புகைப்படம் : பேரழகன் பாலா அவர்களின் கை வண்ணம்
அவர் எடுத்த புகைப்படத்தை என்னுடைய வலை பூவில் பயன்படுத்த
வெகுமதி வேண்டா அனுமதி தந்த அவருக்கு எமது நன்றிகள் உரித்தாகுக
இல்லாத ஒன்றை இருப்பதாக தேடி அலைந்து காணாமல் போகிறவர்களுக்கு மத்தியில் இருக்கின்றவைகளை சரியாக புரிந்து கொள்ள வாழ்பவன்
புகைப்படம் : பேரழகன் பாலா அவர்களின் கை வண்ணம்
அவர் எடுத்த புகைப்படத்தை என்னுடைய வலை பூவில் பயன்படுத்த
வெகுமதி வேண்டா அனுமதி தந்த அவருக்கு எமது நன்றிகள் உரித்தாகுக
என்னுடைய முகநூல் நட்பு வட்டத்தில் இருந்து உங்களை நீக்கியதற்கு ஒரே காரணம், சில நாட்களுக்கு முன்பு நான் என்னுடைய நண்பர்கள் வட்டத்தில், தங்கள் முகநூல் முகப்பு படமாக சமுதாயத்தின் மீது எந்தவித அக்கறையும் இன்றி இருக்கும் நடிகர்கள் புகைப்படத்தை வைத்துள்ளவர்கள், மற்றும் அத்தகைய புகைப்படங்களுடன் எனக்கு நட்பு வேண்டுகோளை அனுப்புபவர்களை நீக்க போவதாக பதிவு போட்டு இருந்தேன். அதன்படி சில பேரை நீக்கியும் இருந்தேன். அப்படி அதை தொடர்ந்து செய்து வரும் பட்சத்தில் நேற்று நடிகர் ரசினியின் புகைப்படத்தோடு உள்ள ஒருவரை என் நட்பு வட்டத்தில் பார்த்தேன் உடனே நீக்கி விட்டேன். நீக்கி நீங்கள் பதில் பதிவு போடும் வரை அது நீங்கள் தான் என எனக்கு தெரியாது. என்னன்னா இதே போல் உங்களுடைய பெயரில் ஏற்கனவே கமல் மற்றும் விசய் போன்றோரின் புகைப்படங்களோடு என் நட்பு வட்டத்தில் இருந்த ஒருவரையும் வேண்டுகோள் அனுப்பிய மற்றொருவரையும் நீக்கி இருந்தேன்.
என்னை பொறுத்தவரையில் அடுத்த தலைமுறைக்கு நாம் வழிகாட்டியாக இல்லாவிட்டாலும் ஒரு எடுத்துக்கட்டாகவாவது இருக்க வேண்டும். அதற்காக பெரியார் போன்ற சமூக போராளிகளை போல் வீதிக்கு வந்து போராட வேண்டும் என்று கூட வேண்டாம். ஏனெனில் இப்போதெல்லாம் 15, 16 வயதில் உள்ள விடலை பசங்க சமூக வலைத்தளங்களை அதிகம் பாவிக்கிறார்கள். அந்த பசங்க நம்மை பார்த்து திரைப்பட நடிகர்கள் மீதான மோகத்தில் இப்ப இருக்கிற நிலைமையை கட்டிலும் மோசமான நிலைமைக்கு செல்ல நாம் காரணமாக இருந்து விட கூடாது. சினிமா நடிகர்களை பின்பற்றுவது ஒரு மரியாதைக்குரிய செயலாகவோ இல்லை மற்றவர்களிடம் தங்களுக்கு மதிப்பு ஏற்படுத்தும் செயலாகவோ இனி வரும் தலைமுறைகள் நினைக்க கூடாது. எவ்வளவோ சிறுவர் சிறுமியர்கள் சினிமா மோகத்தால் தாங்கள் படிப்பையும் வாழ்க்கையையும் தொலைத்து இருக்கிறார்கள். செய்திதாள்களில் அடிக்கடி பார்க்கலாம் நடிகனை, நடிகையை காண ஊரில் இருந்து நகரத்திற்கு வந்து விழி பிதுங்க நின்ற சிறுவர் சிறுமியர்கள் மற்றும் திரைப்பட மோகத்தில் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட கல்லூரி, பள்ளிக்கூடங்களில் பயிலும் இளம் பெண்களை பற்றி. அப்படி கடந்த காலங்களில் செம்மறியாட்டு மந்தையாக சுற்றி வாழ்க்கையை வீணாக்கியவர்களில் நானும் ஒருவன். மகாத்மா பூலே, அண்ணல் அம்பேத்கர், பெரியார், கர்மவீரர் காமராசர், சேகுவேரா போன்றார் எனக்கு அறிமுகமாகிய போது அந்த போதையில் இருந்து விடுபட்டு விட்டேன்.
