Thursday, October 27, 2011

ஏழாம் அறிவு போதித்த போதி தர்மரும் தமிழர்களும்

ஏழாம் அறிவு..... இங்க ஐந்தறிவே பலருக்கு இருக்குதா என்பது வேறு விடயம்..... படத்திற்கு தமிழர்களிடையே போதிதர்மரை மையப்படுத்தி செய்யப்படும் விளம்பரங்களை பார்க்கும்போது நல்லாத்தான்யா வியாபாரம் பண்ணுறாய்ங்க என்று தான் தோணியது. தமிழனோட அறியாமையையும், அடிக்கடி தனக்கு தானே ஏற்படுத்தி கொள்கிற உணர்ச்சியின் உச்சகட்டத்தையும் வைத்து தமிழ் திரைப்பட துறையினர் நல்லாவே கல்லா கட்டுறாங்க என்பது தான் சமீப காலமாக அவர்கள் நடந்து கொள்ளும் விதத்தில் இருந்து தெரிகிறது.

அதுவும் ஏழாம் அறிவு, போதி தருமர் தமிழர் (அவர் காஞ்சி புறத்தை சேர்ந்த புத்த துறவி என்பதை தவிர அவரது பிறப்பு பற்றிய முழு உண்மைகளும் அறியப்படவில்லை என்பது வேறு விடயம்) என்றும், அவரது பெருமை பேசுகிற படம் என்பதால் ஒவ்வொரு தமிழனும் காலரை தூக்கி விட்டு கொள்ளலாம் என்றும் விளம்பரம் வேற. முக்கால்வாசி தமிழனுங்க முதுகெலும்பில்லாத புழுக்களை போல் தான் பார்ப்பனிய குட்டையில் நெழிகிறானுங்க என்பது வேறு விடயம். சரி போதி தர்மரை பற்றி ஒழுங்கா சொல்லி இருக்கிறானுங்கன்னா அதுவும் அரைகுறையாக தான். அவரு ஏதோ போகிற வழியில் புத்த மதத்தை ஏற்று கொண்டவர் போல காட்டி இருக்கிறானுங்க. அனால் அவர் காஞ்சிபுரத்தில் தங்கி இருந்து புத்த கொள்கைகளை பரப்பியவர் என்பதையோ, புத்த கொள்கையாளர்கள் ஏற்படுத்திய உலகின் முதல் பல்கலைக்கழகமான நாளந்தாவில் போதித்தவர் என்பதையோ, தமிழகத்தில் புத்த மதம் தளைத்தோங்கி இருந்ததையோ இல்லை காஞ்சிபுரம் தான் தென்னிந்தியாவில் புத்த மதத்தின் தலைமை பீடமாகவும் இருந்தது என்பதை பற்றியோ மூச்சு விடாமல் அப்படியே மூடி மறைத்து விட்டானுங்க. பின்னே புத்த விகாரத்தை இடித்துத்தான் காமகேடிகளின் மடம் கட்டப்பட்டது என்பது போன்ற விவகாரமான செய்திகள் தமிழன் தெரிந்து சுய உணர்வு பெற்று விடக்கூடாதே.

From Profile Photos

இந்த படம் உண்மையிலேயே போதி தர்மர் பற்றிய பெருமைகளை பேசும் படம் என்றால் அப்படத்தில் போதி தருமரை கொண்டாடுகிற சீனர்களை வில்லனாக காட்டுவதற்கு பதில் ஏதாவது நல்ல பாத்திரத்தில் காட்டி இருக்க வேண்டும். அதை விட்டு விட்டு சீனாக்காரர்களை ஏதோ தமிழர் விரோதி போல் காட்டி இந்திய தேசியத்திற்கு விளக்கு பிடித்து கொண்டே தமிழனின் உணர்ச்சிக்களை முதலீடாக வைத்து காசு பார்க்க முனைந்து இருக்கிறார்கள்.

இடைக்காலத்தில் எத்தனையோ போதி தருமர்களாக திரிந்த தமிழர்களை அவர்கள் புத்த சமண மதத்தை சேர்ந்தவர்களாக இருந்த ஒற்றை காரணத்தினால் கழுவிலேற்றி கொன்ற வெறியர்கள் கொண்ட மண் தான் இது என்பதை பற்றி எத்தனை பேர் பேசுவார்கள், அதை எண்ணி வெட்கி நாணுவார்கள். ஒரு போதி தர்மனை ஆதரித்த சீனர்கள் உலக வல்லரசாய், கணக்கிலடங்கா போதி தர்மர்களை கொன்றழித்த இம்மண் வல்லரசுகளின் நிரந்தற அடிமையாய். இதை தான் ஊழி வினை பயன் என்று சொல்வார்களோ.

இப்ப கொஞ்சா நாளா இந்திய தேசியத்துக்கு விளக்கு பிடிக்கிற புண்ணாக்குகள் சீனாகரனையும் தமிழர் விரோதியாக வர்ணம் தீட்டி கொண்டு இருக்கிறார்கள். தமிழனுக்கும் சீனனுக்கும் ஏதோ பரம்பரை பரம்பரையாக வாய்க்கா வரப்பு தகராறு இருக்கிறது போல். ரெண்டு பேருக்கும் பொதுவான எல்லை கூட கிடையாது. சீனாகாரனிடம் இருந்து காத தூரத்தில் இருக்கிறோம். உடனே சில அல்லக்கைகள் ஈழ தமிழனை அழிப்பதற்கு சிங்களனுக்கு சீனாகாரன் தானே ஆயுதம் கொடுத்தான் என்று துரப்பை தூக்கி கொண்டு வரும்ங்கள். அட பதருகளா இந்தியாவிடம் சரணடைந்து கிடந்ததால் தானே சீனாகாரன் சிங்களனுக்கு உதவி செய்தான். தமிழ்நாட்டில் இருந்து சென்ற ஒரு போதி தர்மரை கொண்டாடுகிறவர்களிடம் தமிழன் நேரில் சென்று உதவி கேட்டு இருந்தால் மறுத்திருப்பார்களா என்ன ? . இப்போது தமிழ்நாட்டுக்கும் சேர்த்து அல்லவா விடுதலை வாங்கி தந்து இருப்பார்கள்

.

பள்ளிக்குள் விளையாடி கொண்டிருந்த புத்த சமண பிள்ளைகளை கிள்ளி ..... மன்னிக்க கழுவில் ஏற்றியவனுங்களை பள்ளியை இடித்து கோவிலாக மாற்றி உள்ளே அனுப்பி வைத்து விட்டு வெளியில நின்று பிள்ளைக்காக அழுகிற பொறம்போக்காக தான் தமிழன் திரியுறான். போகி பண்டிகை கூட தமிழர்களின் இலக்கிய ஏடுகளை கொளுத்தி போடும் விழாவாக பார்ப்பனிய வெறியர்களால் ஏற்படுத்தப்பட்ட ஓன்று என்றும் படித்து இருக்கிறேன். பெரும்பான்மையான அந்த நல்வழி கூறும் தமிழ் இலக்கியங்கள் புத்த சமண கொள்கையாளர்களால் இயற்றப்பட்டவை என்பது குறுப்பிடத்தக்க ஓன்று. இப்படி இவனுங்க துரத்தி விட்ட புத்தத்தையும் சமணத்தையும் கொண்டாடாடுகிறவனுங்க (உபயம் சீனரும், குசராத்தி அடகுக்கடை சைனரும்) வைக்கிற ஆப்பிற்கு வசதியாக குனிந்து கொடுத்து கொண்டு நிற்கிறான் ஈன தமிழன்.

தவிச்ச வாய்க்கு தண்ணி ஊத்தாமல் இருந்து விட்டு செத்ததற்கு அப்புறம் நல்லா தண்ணிய போட்டுட்டு செத்தவனுக்கு வாயில பாலூத்தி அழுகிறவன் பெயர் தான் தமிழனா . அது புத்தனா இருந்த தமிழனை துரத்தி துரத்தி கழுவில் ஏற்றி கொல்லப்படும் போதும் சரி, ஈழத்தில் கொத்து கொத்தா அறுத்து எறியப்படும் போதும் சரி தமிழன் ஒரே மாதிரியாக தான் இருக்கிறான். இப்ப புதுசா போதி தர்மருக்காக கண்ணீர் வடிக்கிறானுங்க.

