Friday, September 23, 2011

கூடங்குளம் அணுமின் நிலையம் என்னும் பயங்கரத்திற்குள் புதைந்து கிடக்கும் அபாய முடிச்சுக்கள்

சமீப காலமாக உலகம் முழுக்க அணுமின் நிலையங்களுக்கு எதிரான எதிர்ப்பு, விழிப்புணர்வு பெற்ற பொது மக்களிடையே பரவி வருவது அனைவரும் அறிந்ததே ... அது மகிழ்ச்சிக்குரிய விடயமும் கூட. அதில் தமிழக மக்களும் குறிப்பாக கூடங்குளம் மற்றும் அதை சுற்றியுள்ள மக்களும் விதி விலக்கல்ல. சொல்ல போனால் அணு மின் நிலையங்களுக்கான எதிர்ப்பை துவங்கியதில் கூடங்குளம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்களை முன்னோடிகள் என்று கூட சொல்லலாம். அதே சமயத்தில் இந்த அனுமின்நிலையம் அமைப்பதற்கு எதிரான மக்கள் போராட்டத்தில் ஆரம்ப காலம் தொட்டே தன்னை இணைத்து கொண்டு அதை பற்றிய விழிப்புணர்வை அரசியல் தளத்தில் ஏற்படுத்தியவர் வைகோ (அவரது அரசியல் வாழ்வு என்பது எவ்வளவு கேலிக்குரியதாக இருந்தாலும்) அவர்கள் என்பதையும் நாம் நினைவில் வைத்து கொள்ள வேண்டியது மிக அவசியம்.

சரி இப்போ விடயத்திற்கு வருவோம் , அப்படி என்ன மாதிரியான முடிச்சுக்கள் இந்த அணுமின் நிலையத்திற்குள் புதைந்து கிடக்கின்றன என்று நாம் தெரிய வேண்டுமென்றால் , நான் கீழே கொடுத்திருக்கும் வார்த்தைகளுக்கிடையே பின்னி பிணைந்து கிடக்கும் தொடர்புகளையும் அதனுள் புதைந்து கிடக்கும் முடிச்சுக்களையும் கூர்ந்து கவனிக்க வேண்டும்.


அமெரிக்க சோவியத் பனிப்போர் – இந்திராவின் சோவியத் ஆதரவு – இந்திராவின் வெளிநாட்டு கொள்கையின் மீதான அமெரிக்க அரசின் கசப்பு – இந்திய பெருங்கடலின் மீதான வல்லரசுகளின் ஆதிக்க போர் – ஈழ போராட்டம் – ஈழத்தின் திரிகோணமலையின் ராணுவ முக்கியத்துவம் – சோவியத் அரசுடனான ராசீவ் காந்தியின் அணு உலை அமைப்பதற்கான உடன்பாடு – கூடங்குளம் அமைப்பதில் ஏற்பட்ட தாமதம் – சோவியத்தின் கடைசி காலங்களில் அரசு அதிகார மட்டங்களில் ருசிய மாபியாக்களின் ஆதிக்கம் – சோவியத்தின் சிதறல் - ருசிய மாபியாக்களுக்கும் இசுரேலின் உளவு நிறுவனமான மொசாட்டுக்குமான தொடர்பு – ருசியாவின் உளவாளியாக செயல்பட்டவரின் மகள் சோனியா – போபர்ஸ் ஊழல் குற்றச்சாட்டு - தேர்தலில் ராசீவின் தோல்வி – இராக் யுத்தத்தில் அமெரிக்க விமானங்கள் பெட்ரோல் நிரப்ப ராசீவின் எதிர்ப்பு – சந்திரசேகரின் அரசு ராசீவினால் கவிழ்ப்பு – ராசீவ் மீதான அமெரிக்க அரசின் கோபம் - ராசீவின் கொலை – ராசீவ் கொலையின் பின்னணியில் உள்ள சர்வதேச சதி – விடுதலை புலிகளின் மீதான குற்றச்சாட்டு – ஈழ படுகொலை – ருசிய மாபியாக்களின் யூத தொடர்பு – அமெரிக்காவின் மீதான யூத குழுக்களின் ஆதிக்கம் – அமெரிக்க பொருளாதரத்தின் ஆட்டம் – புதிய உலக அரசியல் சூழல் – கூடங்குளம் அணு மின் நிலைய கட்டுமான பணிகளின் வேகம்

நேருவின் வழிநடத்துதலில் அணிசேரா நாடுகளின் கூட்டமைப்பில் இணைத்து கொண்டு உலக வல்லரசுகளின் வல்லாதிக்க போட்டியில் பங்கெடுத்து கொள்ளாமல் நடுநிலை வகித்து அமெரிக்க சோவியத் நாடுகளுக்கிடையேயான பனிப்போரில் சிக்கி கொள்ளாமல் தன்னை காத்து கொண்ட இந்தியா, நேருவின் மகள் இந்திராவின் காலத்தில் சோவியத் சார்பாகி விட, அத்தோடு இந்தியாவின் நடுநிலைமையும் அம்மணமாகி போனது. அது மட்டுமா மற்றொரு உலக தாதாவான அமெரிக்காவின் பகையையும் கூடவே சேர்த்து சம்பாதித்து கொண்டது. அந்த பகை தான் காலிசுதானிலிருந்து இருந்து காசுமீர் வரை முடிச்சுகளை போட்டு விட்டது. கடைசியில் காலிசுதானின் குண்டிற்கும் இந்திராவை இறையாக்கியது. வல்லரசும் பழியை அப்பாவி சீக்கியர்கள் மீது போட்டு தப்பித்து விட்டது. சரி அம்மாவிற்கு புகட்டப்பட்ட பாடத்தில் இருந்து தனயன் கற்று கொள்வான் என்று பார்த்தால் தனயன் “தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும்” என்ற பழமொழிக்கேற்ப சோவியத்துடனான உறவை மேலும் வலுவாக்க, அமெரிக்காவின் எதிரியை கண்காணிப்பதற்கு என்றே உருவாக்கப்பட்ட உளவு ரேடாரின் வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டார். ஏற்கனவே பழைய சோவியத் ருசியாவின் உளவாளியாக செயல்பட்டவரின் மகளை மணந்தவர் என்ற கூடுதல் தகுதியும் இந்திராவின் மீதிருந்த கோபத்தை விடவும் ராசீவின் மீதான அமெரிக்காவின் கோபத்திற்கு எண்ணெய் ஊற்றியது என்று கூட சொல்லலாம்.

இந்நிலையில் அமெரிக்காவின் கோபத்தை மேலும் தூண்டி விட காரணமாக இருந்தது தான் ராசீவின் சோவியத்துடனான கூடங்குளம் அணு மின்நிலைய ஒப்பந்தம். அமெரிக்கா அந்த ஒப்பந்தத்தை தெற்காசியாவின் மீதான தனது கட்டுப்பாட்டிற்கு எழுந்த சவாலாகவே கருதியது. கூடங்குளம் அணுமின் நிலையத்தை சந்தேக கண்ணோடு பார்த்தது மட்டுமின்றி அமெரிக்கா பல தளங்களிலும் இருந்து, சோவியத்துடனான அந்த அணு மின் நிலைய ஒப்பந்தத்தை கைவிடுமாறு, ராசீவை மிரட்டியது என்றே சொல்லலாம். இந்த நிலையில் சோவியத் உள்நாட்டு பொருளாதர அரசியல் சிக்கலில் சிக்கி கொள்ள ராசீவுடைய அரசும் அந்த ஒப்பந்தத்தை கிடப்பில் போட்டது. அதற்கு பிறகு முன்னாள் சோவியத்தின் அதிகார மையம் ருசியாவுக்கு கைமாறியது. இங்கு மற்றொரு விடயத்தையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும் பழைய சோவியத்தின் கூட்டு நாடுகளை இழந்து புதிதாக உருவான ருசியா, கம்முனிட்டுகளின் வீழ்ச்சிக்கு பிறகு மாபியா கும்பல்களால் கட்டுப்படுத்தப்படும் நிலை உருவானது.

இந்த மாபிய கும்பல்கள் சோவியத் கூட்டாட்சி அதன் கடைசி காலகட்டத்தில் இருக்கிறபோதே சோவியத்தின் அணைத்து அதிகார மட்டங்களிலும் ஊடுருவி விட்டது. அந்த கும்பல் சோவியத் பலவீனமடைந்து கொண்டிருக்கும் சமயத்திலேயே ருசியாவில் உள்ள அரசு தொழிற்கூடங்களையும், நிறுவனங்களையும் அதிகார பீடங்களின் மீது கொண்டிருந்த தனது கட்டுப்பாட்டை வைத்து அசூர பலத்தோடு கைப்பற்ற தொடங்கியது. பழைய சோவியத் அரசால் வெளி நாடுகளோடு ஏற்படுத்தப்பட்ட பல தொழில் துறை ஒப்பந்தங்களும் மாபியா கும்பல்களின் கட்டுப்பாட்டில் வந்தது. அப்படி ருசிய மாபியாக்களின் மறைமுக கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்ட ஒப்பந்தங்களில் ஓன்று தான் கூடங்குளம் அணு மின்நிலைய ஒப்பந்தம். எப்படி உலக பொருளாதாரத்தை யூத குழுக்கள் கட்டு படுத்தி கொண்டு இருக்கிறதோ அதே போன்று தான் ருசியாவின் பொருளாதாரம் முழுவதும் ருசிய மாபியாக்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ருசிய மாபியாக்களுக்கு இசுரேலின் மொசாட் உளவு துறையோடும் தொடர்புகள் உண்டு. அது இசுரேலிற்கு குடியெறிய ருசிய யூதர்களின் உதவியோடு சாத்தியமானது. அது மட்டுமில்லாமல் ராசீவின் போபர்ஸ் ஊழலில் சம்பந்தப்பட்ட சோனியாவின் உறவினரான குத்ரோச்சிக்கு அமெரிக்க உளவு துறையினரோடு மட்டுமின்றி ருசிய மாபியாக்களோடும் தொடர்பு உண்டு. அமெரிக்கா தனது அரசு இயந்திரத்தை வைத்து உலக நாடுகளை மிரட்டுகிறதென்றால் இந்த ருசிய மாபியாக்கள் ருசிய அரசை கொண்டும் தங்களுடைய தனிப்பட்ட உலக தொடர்புகளை கொண்டும் உலகின் பல்வேறு அதிகார மையங்களையும் மிரட்டுகிறது என்பது தான் எல்லாரும் அறிந்து கொள்ள வேண்டிய விடயம்.
சரி இப்ப கூடங்குளத்தில் ருசிய மாபியாக்களுக்கு என்ன வேலை என்று பலரும் கேட்கலாம். பின்ன சொந்த நாட்டின் சொத்துக்களையே சூறையாடுகிற ருசிய மாபியாக்களுக்கு மற்றொரு நாட்டில் பல ஆயிரம் கோடி வருவாயை அவர்களுக்கு தரும் ஒரு ஒப்பந்தம் என்றால் சும்மா விடுவார்களா. கடைசி காலங்களில் சோவியத் தனது பலத்தை இழந்து கொண்டிருந்த சூழலில் பொருளாதார சிக்கலிலும் சிக்கி சட்டினி ஆகி கொண்டு இருக்க, உலகநாடுகளின் மத்தியில் தனிக்காட்டு ராசாவாக மாறிய அமெரிக்கா ராசீவிடம் கூடங்குளம் ஒப்பந்தத்தை ரத்து செய்ய சொல்ல, சோவியத்தை தங்களது கட்டுப்பாட்டில் சிறிது சிறிதாக கொண்டு வந்து கொண்டிருந்த ருசிய மாபியாக்களோ அந்த ஒப்பந்தத்தை செயல்படுத்த நிர்பந்திக்க, ராசீவோட நிலைமை புலிவாலை பிடித்த கோமாளியின் கதையாக மாறியது. இதற்கிடையில் ராசீவ் போபர்சு ஊழலில் சிக்கி அடுத்து நடந்த தேர்தலில் ஆட்சியை இழக்க அவரது தலை தற்காலிகமாக தப்பியது என்றே சொல்லலாம்.

இதற்கிடையில் இந்தியாவில் அரசியல் தேக்க நிலையை கொண்டு வந்தால் தான் குழம்பிய குட்டையில் தன்னால் மீன் பிடிக்க முடியும் என்ற முடிவிற்கு வந்த அமெரிக்கா அத்வானி என்ற ஆயுதத்தை கையில் எடுத்தது. அப்படி அமெரிக்காவின் இந்திய முகவராக உருவாக்கப்பட்ட அத்துவானியின் கையில் கொடுத்து அனுப்பப்பட்டது தான் ராமர் கோவில் பிரச்சினை. அது கூட இந்துக்களின் ஒட்டு வங்கியை கைப்பற்ற ராசீவால் மறைமுகமாக தூண்டி விட கையிலெடுக்கப்பட்டது தான். ஆனால் அத்வானி அதை கையில் எடுத்து இந்துக்களின் ஒட்டு வங்கியை கைப்பற்றியது “காத்திருந்தவன் பொண்டாட்டியை நேற்று வந்தவன் தள்ளி கொண்டு போன” கதையாக மாறியது. இதற்கிடையில் இந்தியா வி.பி.சிங், சந்திரசேகர் என அடுத்தடுத்து புதிய பிரதமர்களை கண்டது. அவர்களில் சந்திரசேகர் அப்போதைய நிலையில் அமெரிக்காவை பகைக்காமல் அதன் முகவராகவே மாறி போனார் என்பதற்கு ஈராக் யுத்தத்தில் அமெரிக்க விமானங்களை மும்பையில் பெட்ரோல் நிரப்ப அனுமதித்ததை எடுத்துகாட்டாக கொள்ளலாம்.

