Wednesday, February 11, 2015

கள்ளர் என்பது ஒரு சாதியா ?



                                                    கள்ளர் என்பது ஒரு சாதியே கிடையாது. தமிழகத்தில் இன்று சாதியாக கருதப்படுகிற எல்லா இனக்குழுக்களிலும் உள்ள மக்களை உள்வாங்கி உருவானது தான் அச்சமூகம் . சொல்லப்போனால் கள்ளர் சமூகத்தை அனைத்து சமூக குழுக்களும் சரி விகிதமாய் கலந்து கட்டி உருவாக்கப்பட்ட சமூகம் என்று கூட சொல்லலாம் ....


அதில் சில பட்டபெயர்களையும் அந்த பட்ட பெயர்களில் இருக்கிற சாதிகளின் பெயர்களையும் ஒரு ஒப்புமைக்காக கீழே தருகிறேன்


நாடார் சமூக பெயர்கள் வரும் பட்டப்பெயர்கள்
===========================================
                                                                  ஊமத்தநாடார். ஊமத்தநாடர்., ஊரத்திநாடார், கருப்பற்றியார், கருப்பட்டியார், கரும்பற்றியார், கருப்பட்டியர், காசிநாடர், காசிநாடார், சென்னிநாடர், சேனைநாடர், சேனைநாடார், சோழங்கநாடார், நாடர், நாடார் நாட்டார் நாட்டாள்வார், நாடாள்வார், நாடாவார் பூழிிநாடர், பூழிிநாடார், பனைகொண்டார், பனையதேவர், பனையர், பன்னையர், பன்னையார். பனையாண்டார் பனையாளர் பனையாளியார், பனையாட்சியார.. பனைராயர், சேணர், சாணர், சாணையர் சேணரையர், சாணரையர் சேணாடர், சேணாநாடார், சேனைநாடார், சென்னாடார்
                                       --------------------------x------------------------

பிள்ளை சாதி பட்டப்பெயர்கள்
(இது பல சாதிகளிலும் வழங்கும் பட்டபெயர் தான்
===============================================
                                           கண்டபிள்ளை, கண்டப்பிள்ளை, காடப்பிள்ளை
                                        --------------------------xx------------------------

குறும்பர் , குருபர் (கிருட்டிணகிரி போன்ற பகுதிகளில் வாழ்கிறார்கள்)
================================================================
                                           குறும்பர், குறும்பராயர்
                                       --------------------------xx------------------------


கேரளத்தோடு தொடர்புடைய பெயர்
=================================
                                                    கேரளராயர்,
                                          --------------------------xx------------------------

சிங்களர்களோடு தொடர்புடைய பெயர்கள்
=======================================

                                                       சிங்களநாடர், சிங்கநாடார் , சிங்களப்பிரியர், சிங்கப்பிலியர், சிங்கப்பீலியர், சிங்கப்புலியர், சிக்கராயர், சிங்கராயர், சிங்களராயர், சிங்களர், சிங்களார், சிங்களாளியர், சிங்களாந்தகன், சிங்களேந்தியார்
                                                    --------------------------xx------------------------

தெலுங்கு பேசும் சாதிகளோடு தொடர்புடைய பெயர்
===============================================
                                                          நாய்க்கர், நாயக்கர்
                                                   --------------------------xx------------------------
தேவேந்திரர்கள் என்று அழைக்கப்படும் பள்ளர்களோடு தொடர்புடைய பெயர்
=======================================================================

                                                           பசும்படியார், பசும்பிடியார், பசும்பிடியர், பசுபதியார், பசுபதியர. பஞ்சரமார்
                                                    --------------------------xx------------------------

மீனவ சமூகங்களோடு தொடர்புடைய பெயர்
===========================================
                                                           செட்டியார், செம்படையார், செம்படையர், செம்புடையர்
                                                      --------------------------xx------------------------

வன்னியர்ளோடு தொடர்புடைய பெயர்
=================================
                                                          படைத்தலைவர், படைத்தலையர், படையாட்சி, படையாட்சியார், படையெழுச்சியார்
வன்னிகொண்டார், வன்னிமுண்டார், வண்ணிமுண்டார், வண்ணியமுண்டார் வன்னியர், வன்னியனார்
                                                        --------------------------xx------------------------