ஒரு தந்தையானவன் புகைப்பழக்கத்திற்கோ, அல்லது குடிக்கோ அடிமையாகி அதிலிருந்து விடுபட நினைத்தும் சூழ்நிலைகளின் விளைவாக அதில் இருந்து விடுபட முடியாமல் தவிக்கலாம். ஆனால் அதே நேரத்தில் தன்னுடைய குழந்தையின் முன்பு புகை பிடிக்கவோ இல்லை குடிப்பதையோ செய்யாமல் தன்னை கட்டுபடுத்தி கொள்வதன் மூலம் தன்னுடைய குழந்தையை தான் விழுந்த குழியில் விழுந்து விடாமல் தடுக்கலாம். அவ்வாறில்லாமல் தன்னுடைய குழந்தைகள் முன்பு எவ்வித சுய கட்டுப்பாடும் இன்றி அவ்வாறான செயல்களில் ஈடுபடுவ்து அயோக்கியதனமின்றி வேறு எதுவாகவும் இருக்க முடியாது.
எனக்கு மத, சாதி, இன ,மொழி வெறியர்கள் எனது நட்பு வட்டத்தில் இருப்பது பற்றி கூட கவலை படமாட்டேன். அவர்களோடு விவாதிப்பதால் நமது விவாத திறமையாவது வளரும் . ஆனால் திரைப்பட நடிகர்களை கொண்டாடுபவர்களிடம் பேசுவதையே தவிர்ப்பவன். அப்படியான சில நேரங்களில் சில நல்ல நட்புகளை கூட இழக்கலாம் . வேதனையாக தான் இருக்கிறது . ஆனா நம்ம பாட்டன் ராமசாமி அப்படி கிடையாதே கொள்கைக்காக உறவுகளையே தூக்கி எறிந்தவனல்லவா. அவனுடைய பேரனாக என்னை காட்டி கொள்ள முயலும்போது இப்படியான சூழ்நிலைகள் வந்து விடுகிறது.
சில நேரத்தில் நாம் இவ்வாறு கூட நினைக்கலாம், உதவி செய்பவரை, அவர் கெட்டவராக இருந்தாலும், நன்றியோடு நினைப்பது தமிழர் பண்பாடல்லவா, அதை செய்வதால் நாமும் கெட்டவராகி போய் விடுவோமா என்று. ஒரு அயோக்கியனிடம் தன்னுடைய இக்கட்டான நிலையில் உதவி வாங்கியவர் கெட்டவராக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை . அதே நேரத்தில் அந்த நல்லவர் தனது அறியாமையால் அந்த அயோக்கியனை தூக்கி சுமப்பதால் அந்த அயோக்கியன் நல்லவனாகி விடமுடியாது. ஊரை அடித்து உலையில் போட்டு கொண்டு திரியும் வேடதாரியிடம் உதவிக்காக போய் நிற்பது சுயமரியாதையை காக்கும் செயல் அல்ல. அது நம்மை நாமே மற்றவர்க்கு அடிமையாக விற்று போடும் தான் தோன்றித்தனத்தின் முதல் படி. அதற்காக மற்ற எல்லாரும் யோக்கியர்கள் என்று கூறி விட முடியாது ஆனால் யோக்கிய வேடம் பூண்டு கொண்டு அயோக்கியதனத்தில் ஈடுபடுபவனை எல்லாம் தலைவனாக்குவதும் அவனின் புகழ் பாடுவதும் அசிங்கத்தின் உச்சம். காமகொடூரன் ஒருவன் பத்து பதினைந்து பெண்களை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கி விட்டு பிறிதோர் பொண்ணுக்கு வாழ்வு கொடுக்க முன்வருகிறேன் என்று கூறும்போது அந்த பெண்ணின் வீட்டார் அந்த கயவாளியை ஏற்று கொண்டு புகழ்வதில் சுயநலம் இருக்குமே ஒழிய சமூக அக்கறை எல்லாம் இருக்காது. அவர்களால் சமூகத்தை பற்றி சிந்திக்கவும் முடியாது. அவர்கள் தாங்கள் மனத்தை தாங்களே ஊனமாக்கி கொள்கிறவர்கள்.