அமெரிக்க சார்பு நிலையை இந்தியா எடுப்பதை விரும்பாத ருசிய மாபியாக்கள் ராசீவ் மூலமாக சந்திரசேகர் அரசை கவிழ்க்க, அது ராசீவின் மீதான உக்கிரத்தை அமெரிக்காவிற்கு அதிகரிக்கவே செய்தது. ஏற்கனவே கூடங்குளம் ஒப்பந்தத்தில் அமெரிக்காவை மீறி செயல்பட்ட ராசீவ் இப்போது அமெரிக்க சார்பு இந்திய அரசை கவிழ்த்து விட்டதால், அமெரிக்க அதிகார வர்க்கம் ராசீவ் வாழ தகுதியற்றவர் என்று எண்ணியதின் விளைவு தான் ராசீவுடைய கொலைக்கான பின்னணிகளில் ஓன்று. “பழி ஓரிடம் இடம் பாவம் ஓர் இடம்” என்பது போல் விடுதலைப்புலிகள் இந்த சிக்கலில் மாட்ட வைக்கப்பட்டனர் என்பது தான் வேதனைக்குரிய உண்மை. பின்ன அந்த சிக்கலின் தொடர்ச்சி ஒரு இனப்படுகொலைக்கு கால்கோள் இட்டதென்றால் வேதனை கொள்ளாமலா இருக்க முடியும். அதே நேரத்தில் கூடங்குளம் அணுமின் நிலைய ஒப்பந்தத்தை செயல்படுத்த காலதாமதப்படுத்தியதால் ருசிய மாபியாக்களுக்கு ராசீவ் மீது ஏற்பட்ட வெறுப்பு கூட ராசீவின் கொலைக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகப்படாமலும் இருக்க முடியாது. ராசீவின் கொலையில் மொசாட்டின் கையும் இருக்கலாம் என்பது அப்போது பேசப்பட்ட ஓன்று. ஆக மொத்தத்தில் ராசீவ் கொலை என்பது “தங்களுக்கு இனி இவன் பயன்படமட்டான்” அல்லது “இவனை விட்டு வைத்தால் தங்களது குட்டு வெளிப்பட்டு விடும்” என்ற அடிப்படையில் சர்வதேச அளவில் நடாத்தப்பட்ட கூட்டு சதியே என்பதில் எந்த ஐயமும் கிடையாது.



இப்போது மறுபடியும் கூடங்குளத்திற்கு வருவோம், ஏற்கனவே கூடங்குளம் ஒப்பந்தம் போடப்பட்டு கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகளை நெருங்குகிற சமயத்தில். ருசிய மாபியாக்கள் அமெரிக்க அரசு பீடத்தில் உள்ள தங்களது யூத தொடர்புகளை பயன்படுத்தி பழைய சோவியத் அரசு இந்தியாவோடு ஏற்படுத்திய அணுமின் நிலைய திட்டத்தில் இந்தியா மீதான அமெரிக்கா அரசின் அழுத்தத்தை வலுவிழக்க செய்ய, கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கான கட்டுமான பணிகளும் வேகமெடுக்க ஆரம்பித்தது. இப்ப கவலைக்குரிய விடயமென்னவென்றால் ஏற்கனவே இந்தியாவுடனான ருசிய அரசின் பல ஒப்பந்தங்களிலும் புகுந்து விளையாடுகிற ருசிய மாபியாக்கள் மக்களின் உயிருக்கு உலை வைக்க கூடிய அளவில் கூடங்குளம் அணு மின் நிலையத்திலும் மறைமுகமாக தங்களது கையை படர விட்டிருப்பது தான். ருசிய மாபியாக்களுக்கு ஊழல் செய்வதென்றால் கரும்பு தின்ன கூலி கொடுக்கிற கதை தான். அதே போன்று அவர்கள் தங்களுக்கு சாதகமான நிலைகளை கொண்டு வர எல்லா மட்டங்களிலும் பணத்தை பாய்ச்ச தயாராக இருப்பார்கள். ஏற்கனவே இந்திய கப்பற்படையுடனான ஒப்பந்தங்களில் மது, மாது, பணம் என வாரி இறைத்தவர்கள் தான் இந்த ருசிய மாபியாக்கள். அப்படி பட்டவர்களின் பின்னணியில் கூடங்குளம் அமைவதென்பது மக்களின் உயிருக்கு உத்திரவாதம் கொடுக்கும் செயலாக இருக்க முடியாது.

இப்போது அமெரிக்காவின் பொருளாதாரம் சின்னாபின்னமாகி பழைய சோவியத்தின் நிலைமையை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் ருசிய மாபியாக்களின் எழுச்சி ஒரு புதுவகையான அச்சுறுத்தலை உருவாக்கி கொண்டு இருக்கிறது. அமெரிக்க பொருளாதாரத்தை மட்டுமின்றி உலக பொருளாதாரத்தையும் கையில் வைத்து கொண்டிருக்கும் யூத குழுக்களுக்கும் ருசிய மாபியக்களுக்குமான உறவு தாய் பிள்ளை உறவு போன்றது என்பதும் இதில் முக்கியமான ஓன்று. பின்ன பெயரளவில் தான் அது ருசிய மாபியா ஆனால் அந்த கும்பல் முழுக்க முழுக்க யூதர்களால் நடாத்தப்படுகிற கட்டமைப்பு தானே. அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சியிலும் இந்த ருசிய மாபியாக்களுக்கு பங்கு உண்டு என்பது அமெரிக்கர்களே அறிய மறந்த விடயம் என்பது தான் கொடுமை. கொஞ்ச நாட்களுக்கு முன்பு கூடங்குளம் அனுமின் நிலைய நிர்மாண பணிகளில் ஈடுபட்ட ருசிய பொறியியல் வல்லுனர்கள் ஒரு விமான விபத்தில் பலியானது எவ்வளவு பேருக்கு தெரியுமோ என்பது தெரியவில்லை. ஏற்கனவே மர்மமான பல விபத்துக்களின் பின்னணியில் ருசிய மாபியாக்கள் இருப்பது போல் இதிலும் அவர்களுடைய கை இருக்கலாம் என்று சந்தேகப்படாமலும் இருக்க முடியாது. ஏனென்றால் ருசிய மாபியாக்களின் கடந்த கால வரலாறு அப்படி. ஏற்கனவே இந்தியாவின் அதிகார மையம் முன்னாள் சோவியத்தின் உளவாளியாக செயல்பட்ட ஒருவரின் மகளின் கையில் இருக்க, இந்திய அரசும் இந்த அணுமின் நிலைய திட்டத்தில் வேகம் காட்டுவது இந்திய அதிகார மட்டத்தில் ருசிய மாபியாக்களின் ஊடுருவலையே காட்டுகிறது.

எனக்கென்னவோ உலகம் இப்போது நாடுகளின் எல்லைகளை கடந்து செயல்படுகிற மாபியாக்களின் கைக்கு சிறிது சிறிதாக சென்று கொண்டிருக்கிறது என்றே தோன்றுகிறது. அதன் தொடர்ச்சி தான் அத்திட்டத்திற்கு எதிரான மக்களின் எழுச்சியை கண்ட பிறகும் இந்தியாவிற்கான ருசிய தூதர் சமீபத்தில் விடுத்த பயறுருத்துதலின் பின்னணியும் உள்ளது. இந்த நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான மக்களின் எழுச்சியும் கூடங்குளத்தில் மட்டுமின்றி நாடு முழுக்க பரவுவது மிக அவசியம். உலகமயமாக்கல் என்பது உலகில் தற்போது நடந்து வருகிற பொருளாதார சூதாட்டத்திற்கு மூலதனமாகி விட்டதோடல்லாமல் சர்வதேச மாபியாக்களின் குத்தாட்டத்திற்கும் வழி வகுத்து விட்டது என்றே சொல்லலாம். இந்தியா போன்ற நாடுகள் இந்த மாபியாக்களால் மறைமுகமாக கட்டுப்படுத்தப்படுவது சனநாயகத்தை தோல்வியை நோக்கி செலுத்துகின்ற நகர்வுகள் என்றே கருதப்படும்.

Sunday, September 18, 2011

சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் இருந்து பரமக்குடிக்கு பயணம் செய்த சாதி வெறி

இப்படி நான் ஒரு தலைப்பை போட்டவுடனே , என்னய்யா கஞ்சா அடிச்சு இருக்கியா , சம்பந்தமே இல்லாத ரெண்டு விடயங்களை சம்பந்தப்படுத்தி பேசுவது மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகிற வேலை என்று தெரியாதா என்று கேள்விகள் எழுப்பலாம். அது ஏன் உங்கள் இடத்தில் இருந்து நானும் இத்தலைப்பை பார்த்தால் எனக்கும் அப்படி தான் தோன்றும். ஆனால் அதையும் தாண்டி இவ்விரண்டின் மூலத்தை நோக்கி பிரயாணித்தால் அவை இரண்டும் ஒரே இடத்தில் இருந்து கிளம்பியவை என்று அறிந்து கொள்ள முடியும். அதற்கு நீங்கள் இந்த கட்டுரையை பொறுமையாக வாசிக்க வேண்டும்

சென்னை அம்பேத்கர் சட்ட கல்லூரியில் ஏற்பட்ட கலவரம் ஆரம்பத்தில் ஊடக விபச்சரிகளால், கீழ்சாதி மாணவர்களால் அப்பாவி மாணவன் மீது நடத்தப்பட்ட வன்முறை என்றே பரப்புரை செய்யப்பட்டது. அடிபட்ட பாரதி கண்ணன் என்ற அசிங்கம் கத்தியை எடுத்து கொண்டு கொலை வெறியோடு அதற்கு முன்பு நடத்திய குத்தாட்டத்தை ஊடக விபச்சாரிகள் தகளுடைய கோவணத்திற்குள் வைத்து மறைத்து கொண்டார்கள் என்று சொன்னால் மிகையாகாது. பொது புத்தியும் எதிர் வினை தொடுத்த மாணவர்களை வன்முறையாளர்களாக சித்தரித்தது. ஆனால் அவர்களில் யாருமே அதற்கு மூல காரணமாக அமைந்த நிகழ்வுகளான சென்னை அண்ணல் அம்பேத்கர் சட்ட கல்லூரி விடுதியில் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் மீது ஆதிக்க சாதி வெறியர்கள் நடாத்திய வெறியாட்டத்தை தப்பி தவறியும் கூட மூச்சு விடுவதில்லை. ஒடுக்கப்பட்ட மாணவர்களும் எங்கெல்லாம் முறையிடமுடியுமோ அங்கெல்லாம் முறையிட்டு தோல்வியோடு திரும்பியதொடு மட்டுமல்லாமல், அதற்கு பிரதி பலனாக ஆதிக்க சாதி வெறியர்களிடம் இருந்து உருட்டல்களையும், மிரட்டல்களையும் தான் சந்திக்க வேண்டி இருந்தது.

இப்படி பட்ட சூழ்நிலையில் தான் அவங்க தாதா முத்துராமலிங்கத்தோட பிறந்த நாளும் வந்து சேர்ந்தது. இந்த தருணத்தில் இந்த முத்துராமலிங்க தேவர் யார் என்பதையும் சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன். பொது புத்திக்கு அவர் ஏதோ ஓடுக்கப்பட்ட மக்களால் எதிரியாக கருதப்படுகிறார் என்றே படும். அவரை ஏன் அந்த ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுடைய எதிரியாக கருதுகிறார்கள் என்று எண்ணுவதற்கு எல்லாம் நேரம் இருக்காது. அதையெல்லாம் பற்றி சிந்திக்க முடியுமா அவங்களுக்கு. சாமி கண்ணை குத்திடுமே ..... சரி அப்படி என்றால் அவர் உணமையில் யாரு ? அது திட்டமிட்டு மறைக்கப்பட்ட அவருடைய கடந்த கால வாழ்வின் சில பகுதிகளை உற்று பார்த்தால் தெரியும்.

தமிழகத்தில் எல்லோருக்கும் கல்வி என்பதை சட்டமாக்கிய அய்யா காமராசரை “எங்கிட்ட கைகட்டி நிற்க வேண்டிய சாணாப்பயல் என்னையே எதிர்க்க துணிந்து விட்டான்” என்றும் சாணான் கடைகளில் பொருளை வாங்காதே என்றும் மேடைகளில் வெறியூட்டும் விதமாக பேசி விருதுநகர் பகுதிகளில் அவர்கள் மீது வன்முறையை ஏவிவிட்டவர் தான் இவர். அதுமட்டுமா ஒடுக்கப்பட்ட மக்களை பேருந்தில் ஏற்ற மறுத்த டி.வி.எஸ் குழும சாதி வெறியனை நோக்கி அய்யா சவுந்திர பாண்டியனார் "எங்களுடைய மக்களை பேருந்தில் ஏற்ற மறுத்தால் அந்த பேருந்துகளை எங்கள் பகுதிகளில் ஓட அனுமதிக்க மாட்டோம்” என்று கர்ச்சித்த போது டி.வி.எஸ் கம்பெனி சாதி வெறியர்களின் பேருந்துகள் எங்கள் பாதுகாப்பில் ஓடும் என்று வெறித்தனமாக அறிக்கை விட்டவர் தான் இந்த முத்துராமலிங்கம். இப்ப தெரியுமே அந்த மனிதரோட லட்சணம் என்னவென்று. இவையெல்லாம் சும்மா சில துளிகள் தான். இதை விட பெரிய மாமாங்கம் எல்லாம் செய்து இருக்கிறார். அவை எல்லாவற்றையும் பற்றி பேசியாச்சுன்னா இந்த கட்டுரையின் நோக்கம் திசை திரும்பி விடும்.