பறையர்கள் மற்றும் வள்ளுவர்களோடு தொடர்புடைய பெயர்
==========================================
                                                           பொறையர், இருப்பரையர் , செம்பரையர், பண்டாரத்தார்
                                                        --------------------------xx------------------------
                                                          முதலியார்
                                                        --------------------------xx------------------------
                                                       முத்தரையர்
                                                          --------------------------xx------------------------
                                                        பாப்புரெட்டியார்
                                                         --------------------------xx------------------------
                                                   நன்னியர்,நயினியர், நைனியர், நைனியார்
:
:


                                                                  மற்றுமொரு விசயத்தையும் சேர்த்து கொள்கிறேன் . இந்தியாவில் இருக்கிற குடிகளில் மிகத்தொன்மையான மரபணுக்களை அதாவது ஆப்பிரிக்க மற்றும் ஆசுத்துரேலிய பழங்குடிகளின் மரபணுக்களோடு நெருங்கிய தொடர்புடைய மரபணுக்கள் கள்ளர்களில் "பிரமலை கள்ளர்கள்" என்று அழைக்கப்படும் இனக் குழுக்களில் தான் அதிகமாக காணப்படுகிறது.


விவாதிக்கலாமே ... இப்படியாவது பிளவுண்டு கிடக்கும் தமிழ் சாதிகளை ஒற்றுமை படுத்தலாமா என்று முயற்சிப்போம்.

https://www.facebook.com/anthony.fernando.796/posts/700687370015561



4 comments:

Kallar said...

கள்ளர் வரலாறு
🌹🌹🌹🌹🌹🌹

இச்செந்தமிழ் நிலத்தில் வடக்கில் வேங்கடமலையும் தெற்கில் குமரியாறும், கிழக்கிலும், மேற்கிலும் கடல்களை எல்லையாகக் கொண்ட இத்தமிழ் நிலம் முடியுடை மூவேந்தர் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னரர்களால் ஆளப்பட்டு வந்திருக்கிறது. கள்ளர்கள் தமிழர்களின் ஆதிகுடிகளான நாகர்களின் வழித்தோன்றல் தான் இந்த கள்ளர்கள். தமிழ்நாட்டில் சோழ, சேர, பாண்டிய, பல்லவ மன்னர்களுக்கு பிறகு கி.பி 13 ஆம் நூற்றாண்டில் இருந்த தமிழக வரலாற்றிலும் மக்களாலும் அறியபட்ட சிறந்த தமிழ் மன்னர்கள் கிழவன் சேதுபதி , பூலித்தேவர், வேலுநாச்சியார், மருது பாண்டியர், வாளுக்கு வேலி அம்பலம்.

🌹 கள்ளர்கள் பற்றிய வரலாற்று ஆய்வு செய்திகள் :

🌹 தனி சிறப்பு :
1) எந்த இனத்திற்கும் எந்த சாதியினரும் இல்லாத இவர்களிடம் உள்ள பட்டங்கள்
2) இவர்களது தனிப்பட்ட வளரி ஆயுதமும்.
3) இவர்கள் வாழும் பகுதிகளின் நாடு என்ற அமைப்புகள்.
4) கள்ளர் வீரவிளையாட்டு 'சல்லிக்கட்டு'.
5) தமிழ் மொழி மீதுள்ள ஆர்வம் (நான்காம் தமிழ் சங்கம், கரந்தைச் தமிழ் சங்கம்).
6) நாட்டின் புற மண உட்பிரிவுகள் : வகுப்பு, தெரு, கரை, கிளை என்பன.
7) தலைவன்பட்டம்-அம்பல(க்)காரன், நாட்டான்,
8) குலப்பட்டம்- தொண்டைமான், இராசாளி, நாட்டார், வன்னியன், பிள்ளை, அம்பலகாரன், சம்புவராயன், வாண்டையார், சேர்வைகாரன், சோழகன், பழுவேட்டரையர் மேலும் பல பட்டங்கள்.

இப்படி சிறப்புகளை பெற்ற ஒரு சமுதாயம் இழிபொருள் தரும் பெயரைத் தங்கள் குலப்பெயராக ஏற்பரா?

