Sunday, December 25, 2011

மன்னாரன் கும்பலை பின்னணியாக கொண்டு வெளிவரும் கிசு கிசுக்கள்



மன்னாரன் கும்பல் பச்சை கலரில் இருந்து காவி நிறத்திற்கு மாறி கொண்டு இருக்கும் ஆத்தாவின் கோட்டையில் இருந்து வெளியேற்றப்பட்டவுடன் பல செய்திகள் அவர்களுடைய கடந்த கால பின்னணிகளை பற்றியும் நடப்பு மற்றும் எதிர்கால நிலைமைகளையும் பற்றியதான செய்திகளும் உலா வர ஆரம்பித்து விட்டன. கிட்ட தட்ட தமிழக அதிகார வட்டத்தில் சி.மு , சி.பி .... அதாங்க சின்னம்மாவுக்கு முன்னாடி, சின்னம்மாவுக்கு பின்னாடி என்று சமீபகால தமிழக அதிகார ஏற்றதாழ்வுகளை ரெண்டாக பிரித்து போட்டு விட்டது.

அப்படி நமக்கு நெருங்கிய நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து கசியும் தகவல்களை நான் இங்கே பதிவு செய்ய போகிறேன்
மன்னாரன் கம்பெனி கும்பல் மீதான நடவடிக்கைக்கு மோடி மச்சான் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றிய கிசு கிசுக்களை பற்றி நமக்கு தெரிந்த வட்டாரங்களில் கேட்டபொழுது அவர்கள் சொன்ன விடயம் கொஞ்சம் புதுசாக இருந்தது . அவர்கள் கூறியது என்னன்னா பாரத பிரதமர் கனவில் இருக்கும் மோடி, மற்றுமொரு பிரதமர் போட்டியாளரான மாயாவதியுடன் நடனராசன் நெருங்கிய தொடர்பில் இருப்பதால் தனது தமிழகத்து பார்ப்பனிய தொடர்புகளை முடுக்கி நடனத்திற்கு கட்டம் கட்டும் வேலைகளை சொடுக்கி விட்டார் என்பது தானாம். அதே போன்று தேசிய அளவில் அரசியல் ரீதியாக பலம் வாய்ந்த நாயுடு சமூகத்தை சேர்ந்த விசயகாந்தை தமிழ்நாட்டில் வளர விட்டால் அது தங்கள் சாதியின் அரசியல் ஆட்டத்தை மட்டு படுத்தி விடும் என்ற கணக்கில் விசியகாந்திற்கு எதிராக மன்னாரன் கும்பல் நகர்த்திய நகர்வுகளை விசியகாந்த் தேசிய அளவில் உள்ள தனது சாதி பிரமுகர்களிடம் கூறி புலம்பி இருந்தாராம். பாரதிய சனதாவில் குறுப்பிடத்தக்க செல்வாக்கோடு இருக்கும் நாயுடு சாதி பிரமுகர்கள் மோடி மச்சான் மூலம் செயாவை முடுக்கி மன்னாரன் கும்பலுக்கு ஆப்பு வைத்தார்கள் என்ற செய்தியும் அவர்களிடமிருந்து கசிகிறது