சரி மறுபடியும் தலைப்புக்கு வருவோம் சட்ட கல்லூரியில் ஆதிக்க சாதி வெறி படித்த மாணவர்கள் முத்துராமலிங்கத்தின் பிறந்த நாளை ஒட்டி சுவரொட்டி அச்சடித்தபோது அதில் அம்பேத்கர் சட்ட கல்லூரி மாணவர்கள் என்பதற்கு பதிலாக சென்னை சட்ட கல்லூரி மாணவர்கள் என்று குறுப்பிட்டு இருந்தார்கள். இதை பார்த்த ஒரு சில மாணவர்கள் அந்த ஆதிக்க சாதி வெறியர்களிடம் போய் புரட்சியாளர் அம்பேத்கர் பேரில் அமைந்த கல்லூரியை சுவரொட்டியில் குறுப்பிடும் போது அவருடைய பேரை விடுத்து வெறும் சட்ட கல்லூரி என்று அச்சடித்து இருக்கிறீர்களே இது நியாயமா என்று கேட்டு இருக்கிறார்கள். அது அப்பவே வாக்குவாதமாகி இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக நம்ம அசிங்கம் பாரதி கண்ணன் என்ற நாட்டாமையின் கைவண்ணத்தில் அரங்கேறியது தான் அண்ணல் அம்பேத்கர் சட்ட கல்லூரியில் ஏற்பட்ட கலவரம். நம்மையே தட்டி கேட்டதோடு மட்டுமல்லாமல், ஆதிக்க சொறித்தனத்தை சுட்டி கட்டு விட்டார்களே ஈன சாதி பயல்கள் என்ற அவமானத்தில் நெளிந்து துடி துடித்த ஆதிக்க சாதி புழுக்கள் ஓன்று கூடி ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த மாணவர்கள் மீது ராணுவ தாக்குதல் நடாத்த திட்டமிட்டனர். அதற்கு அவர்கள் தேர்தெடுத்த நாள் தான் 12 நவம்பர், 2008. ஆனால் அடிவாங்கி ஓடியது என்னவோ அசிங்கம் தான். அசிங்கம் கூட அசிங்கபடகூடாது என்பது தான் எம்முடைய அவா .ஆனால் அந்த அசிங்கத்திற்கு அல்லவா அது தோன்ற வேண்டும். தற்போது அந்த அசிங்கம் தனது பட்ட படிப்பை உயிருக்கு பயந்து சொந்த ஊருக்கு மாற்றல் வாங்கி கொண்டு வெற்றிகரமாக(?) படித்து முடித்து விட்டதாம். மாணவ பருவத்திலேயே கலவரத்தை தூண்டி விட்டவன் இப்ப வழக்கறிஞர் ஆகி விட்டானாம் இன்னும் என்னவெல்லாம் அரங்கேற்ற போகிறானோ ம்ம்ம்ம்ம்ம்ம் அவர் பட்ட படிப்பை முடித்ததற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் சென்னை அண்ணல் அம்பேத்கர் சட்ட கல்லாரி முன்பு கடந்த 16 தேதி வைக்கபட்ட ஆளி பதாகையிலும் மறுபடியும் அம்பேத்கர் பெயர் விடுபட்டு இருந்தது. பதாகையில் வானமே எல்லை என்று பொருள் படும் வாசகம் இருக்க, ஒரு புறத்தில் ஈழ(?) தாய் . செயா சிரித்து கொண்டிருந்தார். அந்த பதாகையை அது வைக்கப்பட்ட சமயம் என்று கூட்டி கழித்து பார்த்த பொழுது பரமக்குடியில் நடாத்தப்பட்ட வன்முறை வெறியாட்டத்திற்கு நன்றி செலுத்த வைக்கப்பட்டு இருப்பது போன்றே உணர்ந்தேன்.

From 19 September 2011


சரி இப்ப பரமக்குடியில் சாதி வெறி பிடித்த அரசு எந்திரத்தால் நடாத்தப்பட்ட வன்முறையின் மூலத்தை நோக்கி போவோம். ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுடைய விடுதலை போராளியாக கருதும் இம்மானுவேல் சேகரனின் குரு பூசையை, முத்துராமலிங்கத்திற்கு அவரின் சாதியை சார்ந்தவர்கள் நடாத்தும் குருபூசையை போலவே சமீப காலமாக நடாத்தி வருகின்றனர். அது ஏற்கனவே ஆதிக்க சாதி வெறியர்களிடையே கடுமையான புகைச்சலை ஏற்படுத்தி இருந்தது. அது எப்படி நம்ம ஐயாவை மதிக்க மறுத்ததால் ஐயாவால் மரணதண்டனை விதிக்கப்பட்டு நம்ம பாட்டன்களால் வெட்டி கொல்லப்பட்ட இம்மானுவேலுக்கு நமது ஐயாவிற்கு செய்வது போன்ற குரு பூசையா எப்படி அது நடக்கலாம் என்று அவர்களின் கும்பி கொதித்து கொண்டிருந்தது. ஆனால் ஒடுக்கப்பட்ட மக்கள் அடுத்து அடுத்து வருகிற வருடங்களில் போராளி இம்மானுவேல் சேகரனின் குரு பூசையை கிட்ட தட்ட திருவிழாவாகவே மாற்றி கொண்டிருந்தனர். எதிர்ப்பு வலுக்க வலுக்க இம்மனுவேலின் குரு பூசைக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. எண்ணிக்கை அதிகரிக்க பரமக்குடியை சுற்றி உள்ள பகுதிகளில் மட்டுமின்றி தமிழகம் முழுக்க ஒடுக்க பட்ட மக்கள் அவர்களுடைய ஆதர்ச நாயகனாக கொண்டாடும் போராளி இம்மனுவேலுக்கு புதுசு புதுசாக பட்டங்களை ஆளி பதாகைகளில் (Flax banner) சூட்டி அழகு பார்த்தனர் . அப்படி சூட்டப்பட்ட பட்டங்களில் ஓன்று தான் “எங்களின் தேசிய தெய்வீக தலைவர் இம்மானுவேல் அய்யா” என்று பரமக்குடி பக்கம் வைக்கப்பட்ட ஆளி பதாகைகள் (Flax banner) ஒன்றில் காணப்பட்டது. இது போதாதா சாதி வெறியர்களுக்கு. அதை கண்டு வெகுந்தேழுந்த ஆதிக்க சாதி வெறியர்கள் “எப்படி எங்கள் அய்யா முத்துராமலிங்கதிற்கு மட்டுமே நாங்கள் பயன்படுத்தும் பட்ட பெயரை இம்மனுவேலுக்கு வைக்கலாம்” என்று கொதித்தெழுந்ததொடு மட்டுமல்லாமல் அது காவல் நிலையத்திற்கும் கட்ட பஞ்சாயத்திற்காக எடுத்து செல்லப்பட்டது வழக்கம் போலவே காவல் துறை கட்டபஞ்சாயத்தார்களால் ஒடுக்கப்பட்டவர்கள் செய்தது தவறு என்று தீர்ப்பு கூறப்பட்டது. அதோடு சாதி வெறியர்களின் வெறி அடங்க வில்லை, திட்டமிட்டு மாணவன் பழனிகுமாரை படுகொலை செய்யும் வரை. அந்த படுகொலைக்கு காவல் துறை கட்டபஞ்சயத்தாரால் பரப்பட்ட பொய் தான் “முத்துராமலிங்கத்தை பற்றி அசிங்கமாக அந்த மாணவன் சுவரில் எழுதி வைத்தான்“ என்பது. பாருங்க படுகொலை செய்யப்பட்ட மாணவனை கொன்ற கொலையாளிகளை தேடி கைது செய்வதற்கு பதில் நம்ம காவலி துறை என்னவெல்லாம் பண்ணுகிறது என்று.....

சரிங்க பரமக்குடிக்கும் அம்பேத்கர் சட்ட கல்லூரியில் நடந்த சம்பவத்திற்கும் என்ன காரணம் என்று கேட்டால் அங்கேயும் விடயம் இருக்கிறது. சட்ட கல்லூரியில் நடந்த கலவரத்திற்கு பழிக்கு பழிவாங்க பெரிய அளவில் எதிர்தரப்பினரை போட்டு தள்ள வேண்டும் என்று கடந்த மூன்று வருடங்களாக ஆதிக்க சாதிவெறியர்கள் பல்வேறு மட்டங்களில் இருந்து திட்டங்கள் தீட்டியதன் விளைவு தான் பரமக்குடி சம்பவம். அதுவும் கலைஞருடைய ஆட்சியில் நடத்துவது என்பது தங்களுக்கு சரியான சூழலை அமைத்து தராது என்பதால் அம்மா எப்படியும் ஆட்சிக்கு வந்து விடுவார் அதன் பிறகு நடத்தலாம் என்று சாதி வெறியர்களின் தலைமை வளர்ந்து வரும் இளம் சாதி வெறியர்களை கடந்த மூன்று வருடங்களாக கட்டுபடுத்தி வைத்து இருந்தது. அம்மா பதவி ஏற்ற உடனேயே சட்ட கல்லூரி சம்பவத்திற்கு பழிக்கு பழிவாங்க பல்வேறு மட்டங்களிலும் ஆதிக்க சாதிவெறியர்கள் துரித கதியில் ஆலோசனைகளை முடுக்கி விட்டனர். இந்த முறை அவர்கள் நேரடியாக வீதிக்கு வராமல் அரசு இயந்திரத்தை வைத்து பழிவாங்கினால் அது பெரிய அளவில் தங்கள் மீது பாதிப்பை ஏற்படுத்தாது என்பதே அத்திட்டத்தின் அடிப்படை. அதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்த நாள் தான் இம்மானுவேல் சேகரரின் குரு பூசை. அதற்காக அரசின் அதிகார மட்டத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன ஆதிக்க சாதி வெறியர்கள் சார்ந்த சமூகத்தை சேர்ந்த காவல் துறையினர் பரமக்குடி மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் திட்டமிட்டு பணியமர்த்தப்பட்டனர். ஆதிக்க சமூகத்தை சேர்ந்த குற்றவாளிகள் இதற்கெனவே வெளியில் கொண்டுவரப்பட்டனர். ஆதிக்க சாதியினர் இருக்கும் ஊர்களில் எல்லாரும் தயார் நிலையில் இருக்குமாறு முன்பாகவே அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதோடு ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் வசிக்கும் இடங்களில் அம்மக்கள், காவல் துறையினரால் பாதுகாப்பு என்று பெயரில் பல்வேறு இன்னலுக்குள்ளாக்கப்பட்டனர். இவையனைத்தும் ஆதிக்க சாதி வெறியர்கள் எதிரி நாட்டின் மீது தாக்குதல் நடாத்தும் ராணுவம் போன்று செயல் பட்டு இருக்கின்றனர்.

அதோடு மட்டுமல்லாமல் சந்தடி சாக்கில் ஒடுக்கபட்ட சமூகத்தை சேர்ந்த ஏதாவது ரெண்டு பெரிய தலைகளை போட்டு விட வேண்டும் என்றும் தாக்குதலுக்கு தலைமை ஏற்கும் காவல் துறையினருக்கு கட்டளை இடப்பட்டு இருந்ததாம். கிட்ட தட்ட அதன் அடிப்படையில் தான் ஜான் பாண்டியன் கைதும்நடை பெற்றது. ஆனால் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்பட்டு வந்த காவல் துறையினர் ஜான்பாண்டியன் கைது இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற்று எண்ணவில்லை. அதோடு தாக்குதலுக்காக பரமக்குடியில் தயார் செய்து வைக்கபட்டிருந்த காக்கி ஆடை சாதி வெறியர்களுக்கும், வல்லநாட்டு பகுதியில் ஜான்பாண்டியனை கைது செய்த காவல் துறைக்கும் தொடர்பில் குளறுபடி ஏற்பட , பரமக்குடியில் காக்கி ஆடையில் இருந்த சாதி வெறியர்கள் ஜான்பாண்டியன் கைது செய்யப்பட்ட தகவல் வருவதற்கு முன்ப துப்பாக்கி சூடு நடத்தி முடித்து இருந்தனர். ஜான்பாண்டியன் கைதினால் எழுந்த கட்டுக்கடங்காத கலவரத்தை கட்டுபடுத்தவே துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டது என்று கதை எழுதலாம் என்று நினைத்திருந்த காவல் துறையின் திட்டத்தில் இதனால் மண் விழுந்தது எனலாம். இதற்கிடையில் தமிழகம் முழுவதும் பரமக்குடி துப்பாக்கி சூடும், ஜான்பண்டியனின் கைதும் சூட்டை கிளப்ப ஜான்பாண்டியனின் தலை மீது வைக்கப்பட்ட குறி நிறுத்தி வைக்கப்பட்டது என்றே சொல்லலாம். காவாலி துறையினரும், சாதி வெறியர்களும் தங்களுடைய திட்டம் இந்த அளவிற்கு சொதப்பும் என்று நினைக்கவில்லை. அவர்கள் எதிர்பார்த்தது இன்னும் நிறைய உயிர் பலிகளை, அது நிறைவேறாமல் போனது அவர்களுக்கு வருத்தமே.

