Thursday, February 12, 2015

சிந்திக்க தூண்டிய குரு

நான் பாளையங்கோட்டை புனித அந்தோணியார் தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது எனக்கு வகுப்பு ஆசிரியையாக இருந்த அந்த அம்மாவை நன்றியோடு நினைத்து பார்க்கிறேன் ....

ஐந்தாம் வகுப்பு பள்ளி இறுதி நாட்களில் சிறுவர்களுக்கான கதை புத்தகங்களை எங்களிடம் கொண்டு வந்து கொடுத்து படிக்க சொல்லி எங்களது புத்ததகங்கள் படிக்கும் ஆர்வத்தை தூண்டி விட்டவர் ...
எங்களில் புத்தகம் படிப்பதில் ஆர்வம் உள்ள மாணவர்களை விடுமுறை நாட்களில் அவரது வீட்டிற்கும் வரச் சொல்வார் ....

அப்படி வரசொன்ன மாணவர்களின் பின்னணி அப்போது எங்களுக்கு தெரிந்து இருக்கவில்லை.... அப்போது எங்களுக்கு சாதியோ மதமோ அறிமுகமாகவில்லை ... பிற்காலத்தில் அது எங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டபோது தான் தெரிந்தது .... அவர் அவரோட வீட்டிற்கு அழைத்த மாணவர்களில் பெரும்பாலோனோர் ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் .......

நிறைய பேருக்கு இப்போது அந்த ஆசிரியை என்ன சாதி என்ற கேள்வி தொக்கி நிற்குமே ... சொல்லி விடுகிறேன் ..... அவர் சைவ வெள்ளாளப் பிள்ளை சமூக கத்தோலிக்க கிருத்தவர் .... ஆனால் எங்களிடம் அவர் ஒரு சின்ன வேறுபாட்டை கூட காட்டியதில்லை என்பதை அவர் எங்களோடு நடந்து கொண்ட விதத்தை இன்று நினைத்து பார்த்தால் எனக்கு புரிகிறது
இப்படி பட்ட ஆசிரியர்களால் தான் தமிழ் சமூகம் சிக்கலான சூழலிலும் ஒரு வித சமநிலையில் தொடர்ந்து கொண்டிருக்கிறது ...இல்லைஎன்றால் எப்போதோ வெடித்து சிதறி இருக்கும்

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

https://www.facebook.com/anthony.fernando.796/posts/679813842102914

No comments:

Post a Comment