Tuesday, February 10, 2015

தமிழ்க் குடிகளின் அழிவின் ஆரம்பப் புள்ளி



                                                    நேற்று முகநூலில் இருக்கும் பெரியவர் ஒருத்தர் என்னுடைய “கிழக்காசியாவில் தமிழர்கள் நடத்திய ஆட்டம்” என்ற கட்டுரையை படித்து விட்டு அதில் நான் பதிந்து இருந்த கருத்துக்களை பற்றி விவாதித்து கொண்டிருக்கும் போது பேச்சு அப்படியே பறையர் சமூகத்தை பற்றி திரும்பியது. அந்த பேச்சுகளின் மொத்தத்தையும் கீழே கட்டுரையாக வடித்து இருக்கிறேன். கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு .

                  உலகின் பல்வேறு மூலைகளில் முரண்பாடுகளின் உச்சத்தை தொட்டு நிற்கும் மனிதர்களை கூட ஒன்றிணைத்து ஒரு அமைப்பாக்கி விடலாம்.ஆனால் இன்றைக்கு பறையர் என்று வழங்கப்படுகிற சமூகத்தை ஓரணியில் திரட்டுவது மிகக் கடுமையான செயல். அந்த காலங்களில் அறிவுசார் துறைகளில் வல்லுனர்களாக தனித்தனியாக ஆவர்த்தனம் பண்ணியதால் என்னவோ அவர்கள் மரபணுக்களிலும் அது புகுந்து விட்டது. ஒருவர் பேச்சை மற்றொருவர் மதிப்பது என்பது அவர்களிடத்தில் காணப்படும் மிக அரியப் பண்பு. முரண்பாடுகளோடு முட்டிக் கொள்வது அவர்களின் மரபணுக்களில் ஊறிப்போன ஓன்று. ஆனால் அதே நேரத்தில் எதிலும் முரண்பட்டு அனைத்தையும் கேள்விக்குட்படுத்தி நிற்கும் அந்த பண்பால் மிகச் சிறந்த அறிவுசார் ஆளுமைகளையும் அச்சமூகம் தந்திருக்கிறது என்பதையும் மறுத்து விட முடியாது. ஒரு கட்டத்தில் தமிழ் சமூகத்தின் அடிமட்டத்தில் தள்ளப்பட்டிருந்தாலும் அந்த நிலைமையில் கூட அச்சமூகத்தால் அயோத்திதாச பண்டிதர்களை உருவாக்க முடிந்தது என்பதையும்  கருத்தில் கொள்ள வேண்டும். தமிழ் குடிகளில் முதன் முதலாக தங்களுக்கென தனி பத்திரிகையை நடத்தியது அவர்கள் தான். அதை நடத்தியது அயோத்திதாச பண்டிதர். “பார்ப்பானுக்கு மூத்தோன் பறையன் ” என்று சொல்லாடலில் கூட சில வரலாற்று உண்மைகள் இருக்கிறது.  

முற்கால தமிழ் அரசுகளின் கட்டமைப்பில் மிக உயர்ந்த இடத்தில் இருந்தவர்கள் தாம் வள்ளுவ குடிகள் . ஆனால் அவர்களுடைய தான் தோன்றித்தனம் தான் ஒட்டு மொத்த தமிழ் குடியின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தது. தமிழ் அரசர்களுக்கிடையே அன்னியர்களை ஊடுருவ விட்டதில் அவர்களின் பங்கு மிக முக்கியமானது. தமிழ் அரசர்களுக்கு நெருங்கிய வட்டத்தில் இருந்ததால் அரசவை சுகங்களுக்கு குறிப்பாக தமிழ் அரசர்களின் வட இந்திய வெற்றிகளுக்கு பிறகு வட நாட்டில் இருந்து  வெள்ளை நிற பெண்களையும் அவர்களை சார்ந்தவர்களையும் தமிழ் மண்ணிற்கு இழுத்து கொண்டு வந்து குடியமர்த்தியத்தில் அரசர்களுக்கு ராசா குருக்களாக இருந்த வள்ளுவர்களின் ஆலோசனை இல்லாமல் நடந்திருக்காது.