பார்ப்பனியத்திற்கு அடி வருடுவதையே பிறவி பயனாக நினைக்கிற பயலுக படம் எடுத்தால் நவக்கிரகத்தோட புனிதம், துளசியின் மகிமை, இடஒதுக்கீடு செய்யும் அட்டூழியம் என்பது போன்ற கருத்துக்களை தான் திணிப்பானுங்க. அதிலேயும் பெரிய கொடுமை என்னவென்றால் அம்பேத்கர், பெரியார், காமராசர் போன்ற போராளிகளின் போராட்டத்தால் விளைந்த பயன்களை அனுபவித்தவனுங்க தான் கருத்து சொல்கிறோம் என்று அவர்களுடைய போராட்டத்தை கொச்சைப்படுத்துகிறானுங்க. இவற்றையெல்லாம் பார்க்கும் நேரத்தில் ஐயோ இந்த மொள்ள மாறிகளுக்காகவா அந்த போராளிகள் தங்களுடைய வாழ்வை தியாகம் செய்து கொண்டார்கள் என்று நெஞ்சம் கொஞ்சம் அதிகமாகவே கனக்கிறது. ஒருவேளை அவர்கள் போராடாமலிருந்தால் இவனுங்க மூதாதையர்களை போல் இவனுங்களும் இப்ப கோவணம் கட்டி கொண்டு தான் அலைந்து இருப்பானுங்க.

இதுல மற்றுமொரு கூட்டம் போதி தர்மரை தமிழனுக்கு அறிமுகப்படுத்திய முருகதாசிற்கு நாம் எல்லாரும் நன்றி கடமைப்பட்டவர்கள் என்ற அளவிற்கு மூளை உருகி கதறுகிறார்கள். அட பாவிங்களா போதி தர்மரை பற்றி படம் பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டுமா. அவரை ஏதோ திரைப்படத்தில் அறிமுகப்படுத்தபடும் புது கதாநாயகனை போல அல்லவா பாவிக்கிறாங்க. தமிழர்கள் எந்த அளவிற்கு ஞான சூனியமாக போய் கொண்டு இருக்கிறார்கள் என்பதை தான் இது போன்ற நிகழ்வுகள் வெளிச்சம் போட்டு காண்பிக்கிறது. புனையப்பட்ட புராண கட்டுக்கதைகளை வரலாறென்று நம்பி கொண்டு அலையும் கூட்டங்களுக்கு மத்தியில் உண்மையான வரலாறு படுகின்ற பாடு ஈழத்தமிழன் படும்பாட்டை விட கொடுமையாக இருக்கிறது.

அதிலும் முகநூலில் முருகதாசின் புகழ் பாடும் நண்பர் ஒருவரிடம் போதிதர்மரை பற்றி படம் எடுத்து தமிழரை பெருமை படுத்தி இருக்கிறோம் என்று விளம்பரம் செய்யும் முருகதாசு அந்த வரலாறையே திரித்து சொல்லி இருக்கிறாரே என்று கேட்டால், அட போங்க நீங்க அவரு என்ன டாக்குமென்ட்ரியா எடுத்தார், வரலாற்றை பற்றி படம் எடுக்கும் போது அப்படி இப்படி அட்ஜஸ்ட் பண்ணினா (கதை டிச்சு கிச்சனின் போது நடிகைங்களிடம் வேண்டி கொள்வது போலவோ என்னவோ) தான் காசு பார்க்க முடியும் . காளிவுட்காரன் கூட சமுராயிகளின் வாழ்வை திரித்து தான் படம் எடுக்கிறான் என்று விளக்கம் கொடுக்கிறார். யோவ்.... காளிவுட்காரன் தானே சாமுராய்களோட வரலாற்றை திரித்து படம் எடுக்கிறான், சாப்பான்காரனா எடுக்கிறான் என்று அறிவு பூர்வமாக கேள்வி கேட்க கூடாது. அப்படி கேள்வி கேட்பது தமிழனுக்கு இழுக்கு என்பது இங்கு எழுதப்படாத சட்டம். காசு பார்ப்பதற்காக நாங்கெல்லாம் பெத்த ஆத்தாளுக்கே புது புருசனையும் புது வரலாற்றையும் கொடுத்து பெருமைபடுவோம் என்று சொல்லி கொள்கிறவனுங்க படம் எடுக்கிற போதும் அதை ஆதரிக்கிறவங்க இருக்கிற போதும் நாம என்ன கத்தினாலும் எடுபடாது

பேசாமா பிள்ளைங்களை (உடனே அந்த சாதிகாரனை மட்டும் தான் பள்ளி கூடத்திற்கு... சீ.. சீ..... திரைப்பட கூடத்திற்கு அனுப்ப வேண்டுமா என்று கேட்க கூடாது) பள்ளி கூடத்திற்கு அனுப்புவதற்கு பதிலாக தினமும் எதாவது ஒரு படத்திற்கு நுழைவு சீட்டு எடுத்து திரைப்பட கூடத்திற்கு அனுப்பி விட்டு விடலாம் போல. இலவசமாக கல்வியை குடுத்த ஐயா காமராசர் எல்லா ஊர்களிலும் கட்டாயமாக ஒரு நூலகம் இருக்க வேண்டும் என்று சட்டம் இயற்றாமல் விட்டு விட்டாரோ என்று தோன்றுகிறது. நிறைய எழுதலாம் என்று நினைக்கிறேன், ஆனால் இப்போதைக்கு இது போதும்.

மற்றுமொரு பரமக்குடியா.... தாங்காதுடா பூமீ....

அக்தோபர் 30 திகதியோ அதற்கு முன்போ ஏதாவது பிரச்சினையை உருவாக்கி மறுபடியும் ஒரு பரமக்குடியை உருவாக்க ஒரு சாதி சங்கம் திட்டமிட்டு வருகிறதாம். அந்த திட்டத்திற்கு பின்பிருந்து சுதி ஏற்றி ஆட்டுவிப்பது சாதீய வெறி கொண்டு நடனமாடும் ஒரு ராசனாம். அதை தொடர்ந்து வன்முறையை காரணம் காட்டி குறுப்பிட்ட மக்கள் மீது அதிகார வர்க்கத்தில் இருந்து தொடுக்கப்படும் தாக்குதலுக்கு தலைமை ஏற்க மற்றொரு ஆதிக்க சாதி காவாலிகளிடையே போட்டோ போட்டி நடக்கிறதாம். எல்லாம் பரமக்குடி கொடூரத்தை செயல்படுத்திய காவாலிகளுக்கு அரசை ஆட்டுவிப்பவர்கள் கொடுத்த மரியாதை தான் காரணமாம்.


சட்ட கல்லூரியில் பண்ணிய சண்டித்தனத்திற்கு வாங்கி கட்டி கொண்டதினால் ஏற்பட்ட அவமானத்தின் வடு அந்த அசிங்கங்களுக்கு இன்னும் மறையவில்லையாம். அதற்கு பதில் எதிர் தரப்பினருக்கு பெரிய அளவில் இழப்புகளை ஏற்படுத்தும் வரை தூங்க மாட்டோம் என்று வரிந்து கட்டி கொண்டு அலைகிறதாம் அந்த கேவலங்கள்.

சாதி வெறியர்களின் மனதில் கொழுந்து விட்டு எரிகிற வெறிக்கு எண்ணெய் ஊற்றுவது போல், சமீபத்தில் மணியை சூப்புற சாமி ஒருத்தன் சாதி வெறியர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டு ந்த வெறியை தன்னுடைய பேச்சுக்களால் மேலும் ஏற்றி விட்டு இருக்கிறானாம். அவனது திட்டத்தின் படி கிருட்டிணனின் வம்சாவழி என்று கூறி கொள்கிற சாதியினரையும் சேர்த்து கொண்டு வெறியாட்டத்தை நடாத்தினால் எதிர்த்தரப்பினரை திக்குமுக்காட செய்து விடலாம் என்றும், அந்த எதிர்த்தரப்பை சேர்ந்த சாதியினரின் மீது தமிழகத்தில் உள்ள ஏனைய சாதியினர் கடுங்கோபத்தில் இருக்கிறார்கள் என்பது போன்ற எண்ணத்தையும் பொதுமக்களிடையே ஏற்படுத்தி விடலாம் என்றும் மணி அடித்து இருக்கிறானாம் அந்த சூப்பிகொண்டு அலையுற பயல்.

முப்பதாம் தேதி நடக்கும் அந்த விழாவிற்கு அகில இந்திய அளவில் இருந்து உயர்சாதியை சேர்ந்த அரசியல் தலைவர்களையும் சாதி சங்க தலைவர்களையும் அழைத்து வருவது தன்னோட பொறுப்பு என்றும் சாதி வெறியர்களின் காதில் சங்கூதி இருக்கிறானாம்.


விவரம் தெரிந்த பட்சி ஒன்று கசிய விட்ட தகவல். பாதிக்கபட போகிறவர்களுக்கு தகவலை சொல்லி எச்சரிக்கையாக இருக்க சொல்லுவது நலம் என்று எண்ணுகிறேன்


...... ம்ம்ம்ம்ம்ம் தமிழர்களை ஒருத்தனுக்கு எதிராக மற்றவனை ஏவி விட்டு ஒட்டு மொத்த தமிழ் இனத்திற்கும் சங்கூதுவதில் பார்ப்பனிய வேசைகள் இடைக்காலத்தில் புத்த சமணர்களை கொலை செய்ய எப்படி தீவிரித்து அலைந்தானுன்களோ அதே போக்கில் தான் இப்போதும் இருக்கிறானுங்க

Tuesday, October 25, 2011

உள்ளாட்சி தேர்தல் தோல்வியால் விசுக்கி காந்தம் கவலையா ?

