Wednesday, January 4, 2012

மலையாளிகள் தமிழர்களுக்கு எதிரானவர்களா ?

கொஞ்ச நாட்களாக தமிழ் தேசியம் பேசுபவர்களிடையேயும், கட்சி எல்லைகளுக்கு அப்பாற்பட்டு செயல்படும் ஈழ ஆதரவாளர்களிடையேயும் அது ஈழப்பிரச்சினையானாலும் சரி தற்போது வெடித்து இருக்கும் முல்லை பெரியார் பிரச்சினையாக இருந்தாலும் சரி எல்லா விதமான தமிழர் விரோத செயல்பாடுகளுக்கு மலையாளிகள் தான் காரணம் என்று ஒட்டு மொத்த மலையாளிகளையும் கட்டம் கட்டும் ஒருவித வினோதமான மனப்பான்மை நிலவுகிறது. இத்தருணத்தில் மலையாளிகள் என்றால் யார் அவர்கள் எப்படி உருவானார்கள், ஒட்டுமொத்த மலையாளிகளின் குரலாய் யார் தம்மை முன்னிலைப்படுத்தி கொள்கிறார்கள் என்பதையும் நாம் அறிந்து கொள்ளவேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்கிறது. அப்படி ஏன் எண்ணத்தில் ஏற்பட்டதன் விளைவே இந்த பதிவு.


இரண்டு மூன்று நூற்றாண்டுக்கு முன்பு வரை ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மலையாளிகளின் வீடுகளில் தமிழ் தான் பேசப்பட்டது. தமிழ் மன்னர்களில் ஒருவர்களாகிய சேர மன்னர்களால் ஆளப்பட்ட நிலப்பரப்பு தான் இன்றைய கேரளா. பண்டைய தமிழகத்தில் மிகச்சிறந்த துறைமுக பட்டினங்களில் ஒன்றாக விளங்கிய முசுரி (தற்போதைய எர்ணாக்குளம் மாவட்டத்தில் உள்ளது) அந்த காலத்தில் கிரேக்க, ரோம, அராபிய நாடுகள் என பன்னாடுகளோடும் வியாபார தொடர்பு கொண்டிருந்த பட்டினமாய் இருந்தது. யூதர்கள் அராபியர்கள், கல்தேயர்கள் என பல நாட்டவரும் வியாபாரத்திற்காக போய் வந்து கொண்டிருந்த பூமி தான் அது. இப்படி பல நாட்டவர்கள் வந்து போய் கொண்டிருந்தாலும், அவர்கள் அங்குள்ள பூர்வீக குடிகளோடு கலந்திருந்தாலும் அது சேர தமிழ் மக்களுடைய பண்பாட்டை சிதைத்து விடவில்லை. சேர பூமியில் பேசப்பட்டு வந்த தமிழில் அராபிய, கல்தேய, கீப்ரு போன்ற மொழிகளில் இருந்து வார்த்தைகளை உட்கொள்ளப்பட்டு இருந்தாலும் தமிழ் தனது தனித்தன்மையை இழக்காமல் தான் இருந்தது. ஆனால் எட்டாவது நூற்றாண்டை ஒட்டிய வாக்கில் மேற்கு கடற்கரை வழியாக வடக்கில் இருந்து சேர பூமியில் நம்பூதிரிகள் என்று வழங்கப்பட்ட பார்ப்பனர்கள் உட்புகுந்த பிறகு சேர மண்ணின் வரலாறே மாறிப்போனது. மன்னர்களை தந்திரமாக தாங்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்த அவர்கள் பின்பு மன்னர்களை கொண்டே பூர்வீக குடிகளின் உரிமைகளை பறிக்க தொடங்கினார்கள். பௌத்தமும் சமணமும் தழைத்தோங்கிய சேர மண்ணில் பார்ப்பனியம் தனது நஞ்சை கலக்க ஆரம்பித்தது. பார்ப்பனியம் ஒரு இனத்தை அழிப்பதற்கு தேர்ந்தெடுக்கும் தலையாய தந்திரமே அந்த இனத்தின் மொழியை சிதைப்பது தான். அப்படி தான் சேர மண்ணில் பேசப்பட்ட தமிழின் வட்டார வழக்குக்கும் பார்ப்பனிய வெறியர்களால் சிதைக்கப்பட்டது.