விந்திய மலைக்கு அப்பால் இருந்து கொண்டு வரப்பட்ட பெண்களை இங்கே அந்தப்புரங்களில் அடைத்து வைத்து பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்த ஆரம்பித்தது தான் ஒரு கட்டத்தில் தமிழ் இனப்பெண்களையும் இரும்பால் சூடு போட்டு பாலியல் அடிமைகளாக அந்தப்புரங்களிலும் கோவில்களிலும் அடைத்து வைக்கப்படும் சூழலுக்கு கொண்டு சென்று விட்டது தமிழ் அரசர்களும் அவர்களுக்கு இராசகுருக்களாக இருந்தவர்களும், அரச அதிகார மட்டத்தில் இருந்தவர்களும் அந்தப்புரமே கதியென்று கிடந்ததால் தமிழர்களின் சமூக கட்டமைப்பு மெதுவாக உடைய ஆரம்பித்தது. விந்திய மலைக்கு அப்பால் இருந்து கூட்டி வரப்பட்ட பெண்களோடு உடன் வந்த ஆரியர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு அரசர்களோடும் இராசகுருக்களான வள்ளுவர்களோடும், அரச அதிகார மட்டத்தில் இருந்தவர்களோடும் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு அவர்களோடு கலக்க ஆரம்பித்தார்கள். அப்படி கலக்க ஆரம்பித்ததன் விளைவு தமிழ் சமூகத்தில் பிராமணர்கள் என்றதொரு புதிய சமூகக் குழு உருவானது. தஞ்சை மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வாழும் “அய்யங்கார்” பிரிவை சேர்ந்த பிராமணர்களில் பலரின் மரபணுக்கள் வள்ளுவ குடிகளை சேர்ந்தவர்களின் மரபணுக்களோடு ஒத்துபோவதாக ஒரு ஆய்வறிக்கை கூட வந்திருக்கிறது. வள்ளுவர்கள் மற்றும் ஏனைய தமிழ் அரசர்களின் அதிகார வட்டத்தில் இருந்தவர்கள் கொஞ்ச கொஞ்சமாக அகற்றப்பட்டு அல்லது உள்வாங்கப்பட்டு அந்த பொறுப்புகளில் புதிதாக கலந்து கட்டி உருவாக்கப்பட்ட பிராமணர்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள் பணியமர்த்தப்பட்டார்கள். வள்ளுவர்கள்  மற்றும் கணியர்கள் என்றழைக்கப்பட்ட மக்களின் வானவியல் மற்றும் ஏனைய அறிவுசார் திறமைகளை பிராமணர்கள் கற்றுக் கொண்டு அந்த துறைகளை ஆக்கிரமிக்க ஆரம்பித்தனர். தமிழ் மண்ணில் மனுவின் கொள்கைகள் கொண்டுவந்து நங்கூரம் பாய்ச்சினர். தமிழ் குடிகள் மீது கடுமையான அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. மக்களின் சொத்துக்களும் நிலங்களும் உடமைகளும் பறிக்கப்பட்டு அவை கோவில் கருவூலத்தில் சேர்க்கப்பட்டன. பிராமணர்களுக்கு பிரம்மோதய நிலங்கள் என்ற பெயரில் நிலங்கள் வாரி வழங்கப்பட்டன. தமிழ் குடிகள் மீதான அடக்குமுறைகளுக்கு காரணமென வள்ளுவ குடிகளை சேர்ந்தவர்களும் அவர்களோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அடையாளப்படுத்தப்பட்டனர். இப்படி ஏனைய தமிழ் குடிகளின் கோவத்தை வள்ளுவ குடிகளின் மீது திசை திருப்பியதில் பிராமணர்கள் வெற்றி கண்டனர். பிராமணர்களின் அடக்குமுறைகளுக்கு எதிர்த்து நின்ற பல்வேறு தமிழ் குடிகளையும் சேர்ந்தவர்கள் பறையர்கள் என்றழைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.

அறிவுசார் துறைகளையடுத்து அதிகார மையத்தை ஆக்கிரமித்து இருந்த பிராமணர்களால் தமிழர்களிடையே இருந்து களையெடுக்கப்பட்ட மற்றுமொரு விசயம் ஒவ்வொரு தமிழ்க்குடியை சேர்ந்தவர்களின் ரத்தத்தில் ஊறிக் கிடந்த “தமிழ் போர்க்கலைகள்” பற்றிய நுண்ணறிவு. தமிழர்களுக்கு போர்க்கலையை சொல்லித்தந்த குருக்கள் திட்டமிட்டு ஒழிக்கப்பட்டனர். போர்க்கலைகளையும் அறிவுசார் நுண்கலைகளையும் சுமந்த பனையோலையால் செய்யப்பட்ட ஏடுகள் “பழைய கழிதலும் புதியதன புகுதலும்” என்ற பெயரால் பார்ப்பனர்களால் தமிழர்களை கொண்டே திட்டமிட்டு துடைத்து எறியப்பட்டன. தமிழ குடிகள் வெள்ளைத்தோல்களை கண்ட மோகத்தில் மூழ்கி கிடக்க அவர்களுடைய கோவணங்கள் அவர்களுக்கு தெரியாமல் உருவி எறியப்பட்டன. அம்மணமாக்கப்பட்ட போதும் வெட்கத்தால் மூடப்பட்டு முடங்கி கிடப்பதை தவிர அவர்களுக்கு அப்போது வேறு வழி தெரியவில்லை. தப்பியோடிய போதிதர்மர்கள் அவர்கள் சென்று தஞ்சம் புகுந்த கிழக்காசிய குடிகளால் கொண்டாடப்பட்டனர்.