யாராவது இப்படி மேல் உள்ள தலைப்பில் உள்ளபடி விசுக்கி காந்தத்திற்க்காக கவலைபட்டால் உங்கள் கவலைகளையெல்லாம் மூட்டை கட்டி குப்பை தொட்டியில் எரிந்து விடுங்கள். உங்கள் கவலைகளை தெருக்களில் சுற்றி வரும் சொறி நாய்கள் பிய்த்து ஆய்வு செய்யட்டும்.


விடயத்திற்கு வருவோம் கருப்பு எமுசியாருக்கு தேர்தல் தோல்விகளை பற்றிய கவலையை விட உள்ளாட்சி தேர்தலில் விசுக்கி அவரோட கட்சியின் சார்பாக போட்டியிடுவதற்காக விலைக்கு விற்கப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் ஏலத்திற்கு விடப்பட்ட வேட்பாளர் இருக்கைகளின் மூலமாகவும் மூட்டை கட்டப்பட்ட பணத்தை எப்படி பதுக்குவது என்ற கவலை தான் ஆட்டி படைக்கிறதாம். ஆத்தாவுடைய அடுத்த அம்பு கருப்பு எமுசியாருடைய உடைய கருப்பு பணத்தை நோக்கி தான் பாயுமாம். பின்ன கோடிக்கணக்கில் கணக்குக்கு வராத பணத்தை விசுக்கி உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர் தேர்வுகள் மூலமும் அவரோட சாதி சங்க வள்ளல்களிடம் இருந்து வந்த அன்பளிப்புகள் மூலமும் மூட்டை கட்டியதை மோப்பம் பிடித்து விட்ட ஆட்டையை போடுவதில் ராணியான ஆத்தா சும்மா விடுவாங்காளா என்ன.


இதுல வேற மற்றொரு குடைச்சல் அவரோட சாதியை சேர்ந்த கட்சி வேட்பாளர்களாலே அண்ணனை நோக்கி அனுப்பபடுகிறது. விசுக்கி தேர்தல் செலவுக்கு வசூலித்த காசை வேட்பாளர்களிடம் கொடுக்காமல் பதுக்கி விட்டதை கட்சியில் உள்ள வேற சாதி வேட்பாளர்கள் வேண்டுமென்றால் எம்.எல்.ஏ, மற்றும் அமைச்சர் கனவுகளுக்காக பொறுத்து கொள்வார்கள் , ஆனால் விசுக்கியோட சாதிகாரங்களால முடியாதே. ஏற்கனவே தோற்ற விரக்தியில் இருக்கும் அவர்கள் அண்ணன் இப்படி காசை அமுக்கி விட்டார் என்று தெரிந்ததும் குமுறி கொண்டு இருக்கிறார்கள். அண்ணன் போட்ட ஆட்டையை அண்ணனுக்கு பெருமளவில் பணப்பட்டுவாடா செய்த, கிடைக்க உதவிய அந்த சாதி சங்க பிரமுகர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் செய்தியாக தட்டி விட்டு கொண்டே இருக்கிறார்களாம்.

From 26 October 2011


பின்ன விசுக்கிக்கு உள்ளாட்சி தேர்தல் நிதியாகவே ரூபாய் 200 கோடிகளுக்கும் மேல் ( இது குறைந்த பட்ச அளவிலான மதிப்பீடு தான். அதிகபட்சமாக இதற்கு மேலும் செல்லலாமாம் ) கிடைத்து இருக்கிறது. கிடைத்த வசூலில் தேர்தல் தோல்வி பற்றிய கவலையை எல்லாம் கழிவறையில் ஊற்றி கடாசி விட்டவருடைய ஆனந்த குத்தட்டத்திற்கு தடையாக இருப்பதே கிடைத்த கணக்கில் வராத கருப்பு பணத்தை எப்படி வெள்ளை பணமாக மாற்றுவது என்று அவ்வபோது ஆட்கொள்ளும் கவலை தானாம். கருப்பு எமுசியாராக தனக்கு தானே பட்டம் சூட்டி கொண்ட விசுக்கிக்கு இப்போது கருப்பை வெள்ளையாக மாற்றுவது தான் பெரும்பாடாக இருக்கிறது. தங்களோடு உள்ளாட்சி தேர்தலில் கூட்டு வைக்காத கடுப்பினால் காங்கிரசாரும் கருப்பு எமுசியாருக்கு எதிராக டெல்லிக்கு செய்திகளை அனுப்பி குவித்து கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசு அண்ணன் மீது வருமான வரி சோதனையை முடுக்கி விட்டாலும் இப்போது ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.


அதிலேயும் அம்மாவும் சின்னம்மாவும் கருப்பு எமுசியாறு சமீபத்தில் பண்ணிய அலப்பரையை பார்த்து விட்டு விசுக்கியோட கட்சியை பிரித்து மேய்ந்து தரைமட்டமாக்கும் வெறியில் இருக்கிறார்களாம் அநேகமாக அது சொத்து குவிப்பு வழக்கில் இருந்து தற்காலிக நிவாரணம் பெற்றவுடன் அந்த ஆட்டம் ஆரம்பிக்கப்படுமாம். பெரியதாயியை விட சின்னத்தாயி தான் ரொம்ப அவசரப்படுகிறாராம். அவங்க கணக்கு என்னன்னா அகில இந்திய அளவில் வலுவான அரசியல் பின்னணி கொண்ட சாதியை சேர்ந்த விசுக்கியை தமிழகத்தில் வளரவிட்டால் அது தமிழக அரசியலில் அவிங்க சாதியோட ஆதிக்கத்தை மட்டுபடுத்தி விடும் என்ற பயம் தானாம். உரலுக்கு ஒருபக்கம் இடின்னா விசுக்கிக்கு எல்லா பக்கமும் இடி.


இப்படி இதுவரை சினிமாவில் வரிகட்டாமல் கருப்பு பணத்தை பதுக்கிய வித்தையை கட்சி துவக்கி அரசியலிலும் வந்து காட்ட ஆரம்பித்திருக்கிற இவருடைய பிறந்த நாளை அவருடைய தூண்டுதலில் அவருடைய அல்லக்கைகள் வறுமை ஒழிப்பு நாளாக கொண்டாடுவது தான் மகா கொடுமை. வேட்டிக்கு வழி இல்லாமல் கோவணம் கட்டி கொண்டு அலைபவன் முன்னாடி அவுத்து போட்டு ஆடுகிற இவனுங்களுக்கு அதை அறுத்து கடாசினால் தான் அடங்குவானுங்க போல.

Saturday, October 22, 2011

அப்துல் கலாம் என்ற ஒரு விளம்பர பிரியர்

சமீபத்தில் தோழர் அருள் எழில் தன்னுடைய முக நூலில் அப்துல் கலாமை கோமாளி என்று விமர்சித்ததற்காக அவர் மீது இந்திய காதலர்கள் பாய்ந்து பிராண்டி இருந்தார்கள், அதை ஒட்டி என்னுள் எழுந்த ... அப்படி என்ன அப்துல் கலாம் சாதித்து விட்டார் என்ற கேள்வியும், அவருடைய முகமூடியையும் கழட்டி உள்ள என்ன தான் இருக்கு என்று மற்றவர்களுக்கு காட்டி விட வேண்டும் என்ற எண்ண ஓட்டமுமே நான் இந்த கட்டுரைய எழுதுவதற்கு காரணமாக அமைந்து விட்டது.

