Monday, February 9, 2015

அன்னை பூலான் தேவி கொள்ளைக்காரியா ?






"ஜெயலலிதா என்னும் நவீன பூலான் தேவி" என்று முக நூல் நட்பில் இருக்கும் அண்ணன் ஒருத்தர் ஒரு பதிவை ஆரம்பித்து இருந்தார் . எனக்கு ஒரு நிமிடம் பக்கேன்றாகி விட்டது. அதெப்படி ஆதிக்க வெறி பிடித்த ஒரு பார்ப்பன மாமியோடு சாதி ஆதிக்க வெறியர்களால் கடுமையான வன்முறைக்களுக்குகுள்ளளாக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை சமூகத்தின் அடையாளமான பூலான் தேவியை அடையாளப்படுத்த முடிகிறது.

ஊடகங்கள் கட்டமைக்கும் அத்துனை பிம்பங்களையும் நம்புவதால் வருகிற விளைவு தான் இது. பார்ப்பனிய ஆதிக்க சாதி ஊடகங்கள் அன்னை பூலான் தேவி உயிரோடு இருக்கும் போதும் சரி, இல்லை அவர்கள் மறைந்த பின்பும் சரி தங்களுக்கு வசதியாக " அன்னை பூலான் தேவி மீது ஆதிக்க சாதி வெறியர்கள் கட்டவிழ்த்து விட்ட உடல் மற்றும் மனரீதியிலான வன்முறைகளை மறைத்து விட்டு அவர்களுடைய மூளை முழுவதும் வியாபித்து இருக்கும் பூணூல் கட்டமைக்கும்  வன்மத்தை மட்டுமே கக்கி வந்திருக்கிறது

நடிகர் வடிவேலு கூட தனது திரைப்படங்களில் அது போன்ற இழிவான செயல்களை செய்து இருந்தார் ..

உயர்சாதியை சேர்ந்த ஒரு அபயா உருவாக்கப்படுவதற்கு முன்பே  தனது உடலில் உருவாக்கப்பட்ட ஆயிரமாயிரம் அபயாக்களை  தாங்கி கொண்டு அலைந்தவள் அன்னை பூலான் தேவி .

தன்னுடைய சுயசரிதையில் தன மீது நடத்தப்பட்ட பாலியல் வன்முறையை பின்வருமாறு விவரிக்கிறார் .

"அந்த ஊரின் ஆதிக்க சாதி தாக்கூர் ஆண்களால் எனது உடைகள் களையப்பட்டு அந்த ஊரில் உள்ள அனைத்து தெருக்களிலும் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டேன் . அங்கு உள்ள னைத்து பெண்களும் சிறுமிகளில் இருந்து வயதான கிழவிகள் வரை வேடிக்க பார்த்தார்களே தவிர அவர்கள் வீட்டு ஓரத்தில் கிடந்த ஒரு அழுக்கு துணியை கூட என்னை நோக்கி வீசவில்லை. என்னை அவர்கள் அங்கே சக பெண்ணாக பார்க்கவில்லை. ஒரு ஒடுக்கப்பட்ட நிசாத் சாதியை சேர்ந்த படகோட்டியின் மகளாகவே பார்த்தார்கள்.

ஊர்வலத்தின் முடிவில் ஒற்றின் மத்தியில் நடுநாயகமாக அமைந்திருந்த ஒரு கம்பத்தில் என்னை கட்டு என்னை கட்டினார்கள். பஞ்சாயத்தில் முக்கியமானபொறுப்பில் இருந்த தாக்கூர் அங்கள் என்னை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய பின்பு என்னை அந்த ஒற்றில் உள்ள அனைத்து ஆண்களுக்கும் விருந்தாக்கினார்கள். உடல் கொடுத்த வழியை விட மனதில் ஏற்பட்ட வழியை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்ல. என்னால் முனக மட்டுமே முடிந்தது. அந்த ஒற்றின் ஆண்களில் சிறுநீர் கழிக்க  குறி பிடிக்க தன் தாயின் உதவி தேவைப்படும் சிறு பையன்களில் இருந்து, சுடுகாட்டிற்கு தூக்கி செல்லப்படுவதற்காக காத்திருந்த வயதான கிழவர்கள் வரை அத்தனை பேரும் என் உடலின் மீது ஒரு பெரும் போரையே நடத்திக் கொண்டிருந்தார்கள்.

