Friday, June 18, 2010

ஆதிக்க சாதி – ஊழல் தொடர்பு

கொஞ்ச நாளாக செய்திதாள்களை பார்க்கும் போது அடுத்து அடுத்து ஊழல் பற்றிய செய்திகளாகவே இருந்து விடுகிறது. இது எதை குறிக்கிறது ..இப்போதாவது ஊடகங்களின் மூலம் வெளி வந்து விடுகிறது .ஆனால் ஊடகங்கள் அந்த அளவுக்கு வளர்ச்சி பெறாத கால கட்டத்தில் எத்தகைய ஊழல்கள் நடை பெற்று இரூக்க வேண்டும். எவ்வாறு அவை மறைக்கப்பட்டன . இந்த இழையின் தலைப்பை பார்த்தால் எதோ ஒரு குழுவினரை குறி வைத்து தாக்குவது போல் இருப்பினும் ..இந்தியாவில் நடைபெற்ற எல்லா ஊழல்களிலும் அவர்களின் பெரும்பான்மையான பங்கு இருப்பதை மறுக்க முடியாது . இன்றாவது அரசியிலில் எதோ ஓரளவுக்கு ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் பங்கு அங்கீகரிக்கபட்டு இருக்கிறது . ஆனால் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை அரசியலிலாகட்டும் அல்லது இந்திய நிர்வாகக் கட்டுப்பாடு துறை ஆகட்டும் அதில் பிராமானிய பனியா கூட்டணியின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது . இந்திய நிர்வாக துறையை பொருத்தவரை அது இன்று கூட அவர்களின் கைகளில் தான் உள்ளது . அது இந்தியாவில் உள்ள பல்வேறு நிர்வாக துறைகளின் தலைமை பீடத்தில் இருப்பவர்களின் பெயர்களை கவனித்தால் தெரியும் . இன்றைய கல்வி துறையும் , வேலை வாய்ப்பு துறைகளும் அவர்களால் சீரழிக்கப்பட்டு இருக்கிறது என்றே கூறலாம் . அதற்கு மிக நல்ல உதாரணம் சமீபத்தைய மருத்துவ கல்வி ஊழலும் , தொடர்வண்டி துறை வேலை வாய்ப்பு வாரிய ஊழலையும் சொல்லாம். இடஒதுக்கீடு இவர்களால் கேலிக்கூத்தாக்கப்பட்டு இருக்கிறது. இட ஒதுக்கீடுக்கு முந்தைய காலம் வரை கல்வி துறையில் தனியார் மயமாக்கபடாமலிருந்தது . ஏனைய ஒடுக்கப்பட்ட பிரிவினர் இட ஒதுக்கீட்டை பயன்படுத்தி வேகமாக முன்னேற ஆரம்பித்த பின் . இந்த கூட்டணி கல்வி துறையில் தனியார் மயத்தை கொண்டு வந்து இட ஒதுக்கீட்டையும் கிட்டத்தட்ட கேள்வி குறியாக்கி விட்டது . கொஞ்ச காலம் முன்பு வரை தற்போது இந்தியாவில் உள்ள மத்திய அரசின் கட்டுபாட்டில் உள்ள கல்லூரிகளின் எண்ணிக்கையை கூட்டுவதை எதிர்த்து வந்த இந்த கூட்டணி . இப்போது அங்கு இட ஒதுக்கீடு முறையை அமுல்படுத்த வேண்டும் என்று குரல்கள் எழ ஆரம்பித்தவுடன் .. அவர்களின் ஆதிக்கம் ஆட்டம் காண ஆரம்பித்தவுடன்..... இப்போது மத்திய அரசின் கட்டு பாட்டில் உள்ள கல்லூரிகளின் எண்ணிக்கையை கூட்ட வேண்டும் என்று கூப்பாடு போடுகின்றனர் ,,அதோடு மட்டுமில்லாமல் இட ஒதுக்கீடு முறையை பிசுபிசுக்க செய்ய உயர்கல்வி துறையிலும் அந்நிய முதலீடுகளை ஊக்குவிக்க முனைய ஆரம்பித்து விட்டனர் .
இவர்களது நோக்கம் தான் என்ன ... வேறொன்றுமில்லை இப்படி செய்துவிட்டால் அரசு நடத்தும் கல்லூரிகளின் தரம் அங்குள்ள பேராசிரியர்களை தனியார் கல்லூரிகள் திருடுவதன் மூலம் அரசு கல்லூரிகளின் தரத்தை குறைத்து விடலாம்...அதை நம்பியுள்ள ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் கல்வி வளர்ச்சியில் ஒரு பெரிய ஓட்டையை உருவாக்கி விடலாம் அதோடு தனியார் கல்லூரிகளின் கல்வி கட்டணத்தை உயர்த்துவதன் மூலம் ஒடுக்கப்பட்ட சமூக குழந்தைகளின் உயர் கல்வி கனவை எட்டாக் கனியாக்கி விடலாம்.