பெரும்பாலான இந்திய அடிமைகளுக்கும், பொது புத்திகளுக்கும் அப்துல் கலாம் என்ற பெயரை உச்சரித்த உடனே கும்பி கும்மி அடிக்க ஆரம்பித்து விடுகிறது . அப்துல் கலாம் என்ற ஒரு பிம்பமே அவர் வேலை செய்த பாதுகாப்பு துறையில் ஊழல் செய்வதில் உலக சாதனை புரிந்து கொண்டிருக்கும் பார்ப்பனிய அம்பிகளால் உருவாக்கப்பட்ட ஒன்றே. ஆரம்ப காலத்தில் இருந்தே அப்துல் கலாம் தன்னை பார்ப்பனியத்தொடு அடையாளப்படுத்தி கொள்ளுவதில் சுய இன்பம் கண்டவர் என்பது அவரை உற்று கவனித்து இருப்பவர்களுக்கு நன்கு புலப்படும் . அந்த பார்ப்பனிய காதல் தான் சாதாரண தொழில் நுட்ப வல்லுனரை இந்திய பாதுகாப்பு துறையின் ஆலோசகர் என்ற உயரத்திற்கும், இந்தியாவின் உயர்ந்த அலங்கார பதவியான குடியரசு தலைவர் பதவிக்கும் இட்டு சென்றது.
ஊழலை ஒழிக்க வேண்டும் என்று சாமியார் மடத்தில் பஜனை பாடுவது போல் அறிவுரை எடுக்கும் இந்த ஆத்மாவின் காலத்தில் அவரது தலைமையின் கீழ் இருந்த பாதுகாப்பு துறையில் பார்ப்பனிய அம்பிகள் ஊழலில் புகுந்து விளையாடினார்கள், இன்றளவிலும் விளையாடி கொண்டு இருக்கிறார்கள் என்பது அவருக்கு தெரிந்தும் அதை பற்றி கண்டு கொள்ளாமல் உடம்பில் உள்ள அத்துணை ஓட்டைகளையும் பொத்தி கொண்டு இருப்பது ஏனோ. பார்ப்பனிய அம்பிகள் கோலேச்சும் பாதுகாப்பு மற்றும் விண்வெளி துறைகளையும் அது சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்களையும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று இந்த உத்தமர் குரல் கொடுக்க வேண்டியது தானே அங்க தான் சூட்சுமம் இருக்கிறது அப்துல் கலாம் தன்னை பிரதிநிதப்படுத்துவதற்கு யாருடைய காலையும் கழுவுவதற்கு தயங்க மாட்டார். அப்படி இருக்கையில் அவர் பார்ப்பனிய அம்பிகளின் பகையை எக்காலத்திலும் சம்பாதிக்க விரும்ப மாட்டார்.

From 23 October 2011


கல்வியில் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு என்ற சமூக நீதியை ஒழித்து விட்டு எல்லாரும் மறுபடியும் கனவு காணவேண்டும் என்று கூவினதாலேயே அரைமண்டையர்களின் கனவு கண்ணனாக வானளாவ புகழப்படுபவர் தான் அண்ணன் கலாம். கலாம் அண்ணாத்தேக்கு அடுத்த இந்திய மாமாவாக.. அது தான் நேருவாக.... ஆசையோ என்னவோ அவரு எங்கெல்லாம் பொடிசுகள் கூட்டம் காணப்படுகிறதோ அங்கெல்லாம் ஆஜராகி கனவு காண்பதை பற்றி வகுப்பெடுக்க ஆரம்பித்து விடுவார். உடனே யோவ்... அவரு ஒவ்வொரு குழைந்தைகளிடம் பேசி அவர்களை உற்சாகப்படுத்துவது தப்பா என்று சிலர் குரல் எழுப்புவது புரிகிறது. ஆனால் அவரு எந்த குழந்தைகளிடம் போய் வகுப்பெடுக்கிறார் என்று உற்று கவனித்தால் புரியும் அண்ணன் கலாமின் நோக்கம். பின்ன அண்ணன் எண்ண மாநகராட்சி பள்ளிகளில் போயா பாடம் எடுக்கிறார் ? சங்கர வித்தியாலயங்களிலும், கல்வி வியாபாரிகள் நடத்தும் கல்வி தொழிற் கூடங்களிலும் தானே போய் அவரது கனவுகளை கூவி கூவி வியாபாரம் செய்கிறார். அவனுங்க தானே அண்ணனின் விளம்பர மோகத்தை புரிந்து கொண்டு செயல்படுபவர்கள். மாநகராட்சி பள்ளி கூடத்திற்கு சென்று பாடம் எடுத்தால் எவன் கண்டுக்குவான். பூணூல் அணிந்து கொண்ட குழந்தைகளின் மீது அண்ணனுக்கு எப்பவுமே ஒரு தனி பாசம் தான்.

கல்வியில் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு என்பது திறமையானவர்களுக்கு வாய்ப்புகளை மறுப்பது போன்ற செயல் என்று சொல்லும் மாமா கலாம், பிறப்பில் இருந்து இறக்கும் வரை மனிதர்களை சாதிவாரியாக பிரித்து சமூகத்தில் ஏற்ற தாழ்வுகளை உருவாக்கி மேலே உட்கார்ந்து கொண்டு பிறப்பின் பெயரால் சலுகைகளை அனுபவித்து கொண்டிருக்கும் அம்பிக்களை எதிர்த்து மட்டும் எதுவும் பேசிட மாட்டார். பின்னே.... அம்பியாண்டவர்கள் நடத்தும் ஊடகங்களில் தம்முடைய பெயரை இருட்டடிப்பு செய்து விட்டால் என்னாவது என்ற எண்ணம் விளம்பர பிரியரான மாமா கலாமிற்கு வராதா என்ன ? ....

என்னய்யா எளிமையாக வாழும் ஒருவரை போய் விளம்பர வெறியர் என்று சொல்லுகிறாயே என்றும் சிலர் கேட்கலாம் ? அப்படி பட்டவர்களுக்கு ஒரு கேள்வி. ஏன் மாமா கலாமை போல் எளிமையாக எந்த அறிவாளிகளும் வாழவில்லையா ? ...வாழ்கிறார்கள் ஆனால் அவர்கள் அவர்களுடைய எளிமையை வியாபாரமோ, விளம்பரமோ செய்வதில்லை. உதாரணத்திற்கு ஒடுக்கப்பட்ட இருளர் இன மக்களின் குழந்தைகளுக்கு கல்வி கொடுப்பதற்காக தன்னுடைய வாழ்க்கையையே அர்ப்பணித்து கொண்ட அய்யா கல்வி மணியை கூறுவேன். கல்வி மணி என்ன மாமா கலாமை போல் அறிவாளியா என்றும் சில அறிவொழிகள் கேட்கலாம் . ஏன் அணுகுண்டு வெடிக்கிறவனும், அணுகுண்டை வைத்து அனுப்பும் ஏவுகணையை நிர்மாணிப்பதில் ஈடுபடுபவனும் மட்டும் தான் அறிவாளியாக இருக்க முடியுமா , சமூகத்தை மேம்படுத்த உழைக்கும் சமூக விஞ்ஞானிகள் அறிவாளியாக இருக்க முடியாதா என்ன ?

அதுவும் இந்த வருமான வரியை ஒழுங்காக கட்டாத நடிக மா...மாக்களுக்கு ஊழலுக்கு எதிராக பேசும் மாமா கலாமின் மீது எப்போதுமே ஒரு தனி ஈடுபாடு உண்டு. பின்ன இருக்காதா மாமா ஊழலுக்கு எதிராக தானே பேசுவாரு வரிகட்டாம அரசாங்கத்தை ஏய்ப்பவனுங்களை பற்றி எல்லாம் பேசமாட்டாருல்லா. அப்படி பேசுனா அவனுங்க என்னைக்கே கலாம் மாமாவுக்கு கட்டம் கட்டி இருக்க மட்டானுங்களா. மாமாவுக்கும் நடிகனுங்கனா ஒரு தனி இது தான். அது தான் ஏன் என்று புரியலை. அதிலும் பெரிய கொடுமை என்னன்னா கோலிவுட்டில் பூனை கண்ணழகியை வைத்து வியாபாரம் செய்த விவேகம் கெட்ட மாமா பயலை தன்னால் பங்கு பெறமுடியாத இந்திய விஞ்ஞான கல்வி நிறுவன விழாவில் தனக்கு பதிலாக அனுப்பி பேச வைத்தது தான். சாதி கூட்டங்களில் கைதட்டுக்களை வாங்குவதற்காக பேசுகின்ற ஒருத்தனை சமூகத்தை கட்டமைக்க தயாராகி கொண்டிருக்கும் எதிர்கால சிற்பிகளுக்கு மத்தியில் உரையாற்ற அனுப்பி வைத்ததை என்னவென்று சொல்ல..... மாமா கலாமின் கண்களில் தகுதி வாய்ந்த வேறொருவர் படவில்லையா... இல்லை படங்களில் தன்னை சின்ன கலைவாணராக அடை மொழியை (கலைவாணர் மட்டும் இருந்திருந்தால் இந்த பயலை வாரியலாலேயே விளாசி இருப்பார்) தனக்கு தானே வைத்து கொண்டு நடிகைகளின் புரோக்கராக அலையும் மாமா பயலின் தகுதியே போதுமென்று கலாம் மா..மா.. நினைத்தாரோ என்னவோ அது அவருக்கே வெளிச்சம்.