அது என்னங்க சட்டக்கல்லுரி கலவரம், பள்ளி மாணவன் பழனி குமார் படுகொலை, பரமக்குடியில் வைக்கபட்ட ஆளி பதாகை சம்பந்தப்பட்ட பிரச்சினை என மூன்று இடத்திலேயும் பெயரையும், பட்டத்தையும் பயன்படுத்துவது தான் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைக்கு தூண்டுகோலாக அமைந்திருக்கிறதே ஏன் என்று பலர் கேட்கலாம். அங்க தான் நீங்க ஆதிக்க சாதி வெறியின் உள்நோக்கத்தை உரிந்து பார்க்க வேண்டும். ஆதிக்க சாதி வெறியர்களுக்கு எப்பவுமே தங்களுடைய சாதி பெயர்களின் மீதும் பட்டங்களின் மீதும் ஒருவித இனம்புரியாத காமவெறி இருந்து கொண்டே இருக்கிறது.. உடனே அவங்களை நம்ம பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டியிடம் அனுப்ப வேண்டியது தானே என்று குதர்க்கமாக கேட்க கூடாது.

சமீபத்தில் கூட தெய்வதிருமகன் என்ற பெயரில் படம் எடுத்த போது அந்த பெயரை வைக்ககூடாது என்று ஆதிக்க வெறியர்கள் போராட படத்தின் தயாரிப்பாளரும் எதிர்நோக்க வேண்டிய வன்முறைக்கு பயந்து பெயரை தெய்வதிருமகள் என்று மாற்றி கொண்டார். அந்த படத்தின் தயாரிப்பாளர் பெயரை மாற்றி தப்பித்து கொண்டார். பரமக்குடியில் ஒடுக்கப்பட்ட மக்கள் சுயமரியாதையின் காரணமாக அந்த பெயரை பயன்படுத்த, கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைக்கு அதுவும் ஒரு காரணமாகி விட்டது. சண்டியர் என தன்னுடைய படத்திற்கு பெயர் வைத்த போது எழுந்த எதிர்ப்புகளை கலைத்துறையினருக்கு எதிரான வன்முறை என்று கூப்பாடு போட்ட கமல் என்னும் அரைவேக்காடு, தெய்வதிருமகன் என்று ஒரு படத்திற்கு பெயர் சூட்டப்பட்டதனால் எதிர்ப்பு எழுந்த போது அதே கமல் தனது உடம்பில் உள்ள அத்துணை ஓட்டைகளையும் பொத்தி கொண்டதில் இருந்து கமல் என்ற குள்ள நரியின் வேலை தெளிவாக புலப்படும். பின்ன படம் எடுக்கிறேன் என்று சாதி வெறியர்களின் அரிப்புகளுக்கு சொரிந்து விடும் கலைஞனல்லவா அவர். சாதி வெறியர்களின் அரிப்புக்கு எதிராக எதையும் செய்து விட்டால் நாளைக்கு அவர்களுக்கு சொரிந்து விட முடியாதே என்ற கவலை அவருக்கு இருந்திருக்கும். இப்ப எல்லாத்தையும் விடுங்க. இப்படி பெயர்களுக்கும் பட்டங்களுக்கும் ஒவ்வொருவரும் உரிமை கொண்டாடி கொண்டாடுவதும், பெயர்களை பயன்படுத்துவதில் எழும் முரண்பாடுகளால் மற்றவர்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதும் தொடருமானால், குறுப்பிட்ட சில தமிழ் பெயர்களை சூட்டி கொண்டு தமிழ்நாட்டில் நடமாட வேண்டுமென்றால் தற்காப்புக்கு ஆயுதம் வைத்து மடியில் ஆயுதம் வைத்து கொள்வது அவசியம் என்ற நிலைமை உருவாகி விடும்.

சாதி வெறியர்களின் அரிப்புக்கு மருந்திட வேண்டிய அரசாங்கம் அதை ரணகளபடுத்தி கொண்டிருக்கிறது...


என்னத்தை சொல்ல... ஒட்டு அரசியலுக்கு முன்பு மனசாட்சியும் மனிதமும் செத்து கொண்டிருக்கிறது

Friday, September 16, 2011

தமிழத்தின் பிரதான எதிர்க்கட்சி உடைக்கப்படுமா ? .... தற்போதைய காரமான கிசு கிசு பாட்டிலை உடைக்குமா பன்றி குட்டி

தேசியத்தையும் திராவிடத்தையும் முன்னுக்கு போக்குற கட்சி ...உடனே எந்த தேசியத்தை எந்த திராவிடத்தை என்று கேட்க பிடாது .... அது பற்றிய ரகசியங்கள் கட்சி ரெண்டா பிளந்த பிறகு தான் உலகுக்கு தெரிய வரும் ..... தற்போது நிறைய பேருக்கு கட்சியா பிளவா என்று குறுக்கும் நெடுக்கும் சந்தேகம் வந்திருக்குமே... அதை பற்றி எனக்கு தெரிந்த நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து கசியும் சேதியை தான் கக்க போகிறேன்.... அதுக்கு முன்னால் குடிகார காந்தம் எப்படி எதிர்கட்சி தலைவர் ஆனார் என்பதையும் பார்ப்போம். குடிகார கந்தம் அவரோட சொந்த உழைப்பில் ஒன்னும் அரசியலில் முன்னுக்கு வந்து விடவில்லை..... அவரோட நாயுடு சாதி பெருந்தலைகள் பண்ணிய திருவிளையாடல்களின் பலன் தானாம் அது. ஆரம்பத்தில் அண்ணன் கண்ணீர் குட்டை மீது தான் முதலீடு பண்ணி இருந்தார்களாம். அண்ணன் தாய் கழகத்தில் இருந்து வெளியே வர அண்ணனுக்கு போதை ஏற்றி விட்டதும் அந்த சாதி பெருந்தலைகள் தானாம்.

அண்ணனுக்கு அப்போது இளைஞகர்களிடையே இருந்த மவுசை வைத்து எப்படியாவது கல்லா கட்டி விட வேண்டும் என்று துடித்த சாதி பெருந்தலைகள் பொருளாதார உதவிகளை வாரி இறைத்ததோடு மட்டுமல்லாமல் சாதி சங்கங்கள் மூலமாக அவங்க சாதி ஓட்டுகளையும் முழுமையாக அண்ணனுக்கு திருப்பி விட எல்லா வேலைகளையும் செய்தார்களாம். ஆனால் அண்ணன் அடிக்கடி உணர்சிவசப்பட்டு எடுக்கிற முடிவுகளால் அண்ணன் கண்ணீர் குட்டையின் அரசியல் வாழ்வு ஆட்டம் காண, சாதி பெருந்தலைகள் உழைப்பும் நாயுடு சாதி ஓட்டுகளும் வீணாகி போய்விட கூடாதே என்ற கவலையில் கண்ணீர் குட்டையை கைவிட்டு விட்டு புது ஆளை தேடி கொண்டிருந்த சமயத்தில் மாட்டியவர் தான் அப்போது கருப்பு புரட்சியாக பரிமாணம் எடுத்து கொண்டிருந்த குடிகார காந்தம். காந்தத்தின் செல்வாக்கை அரசியலில் மூலதனமாக்கி கல்லா கட்ட ஆசை பட்ட சாதி பெருந்தலைகள் குடிகாந்தத்துக்கு தங்களது ஆதரவை திருப்பி விட்டார்கள் அத்தோடு பெருளாதார உதவியையும் நாயுடு சாதி ஓட்டுகளையும் முழுவதுமாக பெற்று தர வாக்களிகப்பட்டதாம். ஆரம்பத்தில் தமிழ்நாட்டில் காங்கிரசோடு குடிகார காந்தத்தின் கட்சி கூட்டணி வைக்க முழு ஏற்பாடும் காங்கிரசில் உள்ள நாயுடு லாபி மூலமாக நடந்ததாம். ஆனால் காங்கிரசில் அப்போது பலமாக இயங்கி வந்த ரெட்டி லாபி அதற்கு முழு ஆதரவை அளிக்கவில்லையாம். அதற்கு காரணம் குடிகார காந்தம் ஆந்திராவில் சந்திர பாப்பாவோடு நெருங்கிய தொடர்பில் இருந்ததை காங்கிரசில் இருந்த ரெட்டி லாபி விரும்பவில்லை.

இந்த சமயத்தில் தான் நாயுடு சாதி பெருந்தலைகள் பாஜகவில் மோடியோடு நெருக்கமாக இருந்த மற்றுமொரு நாயுடு மூலமாக தமிழகத்து அம்மையாருடன் கூட்டணி ஏற்பட வழி வகை செய்யப்பட்டது. ஆரம்பத்தில் அம்மாவின் தோழி அதை ஏற்கவில்லை. தேசிய அளவில் பலமான அரசியல் பின்னணி கொண்ட சாதியை சேர்ந்த குடிகார காந்தம் வளர்வது தங்களுடைய அரசியல் அதிகாரத்திற்கு வேட்டு வைத்து விடும் என்று சின்னம்மாவின் சாதிக்காரர்கள் உடுக்கை அடித்தது தானாம். ஆனால் சின்னம்மாவை சமாதானப்படுத்தியது அம்மாவின் முதன்மை குருவான மொட்டை மண்டையனாம். அதாவது குடிகார காந்தத்தின் ஒட்டு வங்கி அம்மா கட்சி கரை ஏறுவதற்கு மிகவும் அவசியம் என்றும், ஆட்சியை பிடித்த பிறகு குடிகாரனை அடக்கி விடலாம் என்று ராச குரு கொடுத்த ஆலோசனைகளால் ஒருவாறு சமாதானம் அடைந்த சின்னம்மா அந்த கூட்டணிக்கு பச்சை கொடி காட்டினாராம். ஆனால் சட்டமன்ற தேர்தலில் அதிமுக, அவர்களே எதிர்பார்க்காத அபார வெற்றி பெற்ற பிறகு, குடிகாரன் அவர்களுக்கு பெரிதாக தேவை படவில்லை. அதோடு அம்மாவின் கவனம் இந்துத்துவ அரசியலில் திரும்ப..... குடிகார காந்தத்தை இனிமேல் வளரவிடுவது அவ்வளவு நல்லது கிடையாது என்ற எச்சரிக்கை உணர்வின் காரணமாக குடிகாந்தத்தின் டவுசரை எப்படி கழட்டலாம் என பல நாட்களாக நடந்த விவாதத்திற்கு பின் எழுந்த திட்டம் தான் இந்த கட்சி உடைப்பு வேலையாம். அதற்கு கருவியாக பயன்படுத்துவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் குடிகார காந்தத்தின் கட்சி அவை தலைவரான பன்றிகுட்டி.

From 17 September 2011


பன்றி குட்டிக்கு சாதி உடுக்கை அடிக்க படுகிறதோடு மட்டுமல்லாமல் மருத்துவருக்கு பதிலாக பன்றி குட்டியை அவர் சார்ந்த சாதியின் ஒரே தமிழக அரசியல் பிரதிநிதியாக மாற்றுவதற்கு உதவிகளும் அதற்கான பொருளாதார தேவைகளும் அளிக்கப்படும் என்று வாக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறதாம். ஏற்கனவே மருத்துவரை அரசியலில் இருந்து ஒழித்து கட்டும் வன்மத்தோடு குடிகார காந்தத்திடம் கூட்டு சேர்ந்த பன்னி குட்டிக்கு இப்போது இது தான் சரியாக தோன்றுகிறதாம். அதனால் பன்றி குட்டியும் அதற்கு தோதாக கட்சியில் உள்ள சொந்த சாதியை சேர்ந்த எம்எல்ஏக்களை ரகசியமாக ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறாராம் .அதற்கு உளவுத்துறை முழு வீச்சில் உதவி செய்து வருகிறதாம்....... உடனே என்னங்க இது இப்படி துரோகம் செய்யலாமா என்று சிலர் கேட்கலாம். அட போங்க சார் .... ஒரிஜினலிடமே ஆட்டையை போட்ட பன்னி குட்டிக்கு டூப்ளிகெட்டேல்லாம் எம்மாத்திரம். ஆக பன்னி குட்டியை கொண்டு குடிகாரன் கையில் இருக்கும் பாட்டில் சீக்கிரத்தில் உடைக்கப்படுமாம். ஆனால் குடிகாரனோட நிலைமையை பார்க்க தான் பாவமா இருக்குது. யாரு கண்டா தேர்தல் பிரச்சாரத்தின் போது வேட்பாளரை தாக்கிய சம்பவம் தூசி தட்டப்பட்டு குடிகாரனுக்கு வேலூர் சிறையில் அறை ஒதுக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.. ஒரிஜினலையே அரசியலில் ஓழித்து கட்ட இந்திரத்தின் மகனோடு திட்டமிட்ட அம்மா போலியை விட்டு வைப்பாரா என்ன.....

என்னதான் நடக்கணும் நடக்கட்டுமே......

Wednesday, September 14, 2011

ஆதிக்க அரிப்புக்கு சொறிந்து விடும் இணையத்தில் சுற்றி திரியும் மண்ணாங்கட்டிகளின் சொறியல்கள் – பாகம் – 1

நேற்றைய தினம் தங்களை ரெண்டு முறை பிறந்தவர்களாக கருதி கொள்ளும்..... உடனே அதென்னையா ரெண்டு முறை பிறந்தவங்க, ஒருதடவை வெளிய வருவதற்குள்ளே ஏக அக்க போர் பண்ணி விடுகிற மனித குழந்தை ரெண்டாவது முறை எங்க நுழைந்து வெளியில் வரும் என்றெல்லாம் கேட்க கூடாது...... சமூகத்தை சேர்ந்த அன்பர் ஒருவரோடு இணையத்தில் மாட்டி கொள்ள நேர்ந்து விட்டது. அவரது மண் (டை) சுரங்கத்தில் இருந்து வெளியே தள்ளிய கருத்து சொறியல்களையும், குப்புற படுத்த சமாளிப்புகளையும் அப்படியே இங்கே தந்துள்ளேன். அந்த அன்பரது கருத்துக்களை மஞ்சள் நிறத்தில் வண்ணம் அடித்து உள்ளேன் . படிக்கிறவங்க படித்து ரெண்டு முறை அவதாரம் எடுத்த சமூகத்தின் மண்டைக்குள்ள என்ன இருக்கும் என்று மறுபடியும் உறுதி செய்து கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும்.