அவர்களின் அத்துணை செயல்களையும் அந்த ஆண்களையும் அந்த ஆண்கள் சிந்திய விந்துக்களையும்  தூக்கி சுமந்த கருப்பைகள் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தன. அப்போதிருந்த நிலையில் எனது உறுப்புகளை அவர்களிடம் அறுத்து கொடுத்து விட்டால் என்னை விட்டு விடுவார்களா என்ற எண்ணமே மிஞ்சியிருந்தது . இயலாமையின் உச்சத்தை உணர்ந்த தருணம் அது. பிற்காலத்தில் எனக்கு தைரியத்தையும் ஆதிக்கத்திற்கு எதிராக போராடும் வலிமையையும் அந்தது அந்த நிகழ்வு என்று சொன்னால் மிகையாகாது". நேரம் செல்ல செல்ல மனதை ஒருவாறு திடப்படுத்திக் கொண்டு  அமைதியாகி விட்டேன் . அசைவற்று கிடந்த ஏன் உடலை பார்த்ததும் ஒரு வயதான் பெண்மணி ஒரு செம்பில் தண்ணீரை எடுத்து வந்து எனக்கும் அவளுக்கும் நல்ல இடைவெளி இருக்குமாறு உயர்த்தி பிடித்துக் கொண்டு என்னுடைய வாயில் ஊற்றினாள். எங்கே நான் இறந்து போய் விட்டால் அவளுடைய வீட்டு ஆண்கள் கொலைக் குற்றச்சாட்டிற்கு உள்ளாகி சிறைக்கு போக நேருமோ என்ற அச்சம் ஏற்படுத்திய கருணையாக இருக்கலாம். என்னுடைய மனதிற்குள் இப்போது என்னுடைய உயிரை எப்படியேனும் காப்பாற்றியாக வேண்டும் என்ற உணர்வு ஆக்கிரமித்து இருந்தது .. பழி வாங்க வேண்டும். எனக்கு அவர்கள் ஏற்படுத்திய வலிகளை அவர்கள் உணர வேண்டும் என்ற குரல் எனக்குள் ஒழித்து கொண்டே இருந்தது. நான் அசைவற்று கிடந்ததை பார்த்து நான் இறந்து விட்டேன் என்றெண்ணி தாக்கூர்கள் என்னை ஊருக்கு வெளியே ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் கொண்டு போய் வீசி எறிந்தார்கள்". என்று விவரித்து இருந்தார் ....

மேலயுள்ள அந்த பத்தியை  படித்து விட்டு  பூலான் தேவி யாரென்று  முடிவெடுங்கள்

தயவு செய்து உங்கள் சொல் விளையாட்டுகளுக்கு அன்னை பூலான் தேவியின் பெயரை ஊறுகாயாக்கி விடாதீர்கள்

https://www.facebook.com/photo.php?fbid=760936933990604&set=a.131181913632779.35108.100002229137896&type=1&ref=notif&notif_t=like

மூளையை குப்பை தொட்டியாக்குவது எப்படி ?





                                                                      நம்ம ஊர்ல தமிழை கலப்பிலாமல் பேசுபவர்களை கண்டவுடன் "வந்துட்டான் பாரு தமிழ் கிறுக்கன்", "யையா இவன் தொல்லை தாங்க முடியாதுடா", "யோவ் என்ன நக்கலா" என்று சல்லியடித்து கொண்டு தமிழோடு பல மொழிகளையும் கலந்து பேசுவதை ஏதோ STATUS SYMBOL என்று கருதிக் கொண்டலையும் அறிவுக்கொழுத்திகள் வகை தொகையில்லாமல் காணப்படுவதுண்டு.

