Tuesday, January 3, 2012

மாட்டுக்கறியும் கொலை வெறியும்

சமீபத்தில் செய்தித்தாள் ஒன்றில் ப.சா.க என்ற பார்ப்பனிய மதம் பிடித்த கட்சி ஆளும் இந்தியாவின் மத்திய மாநிலங்களில் ஒன்றான மத்திய பிரதேசத்தில் பசுமாட்டை கொல்வது, அதற்கு தொடர்பான வணிகங்களில் ஈடுபடுவோர் மீதும் ஏழு ஆண்டு வரை சிறை தண்டனை வழங்கலாம் என்று சட்டம் இயற்றப்பட்டு இருக்கிறது. அதை படித்த பொழுது 80 விழுக்காடு மக்கள் இறைச்சியை தங்கள் உணவில் ஒன்றாக கருதும் இந்தியாவில் பசுமாட்டின் மீது மட்டும் ஏன் இந்த தனி பாசம், ஏனைய மிருகங்களை கொல்வோர் மீதும் ஏன் இந்த சட்டம் பாய கூடாது. இந்தியாவின் காடுகளில் மறைந்து விடும் நிலையில் இருக்கும் மான், புலி போன்ற மிருகங்களை வேட்டையாடுவதும் அது சம்பந்தப்பட்ட பொருட்களை விற்பது சட்டப்படியான குற்றம் என்று தெரிந்த பின்பும் இந்தியாவில் பெருகி வரும் போலிச்சாமியார்கள் அமர தேவைப்படும் மான் மற்றும் புலியின் தோல்களுக்காக அவற்றை வேட்டையாடுபவர்கள் சுதந்திரமாக உலவ மாட்டின் இறைச்சியையும் , தோலையும் தாங்கள் உணவு பொருளாதார தேவைகளுக்காக பயன்படுத்தும் மக்களின் மீது மட்டும் புதுசு புதுசாக சட்டம் பாய வேண்டும்.


பார்ப்பனிய சக்திகளுக்கு மாட்டின் மீது மட்டும் ஏன் தனி அன்பு பொத்து கொண்டு வருகிறது. அதிலும் எவ்வளவோ வகையான மாடுகள் இருக்க பசு மாடு மட்டும் எப்படி அவர்களுக்கு புனிதமானது ? அவர்கள் மாட்டை தாங்கள் வீடுகளில் கட்டி வளர்க்கிறார்களா இல்லை கிராமப்புறங்களில் மாடு கட்டப்பட்டுள்ள தொழுவங்களுக்கு சென்று அவற்றை சுத்த்ப்படுத்துகிறார்களா ? வேதத்தில் மாட்டிறைச்சியையும், குதிரை இறைச்சியையும் போட்டி போட்டு கொண்டு தின்றதாக குறுப்பிடப்பட்டு இருக்கும் கூட்டம் என்றைக்கு சைவ பிரியர்களானார்கள் ? இதி எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டு மென்றால் புத்த சமண மத கோட்பாடுகளையும் அவை தோன்றியதற்கான காரணங்களையும் , அக்காலத்தில் இந்த துணை கண்டத்தில் வாழ்ந்த மண்ணின் மைந்தர்களின் பண்பாட்டு கூறுகளையும் அறிந்து கொள்வது தேவையான ஒன்றாக இருக்கிறது.