From 15 September 2011


பொய்கள் எங்கிருந்து உருவாகிறது என்பதை வைர மூக்குத்தி வேணுமாடி கள்ளி என்று கதை சொல்லுற தோரணையில் இருந்து தெரிந்து கொள்ளலாம். அப்படியே அண்ணாத்தே நற்செயல்கள் பற்றி சான்றிதழ் கொடுக்கிறாராம் . ம்ம்ம்ம் கர்ப்ப கிரகத்தில் வைத்து கோவிலுக்குள் வர பொம்பளைகளிடம் இவங்க பண்ணுகிற நற்செயல்கள் நாடறிந்தது தானே .



From 15 September 2011


எதை பற்றி கேள்வி கேட்டாலும் உலகத்தையே சுற்றி வருவாங்களே ஒழிய கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல மாட்டாங்க. சாதி வெறியனா இல்லையா என்ற கேள்விக்கு மானம் வீரம் பற்றி பாடம் எடுக்கிற அந்த ஸ்டைலை பார்த்தாலே அங்க இருக்குற அவ்வளவு பேரும் சுப்புரமனிய சாமியா தன் இருக்கானுக என்று தெரியுது. ஆனால் யாருக்கும் தெரியாமல் ஒருத்தனை மற்றொருவனுக்கு எதிராக கொம்பு சீவி விடுவதில் இவங்களை விட சிறந்த தொழில் நுட்ப வல்லுனர்கள் எவரும் இருக்க முடியாது


From 15 September 2011


சாதி வெறியரா இல்லையா என்பதற்கு இனி தான் ஆராய்ச்சி பண்ணணுமாம். எங்க போய் ஆராய்ச்சி பண்ண போறாரோ. ஒரு வேளை நாசாவில் உள்ளவர்களை உதவிக்கு கூப்பிடலாம் என்ற முடிவில் இருக்கிறாரோ என்னவோ. மூடத்தனத்தை பற்றி புராணம் என்ற பெயரில் கட்டுக்கதைகளை பரப்புவதையே தொழிலாக செய்யும் கும்பல் நமக்கு பாடம் எடுப்பது தான் கொடுமையிலும் கொடுமை.

From 15 September 2011





From 15 September 2011


புராணத்துக்கு என்னமா விளக்கம் குடுக்குறாங்கப்பா. அது அவங்க கையில கிடைத்த ஒரு சாதனமாம் அதில் தேவையானதை பிடித்து கொள்ளுவதும், எடுத்து அவங்க தேவைக்கு ஏற்ப ஆட்டி கொள்வதும் அவரவர் விருப்பமாம். அது என்ன சுவாரச்யமோ எல்லா புராணமும் நம்ம முப்பாட்டனுங்க அவங்க அப்பாக்களுக்கு தெரியாம ஒழித்து வைத்து படித்த சரோஜா தேவி புத்தகத்தில் வரும் கதைகளோட நகல்கள் போல் தான் தெரியுது. இவரு சொல்லுறதை பார்த்தா அந்த காலத்தில் எல்லாவனுங்களும் காம வெறியோடு சுத்தினாப்லலா இருக்குது.

Saturday, September 10, 2011

தோழி செங்கொடி அவசரப்பட்டு விட்டாளோ................

தலைப்பை படித்தவுடன் பலரது புருவங்கள் வியப்பிலோ இல்லை அதிர்ச்சியிலோ உயரலாம். ஆனால் இப்போது நடக்கிற கூத்துகளை எல்லாம் பார்க்கும் போது நான் வைத்த தலைப்பு சரி என்று தான் படுகிறது. மூவருடைய மரண தண்டனைக்கு எதிரான போராட்டம் பார்ப்பனிய இந்துத்துத்வ கூட்டமைப்பினால் ஆழ்கடலில் முங்கி கொண்டிருப்பவனின் ஈன முனகலாக போய் கொண்டிருந்த வேளையில், தத்தளித்து கொண்டிருந்த போராட்டத்திற்கு கலங்கரை விளக்கமாய் தன்னையே எரித்து கொண்டவள் தான் எம் தோழி செங்கொடி. போலியாக புனையப்பட்ட வழக்கில் உண்மை குற்றவாளிகளை தப்புவிக்க குற்றவாளி கூண்டில் திணிக்கப்பட்டு தான் தோன்றி தனமான தீர்ப்புகளால் மரண தண்டனை விதிக்கப்பட்ட மகனுக்காக போராடி கொண்டிருந்த அற்புதம் அம்மாளை பார்க்கையில் இவர்களுக்காக நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்ற வேட்கை நம் அனைவருடைய மனங்களில் கொழுந்து விட்டிருந்தால் அது இயல்பான ஒன்றே... அப்படி தோழி செங்கொடி மனதில் கொழுந்து விட்டு எறிந்த நெருப்பு தான் கும்மிருட்டில் தள்ளாடி கொண்டிருந்த போராட்டத்திற்கு வெளிச்சத்தை காட்ட அவளுடைய உடலின் மீதே பற்றவும் என்று கூறினால் அது பொய்யாகாது. ஆனால் அதே அற்புதம் அம்மாள் எந்த மகனுக்காக போராடுகிறாரோ, அந்த மகனின் உயிரை பறிக்க முண்டி கொண்டு வேலை செய்யும் பார்ப்பனிய அம்புசத்திற்கு நன்றி சொல்ல முண்டி கொண்டு முன்வரிசையில் நிற்பதை பார்த்தபோது , அது சந்தர்ப்பவாதம் தோழி செங்கொடியின் தியாகத்தை பல்லை காட்டி பழிப்பு செய்தது போல் தான் தோன்றியது. எவ்வளவு தீர்க்கமாக போராடி கொண்டிருந்த அந்த அம்மாவை சந்தர்ப்பவாதம் என்னும் பேய் கட்டுபடுத்த ஆரம்பித்து விட்டதா இல்லை, இவ்வளவு நாளும் சந்தர்ப்பவாதியாக தான் வாழ்ந்து கொண்டிருந்தாரா என்ற கேள்விகளும் எழும்பாமல் இல்லை. இங்கு எந்த சூழலிலும் நான் மூவருக்குமான மரண தண்டனைக்கு எதிரான போராட்டத்திற்கு எதிரானவன் இல்லை. ஆனால் அதே நேரத்தில் இந்த போராட்டம் எதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பது பற்றி மனதில் எழும்பி கொண்டிருக்கும் கேள்விகளை மறைக்கவும் எமக்கு தெரியவில்லை.

From Blogger Pictures


அற்புதம் அம்மாள் தன்னுடைய மகனின் மீது திணிக்கப்பட்ட அநீதிக்கு எதிரான போராட்டத்தை எதற்கு தமிழர்களுக்கு மீது திணிக்கப்படும் அநீதிக்கு எதிரான போராட்டம் என்று வடிவம் கொடுத்திருக்க வேண்டும் அதற்கு பதிலாக அப்பாவிகளின் மீது திணிக்கப்படும் அநீதிகளுக்கு எதிரான போராட்டம் என்று அதனை அழைத்திருக்கலாமே. அற்புதம் அம்மாள் தன்னுடைய மகனை தூக்கு கயிற்றில் இருந்து போராட காட்டிய உத்வேகத்தை, காலம் காலமாய் இடத்திற்கு ஏற்றார் போல் இந்த்துத்வ, தமிழ் தேசியம் என்ற போர்வைகளை அணிந்து கொண்டு சமுதாயத்தின் கடைவிழும்பில் உள்ளவர்களை ஒடுக்கி சுய இன்பம் அனுபவித்து கொண்டு அலையும் ஓடுகாலிகளுக்கு எதிரான போராட்டத்தில், தோழி செங்கொடி காட்டி இருக்கலாமே என்று தான் தோன்றுகிறது. அப்படி தானே எண்ண வைத்து விட்டார் அற்புதம் அம்மாள். சாதி வெறியனுக்கு மாலையிட்டு சுய இன்பம் கண்ட ஒருவனின் பின்னால் பலி ஆடு போல் சுற்றுகிறதை பார்க்கும் போது அப்படி தானே தோன்றுகிறது.

அற்புதம் அம்மாள் பார்ப்பனியத்தின் வாசலில் மண்டியிட்டு உயிர் பிட்சை கேட்கிறபோது, அதே பார்ப்பனியம் தமிழ் சமூகத்தோடு வைத்து கொண்ட கள்ள உறவில் பெற்றெடுத்த சாதியத்திற்கும் அதன் ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக தன்னை களபோராளியாக முன்னிறுத்தி கொண்ட தோழி செங்கொடியின் தியாகத்தின் முன்னால் அற்புதம் அம்மாள் மீது நான் வைத்திருந்த மதிப்பும் மரியாதையும் மண் சுவரை போல் உதிர்ந்து விழுவதை வேதனையோடு பார்த்து கொண்டிருக்க தான் ஒழிகிறதே தவிர தடுக்க முடியவில்லை. எப்படி தடுக்க முடியும், தன்னுடைய சுயலாபத்திற்காக, தமிழினத்தை காவு கொள்ள துடிக்கும் பார்ப்பனிய தேவதையின் முன்னால் கை கட்டி வாய் பொத்தி நன்றி சொல்ல அலைந்து கொண்டிருக்கிற பெண் பித்தனான ஒரு தற்குறியின் பின்னால் சென்று தன்னுடைய மகனுடைய விடுதலையே ஈழ விடுதலை என்றளவில் லட்சக்கணக்கான ஈழ மக்களின் அவலத்தை ஒரு உயிருக்குள் சுருக்கி போட்ட ஒரு பெண்மணியை, சரித்திரத்தை புரட்டி போட வந்த பெண்மணியாக எண்ணியது அவசர குடுக்கைத்தனமோ என்று எமது மனசாட்சியே எம்மை கேலி செய்கிறது. அவருடைய மகனை தூக்கு கயிற்றில் இருந்து தப்பிக்க வைக்க தன்னுடைய உயிரையே ஈகையாக தந்த ஒரு பெண் போராளியின் தியாகத்தை முன்னிறுத்தாமல், அப்போராளி மூட்டிய நெருப்பால் எழுந்த தீவிர எழுச்சிக்கு பயந்து நடுங்கி தனது உரைகளை சமயத்திற்கு ஏற்றார் போல் மாற்றி வாசிக்கிற பார்ப்பனிய நாடக நடிகை அரங்கேற்றிய நாடகத்தின் வெற்றி விழா கொண்டாட்டத்திற்கு கொடி அசைக்க ஓடி கொண்டிருக்க, அற்புதம் அம்மாவால் எப்படி முடிகிறது.

சாதிய ஒடுக்கு முறைகளுக்கு எதிரான போராட்டத்தையும், இன விடுதலைக்கான போராட்டத்தையும் தனித்தனியே பார்க்கும், தமிழ் தேசியத்தை போர்த்தி கொண்டு அலைகிற போலி தமிழ் தேசிய வியாதிகளான சாதி வெறியர்கள் மூட்டி விட்ட நெருப்புக்கு செங்கொடி தேவையில்லாமல் தன்னை பலிகடாவாக்கி விட்டாளோ என்று தான் தோன்றுகிறது. சாதி வெறியர்களின் அடக்கு முறைகளுக்கு எதிரான போரில், உயிர்வாழ்ந்து களமாடி இருந்தால் பார்ப்பனியத்தொடு கள்ள உறவு வைத்து கொண்டு அலைகிற அந்த வெறிநாய்களுக்கு தடுப்பூசியையாவது போட்டு இருக்கலாம். தோழி நீ பார்ப்பனிய அநீதிக்கு எதிராக போராடியதன் விளைவு, பார்ப்பனிய ஊடகங்களால் இன்று உனது கன்னித் தன்மையும், கல்வியறிவும் கழுவேற்றம் செய்யப்பட்டு கொண்டிருக்கிறது, ஆனால் நீ யாருக்காக போராடினாயோ அவர்கள் உனக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் ஊடக வன்முறைகளுக்கு எதிராக போராடுவதை விட்டு விட்டு, பார்ப்பனிய கழுமரத்தை கழுவி துடைத்து கொண்டிருக்கிறதை பார்க்கும் போது நீ அவசரப்பட்டு விட்டாயோ என்று தான் தோன்றுகிறது.

தயவு செய்து இந்த தூக்கு தண்டனைக்கு எதிரான போராட்டத்தை மனித நேயத்திற்கு எதிராக நிகழ்த்தப்படும் அநீதிக்கு எதிரான போராட்டமாகவே சித்தரியுங்கள், அதை விடுத்து தமிழர்களின் உரிமைக்கான போராட்டமாக சித்தரித்து, உயிரை துச்சமென மதித்து களமாடிய போராளிகளின் தியாகங்களின் மீது சேற்றை அள்ளி பூசி விடாதீர்கள். மண்ணின் விடுதலைக்காக போராளிகளை போர்க்களத்திற்கு அனுப்பி விட்ட ஈழத்து தாய்மார்கள் எங்கே. தாய்க்கும் மகனுக்கும் இடையேயான சராசரி பாச போராட்டத்தில் சிக்கி தவித்து கொண்டிருக்கும் அற்புதம் அம்மாள் என்கிற சராசரி பெண்மணி எங்கே.

