Monday, February 9, 2015

அன்னை பூலான் தேவி கொள்ளைக்காரியா ?






"ஜெயலலிதா என்னும் நவீன பூலான் தேவி" என்று முக நூல் நட்பில் இருக்கும் அண்ணன் ஒருத்தர் ஒரு பதிவை ஆரம்பித்து இருந்தார் . எனக்கு ஒரு நிமிடம் பக்கேன்றாகி விட்டது. அதெப்படி ஆதிக்க வெறி பிடித்த ஒரு பார்ப்பன மாமியோடு சாதி ஆதிக்க வெறியர்களால் கடுமையான வன்முறைக்களுக்குகுள்ளளாக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை சமூகத்தின் அடையாளமான பூலான் தேவியை அடையாளப்படுத்த முடிகிறது.

ஊடகங்கள் கட்டமைக்கும் அத்துனை பிம்பங்களையும் நம்புவதால் வருகிற விளைவு தான் இது. பார்ப்பனிய ஆதிக்க சாதி ஊடகங்கள் அன்னை பூலான் தேவி உயிரோடு இருக்கும் போதும் சரி, இல்லை அவர்கள் மறைந்த பின்பும் சரி தங்களுக்கு வசதியாக " அன்னை பூலான் தேவி மீது ஆதிக்க சாதி வெறியர்கள் கட்டவிழ்த்து விட்ட உடல் மற்றும் மனரீதியிலான வன்முறைகளை மறைத்து விட்டு அவர்களுடைய மூளை முழுவதும் வியாபித்து இருக்கும் பூணூல் கட்டமைக்கும்  வன்மத்தை மட்டுமே கக்கி வந்திருக்கிறது

நடிகர் வடிவேலு கூட தனது திரைப்படங்களில் அது போன்ற இழிவான செயல்களை செய்து இருந்தார் ..

உயர்சாதியை சேர்ந்த ஒரு அபயா உருவாக்கப்படுவதற்கு முன்பே  தனது உடலில் உருவாக்கப்பட்ட ஆயிரமாயிரம் அபயாக்களை  தாங்கி கொண்டு அலைந்தவள் அன்னை பூலான் தேவி .

தன்னுடைய சுயசரிதையில் தன மீது நடத்தப்பட்ட பாலியல் வன்முறையை பின்வருமாறு விவரிக்கிறார் .

"அந்த ஊரின் ஆதிக்க சாதி தாக்கூர் ஆண்களால் எனது உடைகள் களையப்பட்டு அந்த ஊரில் உள்ள அனைத்து தெருக்களிலும் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டேன் . அங்கு உள்ள னைத்து பெண்களும் சிறுமிகளில் இருந்து வயதான கிழவிகள் வரை வேடிக்க பார்த்தார்களே தவிர அவர்கள் வீட்டு ஓரத்தில் கிடந்த ஒரு அழுக்கு துணியை கூட என்னை நோக்கி வீசவில்லை. என்னை அவர்கள் அங்கே சக பெண்ணாக பார்க்கவில்லை. ஒரு ஒடுக்கப்பட்ட நிசாத் சாதியை சேர்ந்த படகோட்டியின் மகளாகவே பார்த்தார்கள்.

ஊர்வலத்தின் முடிவில் ஒற்றின் மத்தியில் நடுநாயகமாக அமைந்திருந்த ஒரு கம்பத்தில் என்னை கட்டு என்னை கட்டினார்கள். பஞ்சாயத்தில் முக்கியமானபொறுப்பில் இருந்த தாக்கூர் அங்கள் என்னை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய பின்பு என்னை அந்த ஒற்றில் உள்ள அனைத்து ஆண்களுக்கும் விருந்தாக்கினார்கள். உடல் கொடுத்த வழியை விட மனதில் ஏற்பட்ட வழியை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்ல. என்னால் முனக மட்டுமே முடிந்தது. அந்த ஒற்றின் ஆண்களில் சிறுநீர் கழிக்க  குறி பிடிக்க தன் தாயின் உதவி தேவைப்படும் சிறு பையன்களில் இருந்து, சுடுகாட்டிற்கு தூக்கி செல்லப்படுவதற்காக காத்திருந்த வயதான கிழவர்கள் வரை அத்தனை பேரும் என் உடலின் மீது ஒரு பெரும் போரையே நடத்திக் கொண்டிருந்தார்கள்.

அவர்களின் அத்துணை செயல்களையும் அந்த ஆண்களையும் அந்த ஆண்கள் சிந்திய விந்துக்களையும்  தூக்கி சுமந்த கருப்பைகள் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தன. அப்போதிருந்த நிலையில் எனது உறுப்புகளை அவர்களிடம் அறுத்து கொடுத்து விட்டால் என்னை விட்டு விடுவார்களா என்ற எண்ணமே மிஞ்சியிருந்தது . இயலாமையின் உச்சத்தை உணர்ந்த தருணம் அது. பிற்காலத்தில் எனக்கு தைரியத்தையும் ஆதிக்கத்திற்கு எதிராக போராடும் வலிமையையும் அந்தது அந்த நிகழ்வு என்று சொன்னால் மிகையாகாது". நேரம் செல்ல செல்ல மனதை ஒருவாறு திடப்படுத்திக் கொண்டு  அமைதியாகி விட்டேன் . அசைவற்று கிடந்த ஏன் உடலை பார்த்ததும் ஒரு வயதான் பெண்மணி ஒரு செம்பில் தண்ணீரை எடுத்து வந்து எனக்கும் அவளுக்கும் நல்ல இடைவெளி இருக்குமாறு உயர்த்தி பிடித்துக் கொண்டு என்னுடைய வாயில் ஊற்றினாள். எங்கே நான் இறந்து போய் விட்டால் அவளுடைய வீட்டு ஆண்கள் கொலைக் குற்றச்சாட்டிற்கு உள்ளாகி சிறைக்கு போக நேருமோ என்ற அச்சம் ஏற்படுத்திய கருணையாக இருக்கலாம். என்னுடைய மனதிற்குள் இப்போது என்னுடைய உயிரை எப்படியேனும் காப்பாற்றியாக வேண்டும் என்ற உணர்வு ஆக்கிரமித்து இருந்தது .. பழி வாங்க வேண்டும். எனக்கு அவர்கள் ஏற்படுத்திய வலிகளை அவர்கள் உணர வேண்டும் என்ற குரல் எனக்குள் ஒழித்து கொண்டே இருந்தது. நான் அசைவற்று கிடந்ததை பார்த்து நான் இறந்து விட்டேன் என்றெண்ணி தாக்கூர்கள் என்னை ஊருக்கு வெளியே ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் கொண்டு போய் வீசி எறிந்தார்கள்". என்று விவரித்து இருந்தார் ....

மேலயுள்ள அந்த பத்தியை  படித்து விட்டு  பூலான் தேவி யாரென்று  முடிவெடுங்கள்

தயவு செய்து உங்கள் சொல் விளையாட்டுகளுக்கு அன்னை பூலான் தேவியின் பெயரை ஊறுகாயாக்கி விடாதீர்கள்

https://www.facebook.com/photo.php?fbid=760936933990604&set=a.131181913632779.35108.100002229137896&type=1&ref=notif&notif_t=like

No comments:

Post a Comment