ஆனால் அறிவியல் பூர்வமான உண்மை என்னவென்றால், பல்வேறு மொழிகளில் ஆளுமை மிக்கவர்கள் அந்த ஒவ்வொரு மொழிகளையும் அவற்றிற்குரிய தனித்தன்மையோடு ஏனைய மொழிக் கலப்பில்லாமல் பேசுகிறவர்களாக இருப்பார்கள். ஒரு மொழியில் ஏனைய மொழியை கலந்து பேசுகிறவர்களுக்கு தாய் மொழியில் கூட ஒழுங்காக பேச எழுத தெரியாது என்பது தான் உண்மை.

மனித மூளை என்பது பல அடுக்குகளை கொண்ட மடிப்பறைகள் போன்றது. மூளையில் மொழிக்கான மடிப்பறை பல உள்ளறைகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மொழிக்கும் ஒரு அறை என ஒதுக்கப்பட்டு இருக்கும். மனிதனுக்கு முதலாவது அறிமுகமாகும் மொழி தாய் மொழி என வகைப்படுத்தப்பட்டு முதல் வரிசையில் வைக்கப்பட்டு இருக்கும் ஏனைய மொழிகள் அவற்றை அவை கற்றுக்கொள்ளப்படும் கால அளவின்படி வரிசைப்படுத்தப்பட்டு அட்டவணைப்படி வெவ்வேறு அறைகள் ஒதுக்கப்படும். ஒவ்வொரு மொழிக்குமான சொற்கள் அந்தந்த அறைகளில் சேமிக்கப்பட்டு பாதுகாக்கப்படும்.

மொழிகளை கலந்து பேசுகிறவர்களுக்கு அவர்கள் பேசுகிற சொற்கள் சரியான முறையில் சேமிக்கப்படாமல் தாறுமாறாக சம்பந்த சம்பந்தமில்லாமல் சேமித்து வைக்கப்படும். அப்படிப்பட்டவர்கள் ஒரு குறுப்பிட்ட மொழியில் பேச எழுத முற்படும் போது அவர்களுடைய மூளை அந்த மொழிக்கான சொற்களை எடுக்க முற்படும் போது குழப்பமடைந்து திணற ஆரம்பித்து விடும். ஒரு கட்டத்தில் அவர்களுடைய மூளை சிந்திப்பதை நிறுத்தி விடும். ஒரு எடுத்து காட்டிற்கு

"நான் hosptial போனேன் ", "Ball ஐ catch பிடித்தேன்" என்று தமிழில் ஆங்கிலம் கலந்து பேசுபவர்களின் மூளை hospital, ball, catch மூன்றையும் தமிழ் சொற்களாக கருதி அவற்றை தாய் மொழிக்கான அறையில் பொட்டு வைத்து விடும். பின்பு அவர்கள் ஆங்கிலத்தில் அதே வாக்கியத்தை பேசுகிறார்கள் என்று வைத்து கொள்வோம் , எடுத்துக்காட்டிற்கு " I WENT TO HOSPITAL", "CATCH THE BALL" என்ற சொற்றொடர்களை எடுத்து கொள்வோம். இப்போது ஏற்கனவே தமிழ் மொழிக்கான மடிப்பறைக்குள் வைக்கப்பட்டு இருக்கும் hospital, ball, catch என்ற மூன்று சொற்களையும் எப்படி எடுத்துக் கொள்வது என்று மூளை குழம்பி நிற்கும். பிறகு ஒரு கட்டத்தில் ஆங்கிலத்திற்கான மடிப்பறையிலும் எதற்கும் பயன்படுமே என்ற ரீதியில் போட்டு வைத்து கொள்ளும். ஒரு கட்டத்தில் மூளை கிட்டத்தட்ட சம்பந்தப்பட்டவர்களால் ஒரு குப்பை தொட்டியாக மாற ஆரம்பித்து விடும். இப்படி எந்த ஒரு மொழியையும் மொழியை பிற மொழி கலப்போடு பேச பேச ஒரு மொழிக்கான சொல்லே பலமுறை நகலெடுக்கப்பட்டு பல்வேறு அறைகளிலும் திணிக்கப்பட்டு இருக்கும் .