அற்புதம் அம்மாள் என்ற பகுத்தறிவு ஆசான் பெரியாரின் பாசறையில் பாடம் பயின்ற பெண் போராளி எப்படி சராசரியான பெண்ணாக மாறி போனார். அவரை மாற்றியது யார். எந்த அவசரத்தில் அவ்வாறு மாறி போனார். சமூக அநீதிகளுக்கு எதிரான போராட்டத்தில் உயிர் பயம் கூடாது என்று பாடம் எடுத்த வெண்தாடி தாத்தாவின் கொள்கைகளை எங்கே புதைத்து விட்டார். வீணர்களின் பின்னால் சுற்றுவதை விட்டு விட்டு செங்கொடியின் தியாகத்தில் இருந்தாவது அற்புதம் அம்மாள் பாடம் கற்று கொண்டால் அது செங்கொடி சமூக அநீதிக்கு எதிராக பற்ற வைத்த நெருப்பு அணையாமல் இருக்க ஒரு அடி எடுத்து வைத்தது போன்று இருக்கும்.

ஆனால் ஓன்று மட்டும் புரிகிறது ஈழ போராட்டம், ஈழ விடுதலை என்று சொல்லி சொல்லியே ஒரு ஈன பிறவி தனது உடலை வளர்த்து இருக்கிறது. அதற்கு ஆயிரமாயிரம் போராளிகளின் தியாகத்தை மூலதனமாக்கி இருக்கிறது. நடிகையின் முந்தானைக்குள் சிக்கி கொண்ட அசிங்கத்தில் இருந்து தன்னை விடுவித்து கொள்ள அந்த ஈன பிறவி மறுபடியும் ஒரு முறை மூவரின் தூக்கு கயிற்றை மூலதனமாக்கி இருக்கிறது. சமூக விடுதலை இன விடுதலைக்கான போராட்ட களத்தில் இருந்து இது போன்ற ஈன பிறவிகளை அப்புறபடுத்தும் வரைக்கும் பார்ப்பனியத்தின் சூழ்ச்சிகளில் இருந்து தமிழ் தேசியத்திற்கான விடுதலை என்பது வெறும் கானல் நீரே

ஆமாம் செங்கொடி நீ அவசரப்பட்டு விட்டாயோ என்று தோன்றிய பொழுதிலும், நீ வைத்து விட்டு சென்ற நெருப்பில் போலிகளின் முகத்திரைகளும் கருகி கொண்டிருக்கிறது. ஆனால் ஒரு அழுத்தமான பாடத்தை நீ விட்டு சென்று இருக்கிறாய் தோழி.... அது பலனை எதிர்பாராமல் எங்கே சமூக அநீதி நிகழ்ந்தாலும் அங்கே சென்று மனிதமும் நேயமும் வாழ துடிப்பவர்கள் போராட வேண்டும் என்ற அதிமுக்கியமான செய்முறை பாடத்தை.

நெருப்பில் நீ உன்னை பற்ற வைக்கவில்லை...... காலம் காலமாக உறங்கி கொண்டிருக்கும் மனசாட்சிகளையும் பற்ற வைத்து இருக்கிறாய். நீ களமாடிய களத்தில் ஆயிரமாயிரம் செங்கொடிகள் சமூக அநீதிக்கெதிரான போராட்டத்தில் தங்களை இணைத்து கொள்வார்கள். அவர்களுக்கு உன்னுடைய வாழ்க்கை சரியான பாடமாக அமையும்.

செங்கொடி நீ அவசரப்பட்டு விட்டாயோ என்று தோன்றிய போதும், யாருக்கும் தெரியாமல் எங்கோ ஒரு மூலையில் கிடந்த நீ இப்போது போராட்டத்தின் தலைமையை ஏற்று இருக்கிறாய். உயிரோடு இருந்து களத்தில் போராடிய நீ இப்போது சமூக நீதிக்கான களபோராளிகளின் மனசாட்சியாக அரியாசனத்தில் வீற்றிருந்து தலைமை ஏற்று வழி நடத்தி கொண்டிருக்கிறாய்.

நீ இறந்து விடவில்லை சகோதரியே செங்கொடி, இப்போது தான் உன் வாழ்க்கை நீ தீர்மானித்த பாதையில் சென்று கொண்டிருக்கிறது.. உன்னுடைய வாழ்நாள் தீர்மானமே சமூக அநீதிகளை தகர்த்து எறிவது தானே தோழி. இப்போது தான் உன் வாழ்க்கையை மற்றுமொரு பரிமாணத்தில் முழு வீச்சில் தொடங்கி இருக்கிறாய்.

Wednesday, September 7, 2011

கழகத்தில் கால்வாய் வெட்டியவர் அரங்கேற்றிய ரகசிய திருவிளையாடல்கள் பற்றிய கிசு கிசு

நம்மில் பலபேருக்கும் கால்வாய் வெட்டி ஆட்டையை போட்டவரின் முகத்தை பார்த்தாலே ஒரு ஜென்டில்மேன் என்று தான் சொல்ல வரும். ஆனால் உணமையில் அண்ணாத்தே எம்சிஆர் படங்களில் நம்பியார் பண்ணுகிற வில்லத்தனத்தை விட மோசமான வில்லத்தனங்களை யாருக்கும் தெரியாமல் கழக குடும்பத்தில் அரங்கேற்றி இருக்கிறார் என்பது இன்னும் யாரும் புற்றிந்திட முடியாத புதிராக தான் இருக்கிறது. பின்ன கழக தந்தையின் கைதின் போது கூடவே கைது செய்யப்பட்டதன் மூலம் கழக தலைமையின் குடும்பத்தில் அசைக்க முடியாத நம்பிக்கையை பெற்றவர் அல்லவா. ஆனால் பட்சி சொல்லுகிறபடி பார்த்தால் அண்ணன் அப்பவே ரெட்டை வேடம் போட்டு கொண்டு தான் அலைந்தாராம். அப்போதிருந்தே எதிர் முகாமுக்கு தகவல்களை தலைமைக்கே தெரியாமல் கடத்துவதில் அண்ணன் பயங்கர கில்லாடியாம். கூடவே அவரோட சம்பந்தியும் அதிமுகவை சேர்ந்த கல்வி தந்தை என்பதால் அவருக்கு மன்னாரன் கம்பெனி சின்னம்மாவோடு தொடர்பை பலப்படுத்தி கொள்வத்து ரொம்ப எளிமையாக இருந்தத்து. கழக தந்தையின் கைதின் போது கைது செய்யப்பட்டதன் மூலம் கழக தந்தையின் மனசாட்சியின் குடும்பத்தோடு நெருக்கமான அண்ணன் அப்படியே கேடி சகோதர்களை கழக தந்தையின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு எதிராக கொம்பு சீவி விடும் வேலையையும் நன்றாக செய்து வந்தாராம்.

அதிலும் அண்ணனுக்கு கழக தந்தையின் துணைவியாரின் குடும்பத்தை கண்டாலே ஆகாதாம். அதுவும் மனசாட்சியின் இளைய வாரிசின் பதவி பறிக்க பட்டபோது அவர் வைத்திருந்த தொலை தொடர்பு துறை அமைச்சகத்தை அண்ணன் எப்படியாவது வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தில் இருந்தபோது அதில் மண் அள்ளி போடும் விதமாக கழக தந்தையின் மொழி வாரிசு அந்த அமைச்சகத்தை தனக்கு நம்பிக்கை உரியவராக கருதிய பெரம்பலூர் அரசருக்கு வாங்கி கொடுத்ததில் அண்ணன் ரொம்பவே அப்செட் ஆனாராம். ஆனால் உண்மை என்னன்னா கழக தந்தை ஆரம்பத்தில் தொலை தொடர்பு துரையை கால்வாய் வெட்டியவருக்கு தான் கொடுக்க வேண்டும் என்று நினைத்தாராம். ஆனால் அண்ணன் கால்வாய் வெட்டியதில் போட்ட பகாசுரதனமான ஆட்டையை பிரதமர் அலுவலகம் மூலம் தெரிந்து கொண்டதால் அந்த முடிவை மாற்றி விட்டு தன்னுடைய மொழி வாரிசின் முடிவையே ஏற்று கொண்டார்.

அப்போதிலிருந்தே இவங்களை எல்லாம் ஒரு வழி பண்ண வேண்டும் என்ற வெறி அண்ணனுக்கு அதிகமாக தொடங்கியது. அப்ப அண்ணனின் கையில் பலம் வாய்ந்த ஆயுதமாக கிடைத்தது தானாம் 2G அலைக்கற்றை விவகாரம். ஆண்டியப்பனின் மகன் தொலை தொடர்பு துறைக்கு அரசனானதும், அவரை பற்றிய இல்லாததும் பொல்லாததுமான தகவல்களை மனசாட்சியின் இளவல்களுக்கு கடத்துவதையே தன்னுடைய பிறவி பயனாக கருதி கொள்ள ஆரம்பித்தார். ஆண்டியப்பனின் மகன், மனசாட்சியின் இளவல்களின் பல முடிவுகளை மாற்றி விட்டார் என்றும், இளவல்களுக்கு எதிராக கழக தந்தையின் குடும்பத்தில் காய் நகர்த்துகிறார் என்றும் மனசாட்சியின் இளவல்களுக்கு தூபம் போட ஏற்கனவே பதவியை இழந்த கடுப்பில் இருந்த இளவல், ஆண்டியப்பனின் மகன் தொலை தொடர்பு துறையில் இளவல் செய்த பல குளறுபடிகளையும் அதற்கு ஆதராமான சாட்சியங்களையும் வெளியே தெரியாமல் மறைத்து இளவலை காப்பாற்றிய உண்மை கூட தெரிந்து கொள்ள முயலாமல், ஆண்டியப்பனின் மகனையும், மொழி வாரிசையும் சிக்கலில் மாட்டி விட வேண்டி 2G அலைக்கற்றை விவகாரத்தை ஊதி ஊதி பெரிதாக்கினர்.

அதோடு மட்டும் இல்லாமல், அதை பற்றிய விவரங்களை ஈழத்தின் தாயிடம் தனது மன்னாரன் கம்பெனி தொடர்புகள் மூலம் கொண்டு போய் சேர்த்தவர் நம்ம கால்வாய் வெட்டி ஆட்டையை போட்ட அண்ணன் தானாம். கடைசியில் 2G அலைக்கற்றை விவகாரமே கழகம் நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் மண்ணை கவ்வ துணைபோன காரணங்களில் முக்கியமான ஒன்றாகி போனது. அண்ணன் செய்த அப்பெரிய உதவிக்கு செய்யும் நன்றி கடனாக தான் அண்ணன் சென்னையை சுற்றியும் மற்றும் தமிழகமெங்கும் பண்ணிய நில முறைகேடுகளையும், தொழில் முதலீடுகளையும் தற்போதைய அரசாங்கம் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டது . இனி அப்படி எதுவும் நடந்தால் அண்ணனின் பெயர் கழக தந்தையிடம் மேலும் கேட்டு போகாமல் இருக்க “ நீ அடிக்கிற மாதிரி அடி நான் அழுகிற மாதிரி அழுகிறேன்” என்பது போன்ற நாடகமாக தான் இருக்கும். இப்போதிருக்கும் சூழ்நிலையில் அண்ணனை விட்டால் எதிர் முகாமின் நம்பிக்கைகுரிய ஆள் உடன்பிறப்புகள் நிறைந்த கழகத்தில் இல்லையாம்

என்னவோ போங்கையா நீங்களும் உங்க உட்குத்து அரசியல்களும். கத்தியை எடுக்கிறவனுக்கு கத்தியால தான் சாவு என்பதை புரிந்து கொண்டால் சரி

Tuesday, September 6, 2011

டி.ஆர்.பி ரேட்டை உயர்த்த அடிக்கப்பட்ட சாகசத்தை பற்றிய கிசு கிசு .

சமீபத்தில் சட்ட பேரவை உறுப்பினர் ஒருவரின் கைபேசி பறிக்கப்பட்டதாக தகவல் எல்லா ஊடகங்களிலும் வந்தது. அது உடன்பிறப்புகள் நிறைந்த கழகத்தில் இந்த ஆளும் அரசு மீதான கோவத்தை அதிகரிக்க செய்தது. கழக தந்தையே அறிக்கை விடுமளவுக்கு சென்றது. ஆனால் கைபேசி பறிக்கப்பட்ட சம்பவமே சொல்லி வைத்து நடாத்தப்பட்ட சம்பவமாம் என்று பட்சி ஓன்று வந்து காதில் கிசு கிசுத்து விட்டு போய் இருக்கிறது. ஏற்கனவே கடலில் கால்வாய் வெட்டியதில் தலைவருக்கு தெரியாமல் ஆட்டையை போட்டது, சின்னம்மாவோடு தொழில் முறை தொடர்புகளை வளர்த்து கொண்டது, மத்தியில் கழக தலைமைக்கு தெரியாமல் தனி ஆவர்த்தனம் பண்ணியது என பல விதங்களிலும் கழக தந்தையின் எரிச்சலுக்கு ஆளாகியிருந்தார், கைபேசியை சட்ட சபையில் இழந்த சின்னவரின் பெரியவர். இந்த நிலையில் சமீப காலமாக தளபதியிடமும் அவருக்கு நல்ல பெயர் அவ்வளவாக இல்லை. கிட்ட தட்ட கட்சி தலைமையும் அவரை எட்டப்பன் லிஸ்ட்டில் தான் வைத்து இருந்தது. கால்வாய் வெட்டியவரும் என்னென்னவோ செய்து பார்த்தும் தலைமைக்கு அவரின் மீது நம்பிக்கை ஏற்படவில்லை. அதிலும் அதிமுக நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் எல்லா இடத்திலும் அமோக வெற்றி பெற, மன்னாரன் கம்பெனியின் சொந்த குடியில் கால்வாய் வெட்டியவரின் வாரிசு பெற்றது திமுக தலைமைக்கு மிகுந்த வினோதமான இன்ப அதிரச்சியை ஆரம்பத்தில் அளித்தது. என்னடா தேர்தலில் பெரிய பெரிய கழக தலைகள் எல்லாம் சுருண்டு விழ மன்னாரன் கம்பெனியின் கோட்டையில் அறிமுக நாயகன் வெற்றி பெற்றது ஆச்சரியத்தை அளித்து இருந்தாலும் ஆரம்பத்தில் கழக தலைவர் அதை மாவட்ட செயல் வீரரின் கடின உழைப்பென்று தான் நினைத்தார். ஆனால் உண்மை என்னன்னா சின்னவரின் வெற்றி மன்னாரன் குடும்பத்து சின்னம்மாவுக்கும், கால்வாய் வெட்டியவருக்கும் இடையே ஏற்பட்ட புரிதலின் அடிப்படையில் கிடைத்த வெற்றியாம்.