சிந்து சமவெளி சமூகம் தங்களுக்கிடையே எந்த வித போர் வெறியும் கொள்ளாமல் ஆற்றின் ஓரங்களில் மண்ணை பண்படுத்தி விவசாயம் செய்து கொண்டும் கடலில் ஆறு கலக்கும் ஆற்றின் முகத்துவாரங்களில் மீன் பிடித்து கொண்டும், தேவைப்பட்ட நேரங்களில் வேட்டையாடியும் தங்களுக்கென நகரை நிறுவி அதை காட்டு மிருகங்களிடம் காக்க சுற்றி கோட்டை கட்டியும் வாழ்ந்த நாகரீகத்தில் முன்னேறிய சமூகமாயிருந்தது. வாழ்க்கை செழுமையாக இருந்ததால் என்னவு அவர்கள் போர்க்கலைகளில் அவ்வளவு ஆர்வம காட்டி இருக்கவில்லை. ஆனால் நாடோடிகளாக திரிந்த ஆரிய கூட்டத்திற்கு கொளையடித்து தான் அடுத்த நாளை நீட்டிக்க வேண்டிய அவசியம் இருந்தது. ஆக இயற்கையிலேயே நர மாமிசம் உண்பவர்களாகவும் மூர்க்கர்களாகவும் இருந்தார்கள். அப்படி பட்ட ஒரு வெறி பிடித்த கூட்டத்தின் கண்களிடம் ஒரு செழுமையான நாகரிகம் மாட்டி கொண்டால் அதன் நிலை என்னவாகும் என்பதற்கு ரொம்ப சிந்திக்க வேண்டாம்.


காலப்போக்கில் வந்தேறி கூட்டத்திடம் வீழ்ந்த மண்ணின் மக்களில் ஒரு கூட்டம் வந்தேறி கூட்டத்திடம் அடிமைகளாகி போனார்கள், மற்றோரு கூட்டம் மறுபடியும் தெற்கு பகுதி நோக்கி நகர்ந்தது. பிறிதோர் கூட்டம் காடுகளில் புகுந்து வனகுடிகளாக மாறி போயினர். காலபோக்கில் வந்தேறிகளிடம் அடிமையாய் இருந்த கூட்டத்திற்கும் வந்தேறி கூட்டத்திற்கும் இனக்கலப்பு அதிகமாக ஏற்பட அதை தடுக்க ஏற்பட்டது தான் சாதிய கட்டமைப்பும், அதை மீறுபவர்களுக்கான தண்டனை பற்றிய மனுவின் அரக்கத்தனமான கையேடும்.


உழைக்கும் மக்களை சுரண்டி கொழுத்த வந்தேறி கூட்டத்தின் ஆட்டம் அதிகமான போது புத்தர் மகாவீரர் போன்ற பகுத்தறிவாளர்கள் தோன்றினார்கள். இவ்விருவரையும் கடவுளாக்கி அவர்களின் கொள்கை மழுங்கடிக்கப்பட்டது என்பது வேறு விடயம். ஆக வந்தேறி கூட்டத்தால் உழைக்கும் குடிகளான மண்ணின் மைந்தர்களின் மீது ஏவி விடப்பட்ட அடக்குமுறை தான் புத்த, சமண கோட்பாடுகளின் உருவாக்கத்தின் அடிப்படை.

அன்றைய கால கட்டத்தில் வந்தேரிகளான பார்ப்பனர்கள் தாங்கள் யாகங்களில் பலியிடுவதற்காக ஆடுகளையும் மாடுகளையும் உழைக்கும் மக்களிடம் இருந்து அரசர்கள் மீத தாங்கள் கொண்டிருந்த ஆதிக்கத்தை பயன்படுத்தி பறிக்க ஆரம்பித்தனர். அந்த யாகங்களில் கொல்லப்படும் ஆடுகளையும் மாடுகளையும் பார்ப்பனர்கள் உண்டு மகிழ்ந்து கொண்டு இருக்க உழைக்கும் மக்கள் தங்களின் வாழ்வாதாரமான ஆடுகளையும் மாடுகளையும் இழந்து பொருளாதாரத்தில் அடிமட்ட நிலைக்கு சென்று கொண்டு இருந்தனர்.

இது போன்ற கொடுமைகளை கண்டு கொதித்தவராய் உலகின் முதல் பகுத்தறிவாளர் புத்தர் தன்னுடைய பகுத்தறிவு போரை பார்ப்பனிய விபச்சாரத்திற்கு எதிராக துவக்கினார். அவர் தான் உண்மையில் உயிர் வதை கூடாது என்று போதித்தவர். ஆனால் அவர் எப்போதும் இறைச்சி உன்ன கூடாது என்று சொல்லவில்லை. அவரது கொள்கையின் படி உயிருள்ள மிருகத்தை கொன்று தின்ன கூடாது, ஆனால் இயற்கையாக இறந்த மிருகத்தையோ இல்லை வேறு ஒரு மிருகத்தால் கொல்லப்பட்ட மிருகத்தின் இறைச்சியையோ சாப்பிடலாம். அந்த காலத்தில் பார்ப்பனியர்கள் கஞ்சா அடித்து கொண்டும், சோம பானம் என்னும் மது அருந்தி கொண்டும் பசு மாட்டை கொன்றுதின்று கொண்டும் திரிந்தவர்கள்..