அப்படியானவர்கள் ஒரு மொழியை பேச ஆரம்பிக்கும் போது அந்த மொழிக்கான சொற்களை தேடி தேடியே மூளை குழம்பி போய்விடும். எப்படி முக்கியமான ஒரு பொருளை தவற விட்டு விட்டு ஊரில் இருக்கிற அத்துணை குப்பை தொட்டிகளிலும் தேடிக் கொண்டலைபவர்கள் எப்படியான உளவியல் சிக்கலுக்கு உள்ளாவர்களோ அத்தகையதான உளவியல் சிக்கலுக்கு கொண்டு போய் விட்டு விடும்.

மொத்தத்தில் இறுதியில் மூளை அவர்களை குப்பைகளை தேடி அலைகிற நடைபிணமாக்கி விடும்.

Sunday, February 8, 2015

கிழக்காசியாவில் தமிழர்களின் சம்பா ஆட்டம்





இப்போது கம்போடியா என்றழைக்கப்படும் கிழக்காசிய நாடு தமிழர் பண்பாடுகளை அதிகளவிற்கு உள்வாங்கிய நாடு என்று சொன்னால் மிகையாகாது . உலகின் மிகப்பிரசித்தி பெற்ற அங்கோர் வாட் கோவில் இங்கே தான் உள்ளது.

அந்த பகுதியில் தான் கடல் வணிகத்திற்கு சென்ற தமிழர்கள் சுமந்து சென்ற தமிழர்களின் பண்பாடுகள் உள்வாங்கப்பட்ட ஒரு சம்பா (champa) அரசு அமைந்தது. தற்போது இந்த பகுதி வியநாம் கம்போடியா என்ற இரு நாடுகளுக்கிடையே பகிரப்பட்டு உள்ளது. அங்கே வாழும் மக்கள் சாம் (cham) என்று அழைக்கப்படுகின்றனர். சாம் மக்களின் எண்ணிக்கையில் இசுலாம் மற்றும் இந்து மதத்தினை பின்பற்றுகிறவர்கள் சமமாக இருக்கிறார்கள். பொதுவாக கம்போடியா நாட்டை சேர்ந்த சாம் மக்கள் இசுலாமியர்களாகவும். வியட்நாம் நாட்டை சேர்ந்த சாம் இனத்து மக்கள் இந்துக்களாகவும் இருக்கிறார்கள்.

சாம் இன மக்களிடம் தமிழர்களின் மரபணுக் கூறுகள் அதிகமாக இருக்கின்றன. ஆரம்ப காலங்களில் தற்போதைய இந்திய துணைக்கண்டத்தில் வாழும் சமூக குழுக்களில் தமிழர்கள் தான் மிக பெரிய அளவில் கடல் வணிகத்தில் ஈடுபட்டு இருந்தவர்கள். அதே போல தமிழர்களில் கடல் வணிகத்தில் ஈடுபட்டவர்களில் இந்துக்களும் இசுலாமியர்களும் சரி சமாமாக இருந்திருக்கின்றனர். இணைந்தே கடல் வாணிபத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர். அதனால் தான் சாம் சமூகத்தில் இசுலாமியர்களும் இந்துக்களும் சரிவிகித அளவில் காணப்படுகின்றனரோ என்னவோ. சம்பா நாட்டை ஆண்ட மன்னர்களில் இருவரின் பெயரில் ஒருவர் பெயர் பத்ரவர்மன் (Bhadravarman) - 380 to 413 AD, இன்னொருவர் பெயர் சாம்புவர்மன் Sambhuvarman - 529 AD.