மற்றொன்று என்னன்னா பெரிய ஆத்தாவை பற்றிய ரகசிய ஒலி ஒளிப்பதிவு தட்டை நடன ராசன் வெளியிடலாம் என்றதொரு தகவல் நம்பத்தகுந்த வட்டாரங்களில் கிசு கிசுக்கபடுகிறது ....... அது மிகப்பெரிய அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்த கூடிய ஒன்றும் என்றும் கூறி கொள்கிறார்கள். இதுவரை அந்த துருப்பு சீட்டை வைத்து தான் ஆத்தா ஆட்டி வைக்கப்பட்டார் என்றும் ஆனால் ஆத்தா இப்போ அதை பற்றி கவலைப்படாமல் இனி எது வெளியே வந்தால் என்ன ? எல்லாவற்றையும் உறுதியுடன் எதிர்கொள்வோம் என்ற முடிவுடன் எதிர் நடவடிக்கைகளில் இறங்கினார் என்றும் கிசு கிசுக்கப்படுகிறது
அதிகார வட்டங்களில் கசியும் மற்றுமொரு தகவலையும் கூறி கொள்கிறேன். அம்பிகளோட செல்லப்பிள்ளையாக மாறி கொண்டிருக்கும் பச்ச்சையான முத்து என்ற புதிய தலைமுறை பார்ப்பனிய கோவணம் சின்ன ஆத்தாவின் சாதிக்கு எதிராக , "கவுண்டு" பண்ணுகிற சாதியை சேர்ந்த புள்ளி ராசாக்களோடு ஏனைய ஆதிக்க சாதி புள்ளி ராசாக்களை ஒன்றிணைத்து மாற்று சாதி - ஆதிக்க கூட்டணியை தமிழகத்தில் கொண்டு வருவதில் வரிந்து கட்டி கொண்டு செயல்படுகிறதாம்

அவர் மூலம் பார்கவ குல உடையார் சாதி சங்க பிரமுகர்கள் மத்திய தமிழ்நாட்டில் மன்னார்குடி மாபியாக்களின் சாதிக்காரர்களை மட்டுபடுத்த திட்டம் தீட்டி கொண்டு இருக்கிறார்களாம் . அதிலும் அவர்கள் பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்ட ரூசோவின் ஆத்மா சாந்தியடைவதற்கான வேலைகளில் பல்வேறு வழிகளிலும் ஈடுபட்டு வருகிறார்களாம். அதெப்படிங்க ரூசோ கிருத்துவரல்லவா என்று யாரவது கேட்கலாம் சாதி வெறி பிடித்து விட்டால் மதங்கள் அதற்கு தடையாக இருக்காது

அம்பிகள் பழைய கோவணத்தை கழட்டி தூர எரிந்து விட்டு புதிய கோவணத்தை அணிந்து கொள்வார்களா என்பது தான் இப்போதைய பரபரப்பு

முக்குலம் ஒன்றாக இருப்பது தங்களுடைய வசதிக்கு ஏற்ற செயல் அல்ல என்று அம்பிங்க அரைமண்டையை சொரிய ஆரம்பித்து விட்டார்களாம். கூடிய விரைவில் உட்சாதி அரசியல் அரங்கேற்றப்படும் என்ற தொரு செய்தி கசிகிறது. அதன் தொடர்ச்சியாக மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் குரு பூசையை பசும்பொன்னில் நடைபெறும் குரு பூசைக்கு போட்டியாக நடத்த அம்பலத்தில் அகம்படிந்து இருக்கும் சாதிக்காரர்களோடு பேச்சு வார்த்தை நடக்கிறதாம்.


அடுத்து மற்றொரு முக்கிய உயர் அதிகாரியான சுந்தரமான ராமருக்கு வலை காத்து இருக்கிறதாம். ராமானாதபுரம் ராச பரம்பரை என்ற கெத்தோடு சின்னமாவிடம் வளைய வந்தவர். கடந்த ஆட்சியில் தலைமை செயலகம் கட்டியதில் பெரியவருக்கும் இளையவருக்கும் தெரியாமல் இவரு ஒரு பெரும் தொகையை ஆட்டைய போட்டவர் . ஆனால் சின்னம்மாவிடம் உள்ள நெருக்கத்தால் தூசி தட்ட பட்ட புதிய தலைமை செயலக கட்டடம் பற்றிய கோப்புகள் குப்பை தொட்டியில் வீசப்பட்டன . அவை மறுபடியும் தூசி தட்டபடலாமாம்


நம்மிடம் வந்து சேரும் எல்லா செய்திகளிலும் நூறு விழுக்காடு உண்மை என்று அறுதியிட்டு கூற முடியாது. அதன் நம்பகத்தன்மை பற்றி நமக்கு கேள்வி குறிகள் இருந்தாலும் நெருப்பில்லாமல் புகையாதே..... அது தான் நம்ம மண்டையையும் குடையுது

