Thursday, January 29, 2015

வயதிற்கு வந்த காதல்



அவள் ஓரவிழி
கண்ணசைவில்
என் கைவிரல்கள்
மெல்ல நீண்டு
என் மேல் விழுந்த
அவள் முடி தீண்ட
மங்கையவள்
புன்னகையில்
என் மெய்மறந்து
நான் இருக்க
நீல பௌர்ணமி
நிலவொளியில்
என்னவளின்
மெல்லிதயம்
வெட்கம் மென்று
பூப்படைய
நாணத்தால்
நனைந்த
அந்நாழிகையில்
எனது காதலும்
வயதுக்கு வந்தது

No comments:

Post a Comment