புத்தரும் கூட பல இடங்களில் பார்ப்பனர்கள் நடத்தும் யாகங்களில் மிருகங்கள் கொல்லப்படுவதை வன்மையாக கண்டித்தும் பரப்புரை செய்ய ஆரம்பித்தார். பார்ப்பனர்கள் தாங்கள் வளர்த்த யாகங்களில் குதிரைகளையும், மட்டையும், ஆட்டையும் கொன்று குவித்து கொண்டிருந்தபோது மாட்டையும், ஆட்டையும், நிலத்தையும் நம்பி வாழ்க்கையை நடத்தி கொண்டிருந்த குடிமக்களுக்கு புத்தரின் கொள்கைகள் பிடித்து போய் அது அவர்களின் மண்களில் ஆழ வேரூன்ற ஆரம்பித்தது. மக்களின் மனங்களில் ஏற்பட்ட புரட்சி ஆண்டவர்களையும் மாற்றத்தை நோக்கி நடைபோட வைத்தது. அதுவரை அரசர்களை ஒட்டியும், நக்கியும் பிழைத்து கொண்டிருந்த பார்ப்பனர்களின் பொழைப்பில் மண் விழ ஆரம்பித்தது. இப்படியாக புத்த சமண கொள்கைகள் மக்களிடம் வேகமாக பரவ ஆரம்பித்த காலத்தில் புத்த, சமண கொள்கைகளோடு நேரடியாக மோத முடியாத பார்ப்பனியர்கள் புத்த மாதத்திற்குள் ஊடுருவதும்
, புத்த மதத்தின் கொள்கைகளில் திரிபுகளை ஏற்படுத்தவும் ஆரம்பித்தனர் .... கால போக்கில் புத்த மதத்தை எதிர்க்க அவர்கள் புத்த மத கொள்கைகளில் ஒன்றான உயிர் வதை தடுப்பை ஏற்று கொண்டு மற்றொரு வழியில் புத்த மத்த கொள்கைகளை எதிர்க்க ஆரம்பித்தனர். அதில் ஓன்று இறந்த மட்டை சாப்பிடும் புத்த கோட்பாட்டாளர்களை ஒடுக்க ஆரம்பித்தனர்.

புத்த மதத்தில் இறந்த மிருகங்களின் இறைச்சியை சாப்பிட்டவர்கள் புத்த மதத்தின் உயர்ந்த பீடங்களில் குருக்களாக இருந்தவர்கள் தான். புத்த மதத்தவர்கள் உணவிற்காக மிருகங்களை கொல்லாதவர்களாக இருந்த போதிலும் புத்த சமண கோட்பாடுகளை பரப்பும் வேலையில் ஈடுபட்ட அறிஞர் பெருமக்கள் இறந்த மிருகங்களின் உடலை சாப்பிடுவதற்கு தயங்கியதில்லை. புத்தர் கூட இறந்த பன்றியின் உடலை சாப்பிட்டார் என்று புத்த கோட்பாடுகளை தாங்கிய மகாபரிநிபான சுட்டா மற்றும் அங்குட்டாரா நிகாயா போன்ற புத்தகங்களில் பதியப்பெற்றுள்ளது. அதே போல் சமண கோட்பாட்டை தோற்றுவித்த மகாவீரரும் அவருடைய கோட்பாட்டை பினபற்றும் பெண்ணொருத்தியின் கையால் சமைக்கப்பெற்ற கோழி கறியை சாப்பிட்டார் என்றும் சமண கோட்பாடுகளை தாங்கி நிற்கும் புத்தகங்களில் குறுப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவர் அந்த பெண்ணிடம் சமைக்கப்பட்ட கோழியின் இறைச்சி ஏற்கனவே மற்றொரு மிருகத்தால் கொல்லப்பட்டது என்று உறுதி செய்து கொண்ட பின் தான் சாப்பிட்டார் என்றும் எழுதப்பட்டு இருக்கிறது.