தமிழகத்து தலைவலி விசைக்கு எதிராக எழும் சாதி புழுதி

இப்ப முல்லை பெரியாறு ஆணை விவகாரத்தில் விசை ஏதோ சொல்ல போய் அது பெரிய அளவில் எழுப்படுகிறதன் பின்னையை பற்றி நமக்கு கசிந்த தகவலை பகிர்ந்து கொள்கிறேன் எனக்கும் விசையின் நடவடிக்கைகள் ஆரம்பம் காலந்தொட்டே பிடிக்காது என்றிருந்தாலும் . தற்போது விசைக்கு எதிரான குறி சாதி அடிப்படையில் எழுப்பபடுவது தான். என்னங்க இப்படி புதுசா குண்டை தூக்கி போடுறீங்க என்று கேட்கலாம். ஆனால் நமக்கு தெரிந்த வட்டாரங்களில் இருந்து கசியும் தகவல் சசிகலா மூலம் தமிழகத்தில் நாட்டாண்மை பண்ணி கொண்டிருந்த சாதிகாரங்க தமிழ் திரையுலகத்தை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்று திட்டமிட்டு வருவது தான் இதை போன்ற தாக்குதல்கள் அளவுக்கு அதிகமாக வீசப்படுவதன் காரணமாம்.
ஆரம்பத்தில் நடனராசன் தான் விசையோட அப்பாவை தொடர்பு கொண்டு விசையை அதிமுக அதிமுக அதரவு நிலை எடுக்க வைத்தாலும் அதற்கு பிறகு செயாவிடம் சசிகலாவை தாண்டி யாரும் நுழைவதை விரும்பினது கிடையாதாம். அதில் விசை தான் தாயோட வழியில் நாடார் சமூகத்திடம் இணக்கமாக இருப்பதும் நாடார் சமூகத்தினர் கொஞ்ச கொஞ்சமாக செயாவின் உள்வட்டத்திற்குள் நுழைந்ததும் மன்னாரன் கும்பலுக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். இப்ப வேற சசிகலா செயாவிடம் இருந்து தூக்கி எறியப்பட்டதும் மன்னாரன் கும்பலின் கோவத்தை இன்னும் அதிகப்படுத்தி இருக்கிறதாம். நம்ம தலைவிதி விசையும் வாயை வைத்து கொண்டு சும்மா இருக்க வேண்டியது தானே, எப்படா சமயம் கிடைக்கும் என்று காத்திருப்பவர்களின் வாய்களில் அவலை போடும் விதமாக ஒரு பேட்டியில் அசினை தனது தோழி என்றும் முல்லை பெரியாறு பிரச்சினை மத்திய மாநில அரசுகள் தீர்க்க வேண்டிய பிரச்சினை என்று திருவாய் மலர்ந்திருக்கிறார். அதை தான் தமிழ் தேசியம் முகமூடியில் சுற்றும் நடனராசனின் செட்டப்புகளான சாதி வெறியர்கள் தமிழ் தேசிய போர்வையில் கூப்பாடு போட ஆரம்பித்து விட்டார்கள்.