கால்வாய் வெட்டியவரின் குடும்பத்து சின்னவரின் வெற்றி பூண்டி செல்வரின் கடின உழைப்பால் கிடைத்த வெற்றி என்றும் அதனால் தான் பூன்டியார் தற்போதைய அரசால் குறிவைக்கப்படுகிறார் என்றே தளபதியும் நம்ப வைக்கப்பட்டார். பூண்டி செல்வர் கைது செய்யப்பட்டபோது கூட கால்வாய் வெட்டியவர் தன் பங்குக்கு களத்தில் இறங்கி ஒரு பகல் காட்சியை அரங்கேற்றினார். ஆனாலும் கழக தலைமைக்கு அவரின் செயல்பாடுகளில் நம்பிக்கை ஏற்படவில்லை. இப்போது அந்த நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில் நீ அடிக்கிற மாதிரி அடி நான் அழுகிற மாதிரி அழுகிறேன் என்று மான்னாரன் கம்பெனியோடு பேசி வைத்து கொண்டு அரங்கேற்றிய கூட்டு களவாணி தனம் தான் அந்த கைபேசி பறிப்பு போன்ற செயல்கள் எல்லாம். அதாவது ஏற்கனவே கழக பெருந்தலைகள் எல்லாம் கம்பிகளுக்கு பின்னால் அனுப்ப பட்டு கொண்டிருக்க கால்வாய் வெட்டியவரும் தன்னுடைய குடும்பத்தில் இருந்தும் யாரையாவது ஆளும் கட்சி டார்கட் பண்ணியது போல் காட்சியமைப்பை அமைத்தால் தலைவரின் நம்பிக்கையை பெற முடியும் என்று நினைத்ததன் விளைவே இதெல்லாமாம் ஏற்கனவே கழக தந்தையின் அதிருப்திக்கு உள்ளாகி இருக்கும் கால்வாய் வெட்டியவரை மீண்டும் தலைமைக்கு நெருக்கமாக ஒரு உட்கார வைப்பதின் மூலம் தங்களுக்கு சாதகமான நிறைய தகவல்களை எதிர் முகாமில் இருந்து பெறலாம் என்று ஆளும் தரப்பும் நம்புகிறதாம். ஆனால் கழகத்தில் டி.ஆர்.பி ரேட்டு கூடுமா இல்லை இத்தோடு அதற்கு ஆப்பு வைக்கபடுமா என்பது பற்றி சரியான தகவல்கள் இல்லை.


ஆனால் கழக தலைமை இனி டி.ஆர்.பி ரேட்டுகளின் மீது நம்பிக்கை வைக்காமல் கழகத்திற்காக உயிரையும் கொடுக்க தயாராக இருக்கும் அடிமட்ட தொண்டர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அவர்களிடம் இருந்து நம்பிக்கைக்குரிய தலைவர்களை உருவாக்குவது தான் கழகத்தை வலுப்படுத்த உதவும். இல்லை என்றால் முதலுக்கே மோசம் என்ற நிலையை தான் கழகம் சந்திக்க நேரிடும்


என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது கழகத்திலே, ஒண்ணுமே புரியலை உலகத்திலே... ஆனா ஒண்ணு நிச்சயம், அடிக்கிற மழையில் நரியின் சாயம் ரொம்ப நாளைக்கு தாக்கு பிடிக்காது ... கூடிய விரைவில் சாயம் கலைந்து, நரியின் குட்டு வெளிப்படும் என்றே தோன்றுகிறது.

Friday, September 2, 2011

கார்த்திகேயனின் பிறப்பு பற்றிய புராணமும் , அதை தொடர்ந்து எழும் சில கேள்விகளும்



படிப்பவர்கள் கவனத்திற்கு :

இங்கு கீழே நான் பதிந்து இருப்பது என்னுடைய சொந்த கருத்துக்கள் கிடையாது. யாரவது இந்த கதை மிகுந்த ஆபாசமாக இருக்குது என்று எண்ணினால் அதற்கு நான் பொறுப்பாளி கிடையாது. இந்து மதத்தில் உள்ள புனித புராணங்களில் ஒன்றான கார்த்திகேய புராணத்தை தான் நான் இங்கு தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன். அதனுடைய ஆங்கில மூலம் பின்வரும் இணைய தளத்தில் காணப்படுகிறது http://www.astrojyoti.com/skandapurana-2.htm . மேலும். குழந்தைகளின் கண்களில் இந்த பக்கம் படாமல் படிப்பது குழந்தைகளுடைய வளர்ச்சிக்கு நல்லது. மேற்கொண்டு கார்த்திக் என்ற பெயர் கொண்ட யாரவது ஏன் மீது கோபப்பட்டால் அதற்கும் நான் பொறுப்பாளி ஆக முடியாது . வேண்டும் என்றால் அவர்கள் புதியதாக வேறு ஏதாவது அசிங்கபடுத்தப்படாத பெயரை தேர்ந்தெடுத்து கொள்வது நல்லது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. சரி வாங்க புராணத்துக்குள்ள போவோம்



சிவாவும் பார்வதியும் தங்கள் குடும்ப வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் கந்தமதன் மலையில் மையம் கொண்டு சந்தோஷமாக அனுபவித்து கொண்டிருந்தனராம். அப்படி பட்ட அவர்களுடைய வாழ்வில் அவர்களுடைய கவனக்குறைவினால் பூமிக்கே மிகப்பெரிய ஆபத்து வந்ததாம்..... உடனே எல்லாருக்கும் அவங்க ரெண்டு பெரும் அப்படி என்ன கவன குறைவாக இருந்து விட்டனர் என்று கேட்கலாம்......


ஒருமுறை சிவன் பார்வதியோடு நெருங்கி உறவடிக்கொண்டிருந்தபோது சிவாவின் விந்து கொஞ்சம் தரையில் கொட்டிவிட்டது தானம் அது. அதன் விளைவாக உருவாகிய மிகக்கடுமையான வெப்பத்தால் பூமி தகிக்க ஆரம்பித்து உலக மாந்தர்கள் எல்லாரும் கதறி துடிக்க ஆரம்பித்து விட்டனராம்... அவர்களது கூக்குரல் விசுனுவிடமும் பிரம்மாவிடம் எட்டியதாம். அதை கேட்ட கண்ட விஷ்ணுவும் பிரம்மாவும் கூடி பேசி அக்னியை கொண்டு அந்த அழிவை தடுக்காலாம் என்ற முடிவுக்கு வந்து, உடனே அக்கினியை அழைத்து ஏதாவது செய்து பொங்கி வழியும் சிவனுடைய விந்தால் வரும் அழிவை தடுத்து நிறுத்துமாறு கேட்டுக்கொண்டனர்.


அக்னியும் உடனே சிவனும் பார்வதியும் சல்லாபித்து கொண்டிருந்த கந்தமாதன் மலைக்கு ஒரு துறவியின் வேடம் பூண்டு சென்றார் .அங்கு அவர் பார்வதியை பார்த்து அம்மா எனக்கு ஏதாவது பிச்சைபோடுங்கள் . பிச்சை எடுப்பதற்கு என் கையை தவிர வேறு எதுவும் இல்லை என்று கேட்டு கொண்டே பார்வதி கையில் உள்ள சிவாவின் விந்துவை பிடுங்கி அக்கினி சாப்பிட்டு விட்டார். இதை கண்டு கடும் சினம் கொண்ட பார்வதி அக்னியை பார்த்து நீ என்னை கேட்காமல் எனக்கு கிடைத்த விந்தை சாப்பிட்டு அவமதித்து விட்டாய் எனவே இன்றிலிருந்து ஒரு மாம்சம் அருந்தும் விலங்காக பிறப்பாய், அத்தோடு நீ அருந்திய விந்தினால் உன் உடம்பில் மிகுந்த வெப்பம் உண்டாகும் என்று சபித்தாள்.


பார்வதியின் சாபத்தால் அக்னியுடைய உடம்பு வெப்பத்தில் தகிக்க ஆரம்பித்தது . உடனே அக்னி சிவனிடம் அவ்வாறு எழுந்த உடல் வேதனையை தவிர்க்க ஏதாவதி பரிகாரம் சொல்லுமாறு கேட்டு கொண்டான். அதற்கு சிவா அக்னி தான் அருந்திய விந்துவை எதாவது பெண்களின் கருப்பையில் கொண்டு பதிந்தால் அவ்வேதனையில் இருந்து தப்பலாம் என்று பதில் அளிக்க, ஏற்கனவே தன்னுடைய உடம்பில் எழும்பிய வெப்பத்தினால் தவித்து கொண்டு தனியாக ஓரிடத்தில் அமர்ந்திருந்த அக்கினி, அவ்வழியாக எப்படா பெண்கள் வருவார்கள் என வழிமேல் விழி வைத்து காத்திருந்தான்.


அப்போது மிகுந்த குளிரினால் நடுங்கிகொண்டிருந்த ஆறு கிருத்திகைகள் தங்கள் உடலை வெப்ப மூட்ட அவ்வழியே வந்ததால் அவன் வெகு நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போயிற்று .அப்போது அக்கினி தான் சாப்பிட்ட சிவாவுடைய விந்தை அந்த கிருத்திகைகளின் உடலில் உள்ள ஓட்டை வழியே விட்டு விட்டு போய் விட்டான் அதன் விளைவாக அவர்கள் ஆறு பெரும் கர்ப்பமடைந்தார்கள். அதை கேள்விப்பட்ட அந்த பெண்களின் கணவன்மார்கள் அவர்களை சபித்தனர். அதனால் அவர்கள் நட்சத்திரமாய் மாறி வானத்தில் குடி கொண்டனர் அவ்வாறு நட்ச்சத்திரமாய் மாறுவதற்கு முன்பு அவர்கள் தங்களுடைய கருவை இமயமலையில் விட்டு சென்றனர். அந்த ஆறு கருக்களையும் கங்கை நாணல் புற்களும் புதர்களும் நிறைந்த ஒரு ஒதுக்கு புறத்திற்கு சுமந்து சென்றது. அங்கு ஆறு கருக்களும் ஒன்றிணைந்து கார்த்திகேயன் உருவானார் .இதை பற்றி கேள்வி பட்ட தேவர்கள் மிகுந்த ஆனந்தமடைந்தனர் சிவனும் பார்வதியும் கார்த்திக்கேயன் பிறந்த இடத்திற்கு சென்றனர். பார்வதி குழந்தை கார்த்திகேயனை எடுத்து ஆரத்தழுவி கொண்டாள்



மேலே இருக்கிற புராணத்தை மொழி பெயர்த்து முடித்த பொழுது என்னுடைய மனதில் நிறைய கேள்விகள் எழும்பின அவற்றை கீழே வரிசை படுத்தி இருக்கிறேன். யாருக்கேனும் அக்கேள்விகளுக்கு விடை தெரிந்தால் அதை பதியுமாறு கேட்டு கொள்கிறேன்



=> உறவு வைக்கிறதர்க்கு மலை தான் கிடைச்சுதா, மலை முகட்டில் இருவரும் அப்படி இருந்தால் உலகத்தில் இருக்கும் எல்லாரும் அவர்களை பார்க்க நேரிடும் என்ற கூச்சம் இல்லாத தம்பதியர்களா அவர்கள்


=>அப்படி உறவு வைச்சதால பூமி சூடாகியது என்றால் அவர்கள் உறவின் பொது அவ்வளவு கரியமிலவாயு உருவாகியதா. இதுல இருந்து உடலுறவு வைக்கிறதுனாலதான் பூமி சூடாகுதுன்னு சொல்ல வர்றாங்களா


=>எதற்காக ரெண்டு பேர் உறவு கொள்ளும் பொது இன்னொரு கடவுள் வந்து அப்படி உறவு கொள்ளும் இன்னொரு ஆண் கடவுளின் விந்துவை குடிக்கவேண்டும் . அப்பவே வெளிநாட்டுகாரனின் போர்னோ கிராபி காணொளியை பார்த்து கடவுளர்கள் எல்லாம் கெட்டு போய் இருந்தார்களா.


=>அந்த காலத்தில் முனிவர்கள் எல்லாம் விந்து சாப்பிட்டு உயிர் வாழ்ந்தார்களோ என்ன ?, பிச்சை கேட்க போன இடத்தில் அடுத்தவரோட விந்தை பிடுங்கி சாப்பிடும் அளவுக்கு


=>வாடகை தாய் முறையை அப்பவே உருவாகிட்டான்களே. அது எப்படி சாத்தியம் ஆனது


=>அந்த முனிவர் உருவத்தில வந்த அக்கினி அவங்க ரெண்டு பெரும் உறவு கொள்ளும்போது விந்தை சாப்பிட்டான் என்று சொல்லபடுதே. விந்தை சாப்பிடும் அளவுக்கு இன்னொரு ஆள் அவங்க ரெண்டு பேருக்கும் இடையில் புகுந்து, இருவரும் உறவு கொள்வதை வேடிக்கை பார்க்கிறான் என்பது கடவுளாக இருக்கும் ரெண்டு பேருக்கும் தெரியவில்லையா .