இப்படியான ஒரு எண்ண கொந்தளிப்பில் இருந்த எனக்கு, சமூகத்தை தன்னுடைய சுய நலத்திற்க்காக பயன்படுத்தி கொண்டு அதன் மீது எந்த அக்கறையும் இல்லாமல் திரியும் நடிகனின் புகைப்படத்தை முகநூல் முகவரியின் முகப்பு படமாக வைத்து இருந்தை பார்த்தவுடன் அதன் சொந்தகாரர் யார் என்று சிறிதும் கூட யோசிக்காமல் என்னுடைய நட்பு வட்டத்தில் இருந்து தூக்கி விட்டேன். கடைசியில் தான் தெரிந்தது அது தாங்கள் என்று.
நான் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் என்னுடைய படத்தையோ இல்லை நான் பெரிதும் நேசிக்கும் சமூக போராளிகளான மகாத்மா பூலே, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், கர்மவீரர் காமராசர், சேகுவேரா, என்று எவருடைய புகைப்படத்தையும் முகப்பு படமாக வைத்ததில்லை. அவ்ர்களைது புகைப்படத்தை வைத்து தான் அவர்களது கொள்கைகளை முன்னெடுத்து செல்ல முடியும்என்றோ அவர்களை மரியாதை செய்யும் செயல் என்றோ படம் காட்டுகிற எண்ணங்கள் நமக்கு வருவதில்லை. மக்களுக்கு செல்ல வேண்டிய செய்திகளை தான் முகப்பு படமாக வைத்து வருகிறேன். மேலும் என்னுடைய பாட்டங்கலான சமூக போராளிகள் தங்களுடைய வாழ்க்கையை ஒறுத்து பெற்று தந்த சமூக நீதியின் மூலம் கல்வி கற்று முன்னுக்கு வந்த எனக்கு சமூக வலைத்தளத்தை ஒரு பொழுது போக்கு சாதனமாக வைத்து கொள்ள விருப்பமில்லை. எமக்கு கிடைத்த விடுதலையை என்னிடம் இருந்து தட்டி பறிக்க தொலைகாட்சி, செய்தித்தாள் போன்ற ஊடகங்கள் மூலம் அரக்க பலத்தோடு மோதும் பர்ப்பனியத்தை எதிர்த்து நிற்க எனக்கு கிடைத்த இது போன்ற சிறு துரும்பை ஆயுதமாக வைத்து கொண்டு எம்முடைய பாட்டனார்கள் தொடங்கி வைத்த போரை தொடர்ந்து வருகிறேன். அது கடைமட்ட மனிதன் விடுதலை பெரும் வரை தொடரும்.
இப்போது சொல்லுங்கள் நான் செய்தது தவறா என்று. ஆனால் உங்கள் முகப்புப்படமாக இருந்த அந்த நடிகனின் புகைப்படத்தை நீங்கள் நீக்கியது, சுயமரியாதைக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன். அந்த மகிழ்ச்சியில் உங்களோடு மறுபடியும் கைகோர்க்க எனது கரத்தை உங்களை நோக்கி நீட்டுகிறேன். வரவேற்பீர்கள் என்ற நம்பிக்கையில்.