விசை மீது உண்மையிலேயே கோபப்படவேண்டியவர்கள் கடற்புரங்களில் வசிக்கும் விளிம்பு நிலை சமூகத்தை சேர்ந்தவர்கள் தான். பின்னே விசையின் தந்தையை கொடுத்தது அந்த தமிழகத்தின் கடற்கரை தானே. அப்படி இருந்தும் இலங்கை அரசால் கொடுமைக்குள்ளாக்கப்படும் தமிழக மீனவர்களை குறித்தோ இல்லை கூடங்குளம் ஒட்டிய பகுதிகளில் அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்த தந்தை வழியை சேர்ந்த மீனவ மக்களுக்காகவோ சிறு துரும்பை கூட கிள்ளி போடாதவர்.... அப்படி இருக்க கடற்புற சமூகத்தை சேர்ந்த மக்கள் தான் விசையை காய்ச்சி எடுக்க வேண்டும். ஆனால் அவர்கள் எல்லாம் இப்போது ரொம்ப தெளிவாகி விட்டார்கள். ஏற்கனவே ஒரு முறை சினிமா மாயையில் சிக்கி தங்களுடைய சொந்த அரசியல் மற்றும் சமூக ரீதியான முன்னேற்றத்திற்கு தங்களுக்கு தாங்களே கடந்த காலத்தில் வேட்டு வைத்து விட்டதை உணர்ந்து விட்டதால் தான் என்னவோ இப்போதெல்லாம் அவர்கள் நடிகர்களின் பின்னால் அணிவகுப்பதில்லை அவர்களுடைய போராட்டத்தில் அவர்கள் நடிகர்களையும் எதிர்பார்ப்பதில்லை. இன்னொரு கோணத்தில் பார்த்தால் தன் தந்தை வழி சமூகத்தோடு தன்னை அடையாளபடுத்தி கொள்ள வெட்கப்படுபவரை அந்த மக்கள் ஏன் தூக்கி சுமக்க வேண்டும்.
இன்றைக்கு அவர்கள் முன்னெடுத்த கூடங்குளம் போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தி வருவது அவர்களுடைய சமூகத்தை சேர்ந்தவரும் இல்லை. அந்த அளவிற்கு பக்குவபட்ட தமிழுணர்வு கொண்ட சமுதாயமாக அவர்கள் மாறி இருப்பதை காணும் போது பெருமையாக இருக்கிறது. தற்போது அதற்கும் வேட்டு வைக்கும் விதமாக கூடங்குள அணுமின் நிலையத்திற்கு எதிராக முன்னின்று போராடும் மீனவ மக்களிடையே மோதலை தூண்டி விடுவதில் ஆதிக்க வர்க்கம் கிட்டத்தட்ட வெற்றி பெற்று விட்டது போன்ற செயல்கள் நடப்பதை பார்க்கும் போது நெஞ்சு வெடித்து விடும் போல இருக்கிறது. தெற்கில் மீனவர்களிடையே உட்சாதி மோதலை தூண்டி விடுவதில் அதிகார வர்க்கம் மும்முரமாக செயல் படுகிறதாம்.