இதே போன்று வைசாலியில் வாழ்ந்த செல்வந்தரான படைத்தளபதி ஒருவர் புத்தருடைய கோட்பாடுகளால் புத்த மதத்தை தழுவிய பின்பு அவர் புத்த பிக்குகளுக்கு தனது வீட்டில் உணவளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார் .அப்படி வழங்கப்படும் உணவோடு இறைச்சியும் பரிமாறப்பட்டது. ஆனால் அவர் செய்த காரியம் என்னவென்றால் அந்த இறைச்சி ஏற்கனவே இறந்த மாடுகளின் உடலில் இருந்து எடுக்கப்பட்டது என்று அப்புத்த குருக்களை நம்பவைத்த பிறகே அவர்களை அவ்வுணவை உண்ண வைக்க முடிந்தது. அந்த அளவிற்கு புத்த சமண குருக்கள் தங்களுடைய உணவிற்காக ஒரு உயிர் கொல்ல படக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். அதே போன்று குடிமக்களும் தங்களது வீடுகளில் இறந்து போன மிருகங்களை கொண்டு வந்து அவற்றை தங்களது பௌத்த குருக்களின் உணவு பயன்பாட்டிற்காக ஒப்படைப்பது உண்டு. இது போன்ற குறிப்புகளில் இருந்து புத்த சமண கோட்பாடுகளை பின்பற்றியவர்கள் இறைச்சியை உண்பதற்கு எதிரானவர்கள் இல்லை என்பதும் அதே நேரம் அவர்கள் பார்ப்பனியர்களை போல் உயிர்வதைகளில் ஈடுபடவில்லை என்பதும் தெளிவாக புலப்படும்.

பார்ப்பனியர்கள் புத்த மதத்தின் தூண்களாக விளங்கிய அறிஞர் பெருமக்களுக்கும் புத்த கோட்பாட்டை பின்பற்றிய குடிமக்களுக்கும் ஒரு இடைவெளியை ஏற்படுத்த எண்ணினர். அது தான் இறந்த மிருகங்களின் இறைச்சியை சாப்பிடுபவர்களை ஏனைய புத்த கோட்பாட்டை பின்பற்றும் குடிகளால் தீண்டப்படாதவர்களாக மாற்ற அரங்கேற்றப்பட்ட ஆரம்பம்... குடிமக்களுக்கு புத்த கோட்பாடுகளை போதித்து கொண்டிருந்த புத்த கோட்பாட்டின் விலைமதிக்க முடியாத மாணிக்கங்களாக திகழ்ந்த அறிஞர் பெருமக்களை அவர்களுடைய உணவு பழக்கவழக்கத்தை கொண்டே குடிமக்களிடம் இருந்து பிரித்தாழும் சூழ்ச்சி தான் அது. அறிவு எங்கிருந்து சமுதாயத்தை வந்தடைகிறதோ அந்த வழியை அடைத்தால் ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தின் கட்டமைப்பை சீர்குலைத்து விடலாம் அல்லவா, அதை தான் பார்ப்பனியம் புத்த கோட்பாடுகளுக்கு எதிராகவும் அதை பின்பற்றும் மக்களுக்கு எதிராகவும் செய்து கொண்டிருந்தது. அதை மட்டுமே பார்ப்பனர்கள் செய்து விடவில்லை புத்த மதத்திற்குள் ஊடுருவி இருந்த மற்றொரு கும்பல் புத்த கோட்பாடுகளை சிதைத்து அவற்றை பார்ப்பனியத்திற்குள் உள்ளடக்கம் செய்ய திட்டங்களை தீட்டி கொண்டிருந்தது. அத்திட்டங்களை செயல் படுத்த அவர்கள் எடுத்த புது பிறவி தான் தங்களை இறைச்சி உண்ணாதவர்களாக மாற்றி அமைத்து கொண்டதும், புத்தரை திருமாலின் மறுபிறவியாக கதை கட்டியதும். இப்போது அவர்களால் இறந்த உயிரினங்களின் இறைச்சியை உண்டு கொண்டிருந்த புத்த அறிஞர் பெருமக்களின் மீது தொடுக்கப்பட்ட அடக்குமுறைகளை எளிதாக முன்னெடுக்க முடிந்தது. அதுவே பார்ப்பனியமாக்கப்பட்ட குப்த மற்றும் இந்திய துணைக்கண்டத்தில் உள்ள ஏனைய அரசர்கள் காலத்தில் உச்சத்தை தொட்டது

