Saturday, February 21, 2015

அயோத்திதாச பண்டிதரும் ஒரு சாதீ தமிழ் தேசிய வெறியனும்


                                                                          நேற்று பட்டையும் கொட்டையுமாக நின்று கொண்டிருந்த ஒரு தமிழ் தேசிய சாதி வெறியரோடு பேசிக் கொண்டிருக்கும் போது அந்த அண்ணன் அயோத்திதாச பண்டிதரை உச்சி மோர்ந்து கொண்டிருந்தார். அடடா ஆதிக்க சாதியை சேர்ந்த ஒருத்தர் பூர்வ தமிழ் குடியை சேர்ந்த ஐயா அயோத்திதாச பண்டிதரை தூக்கி பிடிக்கிறார்களே , பரவாயில்லையே நல்ல முன்னேற்றம் தானே என்று எண்ணிக் கொண்டு . அண்ணே ஐயா அயோத்திதாச பண்டிதரை பற்றி உங்களுக்கு தெரிந்த விசயங்களை சொல்லுங்க நானும் கேட்டுக் கொள்கிறேன் என்றார். அவரும் "தம்பி அயோத்திதாச பண்டிதர் மிகப்பெரிய அறிவாளி இந்த திராவிட இயக்கத்தவர்கள் அவர் புகழை மறைத்து விட்டாங்க. சக்கிலியர்களை தமிழர்கள் இல்லை என்று ஆய்வு செய்து அறிவித்தவர் அவர் தான். சக்கிலியர்கள் தங்களை தாங்களே தாழ்த்தி கொள்பவர்கள் அசுத்தமானவர்கள் அவர்களுக்கு என்று வரலாறு கிடையாது. குடிகாரகள் அவர்களை திருத்துவது கடினமான வேலை என்று ஆய்வு செய்து கண்டறிந்தவர்" என்று முடித்ததும் எனக்கு ஒரு நிமிடம் தூக்கி வாரிப் போட்டது . ஒரு நாழிகை சுதாரித்து அண்ணன் எதை நோக்கி போகிறார் என்பதை புரிந்து கொண்டு, பதிலுக்கு நான் "அண்ணே அவர் அப்படி சொன்னாரா என்பது எனக்கு தெரியாது (அதைப்பற்றிய விவரங்கள் யாருக்கேனும் தெரிந்தால் எம்மோடு பகிர்ந்து கொள்ளவும்) , ஆனால் எனக்கு சில விசயங்கள் தெரியும் , தமிழர்களுக்கும் பௌத்தத்திற்கும் உள்ள வரலாற்று தொடர்பை வெளிக்கொண்டு வந்ததும் , பார்ப்பனிய இந்துத்துவ ஆபாச குப்பைகளை தமிழில் மொழி பெயர்த்ததும் அவர் தான் என்பது உங்களுக்கு தெரியுமா , அது மட்டுமல்ல இந்தியாவில் மறைந்து போன "பாலி" மொழியில் பண்டித்துவம் பெற்றவர் என்பதும் அதற்கு ஒப்பிலக்கணம் எழுதிய மிகப்பெரிய அறிஞர் என்பதும் சமசுகிருதத்தில் புகுந்து விளையாடியவர் என்பதும் உங்களுக்கு தெரியுமா ?

சமசு கிருதத்தில் இருந்த ஆபாச குப்பைகளை அவர் மொழி பெயர்த்து கொடுத்ததை வைத்து தான் ஐயா பெரியார் அந்த ஆபாச புரட்டுகளை தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் கொண்டு சென்று தமிழர்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினார் என்பது தெரியுமா ?, அதை பற்றிய தகவல்களையும் அனைத்து தமிழர்களிடம் எடுத்து சொல்லலாமே" என்றேன் . அண்ணன் பேந்த பேந்த முழித்து கொண்டிருந்தார்...

அயோத்திதாசரின் பெயரை பயன்படுத்தி அருந்ததியர்களுக்கு எதிராக பறையர்களுக்கு கொம்பு சீவி விட்டு அவர்கள் இருவரையும் அடிபோட வைத்து விட்டு, அப்படியே திண்ணியத்தில் நாயுடுவோடு சேர்ந்து கொண்டு பறையர்களின் வாயில் மலத்தை திணித்து விட்டு வெளியே வந்து வடுக திராவிட வந்தேறியே என்று கூச்சல் இட்டுக் கொண்டு திரிவது என்று பட்டையும் கொட்டையுமாக திரியும் நம்ம சாதீ தமிழ் தேசியர்கள் என்னத்தான் நடித்தாலும் பல்லிளிக்கும் போது அவர்களது சாதீய பார்ப்பனிய கோரப்பற்கள் அவர்களை காட்டி கொடுத்து விடுகிறது

https://www.facebook.com/anthony.fernando.796/posts/766060650144899?notif_t=like

No comments:

Post a Comment