கள்ளர், கள்வர் சொற்கள் உயரிய பொருளைத் தருவதை நோக்க தலைவர், அரசர், கரியவர், உளம்கவர் பண்பாளர் என்று பொருள் கொள்ளலாம். இவ்வளவு சிறப்புப் பொருள் இருக்கும் போது வாழ்வாங்கு வாழ்ந்து சிறப்பு பெற்ற ஒரு சமுதாயம் இழிபொருள் தரும் பெயரைத் தங்கள் குலப்பெயராக ஏற்பரா? ஏன்று சிந்தித்தால் அவர்களுக்கும் கள்ளர் என்ற சொல் மேற்கண்ட உயர் பொருளிலேயே வழங்கி இருத்தல் வேண்டும். மேலும் அவர்கள் எந்த தொல்குடியை சேர்ந்தவர்கள் என்பதைக் காண்போம்.
கள்ளர்களுக்கு எம்முறையில் இப்பெயர் வழங்கப்படுகிறது என்று சிறிது காண்போம்.

“கள்வனென் கிளவி கரியோனென்ப” – திவாகரம்

“கடகரிப்பெயரும், கருநிறமகனும், கற்க்கடக விராசியும்
ஞெண்டும் கள்வனென்” – பிங்களந்தை

எனவே கள்வன் எனும் சொல் கருநிறம் உடையோன் என்ற பொருளில் வழங்கி வந்துள்ளது. ஆரியரின் இருக்குவேத மந்திரங்கள் தமிழரைக் கரியோர், பகைவர் என்று கூறுகின்றன. இந்திரன் கரியோன் எனப் பெயர் பெற்றவனாவான் அது பற்றியே கள்ளர்கள் தங்களை இந்திர குலத்தார் என்று கூறி வருகின்றனர். சோழர்களை கருநிறம் பற்றியே மால் என்று அழைக்கின்றனர்.

கள்ளர் என்னும் சொல் மிக உயர்ந்த சொல்லாகக் கருதி நாயன்மார்களும் ஆழ்வார்களும் பாடியுள்ளனர்.

"உள்ளங்கவர் கள்வன் என்று என சிவபெருமானை சம்பந்தரும்"

"திருமாலை, கள்ள மாதவா கேசவா,
காரகத்தாய் கார்வானத்துள்ளாய் கள்வா வரி பொழி லாங்கந்தனுள் கள்வனார், கிடந்த வாறும் என திருமாலை திருமொழிப்பிரபதங்களில் ஆழ்வார்களும் குறிப்பிடுகின்றனர்"

மேலும் திருப்பதி வேங்கடாசலபதி பெருமாளின் மனைவி அலர்மேல்மங்கை திருவேங்கடத்தை ஆண்ட கள்ளர் இனத்து முனியத்தொண்டைமானின் மகளாவாள் ( திருமலை மான்மியம்) " தொண்டைமான் கள்ளர் என்பதற்கு ஆதாரம் கீழே காணலாம் "

Show quoted text

Kallar said...

🌹 கள்வர் கள்வன் என்று அழைக்கப்பட்ட அரசர்கள் :

1) சங்ககால மாமன்னன் புல்லி என்பான் வேங்கடத்தை ஆண்டவன். இவனது சிறப்புபெயர் " கள்வர் கோமான்"

2) " கள்வர் கள்வன் பெரும் பிடுகு முத்தரையன் செந்தலைக் கல்வெட்டு" திருக்காட்டுப்பள்ளி-செந்தலைதூண் கல்வெட்டு “வல்லக்கோன், தஞ்சைக்கோன் ஸ்ரீ கள்வர் கள்வன் பெரும்பிடுகு முத்தரையன்.” எனவும் குறிப்பிடுகின்றன.

3) “ வினைநவில் யானை விறற்போர்க் தொண்டையர்
இனமழை தவழு மேற்றரு நெடுங்கோட்
டோங்கு வெள்ளருவி வேங்கடத் தும்பர்” (அகம்.)
என வேங்கடமலைப்பகுதியை ஆண்ட தொண்டைமானைப் பற்றியும் குறிப்பிடுகின்றன.

4)“ கள்வர் பெருமகன் – தென்னன்”

" கள்வர் கோமான் தென்னவன்”
என அகநானூறு பாண்டிய மா மன்னனையும்

5) "இவனென் னலங்கவர்ந்த கள்வ னிவனெனது நெஞ்ச நிறையழித்த கள்வனென்" என முத்தொள்ளாயிரம் சேர மா மானைப் பற்றியும்

6) "மடல்சூழ்ந்த தார்நம்பி யிடங்கழிக்கும்” (சுந்தரர் திருத்தொண்டர்தொகை)

7) "கோனாட்டுக் கொடும்பாளூர் வேளிர் குலத்து அரசன்
ஆதித்தன் புகழ் மரபிற்குடி முதலோன்”(சேக்கிழார்-பெரியபுராணம் பக்.491)