=>ஒரு குட்டி தெய்வத்தை உருவாக்குவதற்கு இத்தனை பெண்களின் கர்ப்பை சூறையாடவேண்டுமா


=>கடவுளருடைய திரு விளையாடல்கள் என்ற பெயரில் எதற்கு இவ்வளவு ஆபாசம்

Thursday, September 1, 2011

சாதி ________________ சுடப்படும் மறைக்கப்பட்ட ஓட்டை வடைகள் - அரிப்பு பாகம் -1

வாசகர்கள் கவனத்திற்கு: இங்கு படங்களில் இருக்கும் வார்த்தை விளையாட்டுகள் என்னுடைய சொந்த கருத்துகள் கிடையாது . ஒன்றிரண்டு வாரங்களுக்கு முன்பு சில அறிவாளிகளால் இணையத்தில் பதியப்பெற்ற மறைக்கப்பட்ட ஒட்டை வடைகளின் வரலாறை படிக்க நேர்ந்தது. அதை எல்லாரும் படித்து இன்புறும் வண்ணம் அவற்றை படம் பிடித்து இங்கே ஒட்டியுள்ளேன். இந்த வரலாற்று கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை என்னிடம் கிடையாது அவை யாவும் ஓட்டை வடைகளின் வரலாற்றை கண்டுபிடித்த விஞ்ஞானிகளையே சாரும். குழந்தைகளை அருகில் வைத்து கொண்டு இதை படிக்க வேண்டாம் என்றும் தாழ்மையுடன் வேண்டி கொள்கிறேன்.



From 2 September 2011


என்னமா யோசிக்கிறாய்ங்க..... காமராசர் சுயசாதி பற்றினால் தான் கன்னியாகுமாரியை தமிழ்நாட்டோடு இணைத்தாராம். குமுளி , பீர்மேடு போன்ற பகுதிகளில் எல்லாம் அவரோட சாதிக்காரங்க இல்லையாம்..... அட பாவி மக்கா .... அந்த கால கட்டத்தில் காமராசர் மொழிவாரியாக மாநிலத்தை பிரித்ததை ஆதரிக்காத பக்கா தேசியவாதி என்பது பலருக்கும் தெரிந்ததே. கன்னியாகுமரியை தமிழ்நாட்டோடு இணைக்க போராடியவர்களில் முக்கியமானவர் மார்சல் நேசமணி. உண்மைய சொல்ல போனால் கன்னியாகுமரியை தமிழ்நாட்டோடு சேர்க்க வேண்டும் என்று காமராசர் அக்கறை காட்டியதே இல்லை. உண்மை இப்படி இருக்கையில் தன்னோட சாதிகாரங்களுக்காக குமரியை தமிழ்நாட்டோடு இணைத்தார் என்பது சாதிய மனப்பான்மையோடு கர்ம வீரர் மீது அள்ளி தெளிக்கும் அவதூறுகளே அன்றி வேற என்னவாக இருக்க முடியும். ஏதோ குமரியில் நாடார் சாதிக்காரங்க மட்டும் தான் இருக்கிறாங்களா என்ன. அப்படி பேசுவது குமரியை தமிழ்நாட்டோடு சேர்க்க பாடுபட்டவர்களின் தியாகத்தை கொச்சை படுத்துவதாகும் என்று இந்த அறிவாளிகள் என்று தான் புரிந்து கொள்ள போகிறார்களோ. முத்துராமலிங்கத்தை விட இந்திய தேசியத்தின் மீது பன்மடங்கு பற்றுகொண்டவர் காமராசர் என்பதும் அதினாலேயே அன்றைய திராவிட இயக்கத்தவர்களால் கடுமையாக விமர்சிக்கப்ட்டார் என்பதும் வரலாறு


From 2 September 2011


காமராசரை சுயசாதி பற்றுள்ளவர் என்று கூறியவரின் சுய சாதி வெறி நாடறிந்தது தானே. கமாராசரை ஒரு குறுப்பிட்ட சாதியின் தலைவராக சுருக்க என்னமா திட்டம் போடுறாங்க. சுயசாதி வெறியினால் ஏனைய சாதியை சேர்ந்தவர்களின் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டவர் காமராசரை பார்த்து சுய சாதிவெறியர் என்று கூறியதாக சொல்லபடுவது தான் இந்த நூற்றாண்டின் சிறந்த நகைச்சுவையாக இருக்கும்



From 2 September 2011


விருதுநகர் வியாபாரிகள் மட்டும் தானா கலப்படத்தில் ஈடுபட்டார்கள், அப்போது வியாபார தொழிலை தங்களுடைய சாதிய ரீதியான உரிமையாக கருதி கொண்டிருந்த ஆதிக்க சாதியினர் கலப்படத்தில் ஈடுபடவில்லையா. விருதுநகர் வியாபாரிகள் என தனியா குறுப்பிட்டு அவர்கள் கலப்படத்தில் ஈடுபட்டார்கள் என்று சொல்வதே, கடுமையான உழைப்பை மூலதனமாக வைத்து முன்னேறி கொண்டிருந்த ஒரு குறுப்பிட்ட சமூகத்தவர்களின் முன்னேற்றத்தை குலைக்க, அப்போதைய சூழலில் எல்லா விதமான வியாபாரங்களில் ஆளுமை செய்து கொண்டிருந்த ஆதிக்க சாதியினர் முத்துராமலிங்கத்தை கருவியாக பயன்படுத்தினதற்கான முக்கிய சான்றாகும்.

அ துசரி அவரு அவரை சுற்றி இருந்த அடி பொடிகளை தூண்டி விட்டு மக்கள் குடிக்க நீர் எடுக்கும் கிணறுகளில் மனித மலத்தையும் மண்ணெண்ணையையும் ஊற்றி கலப்படம் செய்ததை விடவா விருதுநகர் வியாபாரிகள் செய்து விட்டார்கள்



From 2 September 2011


கூடை வியாபாரிகளான நாடார்கள், கலப்படம் , நாடார் வியாபாரி என்னை வெட்டுவேன் என்று கூறினார் , வெட்டினால் வெட்டட்டும் ஆயிரமாயிரம் முத்துராமலிங்கங்கள் தோன்றுவார்கள்..... போன்றதான வார்த்தைகள் அன்றைய கால கட்டத்தில் தங்களுடைய உழைப்பால் முன்னேறி கொண்டு இருந்த ஒரு சமூகத்திற்கு எதிராக என்ன மாதிரியான வெறுப்பை கக்கி இருக்கிறார் என்பதற்கான வரலாற்று அடையாளங்கள்.


ம்ம்ம்ம்ம்ம் ஒரு முத்துராமலிங்கம் பிறந்ததினால் தமிழகத்தில் ஏற்பட்ட சாதிய ரீதியான வன்முறைகள் இன்னும் ஒழியலை ...... ஆயிரமாயிரம் முத்துராமலிங்கங்கள் பிறந்திருந்தால் ...... தாங்காதுடா சாமீ..... இந்நேரம் ஒட்டு மொத்த தமிழ்நாடும் சுடுகாடா தான் இருந்திருக்கும்.


ஆயிரமாயிரம் தினகரன்களும் , கல்யாணிகளும் பிறக்க மாட்டார்களா, சமூகத்தில் சாதி ரீதியான பிளவுகளை அடித்து நொறுக்க , என்ற ஏக்கம் தான் மிஞ்சி நிற்கிறது.


From 2 September 2011


காமராசர் கள்ள நோட்டு அடித்தார் , பெரும்பாலான பிரபலமான பத்தாயிரம் பிரதிகள் விற்கும் பத்திரிகைகளில் செய்தியாக வந்தது ...... என்பது போன்ற தகவல்கள் மூலம், பார்ப்பனிய வேசியம் எவ்வளவு வீரியமாக ஏழைகளின் கல்வி தந்தை காமராசருக்கு எதிராக செயல் பட்டு இருந்து இருக்கின்றன என்பது நன்கு தெரிகிறது. ம்ம்ம்ம் கர்மவீரர் எப்படி பட்ட சவால்களை எல்லாம் சந்திக்க வேண்டிய நிலையில் இருந்திருக்கிறார்.... அன்றைக்கு அய்யா பெரியார் மட்டும் காமராசருக்கு பக்க துணையாக இல்லைன்னா காமராசரை உண்டு இல்லைன்னு ஆக்கி இருப்பாய்ங்க போல ..


இவரு தூக்கத்துல எதையாவது யோசித்து விட்டு வந்து அதையே நான் கேள்வி படுகிறேன் சந்தேகப்படுகிறேன் என்று சொல்லி விட்டால் உடனே இவரு சந்தேகபடுகிற ஆட்களை குற்றவாளியாக்கி தண்டனை குடுத்திடனும்...... தங்க முடியலப்பா ....... இவரு பட்ட சந்தேகத்துக்கெல்லாம் கர்ம வீரர் இவரு மேல கேசு போட்டிருந்தார்ன்னா...அவரு ஆட்சி பண்ணி இருக்க முடியாது நீதிமன்ற வாசலில் ஒரு கூடாரம் அடித்து குந்திக் கொண்டு தான் இருந்திருக்க வேண்டும்


ஒண்ணு மட்டும் நல்லா தெரிகிறது, பார்ப்பனியத்துக்கு முத்துராமலிங்கம் நல்ல அடியாளாக செயல்பட்டு இருக்கிறார்


From 2 September 2011


காமராசரால் தேசிய வியாதிகளுடைய மனம் உடைந்து போனதோ இல்லையோ..... ஆனால் தான் வளர்த்து விட்ட இந்திரா என்னும் பார்ப்பனிய கடா அவசரகால நெருக்கடியின் போது தன் மீதே பாய போவதை எண்ணி அதை சீரணிக்க முடியாமல் மனம் நொந்தவராக தான் கர்ம வீரர் இறந்து போனார் என்பது வரலாறு. காலம் பூரா அவர் எந்த தேசியத்துக்கு பாடுபட்டாரோ அந்த தேசியம் தான் அவரை சிறையில் போடவும் துணிந்தது. அது தான் வேதனையான உண்மை.

ஒரு கேள்வி நம்ம முத்துராமலிங்கம் எத்தனை கட்சிக்கு தான் ஒரே நேரத்தில் தலைவராக இருந்தாரு.... பார்வர்டு பிளாக் கட்சிகாரறு எப்படி சீர்திருத்த காங்கிரசின் தலிவரானார் ... ஒண்ணுமே புரியலையே


From 2 September 2011


முத்துராமலிங்கம் பண்ணியதிலேயே உச்சகட்ட காமடின்னு சொன்னா அது சுபாசை பர்மாவில் பார்த்தேன், போர் முனையில் பார்த்தேன், மூன்றாம் உலக போர் தொடங்கும் , சுபாசு தன்னுடைய சேனைகளோடு இந்தியாவிற்குள் நுழைவார் என்று சாமத்தில் வரும் சக்கம்மா குடு குடுப்பைகாரர் மாதிரி கட்டியம் கூறி கொண்டு அலைந்தது தான்.

ஆமா நேருவுக்கு முத்துராமலிங்கத்தை தெரியுமா என்ன ..... வடிவேலு ஒரு படத்தில் நானும் ரவுடி தான்னு சொல்லி கொண்டு அலைந்தது போல் இருக்கிறது.

ஆகத்து 15 பாரத தாய்க்கு ரெட்டை விலங்கு பூட்டப்பட்ட நாளோ இல்லையோ ..ஆனால் பாரதத்தின் கற்பு வெள்ளைக்காரர்களால் அடிமாட்டு விலைக்கு பார்ப்பனியத்திடம் விற்கப்பட்ட நாள் என்பது மட்டும் நிச்சயமான உண்மை.



From 2 September 2011


முத்துராமலிங்கத்தால் தூண்டி விடப்பட்டு பற்றி எரிந்த சாதி கலவரத்துக்கு காரணம் காமராசராம். இந்த கோமாளித்தனத்தை நினைத்து எங்க போய் முட்டி கொள்ள என்று தெரியவில்லை. ஆனால் மேல இருக்கிறவற்றை பதிந்தவர் ஒரு மாதிரியான சாதிய வெறித்தனத்தோடு கர்ம வீரரை சாதி வெறியராக காட்ட கடும் முயற்சி செய்திருக்கிறார். ஆனால் கடைசியில் அவரே ஒரு கோமாளி ஆகி இருக்கிறார்.


பார்ப்பனியத்துக்கு கைக்கூலியாக இருந்து ஒடுக்கப்பட்ட மக்களின் மீது அத்துணை அடக்குமுறைகளையும் ஏவி விட்ட ஒருவரை கொண்டாடுவதும், சாதி மத பாகுபாடில்லாமல் எல்லா குழந்தைகளும் கல்வி அறிவை பெற வேண்டும் என்று திட்டங்களை கொண்டு வந்தவரை சாதி வெறியராக காட்ட முயற்சிப்பதும் சமூக ரீதியாக நன்மை பயக்கும் பரிணாம வளர்ச்சி கிடையாது, அது பரிதாபகரமான அழிவுகளை தேடுவதற்கான முன் முயற்சி என்று தான் கூற முடியும்


இப்படியெல்லாம் மறைக்கப்பட்ட ஒட்டை வடைகளை பற்றி ஆராய நேரத்தை செலவிடுவதை விட்டு விட்டு சக மனிதர்களோடு மனிதர்களாக சரிசமமாக வாழ்வதற்கு பயிற்சி எடுத்தல் நலம் என்று தோனுகிறது ....

மறைக்கப்பட்ட ஒட்டைவடைகள் பற்றிய பதிவுகள் தொடரும்