பௌத்த அறிஞர் பெருமக்கள் வாழ்ந்த சேரிகள் (இந்த பெயருக்கு மக்கள் சேர்ந்து வாழும் இடம் என்று பொருள். அதே போல் இந்த இடங்கள் தான் ஆரம்பத்தில் மக்கள் வசிக்கும் இடங்களின் மையப்பகுதிகளாக இருந்தன) ஏனைய குடிமக்களால் வெறுத்து ஒதுக்கப்படும் இடங்களாக மாற்றப்பட்டன. கால போக்கில் புத்த கோட்பாடுகளை தீவிரமாக பின்பற்றி கொண்டிருந்த அந்த அறிஞர் பெருமக்கள் கல்வி கற்பது தடை செய்யப்பட்டதோடு அவர்களுடைய உரிமைகளும் பிடுங்கப்பட்டன. குடிமக்களிடம் காணப்பட்ட அந்த அறிஞர் பெருமக்களின் மீதான மரியாதை புனைவு செய்யப்பட்ட கதைகளால் சிதைக்கப்பட்டன. இப்போது எந்த குடிமக்கள் முந்தைய காலங்களில் தங்களது வீடுகளில் இறந்த விலங்குகளை தூக்கி கொண்டு வந்து புத்த அறிஞர் பெருமக்கள் வாழ்ந்த இடங்களுக்கு சென்று அவர்களுடைய உணவிற்காக காணிக்கையாக படைத்தனரோ, அதே குடி மக்கள் பார்ப்பனியத்தால் உள்வாங்கப்பட்ட பின்பு, யார் தங்களுக்கு கடந்த காலங்களில் ஆசான்களாக இருந்தனரோ அவர்களை கொண்டு தங்களது வீடுகளில் இறந்த மிருகங்களை அப்புறப்படுத்த பார்ப்பனர்களால் ஏவப்பட்டனர். இப்படி தான் புத்த மதம் இந்தியாவில் சிதைக்கப்பட்ட கையோடு உயிர் வதையை வெறுத்த புத்த மத துறவிகள் நிறைந்த சமூகம் ஒடுக்கப்பட்டு சமூகத்தின் கடை நிலைக்கு இழுத்து செல்லப்பட்டது.

அதற்கு முன்பு வரை பார்ப்பனர்கள் நடத்திய யாகங்களில் உயிரோடு துடிக்க துடிக்க கொலை செய்யப்பட்ட பசு “கோமாதா” ஆனது

இன்றைக்கு கிராமங்களில் “த்தூத்தேறி” என்ற ஒரு வழக்கு பயன்பாட்டில் உண்டு. அது தமக்கு பிடிக்காத யாரையாவது ஏச வேண்டும் என்றால் அம்மக்களால் பயன்படுத்தப்படுகிற வழக்கு. அது கிட்ட தட்ட “எங்கேயோ இருந்து வந்து எங்க உயிரை வாங்குறியே”, "கேடு கெட்டவனே", என்பது போன்ற பொருளை தரக்குடியது. அந்த சொல் கூட வந்தேறிகளான பார்ப்பனர்களிடம் அடிமைப்பட்டு போன மக்களுக்கு அவர்கள் மீது எழுந்த வெறுப்பின் வெளிப்பாடாக கூட இருக்கலாம். அதைப்பற்றிய ஆய்வுகள் தொடர்ந்தால் நிறைய விடயங்கள் கிடைக்கலாம்.


