பொறாமையே
வன்முறைகளின்
மூலகாரணம்
என்றுணர்ந்தவன்
எல்லாம் துறந்து
புத்தன் ஆனான்
என்ன கொடுமை
வன்முறைகளின்
வலிய வீச்சிற்கு
நேற்று
பலியானவன்
இன்று
புத்தனை பிளக்க
போதிமரம் நோக்கி
கோடாலியோடு
ஓடுகிறான்
.
ஆக்கம்: அந்தோணி
https://www.facebook.com/anthony.fernando.796/posts/700891016661863
No comments:
Post a Comment