அவள் ஓரவிழி
கண்ணசைவில்
என் கைவிரல்கள்
மெல்ல நீண்டு
என் மேல் விழுந்த
அவள் முடி தீண்ட
மங்கையவள்
புன்னகையில்
என் மெய்மறந்து
நான் இருக்க
நீல பௌர்ணமி
நிலவொளியில்
என்னவளின்
மெல்லிதயம்
வெட்கம் மென்று
பூப்படைய
நாணத்தால்
நனைந்த
அந்நாழிகையில்
எனது காதலும்
வயதுக்கு வந்தது
No comments:
Post a Comment