அதே போல இந்த "சாம்" என்ற சொல்லுக்கு இணையான சாம்பவர், சாம்பசிவம், சம்புவராயர், சம்பன் என்ற சொல்லாடல்கள் தமிழகத்தில் ஒரு சில சமூக குழுக்களிடையே இன்றளவிலும் பயன்பாட்டில் உள்ளது.

அவற்றில் சாம்பவர் என்பது பறையர்களில் ஒரு கிளை சமூகத்திலும், சாம்பசிவம் என்பது பெயர் முதலியார் பிள்ளை போன்ற மக்களிடையே பெரிய அளவில் வழங்கப்படும் (அங்கோர் வாட் கோவில் ஒரு சிவன் கோவில் என்பதையும் இந்த இடத்தில் நினைவில் கொள்ள வேண்டும்) பெயராகவும், சம்புவராயர் என்பது வன்னியர் என்றழைக்கப்படும் பௌத்த பாரம்பரியம் கொண்ட பள்ளி என்ற சமூக குழுவிலும், சம்பன் குலம் என்பது தற்போது மறவர்கள் என்று அழைத்துக் கொள்ளும் சமூக குழுக்களில் உள்ள ஒரு கிளை கொத்தாகவும் உள்ளது.

அதே போல் மற்றுமொரு விசயமும் நினைவில் கொள்ள வேண்டும். "பத்ம சாம்பவா" என்பது ஒரு புத்த துறவியின் பெயர் கூட. தமிழர்கள் பெரிய அளவில் புத்த மார்க்கத்தையும் சமண மார்க்கத்தையும் பின்பற்றிய வரலாற்று உண்மையையும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். இன்றைய இசுலாமிய தமிழர்களில் பெரும்பான்மையானோர் முன்பு சமண மதத்தை பின்பற்றியதும் சைவ மதத்தினர் கட்டவிழ்த்து விட்ட அடக்குமுறைகளை தாக்குபிடிக்க முடியாமல் இசுலாம் மார்க்கத்தை தழுவினர் என்று கருதப்படுவதும் உண்டு.

இந்த சம்பா என்ற கிழக்காசிய மாகாணம் தமிழ்நாட்டில் இருந்து கிழக்காசியாவிற்கு சென்றவர்கள் அங்கே தங்கி அங்குள்ள பெண்களை மனது உருவான மக்கள் திரளால் உருவான ஓன்று கருதப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் ஏராளம். இந்த மக்கள் தாய் வழி முறையை கொண்டவர்கள். அதாவது தந்தை வேறு இனத்தை சேர்ந்தவர்களாக இருப்பர். தாய் வழியில் (கேரளா சமூகத்தில் உள்ளது போல) தான் உறவுமுறை தொடரும்.

சாம் இனத்தை தோற்றுவித்தது போ நாகர் (PO NAGAR) என்ற பெயர் கொண்ட பெண் என்று கருதப்படுகிறது. இங்கே நாகர் என்பது இந்தியாவை சேர்ந்த ஒரு இனம் என்பதும் தமிழர்கள் முந்தைய காலத்தில் நாகர் என்றதொரு இனக் குழு இருந்ததும் இன்றளவிலும் நாகர் என்ற பெயர் கொண்ட இடங்களும் கோவில்களும் தமிழகத்தில் உண்டு என்பதையும் அதே போன்று நகர் என்பது மக்கள் வாழும் இடத்தையும் குறிக்க பயன்படுவதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

சாம் இனம் தொற்றுவிக்கப்பட்டதை பற்றிய வேடிக்கையான கதை ஓன்று உண்டு. அதன்படி விவசாய குடும்பத்தை சேர்ந்த பெண்ணொருத்தி கடலில் சந்தன மரக்கட்டையில் மிதந்து வந்ததாகவும் அவள் சீனாவை சேர்ந்த அரச குடும்பத்தை சேர்ந்தவரை திருமணம் செய்து ரெண்டு பிள்ளைகளை பெற்றதாகவும் பின்பு சம்பா அரசின் ராணியாகவும் ஆனாள் என்றும் நம்பப்படுகிறது.