இப்படிக்கு
ஏற்றத்தாழ்வற்ற தோழமையுடன்
அந்தோணி
மேலேயுள்ள கட்டுரை ஒரு நடிகனின் புகைப்படத்தை தன்னுடைய முகநூல் முகப்பு படமாக வைத்திருந்த தோழரை என் நட்பு வட்டத்தில் இருந்து நீக்கி இருந்தேன். அது அவரை எவ்வகையிலும் புண்படுத்துவதற்காக அல்ல என்பதை அவருக்கு விளக்க எண்ணி வரைந்த மடலாக இதை படைத்து இருக்கிறேன்.
சமீபத்தில் செய்தித்தாள் ஒன்றில் ப.சா.க என்ற பார்ப்பனிய மதம் பிடித்த கட்சி ஆளும் இந்தியாவின் மத்திய மாநிலங்களில் ஒன்றான மத்திய பிரதேசத்தில் பசுமாட்டை கொல்வது, அதற்கு தொடர்பான வணிகங்களில் ஈடுபடுவோர் மீதும் ஏழு ஆண்டு வரை சிறை தண்டனை வழங்கலாம் என்று சட்டம் இயற்றப்பட்டு இருக்கிறது. அதை படித்த பொழுது 80 விழுக்காடு மக்கள் இறைச்சியை தங்கள் உணவில் ஒன்றாக கருதும் இந்தியாவில் பசுமாட்டின் மீது மட்டும் ஏன் இந்த தனி பாசம், ஏனைய மிருகங்களை கொல்வோர் மீதும் ஏன் இந்த சட்டம் பாய கூடாது. இந்தியாவின் காடுகளில் மறைந்து விடும் நிலையில் இருக்கும் மான், புலி போன்ற மிருகங்களை வேட்டையாடுவதும் அது சம்பந்தப்பட்ட பொருட்களை விற்பது சட்டப்படியான குற்றம் என்று தெரிந்த பின்பும் இந்தியாவில் பெருகி வரும் போலிச்சாமியார்கள் அமர தேவைப்படும் மான் மற்றும் புலியின் தோல்களுக்காக அவற்றை வேட்டையாடுபவர்கள் சுதந்திரமாக உலவ மாட்டின் இறைச்சியையும் , தோலையும் தாங்கள் உணவு பொருளாதார தேவைகளுக்காக பயன்படுத்தும் மக்களின் மீது மட்டும் புதுசு புதுசாக சட்டம் பாய வேண்டும்.
பார்ப்பனிய சக்திகளுக்கு மாட்டின் மீது மட்டும் ஏன் தனி அன்பு பொத்து கொண்டு வருகிறது. அதிலும் எவ்வளவோ வகையான மாடுகள் இருக்க பசு மாடு மட்டும் எப்படி அவர்களுக்கு புனிதமானது ? அவர்கள் மாட்டை தாங்கள் வீடுகளில் கட்டி வளர்க்கிறார்களா இல்லை கிராமப்புறங்களில் மாடு கட்டப்பட்டுள்ள தொழுவங்களுக்கு சென்று அவற்றை சுத்த்ப்படுத்துகிறார்களா ? வேதத்தில் மாட்டிறைச்சியையும், குதிரை இறைச்சியையும் போட்டி போட்டு கொண்டு தின்றதாக குறுப்பிடப்பட்டு இருக்கும் கூட்டம் என்றைக்கு சைவ பிரியர்களானார்கள் ? இதி எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டு மென்றால் புத்த சமண மத கோட்பாடுகளையும் அவை தோன்றியதற்கான காரணங்களையும் , அக்காலத்தில் இந்த துணை கண்டத்தில் வாழ்ந்த மண்ணின் மைந்தர்களின் பண்பாட்டு கூறுகளையும் அறிந்து கொள்வது தேவையான ஒன்றாக இருக்கிறது.