சரி இப்ப நம்ம விசை சம்பந்தப்பட்ட விடயத்திற்கு வருவோம். செயாவின் அதிகார வட்டத்திற்குள் பி எச் பாண்டியன், வைகுண்டராசன், போன்ற நாடார் இன பிரமுகர்களின் செல்வாக்கு அதிகரித்து வருவதும் நாடார் இன பிரமுகர்களோடு விசைக்கு நல்ல தொடர்பு இருப்பதும் மன்னார்குடி மாபியாவின் கண்களில் தப்பவில்லை. தற்போது தமிழக உளவுத்துறையில் தாமரைகண்ணனை ஓரங்கட்டி விட்டு கொண்டு வரப்பட்டு இருக்கும் பூசாரி கர்னாடக மாநிலத்தை சேர்ந்த ஈடிகா சமூகத்தை சேர்ந்தவர். சரி ஈடிகா சமூகத்திற்கும் நாடார்களுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால்..... அதை பற்றியும் சொல்லி விடுகிறேன் இந்த ஈடிகா சமூகத்தினர் தேசிய அளவில் நாடார் சமூகத்தினரோடு இணக்கமாக அரசியல் செய்பவர்கள். தமிழ் நாட்டில் உள்ள நாடார் சமூகத்தினர் அவர்களை கர்னாடக நாடார்கள் என்று அழைப்பது உண்டு. ஆக இப்போது விசை மீதான தாக்குதலின் பிண்ணனியில் இருப்பது சாதி சமாச்சாரம் என்பது தான் உண்மை. அதை தான் பாரதிராசா போன்ற திரையுலக சாதி பிரமுகர்களால் நடனராசன் தூண்டி விட்டு கொண்டு இருக்கிறார். இது இனி வரும் காலங்களில் நேரடியான சாதி மோதலாக வெடிக்க வாய்ப்பு இருக்கிறதாம். தற்போது சசிகலா சார்ந்த சமூக இளைஞர்கள் விசையின் ரசிகர் மன்றங்களில் இருந்து விலகுமாறு சாதிய அமைப்புகள் மூலம் வலியுறுத்தப்படுகிறார்களாம்.
காசை வாங்கி கொண்டு இடத்திற்கு ஏற்ற மாதிரி ஊளையிடும் திரைப்பட அவலங்களை சமூக போராட்டங்களில் முன்னிறுத்துவதும், அவர்கள் தான் எல்லாவற்றிக்கும் காரணம் என்று அளவுக்கு அதிகமாக கூவுவதும் ஏதோ திரைப்படத் துறையை சேர்ந்த கோவணங்கள் நினைத்தால் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிவிட முடியும் என்ற போதையோடு அலைவதும்.... அம்மண குண்டியாக திரிவதை விட கேவலமான விடயங்கள். முதலில் திரைப்படகாரனுங்களுக்கு கொடி பிடிப்பதை நிறுத்தினாலே போதும். அவனுங்களா தன்னிச்சையாக வந்து சமூக போராட்டங்களுக்கு குரல் கொடுப்பானுங்க. அப்படியே அவனுங்க குரல் கொடுக்காம போனாலும் யாரும் இங்கு செத்து விட போவதில்லை. உடம்பில் இருந்து உதிரும் மயிரை போல் எண்ணிக் கொள்ள வேண்டியது தான். உடம்பில் இருந்து கழியும் மயிருக்காக நாம் என்ன ஒப்பாரியா வைக்கிறோம்
ம்ம்ம்ம் எங்கே போய் முடிய போகிறதோ .... இந்த மாதிரியான அசிங்கங்கள்

Thursday, December 22, 2011

தொலைக்கப்பட்ட இதயம்

அவளிடத்தில் அவன்

தன்னை தேடித்தேடி

அலுத்து தெளிந்த

அன்று தான் தெரிந்தது

அடகு வைக்கப்பட்ட

மீட்கப்படா இதயங்களை – அவள்

குப்பைத்தொட்டியில் எறிபவளென்று

தற்போது அவன்

உடைந்து போன கனவுகளும்

சிதைந்து போன குறிக்கோள்களும்

மண்டிக்கிடக்கும் குப்பைத்தொட்டியில்

தூக்கியெறியப்பட்ட இதயத்தை தேடி

தளர்ந்த நடைகளோடு

ஒவ்வொரு அடியையும் பின்னோக்கி

Wednesday, November 30, 2011

2G – ராசாவின் கையில் மாட்டி தவிக்கும் கும்பல் பற்றிய கிசு கிசு

இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஊழலில் குற்றம் சாற்றப்பட்டு திகாரில் இருக்கும் ராசாவின் கையில் அப்படி என்ன இருக்கும் .கட்சி தலைமையே அவரை கைவிட்டு விட்டதே என்ற எண்ணம் பலருக்கும் இருக்கலாம். ஆனால் உண்மை என்னன்னா ராசா ரொம்ப ரிலாக்சாக இருக்கிறார் என்பதே. தல ராசா பார்ப்பதற்கு தான் பட்டிக்காட்டான் மாதிரி இருந்தாலும் ஆள் ரொம்ப விவகாரமான புத்திசாலியாம். தலைநகரில் உள்ளா பிரபலமான வழக்கறிஞர்களே ராசாவின் புத்தி கூர்மையை பற்றி மூக்கில் விரலை வைக்கிறார்களாம். நல்ல வேளை வக்கீல் தொழிலுக்கு வராமல் இருந்தார், இல்லையெனில் நம்மை எல்லாம் ஓரங்கட்டி இருப்பார் என்ற மாதிரியான குரல்கள் ஒலிக்கின்றனவாம். அப்படி ராசாவிடம் என்ன தான் இருக்கிறதாம். அதை பற்றி தான் விளக்க போகிறேன்.