தமிழ் பேசிய சேர மக்கள் ஒடுக்கப்பட்டு கல்வி பயில தடை செய்யப்பட்டனர் . சேர நாட்டில் இடைக்காலத்தில் கல்வி என்பது பார்ப்பனிய வெறியர்களின் தனி உடமை ஆக்கப்பட்டது . அவர்கள் அன்றைய சேர வட்டார தமிழில் சமசுகிருதத்தை கலந்து அந்த வட்டார வழக்கை சோழ, பாண்டிய மண்ணில் வழங்கப்பட்ட தமிழில் இருந்து அன்னியப்படுத்தினர். பிற்காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி பயிலும் வாய்ப்புகளை பெற்றபோது அவர்களும் பார்ப்பனியர்கள் உருவாக்கி உலவவிட்ட மணிப்பிரவாளத்தில் தான் கல்வி கற்க முடிந்தது. அந்த மணிப்பிரவாளம் தான் நவீன மலையாளமாக திரிந்து போனது. இன்றும் கேரளாவில் வாழும் மண்ணின் மைந்தர்களான பழங்குடி மக்கள் பண்டைய தமிழை ஒத்த வழக்கை தான் பயன்படுத்துகின்றனர். அவ்வாறு பார்ப்பனியத்தால் சிதைக்கப்பட்ட தமிழின் வட்டார மொழி வழக்கின் அடையாளம் தானே இன்றைய மலையாளம். பொது எதிரியை கண்டுக்காமல் விட்டால்.... நாளைக்கே தமிழ்நாட்டிலும் ஆந்திராக்களும், கேரளாக்களும் உருவாகலாம்.


கேரளத்தில் ஒடுக்கப்பட்ட சக மலையாளியை சுரண்டும் பார்ப்பனிய வெறியர்கள் தான் மலையாளி என்ற முகமூடியை அணிந்து கொண்டு முல்லை பெரியாறு பிரச்சினையில் தமிழர்களுக்கு எதிராக ஏனைய மலையாளிகளை தூண்டி விடுகின்றனர். கேரளாவில் உள்ள காடுகளை அழித்து அங்கு வாழும் பழங்குடிகளின் நிலங்களை அபகரித்து ஆட்டம் போடும் பார்ப்பனிய வெறியர்கள் தான் ஈழ தமிழர்களுக்கு எதிராக செயல்படுகிறவர்கள் என்பது பற்றி எத்தனை பேருக்கு தெரியும் ? ஒருத்தர் கேட்கிறார் கேரளா பூர்வீக வாசிகள் ஏன் அந்த பார்ப்பன வெறியர்களை எதிர்த்து இதுநாள் வரை போர் செய்யவில்லை ஏன் ஆயிதத்தை எடுக்காமல் குறைந்த அளவுள்ள பார்பனர்களுக்கு அடிமையானார்கள்?.. என்று, அது தான் பார்ப்பனியத்தின் தந்திரம், சாதி கட்டமைப்பை பலப்படுத்தி அதை சாதித்து கொண்டார்கள். அப்படி தங்களது ஆதிக்கத்தை நிலைப்படுத்த நம்பூதிரி பார்ப்பனர்கள் தங்களுக்கு அடிமைகளாக வைத்து கொண்ட பூர்வீக குடிகளை சேர்ந்த பெண்களின் மூலம் உருவாக்கப்பட்ட பார்ப்பனிய கோவணங்கள் தான் இந்த நம்பியார், நாயர், மேனன் போன்ற ஆதிக்க சாதியினர். இவர்களை கொண்டு தான் பார்ப்பனியம் ஏனைய பூர்வீக குடிகளின் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டது. அவர்கள் தான் இன்றளவிலும் தமிழர்களுக்கு எதிரான எல்லாவிதமான சதிகளில் ஈடுபடுபவர்கள்.
தமிழகத்திலும் கிட்டத்தட்ட அந்த நிலை தான் நேர்ந்திருக்கும். ஆனால் பார்ப்பனியத்தால், இந்துவத்தால் உள்வாங்கப்படமுடியாத பெரியார் போன்ற சமூக போராளிகள் எவ்வித சமரசமுமின்றி பார்ப்பனியத்திற்கு எதிரான போரை தொடர்ந்ததால் இங்கு நிலைமை அந்த அளவிற்கு மோசமடையவில்லை. அப்படி இருந்துமே கூட இன்றைக்கு தமிழ்நாட்டின் அதிகார மையம் குடுமிகளிடம் தான் போய் சேர்ந்து இருக்கிறது. இந்தியாவிலேயே சாதியகட்டமைப்பு வேறு எந்த இடங்களையும் விட மோசமாக இருந்தது என்று சொன்னால் அதில் ஓன்று கேரளா, மற்றொன்று வங்காளம். அது என்னவோ தெரியல ரெண்டு மாநிலங்களிலும் காங்கிரசு மற்றும் போலி பொதுவுடைமை கட்சிகளின் அரசாட்சி தான் இதுவரை மாறி மேரி நடந்து இருக்கிறது. ரெண்டு கட்சியிலேயும் தலைமை பீடங்களில் இருப்பவர்கள் பார்ப்பனிய வெறியர்கள் என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.