சிந்து சமவெளி சமூகம் தங்களுக்கிடையே எந்த வித போர் வெறியும் கொள்ளாமல் ஆற்றின் ஓரங்களில் மண்ணை பண்படுத்தி விவசாயம் செய்து கொண்டும் கடலில் ஆறு கலக்கும் ஆற்றின் முகத்துவாரங்களில் மீன் பிடித்து கொண்டும், தேவைப்பட்ட நேரங்களில் வேட்டையாடியும் தங்களுக்கென நகரை நிறுவி அதை காட்டு மிருகங்களிடம் காக்க சுற்றி கோட்டை கட்டியும் வாழ்ந்த நாகரீகத்தில் முன்னேறிய சமூகமாயிருந்தது. வாழ்க்கை செழுமையாக இருந்ததால் என்னவு அவர்கள் போர்க்கலைகளில் அவ்வளவு ஆர்வம காட்டி இருக்கவில்லை. ஆனால் நாடோடிகளாக திரிந்த ஆரிய கூட்டத்திற்கு கொளையடித்து தான் அடுத்த நாளை நீட்டிக்க வேண்டிய அவசியம் இருந்தது. ஆக இயற்கையிலேயே நர மாமிசம் உண்பவர்களாகவும் மூர்க்கர்களாகவும் இருந்தார்கள். அப்படி பட்ட ஒரு வெறி பிடித்த கூட்டத்தின் கண்களிடம் ஒரு செழுமையான நாகரிகம் மாட்டி கொண்டால் அதன் நிலை என்னவாகும் என்பதற்கு ரொம்ப சிந்திக்க வேண்டாம்.
காலப்போக்கில் வந்தேறி கூட்டத்திடம் வீழ்ந்த மண்ணின் மக்களில் ஒரு கூட்டம் வந்தேறி கூட்டத்திடம் அடிமைகளாகி போனார்கள், மற்றோரு கூட்டம் மறுபடியும் தெற்கு பகுதி நோக்கி நகர்ந்தது. பிறிதோர் கூட்டம் காடுகளில் புகுந்து வனகுடிகளாக மாறி போயினர். காலபோக்கில் வந்தேறிகளிடம் அடிமையாய் இருந்த கூட்டத்திற்கும் வந்தேறி கூட்டத்திற்கும் இனக்கலப்பு அதிகமாக ஏற்பட அதை தடுக்க ஏற்பட்டது தான் சாதிய கட்டமைப்பும், அதை மீறுபவர்களுக்கான தண்டனை பற்றிய மனுவின் அரக்கத்தனமான கையேடும்.
உழைக்கும் மக்களை சுரண்டி கொழுத்த வந்தேறி கூட்டத்தின் ஆட்டம் அதிகமான போது புத்தர் மகாவீரர் போன்ற பகுத்தறிவாளர்கள் தோன்றினார்கள். இவ்விருவரையும் கடவுளாக்கி அவர்களின் கொள்கை மழுங்கடிக்கப்பட்டது என்பது வேறு விடயம். ஆக வந்தேறி கூட்டத்தால் உழைக்கும் குடிகளான மண்ணின் மைந்தர்களின் மீது ஏவி விடப்பட்ட அடக்குமுறை தான் புத்த, சமண கோட்பாடுகளின் உருவாக்கத்தின் அடிப்படை.
அன்றைய கால கட்டத்தில் வந்தேரிகளான பார்ப்பனர்கள் தாங்கள் யாகங்களில் பலியிடுவதற்காக ஆடுகளையும் மாடுகளையும் உழைக்கும் மக்களிடம் இருந்து அரசர்கள் மீத தாங்கள் கொண்டிருந்த ஆதிக்கத்தை பயன்படுத்தி பறிக்க ஆரம்பித்தனர். அந்த யாகங்களில் கொல்லப்படும் ஆடுகளையும் மாடுகளையும் பார்ப்பனர்கள் உண்டு மகிழ்ந்து கொண்டு இருக்க உழைக்கும் மக்கள் தங்களின் வாழ்வாதாரமான ஆடுகளையும் மாடுகளையும் இழந்து பொருளாதாரத்தில் அடிமட்ட நிலைக்கு சென்று கொண்டு இருந்தனர்.