பொதுவாக எல்லா அமைச்சர்களும் தான் பதவி ஏற்கும் துறையில் எப்படி கொள்ளையடிக்கலாம், அதற்கான வழி வகைகள் என்ன இருக்கின்றன என்பதை தான் தேடுவார்கள் .ஆனால் தல ராசா கொஞ்சம் வித்தியாசமானவராம். அவரு தேடியது என்னன்னா கடந்த காலங்களில் ஆட்டைய போட்ட அமைச்சர்கள் விட்டு சென்ற தடயங்களை தானாம். அண்ணன் அவை எல்லாவற்றையும் துளி கூட மிச்சம் வைக்காமால் உறிஞ்சு எடுத்து விட்டாராம். அவை தான் அண்ணனின் தற்போதைய துருப்பு சீட்டுகள். ஆரம்பத்தில் தன்னிடம் அப்படியான எதுவும் இல்லாமல் காட்டி கொண்ட ராசா இப்போது தான் ஒவ்வொரு ஆயுதமாக வெளியில் எடுத்து வீசுகிறாராம். அது தான் பெரும் தலைகளை மண்டையில் கையை வைத்து கொண்டு உட்கார வைத்து விட்டதாம்.

எப்ப யாரை நோக்கி ஆயுதங்களை வீச வேண்டும் என்பதிலும் தல ரொம்ப நேர்த்தியாக செயல்படுகிறாராம். அவரு முதலில் குறி வைத்து இருப்பது சி.பி.ஐ கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் உள்துறையை நோக்கி தான். அடுத்து அண்ணன் வீசியது கேடி சகோதர்களை நோக்கி, அந்த வழக்கில் தங்களது ஊடங்கள் மெல்லாம் ஓவராக பேசி கொண்டிருந்த கேடி சகோதர்களை தனது தொடர்புகள் மூலம் தன்னிடம் உள்ள அவர்களை பற்றிய விடயங்களை வெளியிடுவேன் என்று எச்சரிக்கையே விட்டார் என்றால் பார்த்து கொள்ளுங்கள். ஆரம்பத்தில் அதை பற்றி ரொம்ப அலட்டி கொள்ளாமல் இருந்த கேடி சகோதர்கள் கொஞ்ச நாளில் ராசா யார் என்பதை புரிந்து கொண்டார்கள். சகோதர்கள் ரெண்டும் பேரும் குடும்பத்தொடு மூட்டை முடிச்சுகளை தூக்கி கொண்டு பின்லாந்திற்கு ஓட அதுவும் காரணமாம். முரசொலி மாறன் மீது உள்ள மரியாதையால் சகோதர்கள் ரொம்ப பிரச்சினைகளை எதிர்கொள்ளாதவாறு இருக்க சில விடயங்களில் அவர்களை முன்னமே தனது தொடர்ப்புகள் மூலம் எச்சரித்தாராம்.

ஆரம்பத்தில் இருந்தே பிணை மறுக்கப்பட்ட கனி மொழி, மற்றும் அவ்வழக்கில் சம்பந்தப்பட்ட பலருக்கும் திடீரென பிணை வழங்கப்பட்டதன் பிண்ணனியில் தல ராசாவின் வில்லத்தனமான காய் நகர்த்தல்கள் தான் காரணமாம். உள்துறையையும் அதை கட்டு படுத்துகிற தலைமையையும் பற்றி தன்னிடம் சிக்கியுள்ள மேலும் சில தகவல்களை தனது தொடர்புகள் மூலம் வெளியிடுவேன் என்று அடுத்த கட்ட ஆயுதத்தை அவர்களை நோக்கி வீசியது தான் காரணமாம். தில்லி மேலிடங்கள் ராசாவின் இந்த அதிரடி ஆட்டங்களை பார்த்து உறைந்து போய் கிடக்கிறார்களாம். அதை வெளிக்காட்டி கொள்ளாமல் இருக்க தான் கர்னாடக எட்டியப்பருக்கும் பிணை வழங்கப்பட்டதாம். மதவெறியர்களின் கட்சியை அமைதிபடுத்தினது மாதிரியும் இருக்கும் அல்லவா. இதில மற்றொரு கொடுமை என்னன்னா ராசாவை வேவு பார்க்க பைலட்டோட புள்ளையாண்டானை ராசாவிற்கு துணையாக அந்த துறைக்கு அனுப்பி வைத்தும் இப்படி கோட்டை விட்டு விட்டோமே என்ற கடுப்பும் கூடவே.