8) "களப ராஜராஜன்”
“ கள்வன் ராஜராஜன்”
என மெய்க்கீர்த்தி கல்வெட்டு இராண்டாம் இராசராச சோழனை களபர்-கள்வன் எனவும்

9) “ கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான் மழபுலம் வணக்கிய மாவண் புல்லி விழவுடை விழுச்சீர் வேங்கடம்” (அகம்.61)

10) மாஅல்யானை மறப்போர்ப் புல்லி காம்புடை நெடுவரை வேங்கடம்” என கல்லாடனார் வேங்கடமலைப்பகுதியை ஆண்ட புல்லியைப் பற்றியும் குறிப்பிடுகின்றன.

11) சீவக சிந்தாமணி 741ம் செய்யுளில் உள்ள

“ கள்ளராற் புலியை வேறுகாணிய ” என்ற

தொடருக்க அரசனைக் கொண்டு சீவகனை போர் காண வேண்டி என்று பொருள் கண்டார் உச்சிமேற்புலவர் நச்சினார்கினியர் இங்கே கள்ளர் என்பதற்கு அரசர் என பொருள் கண்டார். சீவகனைப் புலி என்று கூறியதற்கு ஏற்ப அரசரைக் கள்ளர் என்றார் எனின் இங்கு வீரத்தின் மேம்பட்டார் என்று பொருள் படுகிறது. எனவே வீரம் எனும் பொருள் பற்றியே கள்வர், கள்ளர் என்ற பெயர்கள் தோன்றியதாகத் தெரிகிறது.

இதில் இருந்து சேர, சோழ, பாண்டிய மா மன்னர்களும், தொண்டைமான், புல்லி, முத்தரையர் போன்ற மன்னர்களும் பழந்தமிழ் இலக்கியங்களிலும் கல்வெட்டுக்களிலும் கள்வர், கள்ளர் எனக்குறிப்பிடப்பட்டுள்ளார்கள்.
(குறிப்பு : எந்த மன்னர்களும எந்தக் குறிப்பிட்ட சாதியையும் சேர்ந்தவர்கள் இல்லை எல்லாம் இன கலப்பு தான் ).

கள்ளர் குடியினர் தம் இயற்பெயருடன் சுமார் ஈராயிரம் பட்டப் பெயரையும் கொண்டு விழங்குகின்றனர். உலக வரலாற்றில் ஈராயிரத்திற்கு மேல் பட்டப்பெயருள்ள எந்த சமுதாயமோ குடிகளோ இல்லை என்பதும் வரலாறு. இன்றைய நிலையில் பல பட்டங்கள் எதுவித மற்றமும் இன்றியும் சில பட்டங்கள் சிறிது மாற்றத்தோடும் கானப்படுகின்றன.

🌹 குறிப்புகள் -1 : அறிஞர்கள் கள்ளர்களை பற்கூரிய கருத்துக்கள்

1) முடியுடை மூவேந்தருள் சோழர்கள் கள்ளர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று பர்னலும், வெங்காசாமி ராவ் அவர்களும் குறிப்பிட்டுள்ளனர்.

2) மு. சீனுவாச அய்யங்கார் சோழரை சாதியில் கள்ளர் என்றும் பாண்டியரை மறவர் என்றும் குறிப்பார்.

3) வின்சன் ஸ்மித் எனும் வரலாற்று அறிஞர் கள்ளரையும், பல்லவரையும் இணைத்துக் கூறுவார்.

4) சர்.வால்டர் எலியட் கள்ளர்கள்களை கலகத் கூட்டத்தார் என்றும் அவர்கள் ஆண்மை, அஞ்சாமை, வீரம் முதலிய பண்பு மிக்கவர்கள் என்பார்.

5) கள்ளர்கள் நாகர் இனத்தவர்என்று அறிஞர் வி. கனகசபை பிள்ளை அவர்களும் நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்களும் கூறுவர்.

6) கள்ளர்கள் தமிழகத்தின் வீரமிக்க தனித்தமிழ்த் தொல் குடியினர் என்று மொழி ஞாயிறு பாவாணர் கூறுவார்.

7) "கல்தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்த குடியினர் " என்று வழக்கறிஞர் சுந்தரராசன் கூறுவார்.
மேலும் கல்லில் தோன்றியதால் கல்லர் என்று குறிப்பதே சிறப்பு என்பார் தமது தரணியாண்ட தமிழ் வள்ளல்கள் என்ற நூலில்.