இது போன்ற கொடுமைகளை கண்டு கொதித்தவராய் உலகின் முதல் பகுத்தறிவாளர் புத்தர் தன்னுடைய பகுத்தறிவு போரை பார்ப்பனிய விபச்சாரத்திற்கு எதிராக துவக்கினார். அவர் தான் உண்மையில் உயிர் வதை கூடாது என்று போதித்தவர். ஆனால் அவர் எப்போதும் இறைச்சி உன்ன கூடாது என்று சொல்லவில்லை. அவரது கொள்கையின் படி உயிருள்ள மிருகத்தை கொன்று தின்ன கூடாது, ஆனால் இயற்கையாக இறந்த மிருகத்தையோ இல்லை வேறு ஒரு மிருகத்தால் கொல்லப்பட்ட மிருகத்தின் இறைச்சியையோ சாப்பிடலாம். அந்த காலத்தில் பார்ப்பனியர்கள் கஞ்சா அடித்து கொண்டும், சோம பானம் என்னும் மது அருந்தி கொண்டும் பசு மாட்டை கொன்றுதின்று கொண்டும் திரிந்தவர்கள்..
புத்தரும் கூட பல இடங்களில் பார்ப்பனர்கள் நடத்தும் யாகங்களில் மிருகங்கள் கொல்லப்படுவதை வன்மையாக கண்டித்தும் பரப்புரை செய்ய ஆரம்பித்தார். பார்ப்பனர்கள் தாங்கள் வளர்த்த யாகங்களில் குதிரைகளையும், மட்டையும், ஆட்டையும் கொன்று குவித்து கொண்டிருந்தபோது மாட்டையும், ஆட்டையும், நிலத்தையும் நம்பி வாழ்க்கையை நடத்தி கொண்டிருந்த குடிமக்களுக்கு புத்தரின் கொள்கைகள் பிடித்து போய் அது அவர்களின் மண்களில் ஆழ வேரூன்ற ஆரம்பித்தது. மக்களின் மனங்களில் ஏற்பட்ட புரட்சி ஆண்டவர்களையும் மாற்றத்தை நோக்கி நடைபோட வைத்தது. அதுவரை அரசர்களை ஒட்டியும், நக்கியும் பிழைத்து கொண்டிருந்த பார்ப்பனர்களின் பொழைப்பில் மண் விழ ஆரம்பித்தது. இப்படியாக புத்த சமண கொள்கைகள் மக்களிடம் வேகமாக பரவ ஆரம்பித்த காலத்தில் புத்த, சமண கொள்கைகளோடு நேரடியாக மோத முடியாத பார்ப்பனியர்கள் புத்த மாதத்திற்குள் ஊடுருவதும், புத்த மதத்தின் கொள்கைகளில் திரிபுகளை ஏற்படுத்தவும் ஆரம்பித்தனர் .... கால போக்கில் புத்த மதத்தை எதிர்க்க அவர்கள் புத்த மத கொள்கைகளில் ஒன்றான உயிர் வதை தடுப்பை ஏற்று கொண்டு மற்றொரு வழியில் புத்த மத்த கொள்கைகளை எதிர்க்க ஆரம்பித்தனர். அதில் ஓன்று இறந்த மட்டை சாப்பிடும் புத்த கோட்பாட்டாளர்களை ஒடுக்க ஆரம்பித்தனர்.
புத்த மதத்தில் இறந்த மிருகங்களின் இறைச்சியை சாப்பிட்டவர்கள் புத்த மதத்தின் உயர்ந்த பீடங்களில் குருக்களாக இருந்தவர்கள் தான். புத்த மதத்தவர்கள் உணவிற்காக மிருகங்களை கொல்லாதவர்களாக இருந்த போதிலும் புத்த சமண கோட்பாடுகளை பரப்பும் வேலையில் ஈடுபட்ட அறிஞர் பெருமக்கள் இறந்த மிருகங்களின் உடலை சாப்பிடுவதற்கு தயங்கியதில்லை. புத்தர் கூட இறந்த பன்றியின் உடலை சாப்பிட்டார் என்று புத்த கோட்பாடுகளை தாங்கிய மகாபரிநிபான சுட்டா மற்றும் அங்குட்டாரா நிகாயா போன்ற புத்தகங்களில் பதியப்பெற்றுள்ளது. அதே போல் சமண கோட்பாட்டை தோற்றுவித்த மகாவீரரும் அவருடைய கோட்பாட்டை பினபற்றும் பெண்ணொருத்தியின் கையால் சமைக்கப்பெற்ற கோழி கறியை சாப்பிட்டார் என்றும் சமண கோட்பாடுகளை தாங்கி நிற்கும் புத்தகங்களில் குறுப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவர் அந்த பெண்ணிடம் சமைக்கப்பட்ட கோழியின் இறைச்சி ஏற்கனவே மற்றொரு மிருகத்தால் கொல்லப்பட்டது என்று உறுதி செய்து கொண்ட பின் தான் சாப்பிட்டார் என்றும் எழுதப்பட்டு இருக்கிறது.