கடலோடிய தமிழர்களோடு பயணித்த வள்ளுவ  கணியர்களின் இடத்தில் பார்பனர்கள் தங்களை இருந்திக் கொண்டார்கள் எங்கெல்லாம் தமிழர்களின் பண்பாட்டு முத்திரைகள் எடுத்து செல்லப்பட்டதோ அங்கெல்லாம் கடல் கடந்து சென்ற பார்ப்பனர்களால் அங்கே இருந்த தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்கள் வெகு நேர்த்தியாக திட்டமிட்டு துடைத்து எடுக்கப்பட்டன. வட மொழி கூறுகளும் ஆரிய பண்பாடுகளும் தமிழர்கள் கடல் கடந்து சென்றமர்ந்த இடங்களில் திணிக்கப்பட்டன. காற்றின் போக்கை  பயன்படுத்தி கப்பல்களை செலுத்த உதவிய பாய்மரத் துணிகளை நெய்து கொடுத்த தமிழ் குடிகளின் வாய்ப்புகள் பறிக்கப்பட்டன. இன்றளவிலும் அவர்கள் வாதிரியார்கள் என்ற பெயரில் தமிழகத்தின் நெய்தல் நிலங்களையொட்டிய பகுதிகளிலும் அதை யொட்டிய சமவெளி பகுதிகளிலும் வாழ்கிறார்கள் புத்தர் திருமாலாக உருமாற்றப்பட்டு கடலில் படுத்து கிடப்பதாக கட்டமைக்கப்பட்டார். கடல் கடந்து செல்வது மிகப்பெரிய பாவமென கருதப்பட்டது. அதோடு திரைகடல் ஓடி திரவியத்தையும் பண்பாட்டையும் மெருகேற்றிய தமிழ் குடிகளின் ஓட்டத்திற்கு முடிவு கட்டப்பட்டது.

அறிவுசார் துறைகளில் இருந்த வள்ளுவர், கணியர், தற்போது நாடார் என்றழைக்கப்டும் சாணார் (சமணர் என்பது தான் மருவி சாணர் என்றானது) போன்ற சமூகங்களை சேர்ந்தவர்கள் கல்வி கற்பது தடைசெய்யப்பட்டு அவர்களுடைய உரிமைகள் முற்றிலுமாக இம்மண்ணில் இருந்து புடுங்கி எறியப்பட்டது. சமணர்களுக்கும், பௌத்தர்களுக்கும் இடையேயான வேறுபாடுகள் பிராமணர்களால்  வெகுவாக கூர் தீட்டப்பட்டது. இன்றைக்கு கூட முந்தைய காலத்தில் பௌத்தர்களாக பறையர், பள்ளி போன்ற குடிகளுக்கும் சாணார் என்று திறக்கப்பட்ட சமணர் குடிகளும் பல இடங்களில் ஒத்துப் போவதில்லை. மரபணுக்களின் தொடர்ச்சியோ என்னவோ ?. சமணர்களை கொண்டு பௌத்தர்கள் வேட்டையாடப்பட்டார்கள். பின்பு சமணர்கள் தனிமையாக்கப்பட்ட போது தமிழ் மண்ணில் உருவான மற்றுமொரு கலப்பின குடியான வெள்ளாளர்களால் சைவத்தின் பெயரால் சமணர்கள் கடுமையாக நசுக்கப்பட்டார்கள். அடக்குமுறைகளுக்கு தாக்குபிடிக்க முடியாத சமணர்கள் பலர் இசுலாம் மார்க்கத்தை தழுவினார்கள். ஏனையவர்கள் சாணார்கள் என்று இழித்துரைக்கப்பட்டு பனையேறுபவர்களாக மாற்றப்பட்டனர். பனையும்  பனை சார்ந்த தொழில்களும் இழிவான தென்று பரப்பட்டது அத்தொழிலை செய்தவர்கள் இழிசாதியை சேர்ந்தவர்கள் என்ற பிம்பத்தை ஏனைய மக்களின் மனதில் பிராமணர்கள் உருவாக்கினர். வள்ளுவர்கள் தங்களது நுண்ணறிவுகளை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல உதவிய ஏடுகளை உருவாக்க உதவிய பனையோலைகளை பதப்படுத்தும் தொழில் நுட்பம் முடக்கப்பட்டு அறிவை அடுத்த தலைமுறைக்கு கடத்துவது நெறித்து நிறுத்தப்பட்டது.

 நெசவு தொழில் நுணுக்கங்களில் தேர்ந்த தமிழ் குடிகளின் வாய்ப்புகள் பிடுங்கப்பட்டு விந்திய மலைக்கு அப்பால் சவுராட்டிரத்தில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள்  அவர்களது இடத்தில் அமர்த்தப்பட்டார்கள். ரோம கிரேக்க பேரரசர்களின் மானத்தை மறைக்க துணி நெய்து கொடுத்த தமிழ் குடிகளின் வாழ்வாதாரம் பிடுங்கி எறியப்பட்டது. தமிழ் குடிகள் ஒவ்வொன்றும் தங்களது இருப்பை தக்க வைத்து கொள்ள புதிய புதிய அடையாளங்களை தங்களுக்கு சூட்டிக் கொள்ள ஆரம்பித்தார்கள். அவர்கள் யாரென்ற அறிவு அனுத்துகளை காட்டிலும் சிறியதாக சுருங்க ஆரம்பித்தது

தமிழ் குடிகளை பற்றிய பார்வைகளும் அலசல்களும் விரியும்........

No comments:

Post a Comment