அந்தக்கதையில் வரும் சந்தனக்கட்டை ஒரு முக்கியமான தகவலை விட்டு செல்கிறது. அது தமிழ மேற்கு தொடர்ச்சி மலைகளில் தான் உலகத்தரம் வாய்ந்த சந்தனக்கட்டைகள் விளைகிறது என்பதும் பண்டைய காலத்தில் தமிழர்களின் கடல் வாணிபத்தில் சந்தனக் கட்டை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அதே போல் சம்பா என்ற பெயருடைய அரிசி உலகத்தில் தமிழகத்தில் தான் காணப்படுகிறது.

பிறிதோர் செய்தி, தற்போது சம்பா மாகாணத்தின் ஒரு பகுதி காணப்படும் நாடான கம்போடியாவின் மன்னர் பெயர் Norodam Sihamoni. அதில் ரெண்டாவது பெயர் சிகாமணி என்ற தமிழ் பெயரோடு நன்கு பொருந்தி போவதை பார்க்கலாம்

நிறைய எழுதலாம் இப்போதைக்கு இது போதும் என்று நினைக்கிறேன் ..இதைப்பற்றிய விவாதங்கள் தொடரும் போது மேல் கொண்டு பேசலாம் என்று இருக்கிறேன்

கருத்துக்களும் திருத்தங்களும் வரவேற்கப்படுகின்றன.


Friday, January 30, 2015

குசும்பன் பொன்னாருக்கு ஒரு மடல்




ராசா பொன்னாரு நீ தெற்கத்தி மண்ணில் காவி வெறியேற்றி மக்களை உசுப்பிவிட்டு சாதித்து விடலாம் என்று தானே எண்ணுகிறாய் ..... ஆனால் தெற்கத்தி மண்ணில் காவி வெறியை விட ஆழமாய் வேர் கொண்டது சாதி வெறி என்பது காவி வெறியேறிய போதையில் நீ அறியாமல் இருந்து இருக்கலாம் ..... ஆனால் பழைய பகைகளை வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் நாளுக்காக காத்திருக்கும் பல கும்பல்களை நான் அறிவேன் .... வன்முறை வெடிக்கும்போது அது சாதீய வன்முறைகளாக தான் மாறும் . நீ எந்த காவி வெறியை ஏற்றி கொண்டலைகிறாயோ அந்த வெறிக்கு கிருத்துவ சமூகத்தை சேர்ந்த உனது உறவுகளும் பாதிக்கப்படும் என்பதை நீ அறியாயா ? நம் முப்பாட்டிகளின் முலையறுக்கப்பட்ட நாளில் இருந்து நீ ஒளி ஆண்டுகள் தொலைவில் இல்லை . அதன் வடுக்கள் இன்றும் கனன்று கொண்டு தான் இருக்கின்றன . அதை ஏற்படுத்திய கொள்ளிக்கட்டைகளும் புகைந்து கொண்டு தான் இருக்கின்றன . ஆனால் அது நம் முப்பாட்டிகளின் மீது வடுக்களை ஏற்படுத்திய கொள்ளிக்கட்டை என்பதை மறந்து , காவி எரிபொருள் கிட்டங்கியின் அருகில் நின்று கொண்டு.. உன் தலையில் அதை வைத்து சொரிந்து கொண்டிருக்கிறாய் . எல்லாம் கட்டு மீறி வெடித்து சிதறுவதற்குள் விழித்துக் கொள் ..... இல்லையென்றால் ..... உனது செயல்களாலேயே உன் கதை முடியும் நாள் வரும் ... அப்போது உனக்காக அழுவதற்கு உனது உறவுகள் இருக்க மாட்டார்கள் ....
அப்படியொரு மோசமான நாளை நீ சந்தித்து விடக் கூடாது என்பதே என்னுடைய ஆவல்