அதோடு சுக்குராமும் மகாசனும் உழல் செய்தபோது அடக்கிவாசித்த இந்த கூட்டணி தற்போது ராஜாவும் , டி.ஆர்.பாலுவையும் பற்றிய செய்திகளை கொட்டை எழுத்துக்களில் செய்தி ஆக்குவது ஏன். ( அதற்காக ராஜா , டி.ஆர்.பாலு போன்றவர்கள் நல்லவர்கள் என்று சொல்லி விடவில்லை . ஆனால யூகத்தின் அடிப்படையில் உள்ள செய்திகளை வைத்து அவர்களை குற்றவாளி ஆக்கிவிடுவதேன் ? ). ஊழல் செய்வது என்பது பிரமணிய பனியா கூட்டணியினரின் ஏகபோக உரிமையா ? . சுதந்திர இந்தியாவின் முதல் ஊழலை ஆரம்பித்து வைத்த பெருமை மாமா நேருவின் அமைச்சரவையில் இருந்த கெய்ரோன் என்னும் ஊழல் பெருச்சாளியே ஆவார் . ஆனால் இப்போது ஒடுக்கப்பட்ட சமூகத்திலும் ஊழால் பெருச்சாளிகள் உருவாக ஆரம்பித்து எங்கே தனக்கு போட்டியாக இன்னொருவன் வந்துவிட்டான் என்றவுடன் இதுவரை ஊழலில் குளித்து திளைத்து மகிழ்ந்து வந்த பிராமணிய பனியா ஊழல் பெருச்சாளிகளுக்கு தாங்கெனா வேதனையாகிவிட்டது. அதினால் தான் தற்போது தேசப(க்)தர்கள் என்ற வேடத்தில் உலாவர ஆரம்பித்து விட்டனர் . அதன் எதிரொலி தான் மல்லையா போன்ற சாராய வியாபாரிகள் நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கபடுவது.

