Wednesday, February 11, 2015

பொறுமையின் வலிமை



சந்தேகத்தின் அலகுகளால்
குத்தி குதறப்பட்டு
அது தரும் வலிகளின்
சுவடுகளில்
பொறுமையாய்
நடந்து கடக்கும்
ஓர் கணத்தில்
கொத்தி வருத்திய அலகுகள்
முனை மழுங்கி
வெட்கி உடையும் போது
ஏற்படும் சுகத்தில்
பொறுமையின்
அருமை புரியும்

-- அந்தோணி

No comments:

Post a Comment