இப்படிக்கு
உன் மீதும் பரிதாபம் காட்டும்
உன் உறவு
அந்தோணி


பின்குறிப்பு: பொன்னாரன் இப்போது எந்த பொந்துக்குள் இருப்பாரோ என்று எமக்கு தெரியாது . யாராவது அந்த தேரையை காண நேர்ந்தால் அது அடைக்கலம் என்று அடைந்து கிடப்பது பாம்பின் பொந்துகள் என்று அதற்கு அறிவுறுத்தி எனது மடலையும் சேர்த்து விடுங்கள்.

https://www.facebook.com/anthony.fernando.796/posts/678180592266239

Thursday, January 29, 2015

சித்தார்த்தனும் போதித்த மரமும்



மூடநம்பிக்கையில்
மூழ்கி கிடந்த
மூட சமூகத்தின்
அடிமைச் சங்கிலியை
அடித்து நொறுக்க
சித்தார்த்தன்
போதி மரத்தின் கீழமர்ந்து
துன்பத்திற்கான காரணிகளை
பகுத்து அறிந்து
புத்தன் ஆனான்
பொதி சுமப்பதற்காகவே
நேர்ந்து விடப்பட்ட
இருகால் மாக்கள்
புத்தன் ஞானம் பெற்ற
போதிமரத்தின் அடிமரத்தை
இரும்பு கோடலிகளால்
பிளந்து கொண்டிருக்கின்றன
பிறிதோர் புத்தன்
பிறந்திடகூடாதல்லவா...


வயதிற்கு வந்த காதல்



அவள் ஓரவிழி
கண்ணசைவில்
என் கைவிரல்கள்
மெல்ல நீண்டு
என் மேல் விழுந்த
அவள் முடி தீண்ட
மங்கையவள்
புன்னகையில்
என் மெய்மறந்து
நான் இருக்க
நீல பௌர்ணமி
நிலவொளியில்
என்னவளின்
மெல்லிதயம்
வெட்கம் மென்று
பூப்படைய
நாணத்தால்
நனைந்த
அந்நாழிகையில்
எனது காதலும்
வயதுக்கு வந்தது

எலும்புக் கூடுகளின் தேடல்


ரெண்டு நாள் பெய்த மழையில் ஊரே வெள்ளக்காடாகி விட்டதாம். இன்னும் கொஞ்ச நாளில் தனித் தீவாகி விடுமாம். எல்லா இடத்திலும் இருந்து கோபக் குரல்கள், வெடிக்கும் இடி சத்தங்களையும் தாண்டி எழும்புகிறது. ஒருவர் முந்தைய அரசை சாடுகிறார். இன்னொருவர் இன்றைய அரசை சாடுகிறார். ஆனால் இவ்வளவு அவலங்களுக்கும் காரணம் இச்சமூகத்தின் பேராசை தான் என்று தெரு வெளிகளில் நின்று உரக்க கத்துகிறேன் ..... ஆனால் குளங்களும் ஏரிகளும் நிரவப்பட்டு எழுப்பட்ட concrete கல்லறைகளை சொந்தமாக்குவதற்கு காதுகளை செவிடாக்கி கொண்டு விரைகின்றனர் இரு கால் மாக்கள். என்னவென்று கேட்டால் அங்கே தான் நீரூற்றுகள் அதிகமாம் . புல் வளர்வதற்கு ஏற்ற இடமாம். அவங்க சொல்லுறதும் சரி தான் . புதைக்கப்படப் போகும் இடத்தில் புல் வேகமாக வளர்ந்தால் , அங்கே தலை சாய்க்கப் போகும் எலும்பு கூடுகளுக்கு பஞ்சணை வாங்கும் காசு மிச்சமாகுமே .