இவங்க இப்படின்னா தங்களை உத்தமர்கள் என்று காட்டி கொள்ளும் மதவெறியர்களின் கூடாரமும் இப்ப ராசாவின் காய் நகர்த்தல்களை உன்னிப்பாக கவனித்து வருகிறார்களாம் . அந்த வழக்கில் ராசாவை பற்றி அவர்கள் அடக்கி வாசிப்பதன் காரணம் ராசாவிடம் மாட்டியுள்ள அவர்களின் கடந்த கால வண்டவாளங்கள் தான். அதிலும் செத்து போன மகராசன், மற்றும் அருண் சொறி விளையாண்ட விளையாட்டுகள் பற்றிய தகவல்கள் எல்லாம் ராசாவிடம் மலை போல் குவிந்து கிடக்கிறதாம். ஆனால் ராசாவோட புத்திசாலி தனம் என்னான்னா ஒரே நேரத்தில் எல்லாவற்றையும் வீசாம நேரம் வரும் பொது ஒவ்வொன்னா வீசவது என்பது தானாம். நாளைக்கு அந்த மதவெறி கட்சி ஆட்சிக்கு வந்தால் அதை வைத்து அவர்களிடம் பேரம் பேசலாம் என்பது தான் அவரது அமைதிக்கு காரணமாம்.


From 26 November 2011

சரி இவ்வளவு விடயங்களை கையில் வைத்துள்ள அவர் பேசாம பிணைக்கு விண்ணப்பித்து வெளியில் வரவேண்டியது தானே என்று பலரும் கேட்கலாம். அங்கதான் அதிர்ச்சியான விடயம் இருக்கிறது. வெளியில் வந்தால் தன்னை போட்டு தள்ள அதிகார வர்க்கம் தயராக இருக்கிறது என்பதை ராசா தனது தொடர்புகள் மூலம் அறிந்து வைத்திருப்பது தான். சி.பி.ஐ. யின் செல்ல குழந்தையாக இருக்கும், மற்றொரு தாதாவின் கும்பலுக்கு பயந்து பாங்காங்கில் இருப்பிடத்தை மாற்றி கொண்ட தேசபக்தி மும்பை தாதாவின் மூலம் ராசாவின் தலைக்கு குறி வைக்கபடுகிறதாம். அதனால் ராசா வழக்கின் சூடு தணியும் வரை திகாரில் இருப்பதே நலம் என்று நினைக்கிறாராம். இந்த வழக்கின் மூலம் எதிரிகளை சம்பாதித்தாலும் அண்ணன் நிறைய நண்பர்களை சம்பாத்தித்து விட்டாராம். அதாவது ராசா நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன் என்ற மாதிரியான பேச்சு தான் தலைநகரின் அரசியல் மட்டும் கார்பரேட் வட்டாரங்களில் எதிரொலிக்கிறதாம்.

சிறைச்சாலையில் இருப்பது இவ்வளவு பாதுகாப்பா என்று நினைப்பவர்களுக்கு ஒரு விடயம் ஆத்தா தனது வழக்கின் முடிவை அறிந்த பிறகு சிறை நிரப்பும் ஆட்டத்தை ஆரம்பிக்க தயாராக இருக்கிறாராம். அப்ப எல்லாரும் பாதுகாப்பாக இருக்கலாம் தானே ....