இதெல்லாம் போதாதென்று கூடங்குளம் அணுமின் நிலையம் பிரச்சினையில் நம்ம மாமா கலாம் என்ன சொல்கிறாரோ... அணுகுண்டை வெடிக்க வைத்தும் ஏவுகணையில் எப்படி அனுப்பலாம் என்றும் ஆராய்ச்சி செய்யும் மாமா என்ன சொல்லுவார் என்பது உலகம் அறிந்த விடயம் தானே..... அதை ஏற்று கொள்ள வேண்டும் என்று சேது பாலத்தின் ஒனரான ராமன் பெயரை கொண்ட மருத்துவர் ஒருவர் கலாமிற்கு வரிந்து கட்டி கொண்டு களத்தில் இறங்கியது அதை விட கொடுமை. வரிந்து கட்டியவரும் விவேகம் கெட்ட மாமாவும் சாதி கூட்டங்களில் சாதி வெறியை ஏற்றி கொண்டு அலைபவர்கள் என்பது மட்டுமின்றி இருவருக்கும் ஒரு விடயத்தில் நிறைய தொடர்பு உள்ளது. அது என்னன்னா பூனை கண்ணழகியை வைத்து மாமா பயல் வியாபாரம் பண்ணினான் என்றால் மருத்துவர் தன்னோட சாதிக்கட்சியின் மகளிர் அணியின் தலைவியாகவே ஆக்கி பெருமை(?) பட்டு கொண்டிருப்பவர். இப்படி பூனை கண்ணழகியை கஸ்டடியில் வைத்து கொண்டு அலைபவர்கள் கலாம் மாமாவிற்கு வரிந்து கட்டி கொண்டு இறங்கி இருப்பது பார்ப்பதற்கு எங்கேயோ இடிப்பது போல் உள்ளது . அதுசரி அவங்க எங்கே வைத்து இடித்தால் நமக்கு என்ன. அது அவங்களோட சொந்த விடயம்.

சமூக நீதிக்கான இடஒதுக்கீட்டிற்கு எதிராக தூக்கத்திலும் பேசும் இந்த அம்பிகளின் அபிமானி மக்களின் உயிர்கள் பற்றிய பாதுகாப்பை கேள்விக்குறிக்குள்ளாக்கும் அணுமின் நிலைய பிரச்சினையில் பத்து நாட்கள் கழித்து தன்னுடைய கருத்தை சொல்வேன் என்று அறிக்கை விட்டார். இவர் கடந்த காலத்தில் குடிமக்களின் தலைவராக அமர்த்தப்பட்டதை எண்ணினால் எங்கேயாவது போய் முட்டி கொள்ளலாம் என்று தான் தோன்றுகிறது. அதுசரி இவர் எப்படி குடியரசு தலைவரானார் என்று யாராவது கேட்கலாம். ஆளுகின்ற கட்சிகளின் அடிமைகளாய் செயல்பட்ட குடியரசு தலைவர்களுக்கு மத்தியில் தெளிந்த சுய அறிவோடு செயல்பட்ட முத்தான கே.ஆர். நாராயணன் மீண்டும் குடியரசு தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் எங்கே தங்களது தப்பு தாளங்களை தொடர முடியாமல் போய்விடுமோ என்று கட்சி சார்புகளுக்கு அப்பாற்பட்டு பார்ப்பனிய அம்பிகள் ஓன்று கூடி அந்த முத்தை வீழ்த்த சிறுபான்மை முகமூடி அணிவித்து அனுப்பப்பட்ட அம்பு தான் நம்ம கலாம் மாமா. கலாமிற்கு எதிராக நின்றால் அவர்களை சிறுபான்மையினருக்கு எதிரானவர் என்று முத்திரை குத்தி சிண்டு முடிந்து விடலாம் என்பதோடு குசராத்தில் இசுலாமியர்களுக்கு எதிரான வெறியாட்டத்தை உலக நாடுகளின் மத்தியில் மறைக்க கலாமை ஒரு போர்வையாகவும் பயன்படுத்தி கொள்ளலாம் என்ற ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்கிற திட்டத்தின் ஒரு பகுதி தான் கலாம் குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட அம்பிகள் அவர்களோட கும்பிகளை ஓரிடத்தில் வைத்து விடாமல் ஓடியாடி வேலை செய்தது.. அவர்கள் தங்களுடைய வேலையை எவ்வித தடங்கலும் இன்றி செய்து முடிக்க தேர்ந்தெடுத்த ஒரு ஆயுதம் தான் விளம்பர பிரியரான அப்துல் கலாம்.


குசராத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலைகளை, அதனை கட்டவிழ்த்து விட்ட அயோக்கியர்களை சக இசுலாமியாராக (சந்தேகத்திர்க்குறிய விடயம் தான்) இல்லையென்றாலும் சக மனிதன் என்றளவிலாவது இன்றளவு கூட கண்டிக்க வக்கில்லாத ஒருத்தரை சிறுபான்மை மக்களின் பிரதிநிதியாக முன்னிறுத்திய கவாலித்தனம் அரைமண்டையன்களின் மண்டையில் முளைக்கும் விபரீதமான புத்திகளுக்கு மற்றுமோர் உதாரணம்.

சமூகத்தை பற்றி எந்தவித தெளிவும் இல்லாமல் ஆய்வகத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவரை கொண்டு வந்து சமூகத்தை வழி நடத்த சொன்னால் அவர் சமூகத்தை தனது ஆய்வு சாலையில் உள்ள சோதனை எலியாக தான் பார்ப்பார் என்பதற்கு கலாம் ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. தங்களுடைய எளிமையை வைத்தே வியாபாரம் செய்பவர்களும் நம்மிடையே உண்டு என்பதை கலாம் நம்மிடையே இருப்பதை வைத்து தெரிந்து கொள்ளலாம். பதவிக்கு ஆசைப்படாதவரை போல் தன்னை காட்டி கொண்டு போட வேண்டியவர்களுக்கு எல்லாம் சால்ராவும் கூழை கும்பிடும் போட்டு ரெண்டாவது தடவையாக குடியரசு தலைவர் பதவியை அடைய அவர் பண்ணிய அலம்பல்கள் அவருடைய பதவி வெறியையும் அம்பலபடுத்தியது.

மொத்தத்தில் விளம்பரம் கிடைத்தால் சாதி, மதவெறியன்களோடு உறவாடுவது என்ன.... மனித மாமிசம் தின்பவர்களோடு கூட சாப்பாட்டு அறையை பகிர தயங்க மாட்டார் இந்த சைவ பிரியர். உள்ளதிலேயே பெரிய கொடுமை என்னன்னா அவரு சைவ சாப்பாடு சாப்பிட்டதால் நல்லவர் என்றும் எளிமையானவர் என்றும் விளம்பரம் கொடுத்தானுங்களே அந்த கொடுமை தான் தாங்க முடியாத கொடுமை.

Wednesday, October 12, 2011

இது உண்மையா காதில் வந்து விழுந்த பயமுறுத்தும் கிசு கிசு

கொஞ்ச வருடங்களுக்கு முன்னர் தமிழக தளபதியின் நெருங்கிய நண்பர் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டது தமிழ்நாட்டையே ஒரு உலுக்கு உலுக்கியது. அப்போது எதிர்கட்சியாக இருந்த கட்சியும் அது தற்கொலை அல்ல திட்டமிட்டு செய்யப்பட்ட படுகொலைகள் என்றும் , அதில் தளபதியின் பங்கு உண்டு என்றும் தளபதியின் மீது சிபிஐ விசாரணை நடாத்தவேண்டும் என்று பெரும் குரல் எழுப்பியது.


பல்வேறு பத்திரிகைகளும் அந்த நண்பர் தளபதியின் பினாமி என்றும், தளபதியிடமே ஆட்டையை போட்டதால் தளபதி கதையை முடித்து விட்டார் என்றும் ஜக்கம்மாகாரனை போல் கட்டியம் கூறியது. அந்த தற்கொலை சம்பவமும் எனது மனதில் பல கேள்விகளை எழுப்பி விட்டு இருந்தது. அப்போது ஆட்சி அதிகாரத்தில் இருந்த ஒருவரிடம் இன்னொருவர் ஆட்டை போட்டு விட்டால் தனது அதிகாரத்தை வைத்து மிரட்டி அந்த ஆட்டைய போட்ட பொருட்களை மீட்டு இருக்க முடியுமே. இதற்காக ஒரு குடும்பத்தையே அதுவும் இரண்டு பச்சிளம் குழந்தைகளையும் சேர்த்து முடித்து விடும் அளவுக்கு ஒருவருக்கு எப்படி கொலை வெறி வரும் ?, அதுவும் அந்த பச்சிளம் குழந்தைகளை கொல்வதால் யாருக்கு என்ன லாபம், ஏதோ அவர்கள் வளர்ந்த பிள்ளைகளாக இருந்தால் கூட அவர்களுக்கு ரகசியங்கள் தெரிந்திருக்கலாம் அது எதிர்காலத்தில் தம்மை பாதிக்கும் என்று எண்ண இடம் இருக்கிறது.