தமிழகத்தில் குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு காலத்தில் ஒடுக்கபட்ட சமூகங்களிலும் ஒடுக்கபட்ட சமூகமாக இருந்த சாணார் இன மக்கள் மீது இதே நாயர், மேனன், நம்பியார் போன்ற பார்ப்பனிய வெறியர்கள் தான் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டார்கள் என்பது யாருக்காவது தெரியுமா ?. சாணார் சமூக பெண்கள் மார்பு சட்டை அணிய கூடாது என்றும் பார்ப்பனிய வெறியர்கள் நேரில் வந்தால் தோள் சீலையை ஒதுக்கி மார்பை காட்ட வேண்டும் என்று கொடுமை இழைத்தவர்கள், இன்று ஈழத்திற்கு எதிராக செயல்படும் பார்ப்பனிய வெறியர்களின் மூதாதையர்கள் என்பது தெரிந்து இருந்தால் இவ்வாறு பேசமாட்டார்களோ என்னவோ. தமிழனுக்கு கடந்த காலங்களில் பார்ப்பனியம் தமிழரின் பண்பாடு மற்றும் வாழ்க்கை முறையை எவ்வாறெல்லாம் சீரழித்தது என்று தனியாக பாடம் எடுத்தல் அவசியம் என்று தோணுகிறது. பார்ப்பனிய வெறியர்களோடு கேரளாவில் மற்றொரு கூட்டமும் செயல்படுகிறது.அவர்கள் தங்களை சிரியன் கிருத்துவர்கள் என்று அழைத்து கொள்ளும் ஒரு கூட்டம். இவர்கள் தங்களுடைய மூதாதையர்கள் சிரியாவில் இருந்து வந்தவர்கள் எனவும், கிருதுவின் சீடர் தொமாவல் மதம் மாற்றப்பட்ட நம்பூதிரிகளின் வழித்தோன்றல்கள் எனவும் கதை விட்டு கொண்டு அலைகிற கூட்டம். இனக்கலப்பு நடந்திருக்கலாம். ஆனால் ஒட்டு மொத்த கூட்டமும் வேற்று கிரகத்தில் இருந்து வந்தது போல் கதை விடுவது எல்லாம் அதிகப்படியானது. இதே போல் தான் தான் மலபார் கடற்கரையோரங்களில் வசிக்கும் இசுலாமியர்களும் தங்கள் மூதாதையர்கள் அராபிய தேசத்தில் இருந்து வந்தவர்கள் என்று கூறும் வழக்கம் உண்டு. ஆனால் உண்மை என்னவென்றால் வியாபரத்திற்காக வந்த அரபியர்கள் முக்குவர் மற்றும் ஏனைய பூர்வீக குடிகளின் பெண்களை மணந்து அக்குடிகளோடு ஒன்றற கலந்து விட்டிருந்தார்கள். தற்போது அவர்கள் தங்களை மாப்பிளா இசுலாமியர்கள் என்று அழைத்து கொள்கிறார்கள். அது பற்றி மற்றொரு பதிவில் பார்ப்போம்.