இதே போன்று வைசாலியில் வாழ்ந்த செல்வந்தரான படைத்தளபதி ஒருவர் புத்தருடைய கோட்பாடுகளால் புத்த மதத்தை தழுவிய பின்பு அவர் புத்த பிக்குகளுக்கு தனது வீட்டில் உணவளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார் .அப்படி வழங்கப்படும் உணவோடு இறைச்சியும் பரிமாறப்பட்டது. ஆனால் அவர் செய்த காரியம் என்னவென்றால் அந்த இறைச்சி ஏற்கனவே இறந்த மாடுகளின் உடலில் இருந்து எடுக்கப்பட்டது என்று அப்புத்த குருக்களை நம்பவைத்த பிறகே அவர்களை அவ்வுணவை உண்ண வைக்க முடிந்தது. அந்த அளவிற்கு புத்த சமண குருக்கள் தங்களுடைய உணவிற்காக ஒரு உயிர் கொல்ல படக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். அதே போன்று குடிமக்களும் தங்களது வீடுகளில் இறந்து போன மிருகங்களை கொண்டு வந்து அவற்றை தங்களது பௌத்த குருக்களின் உணவு பயன்பாட்டிற்காக ஒப்படைப்பது உண்டு. இது போன்ற குறிப்புகளில் இருந்து புத்த சமண கோட்பாடுகளை பின்பற்றியவர்கள் இறைச்சியை உண்பதற்கு எதிரானவர்கள் இல்லை என்பதும் அதே நேரம் அவர்கள் பார்ப்பனியர்களை போல் உயிர்வதைகளில் ஈடுபடவில்லை என்பதும் தெளிவாக புலப்படும்.
பார்ப்பனியர்கள் புத்த மதத்தின் தூண்களாக விளங்கிய அறிஞர் பெருமக்களுக்கும் புத்த கோட்பாட்டை பின்பற்றிய குடிமக்களுக்கும் ஒரு இடைவெளியை ஏற்படுத்த எண்ணினர். அது தான் இறந்த மிருகங்களின் இறைச்சியை சாப்பிடுபவர்களை ஏனைய புத்த கோட்பாட்டை பின்பற்றும் குடிகளால் தீண்டப்படாதவர்களாக மாற்ற அரங்கேற்றப்பட்ட ஆரம்பம்... குடிமக்களுக்கு புத்த கோட்பாடுகளை போதித்து கொண்டிருந்த புத்த கோட்பாட்டின் விலைமதிக்க முடியாத மாணிக்கங்களாக திகழ்ந்த அறிஞர் பெருமக்களை அவர்களுடைய உணவு பழக்கவழக்கத்தை கொண்டே குடிமக்களிடம் இருந்து பிரித்தாழும் சூழ்ச்சி தான் அது. அறிவு எங்கிருந்து சமுதாயத்தை வந்தடைகிறதோ அந்த வழியை அடைத்தால் ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தின் கட்டமைப்பை சீர்குலைத்து விடலாம் அல்லவா, அதை தான் பார்ப்பனியம் புத்த கோட்பாடுகளுக்கு எதிராகவும் அதை பின்பற்றும் மக்களுக்கு எதிராகவும் செய்து கொண்டிருந்தது. அதை மட்டுமே பார்ப்பனர்கள் செய்து விடவில்லை புத்த மதத்திற்குள் ஊடுருவி இருந்த மற்றொரு கும்பல் புத்த கோட்பாடுகளை சிதைத்து அவற்றை பார்ப்பனியத்திற்குள் உள்ளடக்கம் செய்ய திட்டங்களை தீட்டி கொண்டிருந்தது. அத்திட்டங்களை