சரி அப்போது எதிர்கட்சியாக இருந்தபோது, அது தற்கொலையல்ல திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை என்று கூறிய கட்சி அடுத்த ஐந்து வருடங்கள் ஆட்சி செய்தபோது முறையாக விசாரணை நடத்தி கொலை குற்றவாளிகளை கண்டு பிடித்து இருக்கலாமே ? அதை ஏன் அவர்கள் செய்யவில்லை ? ஒருவேளை விசாரணை நடத்தி தமிழக தளபதிக்கும் அந்த தற்கொலைக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று தெரிய வந்ததால் அதை அப்படியே விட்டு விட்டார்களா ? என்று கேள்விகளும் எழும்பியது. சமீபத்தில் எனக்கு தெரிந்து சில நெருங்கிய தொடர்புகளிடம் இருந்து எனது காதில் கிசு கிசுக்கப்பட்ட செய்தியை கேட்டபோது தலையே சுற்றும் போல் இருந்தது. சொன்னவர்களும் அதை உறுதி படுத்துகிற வகையில் சொல்லாமல் சந்தேகத்துக்கிடமான செய்தியாகவே சொன்னார்கள். அப்படி எண்ண தான் அந்த கிசு கிசு என்று பலரும் எண்ணலாம் . அந்த தற்கொலை அந்த நண்பருடைய வித்தியாசமான பாலியல் எண்ணங்களால் விளைந்த முடிவு தானாம். அப்படி என்ன வித்தியாசமான பாலியல் எண்ணம் என்று கேட்டபோது தான் காதில் இடி விழுந்தது போல் இருந்தது அந்த செய்தி.


அதாவது அந்த நண்பர் பாலியல் ரீதியாக இணையை பரிமாறி கொண்டு கூட்டுறவு செயல்களில் ஈடுபடுகிற விபரீதமான எண்ணம் கொண்டவராம். இது போன்று பாலியல் செயல்களுக்காக தம்பதிகளிடையே இணையை பரிமாறி கொண்டு கலவியில் ஈடுபடுவது மேலைநாடுகளில் ஏற்கனவே பரவி விட்ட ஓன்று . அது இந்தியாவின் பெருநகரங்களில் ஒரு பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பே மேட்டு குடியினரால் இறக்குமதி செய்யப்பட்டு தற்போது அது நடுத்தர வர்க்கத்தினரிடமும் வேகமாக பரவி வருகிறது அதற்கான காரணங்களை மற்றொரு பதிவில் எழுதலாம் என்று நினைக்கிறேன் . அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் அவரிடம் பரிமாற்றம் செய்து கொண்ட ஒரு இணை அவர்களிடம் உள்ள ஆதாரத்தை வைத்து கணிசமான தொகையை கேட்டு அதை கொடுக்க வில்லையென்றால் விடயத்தை வெளியில் விட்டு விடுவோம் என்று மிரட்ட ஆரம்பித்ததாம்.


நண்பரும் தன்னுடைய செல்வாக்கை வைத்து கொண்டு அந்த இணையை என்னவெல்லாமோ செய்து விட பார்த்தாராம், முடிந்த வரை அந்த ஆதாரங்களையாவது அழித்து விடலாம் என்று எண்ணினாராம். அதற்காக அந்த இணைக்கு கணிசமான பணத்தை தருகின்ற முடிவில் கூட இருந்தாராம். ஆனால் அந்த இணை தளபதியின் நண்பரால் தமது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று எண்ணியதோ என்னவோ கடைசி நேரத்தில் தலைமறைவாகி விட்டார்களாம். அந்த ஆதாரங்களை எங்கே வெளியில் விட்டு விடுவார்களோ. குடும்ப மானமே போய்விடுமே என்று அந்த நண்பரும் கடும் மன உளைச்சலில் இருந்தாராம். அந்த உளைச்சல் தான் நண்பரும் அவரது இணையும் சேர்ந்து அப்படி ஒரு பயங்கரமான முடிவை எடுக்க வித்திட்டு விட்டதாம். மற்றபடி தளபதியிடம் இருந்து ஆட்டையை போட்டதால் தான் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார் என்பதெல்லாம் இட்டுக்கட்டப்பட்ட கதைகளாம்.



பின்குறிப்பு : எமது காதில் விழுந்த அந்த செய்தியில் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. அதே நேரத்தில் யாரையும் இழிவு படுத்த வேண்டி இந்த செய்தியை பதியவுமில்லை. எமது காதில் விழுந்த செய்திகளை பகிர்ந்து கொண்டேன் அவ்வளவே. ஆனால் காதில் விழுந்த செய்திகளின் மூலம் அந்த தற்கொலையில் வெளி உலகுக்கு தெரியாத நிறைய சிக்கல்கள் உண்டு என்பது மட்டும் புரிகிறது

Tuesday, October 11, 2011

கூடங்குள அணுமின்நிலைய எதிர்ப்பு போராட்டத்தை சாதிய மத ரீதியாக முடக்க முண்டி கொண்டு நிற்கும் அரசு எந்திரம் .

அது என்னவோ தெரியலைங்க மக்கள் எங்கெல்லாம் ஒண்ணா மண்ணா நின்னு போராடுறாங்களோ அங்கெல்லாம் போய் ஊரை ரெண்டா பிளவு படுத்துற கூத்தாடி வேலையை அரசு எந்திரங்கள் சரியாக செய்து வருகின்றன என்பதற்கு கூடங்குள அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினருக்கு இடையே தொடங்கி இருக்கும் முரண்பாடுகள் சரியான எடுத்துகாட்டாகும். ஆரம்பத்தில் அணுமின் நிலையத்திற்கு எதிராக எழுந்த எதிர்ப்புகள் ஒரு குறுப்பிட்ட சமுதாயத்தினரிடம் வேலை மற்றும் தொழிற் வாய்ப்புகள் அணுமின் நிலையம் வந்தால் அதிகரிக்கும் என்று ஆசை கட்டி தான், வலுவிழக்க செய்யப்பட்டன. தமிழனுக்கு தான் அடுத்தவன் பாதிக்கபட்டால் என்ன, நாம சம்பாதித்தா நல்லது என்ற உயரிய எண்ணம் தான் கொஞ்சம் அதிகமாகவே உண்டே அதனால் தான் என்னவோ , அவர்களுடைய மூளையும் அணு மின் நிலையம் என்னும் அரக்கனால் எல்லா மக்களுமே எதிர் கொள்ள போகும் பயங்கரங்களை பற்றிய அறிவு அதிகார வர்க்கத்தால் திறமையாக மழுங்கடிக்கப்பட இடம் கொடுத்தது.


புக்குசிமா ஏற்படுத்திய தாக்கமோ என்னவோ திடீரென உறக்க நிலையில் இருந்த மக்கள் துள்ளி எழுந்து, சாதி மத வேறுபாடுகளை தூக்கி எறிந்து விட்டு அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தை வலுப்படுத்த ஆரம்பித்தனர். பார்ப்பனிய அதிகார வர்க்கத்திற்கு தான் உழைக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் ஓன்று கூடினால் பிடிக்காதே. ஆக எப்படியாவது இந்த போராட்டத்தை நசுக்க வேண்டும் அல்லது வலுவிழக்க செய்ய வேண்டும் என்பதிலேயே மும்முரமாக இருந்தது. அனுமின் நிலைய திட்டத்தை ஆரம்பிக்கும் போது சாதி அடிப்படையில் மக்களை பிளவு படுத்தி வெற்றி கண்ட அந்த கூட்டம், இப்போது மக்கள் சாதி வேறுபாடுகளை துறந்து விட்டு போராட்டத்தில் குதிப்பதை கண்ட போது கொஞ்சம் திக்கு முக்காடி தான் போனது. அப்போது அவர்கள் மனதில் உதித்த திட்டம் தான் சாதியோடு கூடுதலாக சேர்த்து மத அடிப்படையில் பிளவுகளை ஏற்படுத்துவது. ஏற்கனவே மண்டைக்காடு கலவரத்தை திட்டமிட்டு வெற்றிகரமாக நடத்தி மக்களை மத ரீதியாக பிளவுபடுத்திய கும்பல் தானே அது.


அந்த திட்டத்தின் ஒரு பகுதி தான் நாராயணசாமியை போராட்ட குழுவினரோடும் மாநில அரசோடும் பேச்சு வார்த்தை நடத்த அனுப்பியது . அதென்னவோ தெரியலை நாரத வேலைய பார்க்க வருகிறவனுங்க எல்லாருமே நாராயணா என்கிற பெயரோடு தான் வருகிறானுங்க. இந்த நாராயணசாமியோட பின்னணியையும் கொஞ்சம் பார்க்கணும் . ஆளு பார்க்க தான் பிள்ளை பூச்சி மாதிரி இருப்பாப்புல. ஆனா சாதி அடிப்படையில் அரசியல் செய்வதில் ஆள் பலே கில்லாடி. அவரு இங்க வந்தது ஏதோ போராட்ட குழுவினரோடு பேச்சு நடாத்த தான் என்று இதை படிப்பவர்களில் யாரவது நினைத்து கொண்டு இருந்தால் உங்க நினைப்பில் இப்பவே மண்ணை அள்ளி போடுங்க. அண்ணன் இங்க வந்ததே சாதி ரீதியில் சந்திக்க வேண்டிய ஆட்களை சந்தித்து போராட்டத்தை பிளவுபடுத்தி நசுக்க தான். அப்படி அவருடைய எண்ணங்களுக்கு தூணாக நின்றவர் தான் வைகுண்டத்திற்கு ராசாவாக இருந்து கொண்டு மினரல் வியாபாரம் செய்பவர். அவருக்கும் அவருடைய கதிரியக்க மண் கடத்தல் தொழிலில் மீனவர்களினால் ஏற்பட்ட பாதிப்பிற்கு கணக்கு தீர்க்க வேண்டிய ஆத்திரமும் இருந்ததால் நாரதரோடு சாதி அடிப்படையில் சேர்ந்து கொண்டு அவர்களுடைய சாதி சார்ந்த பிரமுகர்களை பார்த்து அணுமின் நிலைய போராட்டத்திற்கு எதிரான கருத்துக்களை பரப்ப ஆரம்பித்தனர். அப்படி சமீபத்தில் மாட்டியவர்களில் ஒருவர் தான் நம்ம பால பிரசாபதி அடிகளார்.