மலையாளிகள் எங்கு சென்றாலும் மலையாளிகளோடு தான் இணைவார்கள்...
மலையாளிகளுக்கு தான் உதவுவார்கள் என்பது மாதிரியான ஒரு மாய பிம்பத்தை கேரளாவில் உள்ள பார்ப்பனிய வெறியர்கள் வெளியுலக கண்களுக்கு முன்னால் உருவாக்கி வைத்து இருக்கிறார்கள். அது அது அங்குள்ள ஒடுக்கப்பட்ட, பழங்குடி மற்றும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக அவர்கள் இழைக்கும் அநீதிகள் வெளியுலகை எட்டாமல் இருப்பதற்காகவும், அவர்கள் எடுக்கும் முடிவுகள் ஒட்டு மொத்த மலையாளிகளின் குரல் என வெளியுலகை நம்ப வைக்கவும் செய்யும் தந்திரம். உண்மை என்னவென்றால் நாயர், நம்பூதிரி, மேனன், நம்பியார் போன்ற பார்ப்பனிய வெறியர்கள் உதவி செய்யும்போது உதவியை பெறுபவர்கள் தாங்கள் சார்ந்த சமூகத்தை சேர்ந்தவர்களா என்று கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி பார்த்து மட்டுமே உதவி செய்வதில் கைதேர்ந்தவர்கள். வெளி நாட்டில் வேலை செய்யும் என்னுடைய சகோதரியோடு வேலை பார்த்த ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒரு மலையாள சகோதரியை சிரியன் கிருத்துவ, மற்றும் பார்ப்பனிய வெறியர்கள் மோசமாக நடத்தியதை என்னுடைய சகோதரி என்னோடு பகிர்ந்து இருக்கிறார். அப்படி பட்ட அவமானங்களுக்கு பயந்து அந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த மலையாளிகள் அந்த ஆதிக்க வெறி பிடித்த வெறியர்களுக்கு எதிராக எதுவும் பேசுவதில்லை. பொதுவாக அவர்கள் தங்களுடைய அடையாளத்தை மறைத்து கொண்டு தான் அவர்களோடு இருப்பார்கள்.


ஒரு கூட்டம் தமிழர்கள் மலையாளிகள் தமிழர்களை "பாண்டி" "கரிதொட்டி" என்று தன் இழிவுபடுத்துகிறார்கள் என்று அங்கலாய்க்கிறார்கள், ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் என்ன வாழுதாம், தமிழ் திரைப்படங்களில் கருப்பு நிறத்தவர்களை கேலிக்குள்ளாக்கும் கதாபாத்திரங்கள் தானே நிறைந்து காணப்படுகின்றன. எத்தனை தமிழர்கள் தமிழ்படங்களில் கதாநாயகிகள் கருப்பாக இருப்பதை விரும்புவார்கள். தாங்கள் வாழும் சமூகத்தை பிரதிபலிக்கும் கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் கூட வெள்ளைத்தோல் அழகிகளை தானே தேடுகிறது அவர்களின் கண்கள். சக தமிழர்களை இழிவுபடுத்தும் கருங்காலிகள் தானே இங்கும் அதிகாரத்தில் இருக்கிறார்கள். அப்படி இழிவு படுத்தும் கூட்டத்தை உச்சத்தில் தூக்கி வைத்ததால் தானே ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒரு தமிழன் அமைச்சராக பதவியேற்கும் போது மேடை பயத்தால் ஏற்பட்ட சிறு தவறை அவையில் எல்லார் முன்னாடியும் கெக்கேலி கெட்டி சிரித்து மகிழ்ந்தது. அப்போது இந்த தமிழர்கள் எங்கே போனார்கள்.


‎தமிழ் ஈழத்தை ஆதரிக்கும் ஒரு மலையாளியை காட்டுங்கள் பார்ப்போம் என்று பேசுபவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். கேரளாவில் மொத்த ஊடகமும் பார்ப்பனிய வெறியர்களின் கையில் தான் உள்ளது. பார்ப்பனியம் தனது ஊடக பிரச்சாரத்தின் மூலம் சாதாரண மலையாளிகளிடமும் தமிழர்களுக்கு எதிரான மனநிலையை உருவாக்கி விட்டு இருப்பதே அதன் மூல காரணம் என்கிற உண்மை பல பேருக்கு உரைப்பதில்லை. கேரளா என்றல்லாது இந்திய அளவில் சமூக, அரசியல், பொருளாதார மற்றும் ஊடக தளத்தில் அரக்க பலத்தோடு அவர்கள் வீற்று இருக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் அந்த நிலையை நோக்கி தான் போய் கொண்டு இருக்கிறோம். நாம் பார்ப்பனியத்திற்கு எதிரானாக போரை துவக்காமல் மலையாளி தெலுங்கன், கன்னடன் என்று சுற்றி கொண்டு இருந்தால் இங்கேயும் பார்ப்பனியம் அந்த நிலையை கொண்டு வந்து விடும். இப்பவே கூடங்குளம் அணுமின் நிலையம் ஈழ பிரச்சினை போன்ற விடயங்களில் பார்ப்பனியம் தமிழர்களுக்கு எதிரான போரை இந்திய தேசிய முகமூடியை போர்த்தி கொண்டு நடாத்தி கொண்டு இருக்கிறது. அவர்கள் நம்மோடு மிருக பலத்தோடு மோதி கொண்டு இருக்கிறார்கள்.... நாம என்னடான்னா சுத்தி வளைச்சு ஓடி கொண்டு இருக்கிறோம்.


