Thursday, February 12, 2015

புத்திசாலிகள் உணர்ந்து தெரியும் சங்கதிகள்



எதிரியை பேசவிட்டு துரோகியின் கோவணத்தை உருவுவதில் புத்திசாலிகள் கை தேர்ந்தவர்கள்.

அணைக்கும் போது எல்லாரும் தெரியுறது மாதிரி அணைத்து.... அடிக்கும் போது யாருக்கும் தெரியாமல் சோலியை முடிப்பவன் புத்திசாலி

வாள் வீச்சில் தேர்ந்தவனுடைய வாள் அதன் உறையை விட்டு அடிக்கடி எம்பி குதிப்பதில்லை என்பதை உணர்ந்தோர் புத்திசாலிகள்.

ஓவ்வொரு போரின் வெற்றியும் தோல்வியும் களத்தில் தீர்மானிக்கபடுவதை விட
உளவியல் தளத்தில் தான் தீர்மானிக்கப்படுகின்றன என்ற உண்மை உணர்ந்தோன் புத்திசாலி

எதிரிக்கு தன் மேல் இருக்கிற பயம் தான் தன்னுடைய பலம்
என்பதை உணர்ந்தோன் புத்திசாலி

அடக்கி ஒடுக்கப்பட்டவனின் மீதான வன்முறை சமநிலைப்படும்போது அமைதி திரும்பி விடும் என்பான் புத்திசாலி .

ஆயுதங்களால் ஏற்படுத்தப்படும் வன்முறைகளை விட அதை ரசித்து மகிழும் மனதில் நிகழ்த்தப்படும் வன்முறைகள் அபாயகரமானவை


திக்கற்றோர் மீது கட்டவிழ்த்து விடப்படுகிற வன்முறைகளை விட அதை அமைதியாக கடந்து செல்கிற மவுனம் தான் கொடூரமானது

விடுதலைக்கான போராட்டம் என்பது பாதுகாப்பை தேடி ஓடுவதில்லை
. தனக்கான பாதுகாப்பை தானே உருவாக்கி கொள்வது தான் என்பதை அறிந்தோர் புத்திசாலிகள்

மானங்கெட்ட சொந்த ரத்தத்தோடு மாரடித்து நேரத்தை சாகடிப்பதை விட எதிரியோடு சண்டையிட்டு மாய்வது மேல் என்பார்கள் புத்திசாலிகள .

உறவுகளை பணத்தை கொண்டு கட்டி எழுப்பி விடலாம் என்றெண்ணுவதும் ஒருவகையில் விபச்சாரம என்பது புத்திசாலிகள் அறியாததல்ல .

சகிப்புத்தன்மை என்பது மதங்களில் காணப்படும் குப்பைகளை எல்லாம் மலை போல் ஓன்று சேர்த்து அதன் மேல் குந்தி இருப்பதல்ல . சக மனிதனை வெறுக்க சொல்லும் மிருகக் கோட்பாடுகளை தீயிட்டு கொழுத்துவதில் அடங்கி இருக்கிறது. என்பதறிந்தோர் புத்திசாலிகள்

அக்கறையோடு பேசுபவர்களிடம் "உன் வேலையை பார்” என்று சொல்பவர்களிடம்  அக்கப்போர் செய்வது நம்முடைய சுயமரியாதையின் மேல் நாமே மண்ணள்ளி போடுவதற்கு சமம் என்பதை உணர்ந்தோர் புத்திசாலிகள்.

நம்மை நாமே தனிமைப்படுத்துவதை தவிர கொடூரமான செயல் வேறு எதுவும் இருக்க முடியாது என்பது புத்திசாலிகளுக்கு தெரியாத ஒன்றல்ல.

நாம் யார் என்பதை விட நாம் எப்படி செயல்படுகிறோம் என்பது தான் வரலாற்றில் நமக்கான இடத்தை தீர்மானிக்கிறது என்பதை அறிந்தோர் புத்திசாலிகள்


நீ யார் என்பதை விட நீ எப்படி செயல்படுகிறாய் என்பது தான் வரலாற்றில் உனக்கான இடத்தை தீர்மானிக்கிறது என்பான் புத்திசாலி.


தேடுதலில் ஈடுபாட்டோடு இயங்க ஆரம்பிப்பவன் கற்றுக் கொடுப்பவருக்கே குரு ஆகி விடுவான் என்பதறிந்தோர் புத்திசாலிகள்

எழுத்துக்களை விட உயிர்ப்போடு இருக்கும் குரல்களின் வீச்சு அதிகம் என்ற உண்மை அறிந்தோர் புத்திசாலிகள். அதனால் தான் என்னவோ எழுத்துக்களால் அதிகாரத்தின் உச்சம் தொட்டோரை விட பேச்சுக்களால் உச்சம் தொட்டோரின் எண்ணிக்கை அதிகம்

எல்லாரையும் திருப்தி படுத்த நினைப்பவன் மிகப்பெரிய நடிகன் என்ற உண்மை அறிந்தோர் புத்திசாலிகள்

ஆத்திரக்காரன் ஆயுதத்தை தேடிக் கொண்டிருக்கிற தருணத்தில் புத்திசாலி சத்தமில்லாமல் வியூகங்களை வகுத்து கொண்டிருப்பான்

தன்னைத் தானே தனிமைப்படுத்துதல் அரசியல் களத்தில் தற்கொலை என்ற உண்மை புரிந்தோர் புத்திசாலிகள்

சாதி, மத வெறியர்களின் கையில் இருக்கும் கத்தியை விட அவர்கள் கையில் இருக்கும் திருட்டு எழுதுகோல்கள் அபாயகரமானவை என்பதை உணர்ந்தோர் புத்திசாலிகள்.