விளையாட்டு துறையை பொறுத்தவரையில் இந்தியா ஒலிம்பிக்கில் பதக்க பட்டியலில் பின்னணியில் இருப்பதற்கு காரணம். அங்கும் இவர்களது ஆதிக்கமே . 250 க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் ஒலிம்பிக்கில் பலதடவைகள் தங்க பதக்கம் வாங்கிய வளைமட்டை பந்தாட்டம் எந்தவித அரசு மற்றும் தனியார்களின் ஆதரவு கிடைக்காமல் நலிவுற்ற நிலையில் இருக்கும்போது , பத்து நாடுகள் மட்டுமே விளையாடும் கிரிக்கெட் உலககோப்பையை ஒரு முறையே வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு மட்டும் ஏன் இந்த அளவிற்கு மரியாதை . அதிலும் ஒரு சூட்சுமம் உள்ளது இந்தியாவில் கிரிக்கெட்டை தவிர ஏனைய விளையாட்டுகளில் பெரும்பான்மையாக ஒடுக்கப்பட்ட சமூகத்தினரே பங்கேற்பர் ஆனால் கிரிக்கெட்டில் மட்டும் பிராமணிய பனியாவினரின் ஆதிக்கம் அதிகம் . கிரிக்கெட் இந்த அளவுக்கு பிரபலமாவதற்கு காரணம் தூர்தர்சன் என்றே சொல்லலாம் . அன்று தூர்தர்சனை ( இன்றும் அவர்களது கட்டுபாட்டில் தான் ) தங்களது கட்டுபாட்டில் வைத்திருந்த பிராமணிய பனியா கூட்டணியினர் அந்த சாதியினரை சேர்ந்த வீரர்கள் இந்திய கிரிக்கெட் அணியில் பெரும்பான்மையாக இருந்த காரணத்தால் ( சில நேரங்களின் பதினொன்று பேரில் பத்து என்ற விகிதத்தில்) அது தூர்தர்சனில் இலவசமாக ஒளிபரப்பட்டது. முப்பதுகளில் சாமர் என்னும் ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த வீரரோடு சேர்ந்து விளையாட முடியாது என்று முரண்டு பிடித்த வீரர்கள் விளையாடிய விளையாட்டு தான் கிரிக்கெட் . ஐம்பதுகளில் உலக அளவில் இந்திய கால்பந்து அணி ஒரு கலக்கு கலக்கியது . அப்போது ஒலிம்பிக்கில் தற்போதைய கால்பந்து ஜாம்பவானான சபையின் ( Spain என வாசிக்கவும்). அணிக்கு தண்ணி காட்டிய அணி இந்திய கால்பந்து அணி . காலில் உறை அணிந்து விளையாடுவது அதன்பின்பு உலக கால்பந்து வாரியத்தால் கட்டாயமாக்கப்பட .. பிராமணிய பனியாக்களின் பிடியில் இருந்த அப்போதைய இந்திய அரசு ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை பெரும்பான்மையாக கொண்ட இந்திய கால்பந்து அணியை கண்டுக்காமல் விட ......இன்று கால்பந்து உலக கோப்பையில் இந்தியா விளையாடுவதே கனவாகி விட்டது . அன்று இந்திய அரசும் . தூர்தர்சனும் இந்திய கால்பந்து துறைக்கு உதவியிருந்தால் இன்று மெசி , ரொனால்டோ போன்றோருடன் குப்பன் சுப்பன் போன்றோரின் பெயர்களும் உலக அளவில் பிரபலமாகி இருக்கும் . அவர்கள் தான் இந்தியாவின் இன்றைய நட்சத்திர வீரர்களாக இருந்திருப்பார்கள். அவர்கள் இல்லாமல் பிராமணிய பணியாக்களின் பிடியில் உள்ள இந்திய தனியார் துறையும் , விளம்பர துறையும் வியாபாரம் செய்திருக்க முடியாது .
இன்றும் எல்லா துறையிலும் இந்தியா முறையான வளர்ச்சியை பெற விடாமல் ....புற்றுநோயை போன்ற முறையற்ற வளர்ச்சியை கட்டி காப்பாற்றி வருவதே இந்த பிராமணிய பணியாக்களின் கூட்டணிகள் தான் .பீமா ராவ் தான் சிறுவனாக இருந்த போது பள்ளியில் பலமுறை அவமானபடுத்தபட்ட போதும் அப்போது தனக்கு உதவி புரிந்த தனது ஆசிரியரின் பெயரான அம்பேத்கரின் பெயரை சூடிய காரணத்தால் அந்த பெயரையே ஒதுக்கி தள்ளியவன்கள் ஆயிற்றே . அவனுங்களை பொருத்தவரை தனக்கு போட்டியாக எவனும் எழும்பி விட கூடாது . எந்த போட்டியாக இருந்தாலும் அதில் தான் மட்டுமே பங்கேற்க வேண்டும். அது ஊழல் செய்வதிலாகட்டும் இல்லை ஆக்க பூர்வமான வளர்ச்சியிலாகட்டும் ... மற்றவர்கள் தப்பி தவறியும் போட்டியிட வேண்டும் என்ற மனப்பான்மையை கூட வளர்த்து கொள்ள கூடாது.

இன்னும் நிறைய எழுதணும் போல் தோன்றுகிறது . இன்னொரு முறை மறுபடியும் வந்து தொடர்வேன் . ஏனையவர்கள் தாங்கள் இதை பற்றிய தங்கள் கருத்துக்களை முன்வைக்கலாம்

1 comment:

anthony said...

ஒரு சிறு திருத்தம் உலகில் உள்ள மொத்த நாடுகளின் எண்ணிக்கையை 250 என்று தவறாக குறிப்பிட்டு விட்டேன் . அது 233 நாடுகள் தற்போதைய கணக்கின் படி

Post a Comment