அதே போல மலையாளிகள் வர்க்க சிந்தை உடையவர்கள் என்ற போலி பிம்பமும் பார்ப்பனிய வெறியர்களால் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. கேரளாவில் வர்க்க சிந்தை கொண்ட போராளி வர்கீசை அவருடைய இளம்பிராயத்தில் பார்ப்பனிய ஆதிக்க சக்திகள் படுகொலை செய்ததோடு அதற்கும் மூடு விழா நடத்தப்பட்டு விட்டது . தற்போது அங்கு பேசப்படும் வர்க்க அரசியல் எல்லாம் சும்மா லூலாயிக்கு... அங்குள்ள உயர்மட்ட போலி பொதுவுடைமை வியாபாரிகளை கொஞ்சம் உற்று கவனித்தால் அவர்கள் அனைவரும் பார்ப்பனிய வெறியர்களாக தான் இருப்பார்கள்.


முல்லை பெரியாறு பிரச்சினையில் தமிழர்களுக்கு சமூக வலை தளங்களில் பேசி வரும் கேரளத்தவர்களில் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தபட்ட சமூகத்தை சேர்ந்த தோழர்கள் அதிகம். ஆனால் சமூக வலைத்தளங்களில் அவர்களின் பங்கேற்பு பார்ப்பனிய வெறியர்களை காட்டிலும் எண்ணிக்கையில் மிக குறைவு. சமூக தளங்களில் ஒட்டு மொத்த மலையாளிகளுக்கு எதிராக போராடாமல் பார்ப்பனியத்தால் நசுக்கப்படும் மலையாளிகளோடு கூட்டாக சேர்ந்து போராட வேண்டும்.


தனித்தமிழ்நாடு வேண்டும் என்பதெல்லாம் சரி தான், ஆனால் சுற்றி இருக்கிற பயபுள்ளைங்க எல்லாரையும் எதிரியாக்கி வைத்து கொண்டு, நாம ஒற்றுமையாக இருந்தாலும் ஒன்னும் நடக்க போறது இல்லை. நம்முடைய போராட்டம் தமிழர்களுடைய சுயமரியத்தைக்கான போராட்டம் என்பதோடு மட்டுமல்லாமல். தமிழர்களை சிதைத்து பார்ப்பனியத்தால் உருவாக்கப்பட்ட தேசிய இனங்களில் பார்ப்பனியத்தால் அடிமைபடுத்தி வைக்க பட்டு இருக்கும் மக்களுக்காகவும் போராடுவதே உயர்ந்த லட்சியமாக இருக்க முடியும்


கீழே சில காணொளிக்கான இணைய இணைப்புகளை தருகிறேன் பாருங்கள்

all indians are part 0௧


all indians are part 0௨


all indians are part ௩


all indians are part 04

3 comments:

Riyas said...

Very Good Post sir,

//பொது எதிரியை கண்டுக்காமல் விட்டால்.... நாளைக்கே தமிழ்நாட்டிலும் ஆந்திராக்களும், கேரளாக்களும் உருவாகலாம்// Correct

anthony said...

வருகைக்கும் பதிலுரைக்கும் நன்றி ரியாசு அவர்களே

ஏற்றத்தாழ்வற்ற தோழமையுடன்

அந்தோணி

Unknown said...

எனது எண்ண ஓட்டத்தை பிரதிபலித்த கட்டுரையாளருக்கு நன்றி...

Post a Comment