Wednesday, January 18, 2012

வெடித்தெழும் வித்தை


வெளிச்சத்தை தேடி நகரும்
பசுமை கனவுகளுக்கு
பாறைகளுக்கு அடியில்
தீனீ போடுவது யாரோ
தடைகளை உடைத்தெறிந்து விட்டு
முகத்தை வெளிக்காட்டுகின்றனவே



உள்ளிருந்து வெடித்து
வானத்தை நோக்கி பறப்பதற்காக
காத்திருக்கும் கனவுகளை
தடைகளை பார்த்து பயந்து
கலைத்து விடும் மனிதர்களே
பாறைகளின் அடியில் பதுங்கி
தனது நாளுக்காக காத்திருந்து
இறுக்கங்களை உடைத்து
வெளிவரும் வித்தைகளை
விதைகளிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்


புகைப்படம் : பேரழகன் பாலா அவர்களின் கை வண்ணம்

அவர் எடுத்த புகைப்படத்தை என்னுடைய வலை பூவில் பயன்படுத்த

வெகுமதி வேண்டா அனுமதி தந்த அவருக்கு எமது நன்றிகள் உரித்தாகுக

No comments:

Post a Comment