இப்ப அந்த பார்ப்பனிய கும்பல் பால பிரசாபதி அடிகளை கொண்டு அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினரிடையே பிளவு ஏற்படுத்த ஆரம்பித்து இருக்கிறார்கள். பார்ப்பனிய ஊடகங்கள் என்னன்னா ஏதோ இந்த எதிர்ப்பு போராட்டம் கிருத்துவ மத சாமியார்களால் தான் தூண்டி விடப்படுகிறது என்ற அளவில் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டு இருக்கிறது . அதுமட்டுமல்லாமல் ஊடகங்களிலும் இணையதளங்களிலும் போலி பெயர்களில் ஆட்களை உலவ விட்டு அணுமின் நிலையத்திற்கு ஆதரவான கருத்துக்களை உண்மைகளை மறைத்து பரப்புவதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் அணுமின் நிலையத்திற்கு அமோக வரவேற்பு இருக்கிறது போன்று காட்டுதல் என பலவிதமான வேலைகளிலும் ஈடுபட்டு வருகின்ற கும்பலுக்கு, பால பிரசாபதி அடிகள் வரப்பிரசாதம் போன்று கிடைத்து இருக்கிறார்.


அதுமட்டுமல்லாமல் பார்ப்பனிய கும்பல் கடத்தல் குண்டரான ராசனோடு சேர்ந்து கொண்டு காய்களை வேகமாக நகர்த்தி வருகிறது. ஏற்கனவே மற்றொரு கார்பரேட் ரவுடி கும்பலான டாடாவுக்கு எதிராக வெற்றிகரமாக மக்களை திசை திருப்பி விட்டு கதிரியக்க மணல் கடத்தலில் தனிக்காட்டு ராசாவாக திகழும் வைகுண்டத்தோட குடி கெடுக்கும் நுணுக்கங்களும் தங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என பார்ப்பனிய கும்பல் கருதுகிறது.

இந்த கொடுமையெல்லாம் போதாதென்று டாக்டர் எம்.ஆர்.சீனிவாசன் என்ற வெண்ணெய் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் செயல்படுவது தொடங்கினால் அந்த பகுதி வளர்ச்சி ஏற்பட்டு மீன்களின் தேவை அதிகரிக்கும் அது மீனவர்களின் வாழ்வை மேம்படுத்தும் என்று டுபாகூர் விட்டது. அப்படின்னா அப்ப சென்னையில் மீன் பிடி தொழிலில் ஈடுபடுபவர்கள் ஏன் இன்னும் மோசமான சூழலில் வசிக்கின்றனர் ?, ஏன் அவர்கள் மல்டி பில்லியனர்களாக முடியவில்லை ? ஏன் அவர்களுக்கெல்லாம் யாரோ பில்லி சூனியம் வைத்து விட்டார்களோ ? என்றெல்லாம் நீங்கள் அந்த சூனியம் பிடித்தவனிடம் தான் கேட்க வேண்டும்.


சரி இந்திய அரசாங்கம் ஏன் இந்த அணுமின் உலையை இயக்குவதில் அவ்வளவு ஆர்வமாக இருக்கிறது. மக்களுடைய விருப்பப்படி நடந்து கொள்ள வேண்டியது தானே என்று நமக்கு கேள்வி எழும்பலாம். அங்க தான் அரசின் அதிகார மட்டத்தில் கோலேச்சி கொண்டிருக்கும் பார்ப்பனிய கும்பல்களின் லாப கணக்குகள் இருக்கிறது. இந்த அணுமின்நிலைய ஒப்பந்தத்தை அமுல்படுத்தத் வேண்டி பல்வேறு காலகட்டங்களிலும் ருசிய மாபியாக்களின் மூலம் பெருமளவு பணம் பார்ப்பனிய கும்பல்களின் கைகளுக்கு கைமாறி இருக்கிறது. இந்த நிலையில் அணுமின் நிலையம் இயக்கப்பட தடைகள் ஏற்படும் பட்சத்தில் அது ருசிய மாபியாக்களின் பகையை சந்திக்க நேரிடும் என்ற பயம் பார்ப்பனிய கும்பல்களிடம் கொஞ்சம் அதிகமாகவே காணப்படுகிறது. தற்போது உலகத்தில் காணப்படும் மாபியா கும்பல்களில் ருசிய மாபியா கும்பல்கள் உலகின் எந்த பகுதியிலும் எந்த மட்டத்திலும் ஊடுருவ கூடிய வல்லமை படைத்த ஓன்று. அதுமட்டுமல்லாமல் உலகின் பெரும் தொழில் நிறுவனங்களில் கணிசமான அளவில் முதலீடுகளை ருசிய மாபியா கும்பல்கள் கொண்டுள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலைய ஒப்பந்தத்தின் மூலம் சம்பாதித்த பார்ப்பனிய கும்பல் ஆரம்பத்தில் எழுந்த எதிர்ப்புகளை பற்றி அவ்வளவாக அலட்டி கொள்ளவில்லை . விடயத்தை ஆற போட்டால் எல்லாம் சரியாக போய் விடும் என தப்பு கணக்கு போட்டு விட்டார்கள். ஆனால் அணு மின் நிலையத்திற்கு எதிராக மக்களிடையே எழுந்த எதிர்ப்பை கனவிலும் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள் . இப்ப அவர்களுடைய நிலைமை ஆப்பசைத்த குரங்கு கதையை போல் ஆகி விட்டது. சேது சமுத்திர திட்டத்தை போல் இதை இனி ஒத்தி வைக்கவோ இல்லை ரத்து செய்யவோ நினைத்தால் அது ருசிய மாபியா கும்பல்களுடைய கோபத்தை தூண்டி விட்டது போலாகி விடும். அதனால் ஏற்படும் விபரீதங்களை உணர்ந்ததாலோ என்னவோ எப்படியேனும் இந்த போராட்டத்தை நசுக்கி விட வேண்டும் என்று ஒட்டு மொத்த பார்ப்பனிய கும்பல்களும் வரிந்து கட்டி கொண்டு களத்தில் நிற்கிறது. அந்த கும்பல்களுக்கு சால்ரா தட்டவென்று நம்மிலேயும் ஒரு கும்பல் கிளம்பி விட்டதை நினைத்தால் தான் கொடுமையாக இருக்கிறது.


இந்த கட்டுரைய படித்து முடிக்கும் போது அது என்னய்யா அணுமின் நிலைய போராட்டத்தை ஒடுக்க நினைக்கும் அரசு இயந்திரம் என்று ஆரம்பித்து பார்ப்பனிய கும்பலில் கொண்டு போய் விட்டு இருக்கிறாய் என்று தோழர்கள் கேட்கலாம். இந்தியாவில் அரசாங்கம் என்பதே மாக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பார்ப்பனியர்களுக்காக பார்ப்பனியர்களால் நடாத்தப்படுவது தானே . இந்தியாவில் அரசாங்கத்தையும் பார்ப்பனிய கும்பலையும் பிரித்து பார்ப்பது என்பது உடலிலிருந்து உயிரை பிரிப்பதை போன்றது.

Sunday, October 2, 2011

சீமானும் பரமக்குடி படுகொலையும்

இப்படி ஒரு தலைப்பை பார்த்தவுடன் பலபேர், என்ன சார் சீமானுக்கும் பரமக்குடி படுகொலைக்கும் என்ன சம்பந்தம் என்று கேள்வி எழுப்பலாம். பின்ன உலக தமிழர்களின் விடுதலைக்காகவும் , ஈழ தமிழர்களின் படுகொலைகளையும் எதிர்த்து போரட்டங்கள் நடத்த காப்புரிமை பெற்ற ஒரே இயக்கம் எங்கள் சாதி தமிழர் இயக்கம் என்று அர்னால்டு சுவாசினேகரை விட ஒரு படி மேல் சென்று நெஞ்சை விரித்து காட்டும் அண்ணன் சீமானுக்கு பரமக்குடியில் நடந்த படுகொலைகளை கண்டிப்பதில் முதல் பங்கு இருக்காதா என்ன ?, அப்படி யாம் எண்ணுவதினாலேயே இந்த தலைப்பு.