செத்து செத்து பொழைப்பதை விட வாழ்வதற்காக சாக துணிவது எவ்வளவோ மேல் என்போர் போராளிகள் ஆகி விடுகிறார்கள்

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு . பொறுப்புள்ள போராளிகள் எடுத்ததெற்கெல்லாம் ஆத்திரப்படுவதில்லை. மாறாக அமைதியாக சூழலுக்கு ஏற்றாற்போல் களமாடுவார்கள் என்பதை அறிந்தோர் புத்திசாலிகள்.
எனக்கு முன் நிற்பவர் முட்டாள் என்று எண்ணிக்கொண்டு பேச ஆரம்பிக்கிற அத்தருணத்தில் நான் பயித்தியக்காரனாகி விடுகிறேன்

அசலை புரட்டிப் படிக்க மனதில்லாமல் நகலில் இருந்து நகல் எடுத்துக் கொண்டலைந்தால் கடைசியில் வெற்றுத்தாள் தான் கையில் வந்து சேரும் என்பதை அறிந்தோர் புத்திசாலிகள்



ஆக்கப் பூர்வமான வாதங்கள் முன்முடிவுகளோடு ஆரம்பிப்பது இல்லை. அது எனக்கு ஒன்றுமே தெரியாது என்ற நிலையில் இருந்து ஆரம்பித்து நிறைகளையும் குறைகளையும் அலசி தெளிவடையும் ஒரு தியான நிலை என்பதை அறிந்தோர் பேறு பெற்றோர்.

தன்னால் உதவி பெற்றவர்கள் எல்லாம் தன்னிடம் நன்றியோடு இருப்பார்கள் என்று
எண்ணுபவன் உலகின் கடைந்தெடுத்த ஏமாளி என்பதை அறிந்தோர் புத்திசாலிகள்

பகுத்தறிபவனின் கேள்விகளுக்கு மூடனை அம்மணமாக்கி விடும் வலிமை உண்டு என்ற உண்மை அறிந்தோர் புத்திசாலிகள்

சாதி வெறி பிடித்து விட்டால் வட்டாரப்பற்று
, மொழிப்பற்று எல்லாம் காணாமல் போய் விடும்

பெண்கள் இல்லா உலகில் மனிதர்களே இருந்திருக்க மாட்டார்கள்
. அப்படியே இருந்திருந்தாலும் அவர்கள் மனிதர்களாக வாழ்ந்திருக்க மாட்டார்கள் என்ற உண்மை அறிந்தோர் புத்திசாலிகள்

தன்னந்தனியாக விளம்பரம் தேட நினைக்கும் வெட்டிப்பயலுக எல்லாம் மக்களுக்கான
போராட்டத்தில் சுயத்தை ஒதுக்கி விட்டு வந்து சேருவார்கள் என்று எண்ணுபவன் முட்டாள் என அறிந்தவன் புத்திசாலி

ஓவ்வொரு போரின் வெற்றியும் தோல்வியும் களத்தில் தீர்மானிக்கபடுவதை விட
உளவியல் தளத்தில் தான் தீர்மானிக்கப்படுகின்றன என்ற உண்மை உணர்ந்தோன் புத்திசாலி

எதிரிக்கு தன் மேல் இருக்கிற பயம் தான் தன்னுடைய பலம்
என்பதை உணர்ந்தோன் புத்திசாலி

ஒவ்வொரு மனிதரும் மிகப்பெரும் புதிர்களை உள்ளடக்கிய ஒரு புத்தகம் தான் என்பதை அறிந்தோர் புத்திசாலிகள்

உணர்வோடு திரிபவன்
தூங்கி கொண்டிருப்பவனை தட்டி எழுப்புவான் .... உணர்ச்சியில் கொந்தளிப்பவன் சிறிது நேரத்தில் ஆடி அடங்கி வாடி வதங்கி வழிந்து ஒடுங்கி விடுவான் என்பது புத்திசாலிகளுக்கு புரியும்

அறிவூட்டும் புத்தகங்களை விலைமதிக்க முடியாதவையாக
கருதும் எந்த சமூகமும் எப்படி பட்ட இக்கட்டான சூழலையும் உடைத்து விட்டு வெளியே வந்து விடும்

தனக்கு தொடர்பில்லாத இடத்தில் போய் உட்கார்வது உள்ளதையும் கெடுத்து விடும் என்ற உண்மை அறிந்தோர் புத்திசாலிகள்




No comments:

Post a Comment