Kallar said...

கள்வெட்டு ஆதாரம் :

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியிட்டுள்ள "காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்" என்ற நூலில் உள்ள கல்வெட்டு தொடர் எண் : 01/1999, கிழ் கண்ட பெயரை குறிப்பிடுகிறது. இக் கல்வெட்டின் காலம் கி.பி. 8-9 ஆம் நூற்றாண்டு ஆகும் :-

"கொங்கரையர் கள்ளப் பெருமானார் தேவியார் கொங்கச்சியார்"

"கலிக்கம்பசேரி பள்ளி கொங்கரையன் சிவக்கொழுந்துக் கண்ணப்பன்"

கொங்கரையர் பட்டம் கள்ளர்களுக்கு மட்டும் தான் இருக்கிறத மேலும் அதில் உள்ள பள்ளி என்பது இடத்தை குறிக்கும் சாதியை அல்ல.
&&&& &&&&&&& &&&&

இடம் : தருமபுரி
ஊர் : மூக்கனூர்
தொடர் எண் : 115/1974
வரலாறு ஆண்டு : 10ஆம், 11ம் நூற்றாண்டு

ஸ்ரீ கள்ள சோழன் ராஜநன்

Kallar said...

தமிழ் நாடு அரசுகள்
================
ஆட்சி 2050 வருடம் - பாண்டிய அரசு (தமிழ் பாண்டியன்) : கி.மு.600–கி.பி.1550

ஆட்சி 1579 வருடம் - சோழ அரசு (தமிழ் சோழன்) : கி.மு.300–கி.பி.1279

ஆட்சி 1424 வருடம் - சேர அரசு (தமிழ் சேரன்) : கி.மு. 300 –கி.பி.1124

ஆட்சி 622 வருடம் - பல்லவ அரசு (தமிழ் & தெலுங்கு பல்லவன்) : கி.பி.275–கி.பி.897

ஆட்சி 409 வருடம் - யாழ்ப்பாண அரசு ( தமிழ் சேது ) : கி.பி.1215–கி.பி.1624

ஆட்சி 400 வருடம் - களப்பிர அரசு (பாளி களப்பாளன்) : கி.பி 300- கி.பி. 700

ஆட்சி 389 வருடம் - பூழி நாடு (தமிழ் மறவர்) : கி.பி.1378 -கி.பி.1767

ஆட்சி 333 வருடம் - சேதுபதி அரசு (தமிழ் மறவர்) : கி.பி.1590-கி.பி.1923

ஆட்சி 310 வருடம் - விஜயநகர அரசு (தெலுங்கு,கன்னடம் நாயக்கர்) : கி.பி.1336–கி.பி.1646

ஆட்சி 281 வருடம் - பிரெஞ்சு குடியரசு (பிரெஞ்சு): கி.பி.1673–கி.பி. 1954

ஆட்சி 262 வருடம் - கள்ளர் குல தொண்டைமான் அரசு (தமிழ் கள்ளர் ) : கி.பி.1686 - கி.பி.1948

ஆட்சி 254 வருடம் - வெள்ளையர்கள் (ஆங்கில) : கி.பி.1693 - கி.பி.1947

ஆட்சி 241 வருடம் - முத்தரையர் அரசு (தமிழ் முத்தரையன்) : கி.பி.610 - கி.பி.851

ஆட்சி 207 வருடம் - மதுரை நாயக்கர் அரசு (தெலுங்கு நாயக்கர்): கி.பி.1529 - கி.பி.1736

ஆட்சி 181 வருடம் - மராட்டிய அரசு (மராட்டி) : கி.பி.1674–கி.பி.1855

ஆட்சி 141 வருடம் - தஞ்சாவூர் நாயக்கர்கள் (தெலுங்கு நாயக்கர்): கி.பி.1532–கி.பி.1673

ஆட்சி 139 வருடம் - சம்புவரைய அரசு (தமிழ் சம்புவரையன் ) : கி.பி.1236- கி.பி.1375

ஆட்சி 43 வருடம் - மதுரை சுல்தான் (உருது துலுக்கர்): கி.பி.1335–கி.பி. 1378.

மூவேந்தர்களுக்கு பிறகு தமிழ் நாட்டை ஆண்ட ஒரே மன்னர் இனம் முக்குலத்தோர் மட்டுமே.

Post a Comment