Monday, February 9, 2015

கேள்வி என்ற ஞானத்திற்கும் வானத்திற்குமான தொடர்பு




எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்கு
ஒன்றையும் விடாதே...
உன்னிருப்பையும் கேள்விக்குள்ளாக்கு
சுயத்தை வெறுத்து
எல்லாவற்றையும் துற,
அகத்தை சுத்தமாக்கு
கடைசி கசடையும்
தூக்கி எறியும்வரை
புதிதாய் ஆரம்பி
விடை கிடைக்கும் வரை தேடு
நிறுத்தி விடு என்பார்கள்
ஓடிக் கொண்டிரு
முடிந்து விட்டது என்பார்கள்
துவக்கி வை
தொற்றிக் கொண்டலைவதை விட்டு
உனக்கானதை தேர்ந்தெடு
பற்றிப் படரு
பார்வைகளை விசாலமாக்கி
வட்டத்தை விரிவுபடுத்து
விட்டம் வெறிப்பது நிறுத்தி
பரணை உடைத்து
உனக்கான வானத்தை
தலை நிமிர்த்தி பார்
நட்சத்திரங்களை தேடுவதல்ல
உன் கண்களின் வேலை
உனக்கான இடத்தை
எட்டாத உயரத்தில்
நிலை நிறுத்த
விண்ணை அளவெடு
வானம் உன் வசப்படும்


                                                                                                            --  இப்படிக்கு அந்தோணி

No comments:

Post a Comment