இதோடு தொடர்புடைய மற்றொரு பதிவு
Link

௧. பனைமரத்தின் வேர்களுக்கடியில் புதைந்து கிடக்கும் தமிழர்களின் மறைக்கப்பட்ட சரித்திரம்




8 comments:

Unknown said...

மிக நல்ல வரலாற்றுப் பதிவு

Anonymous said...

மாறுபட்ட சிந்தனைத் துளிகள்......
நீர் சொன்னது தவறென்று சொல்ல முடியாவிடினும், முற்றிலுமாக ஏற்றுக்கொள்ள இயலவில்லை...

கண்ணோட்டம் மாறுவது இயற்கையே....!!!! :-)

Robin said...

Good Post!

anthony said...

கருத்துக்களை பகிர்ந்து கொண்ட எல்லா தோழர்களுக்கும் நன்றி .

என்னுடைய இந்த கட்டுரை புரட்சியாளர் அம்பேத்கர் எழுதிய ஒரு வரலாற்று ஆய்வு புத்தகத்தையும் அதையொட்டி பீகாரை சேர்ந்த மைதிலி பிராமணரான "சா" (Jha) என்னும் வரலாற்று ஆய்வாளர் எழுதிய ஆராய்ச்சி கட்டுரையையும் மூலமாக கொண்டு எழுதப்பட்டது.

ஆக யாரவது பாராட்டினால் அவை எல்லாம் அவர்களையே சேரும் . எல்லா திட்டுக்களும் என்னை சேரட்டும் . ஒரு வேளை இந்த கட்டுரையில் எங்கையாவது அவர்களது கருத்துக்களில் இருந்து வழுவி நான் வேறு மூலங்களின் மூலம் தெரிந்து கொண்ட கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்காக இருக்கலாம் அல்லவா ......

alagan07 said...

“த்தூத்தேறி”
“எங்கேயோ இருந்து வந்து எங்க உயிரை வாங்குறியே”, "கேடு கெட்டவனே",

வெறுப்பின் வெளிப்பாடு
Good
Anbu
Chennai

dinesh said...

good one....and true one.....!

Human Rights Blogger said...

It is an excellent article, those who studied the history and Buddhist history well will know how all this barbarism of divisive Indian society was created.

Can you post the exact reference material here please, such a Book or an Original review or historical analysis article, I would like get an handle on the original reference material.

Thanks,
Saint

Unknown said...

நான் யார் சொல்வதையும் விளக்கவில்லை... என்னில் எழும் ஒரு கேள்வி...
எந்த ஒரு பாலூட்டியும் இன்னொரு பாலூட்டியின் குட்டிக்கு பால் கொடுக்காது.,
உதாரணம்., ஒரு மனிதப் பெண் இன்னொரு மனிதப் பெண்ணின் குழந்தைக்குப் பால் கொடுக்க முகம் சுழிப்பாள்.,

பசுவே உங்கள் இல்லம் வந்து, இந்தா குடி என்று பால் கொடுப்பதில்லை.... பால் நிறைய சுரக்கிறது என்று பசுவிடம் இருந்து மனிதன் பாலைத் திருடுகிறான். ஏன் பன்றியிடம் இருந்து பால் திருடவில்லை என்றால், பசுவின் பால் உடலுக்கு சத்து, மற்றும் எந்த பக்க விளைவுகளும் இல்லாதது...

பசுவிற்கு செயற்கையாக சினையேற்றுகிறான், தீவனமிட்டு ஒன்றுக்கு பல மடங்காக பால் கறக்கிறான், கொள்ளை லாபம் பார்கிறான், மடி வற்றிய பின் கறிக்காக விற்று விடுகிறான்...

பசுவின் கன்றுக்காக சுரந்த பாலைத் திருடி விட்டு, நன்றி உணர்ச்சியே இல்லாமல் பசுவைக் கொல்வது நியாமா?

Post a Comment