Tuesday, February 10, 2015

கடலோடிகள் ஒரு சிறு குழுவா ?





                      நெய்தல்
நிலத்தை மூலமாக கொண்ட கடலோடிகள் சமூகம் சின்னதொரு சமூகம் கிடையாது அது பல விதமான தொழில் நுணுக்கங்களை அறிந்த மிகப்பெரும் மனித சக்தியை கொண்ட கொண்ட ஒரு பெரும் சமூகமாக தான் இருந்திருக்கிறது.

ஏனைய நாட்டவர்கள் கடலை மீன்பிடிப்பதற்கு பயன்படுத்தி கொண்டிருந்த நாட்களில் தம்ழியாகத்தை சேர்ந்தாக கடலோடிகள் உலகத்தின் மறு மூலைகளை தேடி பயணித்தவர்கள். கிழக்காசியா முழுவதையும் தங்களது துடுப்புகளால் அளவேடுத்தவர்கள். தமிழர்களின் படைப்புகளை பாய்மரக் கப்பல்களில் ஏற்றி சென்று உலகத்தின் பேரரசர்களை பிரமிக்க வைத்தவர்கள். கடல் கடந்து போனாலும் தங்களை ஏற்றுக் கொண்ட குடிகளை ஏய்க்காமல் அவர்களோடு கலந்தவர்கள்.
 
அவர்களுக்கென்று
வானவியல் அறிஞர்கள், நெசவு செய்பவர்கள் குறிப்பாக வாதிரியார்கள், பருத்தி நூலில் இருந்து பாய்மரத்தை நெய்யும் கலையில் தேர்ச்சி பெற்றவர்கள், காலத்தை குறித்து கொடுப்பவர்கள் (வள்ளுவர்கள், கணியர்கள்), மரம் மற்றும் இரும்பு வேலைகளில் தேர்ந்தவர்கள், போர்க்கலையில் தேறியவர்கள், வியாவார நுணுக்கம் அறிந்தவர்கள் , அரசியல் சாணக்கியர்கள் என ஒரு பெரும் கூட்டமே இருந்திருக்கிறது ,....
பார்ப்பனியம் சோழர்களின் ஆட்சி காலத்தில் தமிழ் மண்ணை ஆக்கிரமித்த போது குடுமிகள் கடலோடிகள் நடுவிலும் ஊடுருவினார்கள் கூடவே நகரவும் செய்தார்கள். கடலோடிகளுக்கு காலத்தையும் வானவியலையும் பற்றி போதித்தவர்கள் அவர்களிடமிருந்து பிடுங்கி எறியப்பட்டு அந்த இடத்தை குடுமிகள் நிரப்பினார்கள். தமிழர்களின் கடல் மேலாண்மை அவர்களுக்கு பொறாமையை தந்திருக்கலாம். அதன் விளைவு "கடல் கடத்தல்" பாவம் என போதிக்கப்பட்டது . கடலோடி சமூகத்தின் நுணுக்கமான வலைப்பின்னல் ஒவ்வொன்றாக கிழித்து எறியப்பட்டது. அவர்களின் வாழ்வாதரம் பிடுங்கி எறியப்பட்டபோது ஒருவரையொருவர் விட்டு நகர்ந்து ஒருவருக்கொருவர் அன்னியராகி போனார்கள்.. சிலர் சமவெளிகளை நோக்கி நகர்ந்தார்கள். சிலர் மீன் பிடிப்பது குலத் தொழில் என்றளவிற்கு சுருங்கி போனார்கள.


மொத்தத்தில் தமிழர்களின் பன்னாட்டு தொடர்பில் பார்ப்பனியத்திற்கு விளக்கு பிடித்த பிற்கால சோழர்களின் இறுதிக் காலத்தில், உலகத்தின் மொத்த கடலையும் தங்கள் துடுப்புகளால் அளந்த கடலோடிகளின் திறமைகளுக்கு முடிவுரை எழுதப்பட்டது.

No comments:

Post a Comment