செயல் படுத்த அவர்கள் எடுத்த புது பிறவி தான் தங்களை இறைச்சி உண்ணாதவர்களாக மாற்றி அமைத்து கொண்டதும், புத்தரை திருமாலின் மறுபிறவியாக கதை கட்டியதும். இப்போது அவர்களால் இறந்த உயிரினங்களின் இறைச்சியை உண்டு கொண்டிருந்த புத்த அறிஞர் பெருமக்களின் மீது தொடுக்கப்பட்ட அடக்குமுறைகளை எளிதாக முன்னெடுக்க முடிந்தது. அதுவே பார்ப்பனியமாக்கப்பட்ட குப்த மற்றும் இந்திய துணைக்கண்டத்தில் உள்ள ஏனைய அரசர்கள் காலத்தில் உச்சத்தை தொட்டது
பௌத்த அறிஞர் பெருமக்கள் வாழ்ந்த சேரிகள் (இந்த பெயருக்கு மக்கள் சேர்ந்து வாழும் இடம் என்று பொருள். அதே போல் இந்த இடங்கள் தான் ஆரம்பத்தில் மக்கள் வசிக்கும் இடங்களின் மையப்பகுதிகளாக இருந்தன) ஏனைய குடிமக்களால் வெறுத்து ஒதுக்கப்படும் இடங்களாக மாற்றப்பட்டன. கால போக்கில் புத்த கோட்பாடுகளை தீவிரமாக பின்பற்றி கொண்டிருந்த அந்த அறிஞர் பெருமக்கள் கல்வி கற்பது தடை செய்யப்பட்டதோடு அவர்களுடைய உரிமைகளும் பிடுங்கப்பட்டன. குடிமக்களிடம் காணப்பட்ட அந்த அறிஞர் பெருமக்களின் மீதான மரியாதை புனைவு செய்யப்பட்ட கதைகளால் சிதைக்கப்பட்டன. இப்போது எந்த குடிமக்கள் முந்தைய காலங்களில் தங்களது வீடுகளில் இறந்த விலங்குகளை தூக்கி கொண்டு வந்து புத்த அறிஞர் பெருமக்கள் வாழ்ந்த இடங்களுக்கு சென்று அவர்களுடைய உணவிற்காக காணிக்கையாக படைத்தனரோ, அதே குடி மக்கள் பார்ப்பனியத்தால் உள்வாங்கப்பட்ட பின்பு, யார் தங்களுக்கு கடந்த காலங்களில் ஆசான்களாக இருந்தனரோ அவர்களை கொண்டு தங்களது வீடுகளில் இறந்த மிருகங்களை அப்புறப்படுத்த பார்ப்பனர்களால் ஏவப்பட்டனர். இப்படி தான் புத்த மதம் இந்தியாவில் சிதைக்கப்பட்ட கையோடு உயிர் வதையை வெறுத்த புத்த மத துறவிகள் நிறைந்த சமூகம் ஒடுக்கப்பட்டு சமூகத்தின் கடை நிலைக்கு இழுத்து செல்லப்பட்டது.
அதற்கு முன்பு வரை பார்ப்பனர்கள் நடத்திய யாகங்களில் உயிரோடு துடிக்க துடிக்க கொலை செய்யப்பட்ட பசு “கோமாதா” ஆனது
பெண்ணே
நீ வீசும் கற்களில்
ஆதிக்கத்தின் அடித்தளங்கள்
நொறுங்கி விழட்டும்
கல்லறைகளில் பூட்டி வைக்கப்பட்ட
உனது சமூகத்தின் சுதந்திரம்
வெடித்து எழும்பட்டும்
கனவுகளை தொலைத்த
உனது தலைமுறையின்
போராட்ட சுவடுகள்
எதிர்கால தலைமுறையின்
வரலாற்று பாடங்களாகட்டும்
பெண்ணே
நீ வைத்த குறியில்
ஆதிக்க தற்குறிகளின்
கோவணங்கள் அறுந்து விழட்டும்
அதில் பெண்மையின் அன்பு
இப்புவியை நிரப்பட்டும்