பின்பு உலக கால்பந்து வாரியத்தால் கட்டாயமாக்கப்பட .. பிராமணிய பனியாக்களின் பிடியில் இருந்த அப்போதைய இந்திய அரசு ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை பெரும்பான்மையாக கொண்ட இந்திய கால்பந்து அணியை கண்டுக்காமல் விட ......இன்று கால்பந்து உலக கோப்பையில் இந்தியா விளையாடுவதே கனவாகி விட்டது . அன்று இந்திய அரசும் . தூர்தர்சனும் இந்திய கால்பந்து துறைக்கு உதவியிருந்தால் இன்று மெசி , ரொனால்டோ போன்றோருடன் குப்பன் சுப்பன் போன்றோரின் பெயர்களும் உலக அளவில் பிரபலமாகி இருக்கும் . அவர்கள் தான் இந்தியாவின் இன்றைய நட்சத்திர வீரர்களாக இருந்திருப்பார்கள். அவர்கள் இல்லாமல் பிராமணிய பணியாக்களின் பிடியில் உள்ள இந்திய தனியார் துறையும் , விளம்பர துறையும் வியாபாரம் செய்திருக்க முடியாது .
இன்றும் எல்லா துறையிலும் இந்தியா முறையான வளர்ச்சியை பெற விடாமல் ....புற்றுநோயை போன்ற முறையற்ற வளர்ச்சியை கட்டி காப்பாற்றி வருவதே இந்த பிராமணிய பணியாக்களின் கூட்டணிகள் தான் .பீமா ராவ் தான் சிறுவனாக இருந்த போது பள்ளியில் பலமுறை அவமானபடுத்தபட்ட போதும் அப்போது தனக்கு உதவி புரிந்த தனது ஆசிரியரின் பெயரான அம்பேத்கரின் பெயரை சூடிய காரணத்தால் அந்த பெயரையே ஒதுக்கி தள்ளியவன்கள் ஆயிற்றே . அவனுங்களை பொருத்தவரை தனக்கு போட்டியாக எவனும் எழும்பி விட கூடாது . எந்த போட்டியாக இருந்தாலும் அதில் தான் மட்டுமே பங்கேற்க வேண்டும். அது ஊழல் செய்வதிலாகட்டும் இல்லை ஆக்க பூர்வமான வளர்ச்சியிலாகட்டும் ... மற்றவர்கள் தப்பி தவறியும் போட்டியிட வேண்டும் என்ற மனப்பான்மையை கூட வளர்த்து கொள்ள கூடாது.

இன்னும் நிறைய எழுதணும் போல் தோன்றுகிறது . இன்னொரு முறை மறுபடியும் வந்து தொடர்வேன் . ஏனையவர்கள் தாங்கள் இதை பற்றிய தங்கள் கருத்துக்களை முன்வைக்கலாம்