Sunday, January 1, 2012

பெண்மையின் குறி




பெண்ணே

நீ வீசும் கற்களில்

ஆதிக்கத்தின் அடித்தளங்கள்

நொறுங்கி விழட்டும்

கல்லறைகளில் பூட்டி வைக்கப்பட்ட

உனது சமூகத்தின் சுதந்திரம்

வெடித்து எழும்பட்டும்

கனவுகளை தொலைத்த

உனது தலைமுறையின்

போராட்ட சுவடுகள்

எதிர்கால தலைமுறையின்

வரலாற்று பாடங்களாகட்டும்

பெண்ணே

நீ வைத்த குறியில்

ஆதிக்க தற்குறிகளின்

கோவணங்கள் அறுந்து விழட்டும்

அதில் பெண்மையின் அன்பு

இப்புவியை நிரப்பட்டும்



---- அந்தோணி

2 comments:

சசிகலா said...

பெண்மையின் அன்பு

இப்புவியை நிரப்பட்டும்
அருமை

anthony said...

பதிலுரைக்கு நன்றி சகோதரி

Post a Comment