நேற்றைய தினம் தங்களை ரெண்டு முறை பிறந்தவர்களாக கருதி கொள்ளும்..... உடனே அதென்னையா ரெண்டு முறை பிறந்தவங்க, ஒருதடவை வெளிய வருவதற்குள்ளே ஏக அக்க போர் பண்ணி விடுகிற மனித குழந்தை ரெண்டாவது முறை எங்க நுழைந்து வெளியில் வரும் என்றெல்லாம் கேட்க கூடாது...... சமூகத்தை சேர்ந்த அன்பர் ஒருவரோடு இணையத்தில் மாட்டி கொள்ள நேர்ந்து விட்டது. அவரது மண் (டை) சுரங்கத்தில் இருந்து வெளியே தள்ளிய கருத்து சொறியல்களையும், குப்புற படுத்த சமாளிப்புகளையும் அப்படியே இங்கே தந்துள்ளேன். அந்த அன்பரது கருத்துக்களை மஞ்சள் நிறத்தில் வண்ணம் அடித்து உள்ளேன் . படிக்கிறவங்க படித்து ரெண்டு முறை அவதாரம் எடுத்த சமூகத்தின் மண்டைக்குள்ள என்ன இருக்கும் என்று மறுபடியும் உறுதி செய்து கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும்.
பொய்கள் எங்கிருந்து உருவாகிறது என்பதை வைர மூக்குத்தி வேணுமாடி கள்ளி என்று கதை சொல்லுற தோரணையில் இருந்து தெரிந்து கொள்ளலாம். அப்படியே அண்ணாத்தே நற்செயல்கள் பற்றி சான்றிதழ் கொடுக்கிறாராம் . ம்ம்ம்ம் கர்ப்ப கிரகத்தில் வைத்து கோவிலுக்குள் வர பொம்பளைகளிடம் இவங்க பண்ணுகிற நற்செயல்கள் நாடறிந்தது தானே .
எதை பற்றி கேள்வி கேட்டாலும் உலகத்தையே சுற்றி வருவாங்களே ஒழிய கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல மாட்டாங்க. சாதி வெறியனா இல்லையா என்ற கேள்விக்கு மானம் வீரம் பற்றி பாடம் எடுக்கிற அந்த ஸ்டைலை பார்த்தாலே அங்க இருக்குற அவ்வளவு பேரும் சுப்புரமனிய சாமியா தன் இருக்கானுக என்று தெரியுது. ஆனால் யாருக்கும் தெரியாமல் ஒருத்தனை மற்றொருவனுக்கு எதிராக கொம்பு சீவி விடுவதில் இவங்களை விட சிறந்த தொழில் நுட்ப வல்லுனர்கள் எவரும் இருக்க முடியாது
சாதி வெறியரா இல்லையா என்பதற்கு இனி தான் ஆராய்ச்சி பண்ணணுமாம். எங்க போய் ஆராய்ச்சி பண்ண போறாரோ. ஒரு வேளை நாசாவில் உள்ளவர்களை உதவிக்கு கூப்பிடலாம் என்ற முடிவில் இருக்கிறாரோ என்னவோ. மூடத்தனத்தை பற்றி புராணம் என்ற பெயரில் கட்டுக்கதைகளை பரப்புவதையே தொழிலாக செய்யும் கும்பல் நமக்கு பாடம் எடுப்பது தான் கொடுமையிலும் கொடுமை.
புராணத்துக்கு என்னமா விளக்கம் குடுக்குறாங்கப்பா. அது அவங்க கையில கிடைத்த ஒரு சாதனமாம் அதில் தேவையானதை பிடித்து கொள்ளுவதும், எடுத்து அவங்க தேவைக்கு ஏற்ப ஆட்டி கொள்வதும் அவரவர் விருப்பமாம். அது என்ன சுவாரச்யமோ எல்லா புராணமும் நம்ம முப்பாட்டனுங்க அவங்க அப்பாக்களுக்கு தெரியாம ஒழித்து வைத்து படித்த சரோஜா தேவி புத்தகத்தில் வரும் கதைகளோட நகல்கள் போல் தான் தெரியுது. இவரு சொல்லுறதை பார்த்தா அந்த காலத்தில் எல்லாவனுங்களும் காம வெறியோடு சுத்தினாப்லலா இருக்குது.
No comments:
Post a Comment