தமிழ்நாடே பரமக்குடி படுகொலைகளை பற்றி பேசி கொன்டிருந்தபோது, எங்கே, ஈழத்தில் நடந்த படுகொலைகளை பற்றி பேசி கல்லா கட்டி கொண்டிருந்த அண்ணனை காணுமே என்று பலரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்து போய் தான் இருந்தார்கள். அவர்கள் அண்ணன் சீமான் பரமக்குடி படுகொலைகளை பற்றி கண்டித்து பேசுவதால் கல்லா கட்ட வாய்ப்பு கிட்டாது என்ற உண்மையையும், அரசை கண்டித்து இருந்தால் அவருடைய கடந்த கால லட்சுமி வீட்டு விசயம் தோண்டி துருவப்பட்டு அண்ணனின் கோவணம் கழட்டப்படும் அசிங்கத்தையும் அறியாமல் இருக்கலாம். பரமக்குடியில் காவாலி துறையால் திட்டமிட்டு நடாத்தப்பட்ட துப்பாக்கி சூட்டால் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் ஒரு வேளை அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இருந்திருந்தால் அண்ணன் ஒப்பாரி வைத்திருப்பார். பைசா கிடைத்தால் கோவணம் போனாலென்ன என்ற மனநிலையாவது அண்ணனுக்கு இருந்திருக்கும். ஆனால் இறந்தவர்களின் குடும்பங்கள் அன்றாடம் காய்ச்சிகள் அல்லவே. எப்படி ஒப்பாரி வைக்க முடியம்.

காவல் துறையினர் தடை தடை என்று சொன்னால் எமக்கு அது உடை உடை என்று தான் கேட்கிறது
என்று அய்யாவின் ஆட்சி காலத்தில் வீராவேசத்துடன் கவிதை பாடிய அண்ணன், சின்னம்மாவின் வழிநடத்துதலில், அம்மாவின் ஆட்சிகாலத்தில் அவரது கட்டுப்பாட்டில் செயல்படும் காவாலி துறை இயந்திரத்தால் நடாத்தப்பட்ட பரமக்குடி படுகொலைகளை, படுகொலை என்று ஒப்பு கொள்ள கூட மனம் வராமல் அதை கலவரத்தை கட்டுப்படுத்த நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு என்று அவருடைய இணையதளத்தில் ஈன சுவரத்தில் முனகி இருக்கிறார்கள். அதில் இருந்தே நாம் சாதி தமிழர்களின் சோரம் போன வீரமும் மண்டி போட்டதில் அவிழ்ந்து போன கோவணமும் நன்றாகவே நாறுகிறது.

கீழே உள்ள படத்தில் சீமானின் நம்ம சாதி தமிழர்களின் இணையத்தில் வெளியிடப்பட்ட பரமக்குடி படுகொலையை பற்றிய செய்தியில் அதை காணலாம்.

From 3 October 2011


அவங்களோட கூற்றின்படி பரமக்குடியில் சாலை மறியல் நடக்கலையாம். கலவரத்தை தடுக்க தான் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாம். கலவரத்தை காவாலி துறை அரங்கேற்றவில்லையாம். அங்கே நடந்தது படுகொலையும் இல்லையாம். கலவரத்தை கட்டுப்படுத்த நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் தான் மக்கள் உயிரிழந்தார்களாம். என்னவொரு முடிச்சவிக்கி தனம்.

சின்னம்மாவின் தலைமையிலான சாதி வெறியர்களின் வழி நடத்துதலில், சுயமரியாதைக்காக போராடி படுகொலை செய்யப்பட்ட தலைவனின் நினைவு தினத்தை குலைப்பதற்கு வேண்டி திட்டமிட்டு நடத்தப்பட்ட ஓன்று தான் பரமக்குடி படுகொலை என்பது உலகிற்கே தெரிந்த விடயம் என்கிற போது அந்த சம்பவத்தை நடத்தியவர்களை கண்டும் காணாமல் சென்று விடுவதில் இருந்தே தெரியவில்லையா அண்ணன் எந்த வகையான தமிழர்களுக்காக குரல் கொடுக்கிறார் என்று, அண்ணனுடைய கவனத்தையும் அனுதாபத்தையும் பெற வேண்டுமென்றால் ராசபக்சேவின் கையால் தன் சாக வேண்டுமோ என்னவோ.

அதை விட கொடுமை என்னன்னா ... செப்டம்பர் 11 ஆம் தேதி சாதி வெறி பிடித்த செயலலிதாவின் காவாலி துறையால் நடாத்தப்பட்ட படுகொலைகளால் உயிரை இழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் சொல்ல 14 நாட்கள் கழித்து செப்டம்பர் 25 ஆம் தேதி செல்கிறார்........ அதிலும் அவரோட அடியோட பொடிகள் பண்ணும் ராவடிதனம் தான் அதற்கு மேல்..... பரமக்குடி கலவரத்தை பற்றி அண்ணன் என்ன சொல்லுறாருன்னு கேட்டா அவங்க கேட்ட கேள்விக்கே சம்பந்தமில்லாமல் “தலித்தியம் பேசி அரசியல் பண்ணி கொண்டிருந்தவங்க எல்லாம் பரமக்குடி கலவரத்தை பற்றி எதுவும் பேசாமல் ஓட ஒளிந்து விட்ட நிலைமையில் எங்க அண்ணன் இன்று .. (அதாவது செப்டம்பர் 25 அன்று) .... பரமக்குடியில் அடிபட்டவங்களோடு மூணு நாள் தங்கி இருந்தார்” என்று கூச்சமே இல்லாமல் சுய தம்பட்டம் அடிக்கிறதை பார்க்கும் போது, இவனுங்க கடந்த கொஞ்ச நாட்களாகவே தோட்டத்தில் கிடைக்கிற கஞ்சாவை அடித்து விட்டு அப்பப்ப குப்புற படுத்து தூங்கி விடுகிறானுங்க என்று யாம் நினைத்தது சரியென்று தான் தோன்றுகிறது. பரமக்குடி படுகொலைகளை கண்டித்து ஏறக்குறைய மனிதநேயமுள்ள அனைவரும் கண்டன ஆர்ப்பாட்டங்களையும் கருத்தரங்குகளையும் நடத்தி முடித்த பிறகு, இந்த தறுதலைகள் இப்ப வந்து இப்படி சீனை போட்டால், பின்ன எப்படி தான் எண்ணுவதற்காம்.


ஆண்ட பரம்பரையினர் என்று ஊளையிட்டு கொண்டு, கோவண கயிறோடு அலையும் அம்பிகளின் மலத்தை வாழை இழையில் அள்ள போட்டி போடும், அவங்க உறவுக்காரன்களா இருந்து இருந்தால் துப்பாக்கி சூடு நடந்த அன்றைக்கே போய் கத்தி சண்டை போட்டு இருப்பாங்களோ.


அது சரி......... நடிகைகளின் கோவணத்தை துவைத்து கொடுப்பதில் மும்முரமாக இருக்கிறவருக்கு பரமக்குடிக்கு செல்ல எப்படி நேரம் கிடைத்தது என்றும் எமது மனதில் கேள்வி எழும்பாமல் இல்லை. ஒரு வேளை அடிபட்டவங்க எப்படி எல்லாம் வேதனைகளை அனுபவிக்கிறாங்க என்பதை பற்றிய லைவ் கமென்ட்ரியை அவங்க அண்ணன் நடன ராசனுக்கு கொடுக்க போயிருப்பானோ.


மண்டலம் மாணிக்கம் புதூரில் சிறுவனை கொலை செய்து தங்களது ஆதிக்க சாதி வெறித்தனத்தை காட்டிய கவாலிகளை கண்டிக்க துப்பில்லை, சாலை மறியல் செய்து தங்களது எதிர்ப்பை அரசிற்கு காட்டிய அப்பாவிகளை துப்பாக்கியால் சுட்டும், கட்டைகளால் அடித்தும் கொன்று தங்களது சாதி வெறியை காட்டிய சாதி வெறி படித்த காவல் துறையினரையும் அவர்களை ஏவி விட்ட அயோக்கியர்களையும் எச்சரிக்க வக்கில்லை. ஆனால் இப்ப வந்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் சொல்ல வந்திட்டானுங்களாம்.


ஐயோ..... இவனுங்க தமிழ் தேசியத்தை வென்றெடுப்போம் என்று கூவுவது தான் பயங்கரமாயிருக்கிறது. இவனுங்களை பார்க்கும் போதெல்லாம், புரட்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் கனவு கண்ட சாதி ஒழிந்த தமிழ் தேசியத்தை இவனுங்க கழுத்தை நெரித்து கொன்று விடுவான்களோ என்ற பயம் தான் மேலிடுகிறது.


இவனையெல்லாம் அந்த ஊருக்குள்ளேயே வர அனுமதித்து இருக்க கூடாது என்று தான் எண்ண தோன்றுகிறது